Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

சிவபெருமான் “அம்மையே” என்று அழைத்த காரைக்கால் அம்மையார்

$
0
0

உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் அம்மையப்பனாக இருந்து அருள்பாலிக்கக் கூடியவன். அம்மையப்பனான சிவனால் அம்மை என்றும் அப்பன் என்றும் அழைக்கப்பட்ட அடியார்கள் இரண்டு பேர் உண்டு. அம்மை என அழைக்கப்பட்டவள் காரைக்கால் அம்மையார். அப்பன் என அழைக்கப்பட்டவர் கண்ணப்பநாயனார்.புனிதவதி என்னும் அவளது இயற்பெயர் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பட்டமைக்கு இறைவன் அவளை அம்மையே என்று அழைத்தமைதான் காரணமாயிற்று. புனிதவதியார் பரமத்தன் என்பவனை மணந்து காரைக்காலில் இனிமையான முறையில் இல்லறம் நடத்தி வந்தார். ஓரு சமயம் அவள் கணவனை காணவந்த சிலர் இரண்டு சுவையான மாங்கனிகளை அவனுக்குத் தந்தனர். அவன் அந்த இரண்டு கனிகளையும் வீட்டுக்கு அனுப்பினான். புனிதவதியதத் அதனைத் தன் கணவனுக்குப் படைக்கலாம் என்று பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.

  image3அந்நிலையில், சிவனடியார் ஓருவர் வீட்டுக்கு வந்தார். அப்போது அம்மையார் சோறு மட்டும் சமைத்திருந்தார். கறி முதலானவை தயாரகவில்லை. வந்த அடியவர் பசியோடு இருத்ததைப் பார்த்து அவருக்கு உணவிட்டு மாங்கனியும் படைத்து உண்ணச் செய்து அனுப்பினார். சிறிது நேரம் சென்றபின் கணவன் பரமதத்தன் வந்தான்.வழக்கம்போல உணவு படைத்தார் அம்மையார். அவன் அனுப்பியிருந்த மாங்கனியை கறி அமுது முதலானவற்றுடன் படைத்தார். பழத்தைச் சுவைத்துத் தின்றான் கணவன். அதன் இனிய சுவையில் மயங்கினான். இன்னொரு பழம் கொடுத்தேனே, அதனை கொணர்க என்றான்.அவன் சுவை உணர்வை கெடுக்கலாகது என நினைத்தாள் அவள். தான் இன்னொரு பழத்தை அடியவர் ஓருவருக்கு அமுதாகப் படைத்ததைக் கணவனிடம் சொல்லவில்லை. இன்னொரு பழத்தை எடுத்துவரச் சொல்வதுபோல அடுக்களையில் நுழைந்தாள், இறைவனை வேண்டி நின்றாள். இறையருளால் அவள் கைக்குப் பெரும் சுவையுடைய

  அதிமதுரக் கனி ஓன்று வந்தது. அந்தக் கனியைக் கொண்டுவந்து கணவன் இலையில் இட்டாள். பரமதத்தன் அதனைச் சுவைத்தான். முன்னால் சுவைத்த கனிச்சுவையிலிருந்து வேறுபட்டதாகவும், அதனினும் ஏன் அமிழ்தினும் மேம்பட்டதாகவும் இக்கனியின் சுவை இருந்ததைக் கண்டு நீ இதனை எங்கு பெற்றாய் என கேட்டான்? கணவனிடம் உண்மையைச் சொல்லித்தானே ஆக வேண்டும் நடந்ததை சொன்னாள். இந்த விஷயத்தைக் கேட்ட பரமதத்தன் இன்னொரு கனி எனக்கு வரவழைத்து கொடு என்று கேட்டான். தனியே சென்று இறையருளால் கிடைத்தது என்ற வார்த்தை பொய்யாகாமல் இருக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டினாள் அம்மையார். இறையருளால் இன்னும் ஓரு கனி அவள் கையில் கிடைத்தது. அந்தக் கனியை அவள் தன் கணவன் கையில் இட்டாள். அவன் மாங்கனியைப் பார்த்த அளவில் மாயமாய் மறைந்தது அந்த மாங்கனி. அது கண்டு அஞ்சினாள். அம்மையாரை தெய்வமாக நினைத்தான். அவளோடு ஓரே வீட்டில் இருந்தாலும் உறவுத் தொடர்பில்லாமல் இருந்தான்.

  அதன்பின் பரமதத்தன் மதுரைக்குச் சென்று பெருவணிகம் செய்ததும் இன்னொரு பெண்ணை மணம்புரிந்து கொண்டதும் அவள் மூலம் பிறந்த குழந்தைக்கு புனிதவதி என்று பெயர் சூட்டி மகிழ்ந்ததும் பெரிய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. காரைக்கால் அம்மையாரின் தெய்வத்தன்மையை உணர்த்தும் வகையில் அவர் மாங்கனி பெற்ற அதிசயம் காரைக்காலில் அவருக்கு உள்ளே கோயிலில் மாங்கனித் திருவிழா என்ற பெயரால் விசேஷமாகக் கொண்டாடப்படுவது வழக்கத்தில் உள்ளது. இந்தச் சம்பிரதாய திருவிழா தரிசிப்பதற்குரிய திருவிழாவாகும்.

 01july_tymbg06__02_2458752fசிவபெருமான் அம்மையே என்றழைத்த பெருமை காரைக்கால் அம்மையாரை சேரும். இதனால் பெருமையடைகிறது காரைக்கால் என்றால் மிகையாகாது. 63 நாயன்மார்களில் ஓருவராக உள்ள காரைக்கால் அம்மையார், சிவபக்தையாக இருந்து, இறைவன் இருக்கும் கைலாயத்தை காலால் நடந்து செல்லல் ஆகாது என்று முடிவு செய்து தலைகீழாக நடந்து சென்றதன் விளைவாக, இறைவன் புகழ், பெருமை கொண்ட புனிதவதியார் என்ற அழியா புகழைப் பெற்ற காரைக்கால் அம்மையாருக்கு, காரைக்கால் நகரப் பகுதியில் அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கி ஆண்டுதோறும் விமரிசையாக விழா நடத்தப்படுகிறது. புனிதம் நிறைந்த தெய்வத்தாய் வாழ்ந்த காரைக்காலில் ஓவ்வொரு ஆண்டும் அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கி, மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது. விழாவில் பிச்சாண்டவர் வீதியுலாவில் பக்தர்கள் மீது மாங்கனிகள் வீசப்படும். அவ்வாறு இறைக்கப்படும் மாங்கனியைப் பிடித்து, சாப்பிடுவது இறைவன் அளித்த அமுதமாகவும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்றும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகக்கொண்டு, விழாவில் கலந்துகொண்டு மாங்கனிகளைப் பிடித்து சாப்பிடுவர். இந்த வரலாற்று நிகழ்ச்சியை காண உள்ளூர், வெளிமாநில பக்தர்கள் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து கலந்துகொள்வார்கள்.

மாங்கனி திருவிழா :-

  இன்று (17.06.2016) மாப்பிள்ளை அழைப்புடன் நிகழ்ச்சிய தொடங்கி, நாளை 18ம் தேதி புனிதவதியார் பரமபத செட்டியார் திருக்கல்யாணமும், 19ம் தேதி கைலாசநாதர் பிச்சாண்டவர் கோலத்தில் பவளக்கால் வீதியுலா (மாங்கனி இறைத்தல்) நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பொதுமக்கள் மாம்பழங்களை இறைத்து வழிபாடு நடத்துவார்கள். 20ம் தேதி பஞ்சமூர்த்திகளுடன் அம்மையார் இறைவனுக்கு காட்சிதரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

செய்தி:ப.பரசுராமன்

படம் :ப.வசந்த்

 

 

The post சிவபெருமான் “அம்மையே” என்று அழைத்த காரைக்கால் அம்மையார் appeared first on SWASTHIKTV.COM.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


சித்தன் அருள் - 1881 - அன்புடன் அகத்தியர் - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024...


ஆசீர்வாத மந்திரங்கள்


ச.துரை –நான்கு கவிதைகள்


கணவன் கண் முன்னே துப்பாக்கி முனையில் மனைவி கூட்டு பலாத்காரம்..!


பட்டைய கிளப்பும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் 2வது டிரைலர்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்கள்


இரண்டு பழைய புத்தகங்கள்!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>