அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் உலோக கோட்டை, ரத்ன கோட்டைகளின் வர்ணனைகளை கண்டோம்.
இனி : புத்திமய கோட்டை மனோமய கோட்டைக்கு ஏழாவது யோஜனை தூரத்தில் நான்கு யோஜனை உயரமுள்ள புத்தி மயமான ஒரு கோட்டை இருக்கிறது.
இவ்விரு கோட்டைக்கும் இடைப்பட்ட பிரதேசம் ஆனந்த வாபிகை எனப்படும்.
அங்கு மகிழம்பூ நறுமணத்துடன், உருக்கிய தங்க நிறமான மஹாமத்யம் ஜலரூபமாக இருக்கிறது. அதன் ஆழம், அகலம், படிக்கட்டுகள், வசிக்கும் பறவைகள் ஆகியவை அமிர்த வாபிகையில் உள்ளது போன்றதேயாம்.
இந்த ஆனந்த வாபிகையில் உள்ள தோணிகளை சக்தி சேனைகளால் சூழப்பட்ட, மணிமயமான தோணியில் சதா லலிதா மந்திரத்தினை ஜபிக்கும் கணவனோடு கூடி வாருணீ தேவி ரக்ஷித்து வருகின்றாள்.
மந்திரிணி, தண்டினியின் உத்தரவுப்படியே அவ்வாபிகையை தாண்ட தோணிகளை அளிக்கிறாள்.
அஹங்காரமய கோட்டை புத்தி மய கோட்டைக்கு ஏழாவது யோஜனை தூரத்தில் முற்கூறிய லக்ஷணங்களுடன் கூடிய அஹங்கார மயமான கோட்டை விளங்குகிறது.
இவ்விரு கோட்டைக்கும் இடைப்பட்ட பிரதேசம் விமர்சவாபிகா எனப்படும். இங்குள்ள தீர்த்தம் ஸூக்ஷும்நாம்ருதம் எனப்படும்.
இது யோகிகளின் மனக் காற்றால் நிரப்பப்பட்ட ஸுக்ஷும்னா நாடியின் உள்ளே பிரகாசிப்பதாகும்.
இவ்வாபிகைக்கும் முன்பு கூறப்பட்டது போல் கரைகள், படிக்கட்டுகள், பக்ஷிகள், தோணிகள் முதலியவை அமைந்துள்ளன.
இதற்கு யஜமானி பச்சிலை மரம் போன்ற நிற மேனி கொண்ட குருகுல்லா தேவியாவாள்.
இவள் தன்னை போன்ற நிறமும், வடிவமும் கொண்ட பல சக்திகள் சூழ, கையில் ரத்ன துடுப்பை ஏந்தி, கணவருடன் சேர்ந்து மணிமயமான ஓடத்திலமர்ந்து அவ்வாபிகையை நாற்புறமும் சுற்றி வருகிறாள்.
தொடரும்…
The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 72) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.