கடன் பிரச்சனை எதிர் காலத்திலும் வராமலிருக்க!
சக்தி வாய்ந்த லட்சுமி நரசிம்ம பெருமாளை பவுர்ணமி பிரதோஷ காலத்திலும், சுவாதி நட்சத்திர காலத்திலும் பால், இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனப் பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபடலாம்.
லட்சுமி நரசிம்மரின் காயத்திரி மந்திரம்:
“ஓம் வ்ஜர நாகாய வித்மஹே
தீஷ்ண தம்ஷ்ட்ரீய தீமஹி
தந்நோ நரசிம்ம ஹ ப்ரசோதயாத்”
என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லி வந்தால் பதவி உயர்வும், சகல நலன்களும் உண்டாகும்..
அதன் விளைவாக மனதில் அமைதியும், அமைதியின் விளைவாக தெளிவான சிந்தனையும், அதன் விளைவாக காரியத் தெளிவும், சங்கடங்களின் நிவர்த்தியும் உண்டாகி வளமான வாழ்வினை படிப்படியாக அடைந்து விடலாம்.
-
தினமும் காலையில் யோக நரசிம்மர் அல்லது லட்சுமி நரசிம்மர் படத்தின் முன் அகலில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, ருண விமோசன நரசிம்ம ஸ்தோத்திரம் 6,8 மடங்காக, ( 6,8,12,16,18,32,36,64,108 ) முறை தினமும் பாராயணம் செய்ய கடன் அடைபடும்.
-
கடனை செவ்வாய்க்கிழமை அன்று திருப்பிச் செலுத்துவது உகந்தது. முக்கியமாக செவ்வாய், சனிக்கிழமைகளில் கடன் வாங்கக் கூடாது.
-
எனக்கு கடன் பிரச்சினை இல்லை. எதிர் காலத்தில் இந்த பிரச்சினை வரக்கூடாது என்று நினைபவர்களும் தினமும் ஒரு முறை படித்து வரலாம். நம்பிக்கையோடு படித்தால் நிச்சயம் பலன் உண்டு.
The post கடன் பிரச்சனை எதிர் காலத்திலும் வராமலிருக்க! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.