ஆஷாட ஏகாதசி (தேவசயன ஏகாதசி) – இன்று 04-07-2017- பண்டரிபுரம் !
பண்டரிபுரத்தில் முக்கிய நாளாக ஆஷாட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இது ஆஷாட மாதத்தில் (ஜூன்-ஜூலை) வரும் வளர்பிறை ஏகாதசியாகும். என்ன இந்த நாளுக்கு பண்டரிபுரத்தில் விசேஷம் ?
ஸ்ரீ பாண்டுரங்கனின் சிறந்த பக்தர்களான ஸ்ரீ துக்காராம் மகாராஜ் அவர்களும் ஸ்ரீ ஞானேஸ்வரரும் தமது பக்தர்களுடன் ஸ்ரீ பாண்டுரங்கனை தரிசிக்க பல மைல்கள் பாத யாத்திரையாக ( 150 – 200 கிமீ மேல் ) வந்து பண்டரிபுரம் அடைந்த நாள் ஆஷாட ஏகாதசி நாளாகும் .
ஓவ்வொரு ஆண்டும் இந்த சமயத்தில் மராட்டிய மாநிலம் தேஹு என்னும் இடத்திலிருந்து ஸ்ரீ.துகாராம் அவர்களின் பாதுகைகளை தாங்கிய பல்லக்கு ஏராளமான பக்தர்களுடன் பண்டரிபுரம் நோக்கி வருகிறது . பக்தர்கள் பாத யாத்திரையாக ஸ்ரீ துக்காராம் மஹாராஜூடனேயே பாடிக்கொண்டு வருவதாக பாவித்து பாண்டுரங்கன் மேல் பல பாடல்களை பாடிக்கொண்டு ( இவற்றை அபங்கங்கள் என்று கூறுகிறார்கள் ) அந்த பல்லக்கை தொடர்ந்து வருகிறார்கள் .
இதுபோலவே மராட்டிய மாநிலம் ஆலந்தி என்னும் இடத்திலிருந்து ஸ்ரீ ஞானேஸ்வரரின் பாதுகைகளை தாங்கிய பல்லக்கு பக்தர்களுடன் புறப்படுகிறது. இவை சரியாக ஆஷாட ஏகாதசியன்று பண்டரிபுரம் சென்று சேரும் வகையில் பல நாட்களுக்கு முன்பாகவே புறப்பட்டு வருகிறது . ஆங்காங்கே பல ஊர்களிலிருந்தும் மக்கள் வழியில் சேர்ந்துகொள்ள பக்தர்கள் வெள்ளம் ஆஷாட ஏகாதசியன்று பண்டரிபுரத்தில் பிரவேசிக்கிறது, பாண்டுரங்கனின் பாடல்களை பக்தி பரவசத்துடன் பாடிக்கொண்டு. இந்த ஆண்டு ஆஷாட ஏகாதசி ( அல்லது தேவசயன ஏகாதசி ).
பானுதாசர் விட்டலனின் பரமபக்தர். அவனை தரிசிக்காமல் நீர் கூட அருந்தமாட்டார். பானுதாசரின் காலத்தில் சக்கரவர்த்தியாகக் கோலோச்சிக்கொண்டிருந்த கிருஷ்ணதேவராயர். விட்டலனின் அழகில் மயங்கி, இந்த விக்கிரகத்தைக் கொண்டு போய், தன்னுடைய ராஜ்யத்தில் பிரதிஷ்டை செய்துவிட்டார்.
இந்த விவரம் தெரியாமல், பானுதாசர் வழக்கப் படி கண்ணனை தரிசனம் செய்ய வந்தார். கருவறையில் விட்டலன் இல்லை. துடித்துப் போனார். தேடித் தேடி, இறுதியில் அவர் விட்டலனின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து விட்டார். இறைவனின் திருவடிகளில் தலையை வைத்துக் கண்ணீர் உகுத்தபடி, அப்படியே அணைத்துக்கொண்டார். அப்போது கண்ணன் தன் கழுத்து துளசி மாலையையும், வைர மாலை யையும் எடுத்து, பானுதாசரின் கழுத்தில் போட்டு அழகு பார்த்தான்.
கண்ணனின் நகையைத் திருடியவரை சூலத்தில் ஏற்றிக் கொல்லுங்கள்
பானுதாசரின் கழுத்தில் வைரமாலையைக் கண்ட காவலர்கள், மன்னரிடம் இழுத்துப் போயினர். ‘கண்ணனின் நகையைத் திருடியவரை சூலத்தில் ஏற்றிக் கொல்லுங்கள்’ என்று ஆணையிட்டார் மன்னர்.
தண்டனையை நிறைவேற்ற முயன்றபோது, வாசம் வீசும் ஒரு பூச்செடியாக மாறியது சூலக்கம்பம். மன்னர் தன் தவற்றை உணர்ந்தார். பானுதாசருடன் கண்ணனையும் ஒரு பல்லக்கில் ஏற்றி, பண்டரிபுரத்துக்கே வழியனுப்பி வைத்தார்.
இந்த வைபவம் இன்றும் பண்டரீபுரத்தில் வருடாவருடம் ‘ஆஷாட ஏகாதசி’யாகக் கோலா கலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பாண்டுரங்கன் பக்தர்களின் உள்ளம் கவர்ந் தவன். பக்தர்களோடு கொஞ்சிக் குலாவுபவன். பல லீலைகளை நிகழ்த்துபவன். ஆலயத்தில் எப்போதும் விட்டலனைத் துதித்து, பக்தர்கள் பஜனைப் பாடல்களைப் பாடிய வண்ணம் இருக்கிறார்கள். பாண்டுரங்கனைத் துதிக்கும் ‘அபங்’ என்ற மராத்தியப் பிரார்த்தனைப் பாடல்கள் மிகப் பிரபலம்.
பாண்டுரங்கனைத் தரிசிப்போம். பரவசம் கொள்வோம்!
The post கண்ணனின் நகையைத் திருடியவரை கொல்லுங்கள்! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.