அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் வர்ணனை கண்டு வருகிறோம்.
இனி : மஹா பத்மாடவீ வர்ணனை
ஹயக்ரீவர் : வாபீத்ரயம் முதலியவைகளில் உள்ள அங்கணப் பிரிவுகளை கூறுகிறேன். அதை கேட்ட மாத்திரத்திலேயே மகத்தான செல்வம் உண்டாகும்.
மனோமய கோட்டை
ஆயிரங்கால் மண்டபத்தின் ஏழாவது யோஜனை தூரத்தில் சர்வ ரத்னங்களால் அமைக்கப்பட்ட மிக விசித்திரமான மனோமய கோட்டை இருக்கிறது.
முற்கூறியவற்றை போலவே இதற்கும் கோபுரம், துவாரம், கதவு, தாழ்ப்பாள் முதலியவை அமைந்துள்ளன. அதன் இடையில் உள்ள இடமெல்லாம் அமிர்த வாபிகளாம்.
அந்த அமிர்தத்தை முகர்ந்த மாத்திரத்தில் மனிதன் மஹா பலசாலியாகவும், சித்திகளுக்கு அதிபதியாகவும் திகழ்வான்.
மிக சஞ்சலமான அலைகளை
கொண்ட அமிர்த வாபி நான்கு யோஜனை ஆழமுள்ளது. இரு கரைகளும் அரை குரோச தூரம் நீளமுள்ளவை.
புதிய அமிர்தத்தை பருகிய நீர்க்கோழி முதலிய பறவைகள் முதுமை மற்றும் மரணத்தை வென்று சதா தேவியின் மந்திரத்தை கூவுகிறது.
அமிர்தவாபி நாற்புறமும் சக்கரம் போல வட்டமாக சூழ்ந்திருப்பதால் தோணியில்லாமல் அங்கு செல்ல இயலாது.
மந்திரிணி மற்றும் தண்டினி ஆகியோரின் ஆக்ஞையால் தாரா என்னும் மஹாசக்தி ஓடத்தை ஓட்டும் சக்தியாக அங்கே விளங்குகிறாள்.
கறுத்த மேனியையும், நவயௌவனம் வாய்ந்த தாரா தேவியின் வேலைக்காரிகள் பல்வேறு இசை கருவிகளை இசைத்து தேவியை பற்றி பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் ஓடத்தை செலுத்தி கொண்டிருக்கின்றனர். இதை காணவே மிகவும் ரமணீயமாய் இருக்கும்.
விசித்திரமான பற்பல ஓடங்களால் சூழப்பட்டு மிக பெரியதும், அழகியதுமான சிறந்த தோணியில் ஜலத்தினால் ஏற்படும் ஆபத்தை போக்கவல்ல தாராம்பாள் பிரகாசிக்கின்றாள்.
அவள் தண்டினி, மந்திரிணி ஆகியோரின் உத்தரவின்றி முக்கண் படைத்த பரமசிவனுக்கு கூட அவ்வாபிகையை தாண்ட ஒரு தோணியை கூட தருவதில்லை.
அந்த தாரா தேவி தன்னை போன்ற ரூபமுள்ளவரும், லலிதா மந்திரம் ஜபிப்பவருமான கணவனுடன் கூடி அத்தோணியில் ஒரு சிறந்த ரத்ன ஆசனத்தில் அமர்ந்து அவ்வாபியில் சஞ்சரித்து அதனை ரக்ஷித்து வருகின்றனர்.
தொடரும்…
The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 71) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.