Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

சர்ப்ப தோஷங்கள் யாவும் நீக்கும் நாக சதுர்த்தி விரதம்

$
0
0

சர்ப்ப தோஷங்கள் யாவும் நீக்கும்

நாகசதுர்த்தி விரதம்

ஆடி மாதம் நாகசதுர்த்தி விரதத்தை தொடங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் இந்த விரதத்தை பின்பற்ற வேண்டும். ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் தொடங்கும் முதல் பண்டிகை இது. தக்ஷிணாயன புண்ணியகாலம் (ஆடி முதல் – மார்கழி) வரை இறை வழிபாட்டிற்கு உகந்த காலம். பெரும்பாலும் கோலாகலக் கொண்டாட்டங்களைத் தவிர்த்துவிட்டு, விரதங்கள், வழிபாடுகள் என மக்கள் தங்கள் மனங்களில் இறையுணர்வை ஏற்படுத்திக் கொள்ளும் மாதங்கள் இந்த ஆறு மாதங்கள்.

நாகசதுர்த்தி விரதம் தங்கள் கணவரின் நலனுக்காகவும் பிள்ளைகளின் நலனுக்காகவும் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் ஆகும். நாகசதுர்த்தி அன்று காலை விரதம் இருந்து, பாம்புப் புற்றுக்கு பால் ஊற்றி, துள்ளுமாவு படைத்து கணவர் மற்றும் பிள்ளைகளின் நலனுக்காக வேண்டிக் கொண்டு பிரார்த்தனை செய்வார்கள்.

நாக சதுர்த்தி விரதம் ஏற்பட்டதற்கான புராண நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-

காஸ்யபருக்கும் கத்ரு என்பவளுக்கும் பிறந்தவர் நாகர். தாய் சொல்லைக் கேட்காமல் தன் போக்கில் நடக்கத் தொடங்கினார், நாகர். இதனால் கோபம் கொண்ட தாயர் கர்து, தாய் சொல்லை கேளாததால் தீயில் விழுந்து இறந்து போகும்படி மகனுக்கு சாபம் கொடுத்தாள்.

ஜனமேஜயன் மூலம் அந்த சாபம் நிறைவேறியது. பாம்புகளின் தலைவனாக விளங்கிய `தட்சகன்’ என்ற கொடிய நாகத்தால் பரிசட்த் என்ற மன்னன் கடிக்கப்பட்டு இறந்தான். தந்தையின் இறப்புக்கு காரணமான பாம்பு இனத்தையே அழிக்க உறுதி பூண்டான் பரிசட்த்தின் மகன் ஜனமேஜயன்.

அதற்காக `சர்ப்பயக்ஞம்’ என்ற வேள்வியை நடத்தினான். பல பாம்புகள் அவன் நடத்திய யாகத்தில் இருந்த வேள்வித்தீயில் விழுந்து மாண்டன. அஸ்தீகர் என்ற முனிவர் ஜனமேஜயனது யாகத்தை நிறுத்தி நாகர்களுக்கு சாப நிவர்த்தி கொடுத்தார்.

அவ்வாறு சாபநிவர்த்தி கொடுத்த நாள் நாக சதுர்த்தி தினமாகும். எனவே நாக விரதம் ஆடி மாத சதுர்த்தியில் கொண்டாடும் வழக்கம் தோன்றியது. இந்த நாக சதுர்த்தி விரதத்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் புத்திரர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.

விரதமுறை:

நாகர் சிலைக்கு நீரால் அபிஷேகம் செய்வார்கள். பின்னர் பால் அபிஷேகம் செய்வார்கள். பின் மஞ்சள் பூசிக் குங்குமம் வைப்பார்கள். பால், முட்டை முதலியவற்றை நிவேதன பொருளாக வைத்து வழிபடுவார்கள். மூன்று அல்லது ஒன்பது முறை கோவிலை சுற்றி வலம் வருவார்கள்.

The post சர்ப்ப தோஷங்கள் யாவும் நீக்கும் நாக சதுர்த்தி விரதம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>