நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு கிடைக்க !
ஏகாதசி விரதம்
பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியை ஒரு பக்ஷம் என்கிறோம். கிருஷ்ண பக்ஷம் (தேய்பிறை), சுக்லபக்ஷம் (வளர்பிறை) ஆகிய இந்த இரண்டு பக்ஷங்களில் ஒவ்வொன்றிலும் 11வது நாளின் (திதியில்) வருவது ஏகாதசி ஆகும்.
கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் ஆகிய இந்த பதினொரு இந்திரியங்களால் செய்யபடும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் ஏகாதசி விரதம் இருந்தால் அழிந்து விடுவது உறுதி.
காயத்ரியை காட்டிலும் சிறந்த மந்திரம் இல்லை. தாயை விஞ்சிய தெய்வம் வேறு இல்லை. காசியை விஞ்சிய புண்ணிய தீர்த்தம் இல்லை. ஏகாதசியை விஞ்சிய வேறு விரதம் இல்லை. அந்த அளவிற்கு ஏகாதசி விரதம் மகத்துவம் வாய்ந்தது.
இராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி மாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசியன்று நாராயணனை வணங்கித் தங்கள் துன்பங்களை கூறினர். பகவானும் பிரம்ம தேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினார். முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு “முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.
தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற வேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்த போது அமுதம் வெளிப்பட்டது. துவாதசியன்ற மஹாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து தேவர்களுக்கு, திருக்காட்சி அளித்து அவர்களுக்கு அருளாட்சி புரிந்தார்.
அன்று முதல் ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு இந்தப் பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு அளிப்பார்.
ஒவ்வொரு மாத மும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களிள இருந்து 11-ஆம்நாள் ஏகாதசி வருகிறது . ஒரு வருடத்துக்கு 24 (அ) 25 ஏகாதசிகள் வருகிறது . அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர்.
ஆனி மாத தேய்பிறை ஏகாதசி
ஆனி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி “அபரா” என்று அழைக்கபடுகிறது. இந்த நாளில் மகாவிஷ்ணுவின் திரி விக்கிரமப்_ பிரதிமையை பூஜைசெய்தால் பத்ரிநாத், ஸ்ரீகேதாரிநாத் யாத்திரைசென்ற பலனும், கயாவில் தர்ப்பண்ம்செய்த பலனும்,பிராயாகையில் புண்ணிய ஸ்நானம் செய்தபலனும், சிவராத்திரி விரதபூஜை பலனும் ஒருங்கே செய்தபலன் கிடைக்கும்.
ஆடி மாத வளர்பிறை ஏகாதசி
ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “தயினி” என்று அழைக்கபடுகிறது. இஷ்ட நற் சக்திகளை தரவல்லது. முன்னோர்களின் ஆசியையும், அவர்கள் எதிர்பார்ப்புகளை நம்மூலம் செயல்படுத்தி நம்மை வெற்றியாளராக குவது ஆகும். ஏழைகளுக்கு வஸ்திர தானம் செய்வதினால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் .
The post நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு கிடைக்க ! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.