திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள முருகனின் ஆறுபடை விடுகளில் 5-ஆம் படையாக திருத்தணி உள்ளது இங்கு தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர்புரிந்து, கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணிகை. தேவர்கள் பயம் நீங்கிய இடம். திருத்தணி முருகன் கோவில் மிகவும் பழமையானது.
முருகனின் கோபம் தனிந்த திருத்தணிகை தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர் புரிந்து, முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணி. ஆகையால் இந்த தலம் தணிகை எனப் பெயர் பெற்றது. தேவர்கள் பயம் நீங்கிய இடம், முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை முதலியவற்றைத் தணிக்கும் இடமாதலாலும் திருத்தணி என பெயர் பெற்றது. முருகன் இத்தலத்தில் ஒரு தனி மலையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். இம்மலையின் இரு பக்கங்களிலும் மலைத் தொடர்ச்சி வடக்கே உள்ள மலை வெண்மையாக இருப்பதால் பச்சரிசி மலையென்றும் தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால் “புண்ணாக்கு மலை” என்றும் அழைக்கப்படுகிறது. ‘சரவணப் பொய்கை” என்ற புகழ்மிக்க ‘குமார தீர்த்தம்’ என்ற திருக்குளம் மலைஅடிவாரத்தில் உள்ளது.
முருகப்பெருமான், தன் கிரியா சக்தியாகிய தெய்வயானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்டார். இச்சா சக்தியாகிய வள்ளியம்மையை திருத்தணியில் திருமணம் செய்து கொண்டார். திருத்தணியின் சிறப்புக்கு இதுவே முக்கிய காரணமாகும். பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வடலூர் இராமலிங்க அடிகள், அருணகிரி நாதர் முதலிய சான்றோர்கள் திருத்தணி முருகனைப் பெரிதும் புகழ்ந்து பாடியுள்ளர். குமரதீர்த்தம் திருத்தணிக்குச் செல்லும் பக்த கோடிகள் முதலில் குமார தீர்த்தம் என்ற சரவணப் பொய்கையில் நீராடி, சுத்தம் செய்து கொண்டு தோய்த்து உலர்ந்த ஆடைஅணிந்து திருநீறு பூசி மலை ஏற வேண்டும். மலை உச்சியை அடைந்ததும் கிழக்கு கோஷ்டத்தில் கொடிக்கம்ப விநாயகரையும், ஐராவத யானையையும் தரிசிக்க வேண்டும். தெற்கிலுள்ள இந்திர நீலச் சுனையைத் தரிசித்து விட்டுப்பின் கோவிலின் உள்ளே சென்று ஆபத்சகாய விநாயகரையும் அருகில் உள்ள வீரவாகு முதலிய நவ வீரர்களையும் குமாரலிங்கேசுவரரையும் தரிசிக்க வேண்டும். பின்னர் மூலஸ்தானத்திலுள்ள ஞானசக்திதரர் என்னும் முருகனையும் வள்ளி தெய்வானையும் வழிபடுதல் வேண்டும்.
அமைவீடம் :
சென்னையில் இருந்து 84-வது கீலோமீட்டரிலும் வேலூரில் இருந்து 90 கீலோமீட்டரில் உள்ளது.
தொடர்புக்கு : 08800636035
செய்தி : ப.பரசுராமன்
படங்கள் : ப.வசந்த்
The post முருகனின் கோபம் தணிந்து அமர்ந்த திருத்தணிகை appeared first on SWASTHIKTV.COM.