தோரனமலையில் முருகப் பெருமான் திருக்கோவில்
926 படிகள் கொண்ட மலை மீது ஏறினால், நீண்ட நாட்களாக துயரப்பட்டுக்கொண்டிருக்கும் தீராத நோயையும் தீர்க்கும் அதிசயத் திருக்கோவில் தோரனமலையில் உள்ளதாம்! எந்த விதமான தொழில் நுட்ப வசதிகள் இல்லா காலத்திலும், வியப்பதற்குரிய கலை வேலைபாடுகளுடன் கோவில்கள் கட்டினர் நம் முன்னோர்கள்.அதிலும் மலை மேல் கட்டிய கோவில்கள் தனி சிறப்புக்கள் வாய்ந்தது.
மலை மீது, 926 படிகள் கொண்டு அமைந்துள்ளது. இந்த 926 படிகளில் ஏறி, தோரணமலை முருகனை தரிசித்து வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்.
இந்த தோரணமலை முருகன் கோவில் நெல்லை மாவட்டம், கடையம் தென்காசி சாலையில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது. இந்த தோரணமலைக்கு தென்புறம் மலையில் இருந்து ராமநதியும், மலையின் வடபுறம் ஜம்பு நதியும் தவழ்ந்து எழில் கொஞ்சும் இடமாக மலையே கம்பீர மாக காட்சியளிக்கிறது. அபூர்வ மூலிகைகளுடன், பக்தி மணம் கமழும் தோரணமலையில் 64 சுனைகள் உள்ளன. இவை அனைத்தும் நோய் தீர்க்கும் அரும்பெரும் சுனையாகும். பத்திரகாளி அம்மனுக்கு இங்கே தனியே ஒரு சன்னதியும் உள்ளது.
மேலும் கடையத்து மருமகனான மகாகவி பாரதியார் கடையத்தில் வாழ்ந்திருந்தபோது, தோரணமலை முருகனை ‘குகைக்குள் வாழும் குகனே’ என்று பாடி பரவசம் அடைந்துள்ளார்.
The post தீராத நோய்களை தீர்க்கும் அதிசயத் திருக்கோவில் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.