Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

வாழ்வில் ஏற்றமும் சிறப்பும் தரும் சிவவிரதங்கள்

$
0
0

வாழ்வில்  ஏற்றமும் சிறப்பும் தரும் சிவவிரதங்கள்

1. சோமவார விரதம்;  திங்கள் கிழமைகளில் இருப்பது
2. உமா மகேஸ்வர விரதம்; கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது
3. திருவாதிரை விரதம்; மார்கழி மாதத்தில் வருவது
4. சிவராத்திரி விரதம்; மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது
5. கல்யாண விரதம்; பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது
6. பாசுபத விரதம்; தைப்பூச தினத்தில் வருவது
7. அஷ்டமி விரதம்; வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது
8. கேதார கவுரி விரதம்; ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.

துன்பங்கள் போக்கும் திருநீலகண்ட பதிகம்

முதலாவது மனக்கட்டுப்பாட்டுடன் உணவுக் காட்டுப்பாட்டினையும் கடைப்பிடித்திட வேண்டும்.

1)சோமவாரவிரதம்,
2)திருவாதிரை விரதம்,
3)உமா மகேஸ்வரி விரதம்,
4)சிவசாத்திரி விரதம்,
5)கேதார விரதம்,
6{கல்யாண சுந்தர விரதம்,
7)சூல விரதம்,
8)இடப விரதம்,
9)பிரதோஷ விரதம்,
10) கந்த சஷ்டி விரதம் ஆகும்.

ஈசன் செயலில் ஓர் நன்மையான காரணம் இருக்கும்

சோமா வார விரதம்:

சோம வார விரதம் – கார்த்திகை மாதம் முதல் சோம வாரத்திலிருந்து இருத்தல் வேண்டும் சோமா வாரத்தில் உண்ணா நோன்பு மேற்கொள்வது முறை இவ்விரதம் வாழ்நாள் முழுமையோ, ஓராண்டு, மூன்று ஆண்டுகள், 12 ஆண்டுகள் என்ற கணக்கில் அனுஷ்டிப்பதே முறை.

திருவாதிரை விரதம்:

மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று இருவேளை உண்ணா நோன்பும். இரவு பால், பழத்துடன் முடித்துக் கொள்வது.

உமா மகேஸ்வரி விரதம்:

இவ்விரதம் கார்த்திகை பௌர்ணமியில் இருக்க வேண்டும். இந்நாளில் ஒரு பொழுது பகல் உணவு அருந்தலாம். இரவு பலகாரம்,பழம் சாப்பிடலாம்.

சிவசாத்திரி விரதம்:

இவ்விரதம் மாசி கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று இருத்தல் வேண்டும். அன்று உண்ணா நோன்பு மேற்கொள்வது சிறப்பு. நான்கு ஜாமங்களும் உறங்காது சிவபூஜை செய்வது மிக நல்லது.

கேதார விரதம்:

இந்த விரதம் புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச அட்டமி முதல் 21 நாட்களும் கிருஷ்ணபட்ச பாதமை முதல் 14 நாட்களும் கிருஷ்ணபட்சத்து அட்டமி முதல் 7 நாட்களும் கிருஷ்ணபட்சத்து சதுர்த்தியன்றும் இருத்தல் வழக்கம். இந்த விரதம் அனுஷ்டிக்கும் போது இருபத்தொரு நூலிழைகளினால் காப்புகட்டிக் கொள்வது முறை ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டுதல் வேண்டும். இவ்விரதம் நிகழ்முறை முதல் 20 நாட்கள் ஒருபொழுது மட்டும் உணவு கொள்ள வேண்டும். இறுதி நாளன்று உண்ணாவிரதம் இருத்தல் முறை.

கல்யாண சுந்தர விரதம்:

இவ்விரதம் பங்குனி உத்திரத்தன்று மேற்கொள்ளப்படும் ஒரு பொழுது மட்டும் உணவு கொள்ளலாம் இரவில் பால் அருந்தலாம். சூல விரதம்:: இந்த விரதம் தை மாசம் அமாவாசையன்று இருக்க வேண்டும். ஒரு பொழுது மட்டும் பகல் உணவு உட்கொள்ளலாம். இரவு உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.

இடப விரதம்:

இவ்விரதம் சுக்கிலபட்சம் அஷ்டமியன்று மேற்கொள்ள வேண்டும். ஒரு பொழுது பகல் உணவு மட்டும் உண்ணலாம்.

பிரதோஷ விரதம்:

இவ்விரதம் சுக்கிலபட்ச திரியோதசி, கிருஷ்ணபட்ச திரியோசி ஐப்பசி அல்லது கார்த்திகை அல்லது வைகாசி மாதங்களில் சனி பிரதோஷம் முதல் மேற்கொள்ள வேண்டும். பகலில் உணவு உட்கொள்ளக்கூடாது. பிரதோஷம் கழிந்த பின் உணவு அருந்தலாம்.

கந்த சஷ்டி விரதம்:

ஐப்பசி மாதம் சுக்கிலபட்சம் பிரதமை முதல் சஷ்டி வரை விரதம் மேற்கொள்ள வேண்டும். ஆறு நாட்களும் உண்ணா நோன்பிருத்தல் மிகமிக சிறப்பு.ஒன்று முதல் ஐந்து நாட்கள் ஒரு பொழுது உணவு கொண்டு ஆறாம் நாள் முழுமையா உண்ணா விரதம் இருக்க வேண்டும். இது ஆறு ஆண்டுகள் தொடர்ந்து செய்வது மிகமிக சிறப்பான நலம் பெறுதல் உண்டு.

For Details and news updates contact:

 Send Your Feedback at : editor@swasthiktv.com

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post வாழ்வில் ஏற்றமும் சிறப்பும் தரும் சிவவிரதங்கள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>