ராஜ ராஜேஸ்வரி அருள்வாக்கு சித்தர் பீடம் நவராத்திரி பெருவிழா அழைப்பிதழ்
திண்டிவனம் அடுத்த பெலாகுப்பம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அருள்வாக்கு சித்தர் பீடம் ஸ்ரீல ஸ்ரீ ரகுராம அடிகளார் நவராத்திரி பெருவிழா தலைமையில் நடைபெறவுள்ளது.
அகிலங்கள் அனைத்திலும் அருளாட்சி செய்யும் நாயகியாகத் திகழ்ந்து, தன அருட்கருணை பொங்கும் திருவிழிப் பார்வையினால், தன்னை நாடி வந்து துதித்துத் தொழுகின்ற அடியார்களின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி அருள்பவள்.
நவசக்தி நாயகிகளின் நாமங்கள்!
இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி, ஆதிசக்தி, பராசக்தி, குடிலாசக்தி என்ற ஆறு குணங்களைக் கொண்ட அம்பாள் ஒரே ரூபத்தில் அனைத்து குணங்களையும் ஒடுக்கிக் கொண்டு கருவறையில் வீற்றிருக்கும் ஒன்பது சக்தி தேவி (நவசக்தி) ஆலயங்கள் நம் நாட்டில் உள்ளன.
மகாசக்தியாக காஞ்சிபுரத்தில் காமாட்சி தேவி, ஸ்ரீ சைலத்தில் பிரம்மராம்பா தேவி, கோல்ஹாபூரில் மகாலக்ஷ்மி தேவி, உஜ்ஜயினியில் காளிகா (ஹரசித்தி) தேவி, அலகாபாத்தில் லலிதா (அலோபி) தேவி, விந்தியாச்சலில் விந்தியா வாசினி தேவி, காசி எனப்படும் வாரணாசி கே்ஷத்ரத்தில் விசாலாட்சி தேவி, காட்மண்டில் குஹ்யகேஷ்வரி தேவி, கயா தலத்தில் மங்கள தேவி என்ற திருநாமங்களுடன் அருளாட்சி செய்கிறாள். அனுதினமும் அன்னையின் பாதம் பணிவதுடன், நவராத்திரி நாட்களிலும் வணங்கி நவசக்தி அருளைப் பெற்று நலம் பெறுவோம்.
நவராத்திரியில் சொல்ல வேண்டிய ஸ்ரீதுர்கா, ஸ்ரீலஷ்மி, சரஸ்வதி துதி
நமோஸ்து தேவ்யை சர்வஜீவ சரண்யை!
நமோஸ்து மாதா துர்கே பவானி!
நமோஸ்து லக்ஷ்மி ஸர்வசுப காரணி!
நமோஸ்து வாணீ சகலகலா மாதா!
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அருள்வாக்கு சித்தர் பீடம் நவராத்திரி பெருவிழா
சொர்ண விக்கிரகத் திருமேனியில் திருக்காட்சி நல்கும் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி, தன்னை நாடி வரும் அடியார்களுக்கெல்லாம் பொன்னையும் பொருளையும் வரமாகத் தந்தருள்கிறாள். திண்டிவனம் அடுத்த பெலாகுப்பம் அமைந்துள்ளது ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அருள்வாக்கு சித்தர் பீடம் இத்திருக்கோயிலில், நவராத்திரி விழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒன்பது நாட்களும் அம்மனுக்குச் சிறப்பு அலங் காரங்களும், பூஜைகளும் நடைபெறும். ஸ்ரீ கணபதி ஹோமத்துடன் துவங்குகிறயாக பூஜையில், அம்மனின் நாம பாராயணம், ஸ்ரீ சண்டி ஹோமம், வேத பாராயணம் என விமரிசையாக நடைபெறும். நவராத்திரி விழாவில், அம்மனுக்குத் திருமஞ்சனம், நவாவரண பூஜை ஆகியவையும் விசேஷம். 9-ஆம் நாளன்று, யாக பூஜை நிறைவுற்று கலச நீரால் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். மாலையில் சரஸ்வதி பூஜை நடைபெறும். பிரம்ம முகூர்த்த வேளையில் நடை திறக்கப்படும். விடிந்ததும் விஜயதசமி பூஜைகள் நடைபெறும்.
தொடர்புக்கு :
9345034366, 8695644322, 9047773887
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அருள்வாக்கு சித்தர் பீடம் நவராத்திரி பெருவிழா அழைப்பிதழ் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.