Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

சர்வ நலமும் அருளும் ஸ்ரீ சர்வ சக்தி அம்மன்!

$
0
0

சர்வ நலமும் அருளும் ஸ்ரீ சர்வ சக்தி அம்மன்!

திருவண்ணாமலை அடுத்துள்ள காடகமான் கிராமத்தில் சர்வமும் காக்கும் ஸ்ரீ சர்வசக்தி அன்னையாக இங்கு தோன்றி பக்தர்களின் தீராத பிரச்சனைகளை தீர்த்து வைப்பவராக அம்மன் இக்கோயிலில் குடிகொண்டு அருள்பாலிக்கிறார். இவரை அமாவாசை நாட்களில் சிறப்பு அபிஷேகம் செய்து இரவு தங்கினால் முழு பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கையாக உள்ளது.

    இந்த ஆலய அமைப்பானது உலகிலேயே சிறப்பான அமைப்பைக் கொண்டதாகும். இந்த அன்னையின் அருகில் ஆற்றங்கரையின் மீது வேறெங்கும் இல்லாத நிலையில் யோக ஆஞ்சநேயராக அமர்ந்து தவக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.இந்த காடகமான கிராமத்தின் மேற்கேயும், துரிஞ்சல் ஆற்றங்கரையின் தெற்கேயும், பாசன கால்வாயின் வடக்கேயும், காடகமான் பொறிக்கல் சு.வாளவெட்டி வன்னிய நகரம், ஆண்டியபாளையம் ஆகிய 5 ஊர் எல்லைகள் சங்கமிக்கும் இயற்கைஎழில்மிகு பசுமை நிறைந்த இடத்தில் ஸ்ரீ சர்வ சக்தி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

ஸ்ரீ சர்வசக்தி அம்மனின் படைப்புகள் உலகில் வேறு எங்கும் இல்லாத நிலையில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்றதும் சர்வ சக்தியையும் ஒருங்கே அமையப்பெற்ற சிறப்புக்குரியதாகும்.81 அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சர்வ சக்தி அம்மனை காண கண்கோடி வேண்டும். நான்கு திக்குக்கும் நான்கு சிங்கங்கள் பீடத்தில் வீற்றிருக்க, அதிலே நடு நாயகியாக ஸ்ரீ சர்வசக்தி அம்மன் நல்லவர்களுக்கு சாந்த ஸ்வரூபிணியாகவும், தீயவர்களுக்கு துஷ்ட நிவர்த்தினியாகவும் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறாள்.இந்த அம்மன் 81 அடி உயரத்தில் 18 கைகளுடன் காட்சியளிப்பது உலகில் வேறு எங்கும் இல்லாத ஓர் அமைப்பாகும். மகிஷா சூரனை வதம் செய்துவிட்டு தேவர்களுக்கு சாந்த ஸ்வரூபிணியாக காட்சியளிக்கும் காட்சிதான் ஸ்ரீ சர்வசக்தி அம்மனின் இந்த திரு உருவமாகும். அம்மனுக்கு உள்ள 18 கைகளுக்கும் உள்ள சூட்சமத்தை பற்றி காண்போம்.

முதல் கைகளில், சங்கு சக்கரம் ஏந்தியுள்ளது. இந்த ஆயுதம் விஷ்ணுவுக்கும், மகா லட்சுமிக்கும் உரியது. உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் எவ்வித தீங்கும் இல்லாமல் காத்து ரட்சித்தல் மற்றும் அஷ்ட ஐஸ்வர்யங்களை தனது மக்களுக்கு வழங்குவதாகும்.

இரண்டாவது கைகளில், அங்குசம் பாவுசம் வைத்துள்ளது. முதல் கடவுளான பிள்ளையாருக்கு உரியதாகும். எந்த ஒரு செயலையும் தொடங்கும் முன் பிள்ளையாரை முன்னிறுத்தி வணங்குவது முதல் முழு பாதுகாப்பினை அளித்தலாகும்.

மூன்றாவது கைகளில், வஜ்ராயுதம், திரிசூலம் உள்ளது. இந்த ஆயுதம் சுப்பிரமணியருக்கும், காளிக்கும் உரியதாகும். அனைத்து உயிர்களை காத்தல் மற்றும் துஷ்டர்களை அழித்தலாகும்.

நான்காவது கைகளில், சூலம் – மணி காளியின் அவதாரமாகும். ஐந்தாவது கைகளில் வில் – அம்பு ஏந்தி நிற்பது கெங்கை அம்மனின் திருவுருவத்திற்கு உரியதாகும்.

ஆறாவது கைகளில் கதாயுதம், தண்டம் ஏந்தியுள்ளது. இது அனுமனின் ஆயுதமாகும். தன்னை நாடி வருபவர்களுக்கு அனைத்து செயல்களையும் தாங்கக்கூடிய உடல் வலிமையும், மன தைரியத்தையும் அளிப்பதாகும்.

ஏழாவது கைகளில், கத்தி கபாலமும் ஏற்றிருப்பது பெண்களின் மாங்கல்ய பாக்கியத்தை காத்து ரட்சிப்பதாகும்.

எட்டாவது கைகளில், அச்சம், அகிலண்டியுடன் காட்சி தருவது பிரம்மா மற்றும் சரஸ்வதியின் மறுவடிவமாகும். படைத்தல் தொழிலை சிருஷ்டிப்பது மற்றும் காலத்தால் அழியாத கல்வி செல்வத்தை அளிப்பதாகும். ஒன்பதாவது கையை நோக்கியும், மற்றொரு கையை கீழ் நோக்கியும் காட்சியளிப்பது அஸ்தம், வர அஸ்தம் என்னும் நிலையை விலக்குவதாகும்.

ஸ்ரீ சர்வசக்தி அம்மனின் திருவுருவம் உலகத்தை உருவாக்கி ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் முப்படைகளின் முதல்வியாகவும் அன்னை அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள். இந்த ஸ்ரீ சர்வ சக்தி அம்மனை அனைத்து சமூகத்தவர்களும், அனைத்து மதத்தவர்களும் இங்கு வந்து வணங்குவது வேறெங்கும் காணாத ஒரு சிறப்பு.அம்மனை தரிசிக்க வருபவர்களுக்கு கல்வியறிவு மேம்படவும், வேலைவாய்ப்பு, திருமண யோகம், மாங்கல்ய பாக்கியம் கொடுப்பதோடு குடும்ப பிரச்சனைகள், உடல் பிணிகள், ஏவல், பில்லி, சூனியம் போன்ற துன்பங்களில் இருந்து விடுபட வைத்தல், ஆக்கல், காத்தல், அழித்தல், எனும் சூட்சுமத்தை தன்னகத்தே கொண்டு காத்து ரட்சித்து அருள்பாலிக்கிறாள். நாகதோஷம், புத்திர பாக்கியம் தந்து அனைத்து தடைகளையும் நீக்குபவளாகவும் இங்கு வீற்றிருக்கிறாள்.

பொதுவாக ஒரு ஆலயம் கிராமத்தின் மேற்குபுறத்தில் அமைவது சுபீட்சத்தை அளிக்கும். அதிலும் ஐந்து ஊர்களின் எல்லையில் அமைந்திருப்பது அளவற்ற ஆனந்தத்தை அளிக்கும்.நீர்நிலைகள் அருகாமையில் ஒரு ஆலயம் அமைவது அந்த கடவுளுக்கு மிகப்பெரிய சக்தியாகும். அந்த வகையில் இந்த ஆலயமோ மேற்குபுறத்தில் ஏரியும், வடக்கு புறத்தில் துரிஞ்சலாறும், தெற்குபுறத்தில் பாசன நீர் கால்வாயும் ஒருங்கே அமையப்பெற்றுள்ள இடத்தில் ஸ்ரீ சர்வசக்தி அம்மன் எழுந்தருளி காட்சியளிப்பது மிகப்பெரிய சிறப்பாகும். காசி, ராமேஸ்வரம் சென்றதன் பலனை இந்த அன்னையை வழிபடுவதன் மூலம் பெற்று அனைத்து

ஸ்ரீ சர்வசக்தி அம்மனின் சிறப்பு பூஜைகள்:

வாரந்தோறும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய மூன்று நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மாதந்தோறும் பௌர்ணமி அன்று இரவு 12 மணிக்கு அக்கினிசட்டி ஏந்தி கோவிலை வலம் வந்து சிறப்பு பூஜைகள் பக்தர்கள் செய்கிறார்கள். அமாவாசை தோறும் அம்மனை வேண்டி பூஜை செய்து இரவு ஆலயத்தில் தங்கி சென்றால் பலன் உண்டு. ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று தேர்த்திருவிழா, அன்னதானம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

The post சர்வ நலமும் அருளும் ஸ்ரீ சர்வ சக்தி அம்மன்! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>