பலரது ஜாதகத்தில் பலவிதமான தோஷங்கள் இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது அவர்கள் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவமே. இந்த பாவங்களை போக்க ஜோதிடர்கள் பல பரிகாரங்கள் சொல்வது வழக்கம். ஆனால் நீங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த தோஷங்களை போக்க உதவும் ஒரு அற்புதமான காயத்திரி மந்திரம் இதோ.
□காயத்ரி மந்திரம்□
ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்
பொது பொருள் அனைத்தையும் படைத்தவரும், எல்லாவற்றிற்கும் தலைவனாகவும் இருக்கும் அந்த பரமாத்மாவை நாங்கள் தியானிக்கிறோம். அந்தப் பரமாத்மாவின் தெய்வீக ஒளியே உலகில் இருக்கும் அனைத்து விடயங்களின் உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றிலும் பிரதிபலிக்கிறது. அப்படியான அந்த தெய்வீக பேரொளி எங்களுக்கு ஞானம் வழங்க வேண்டுகிறோம்.
இந்த மந்திரத்தை நம்மில் பலரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இதன் பலன் தெரியாததால் இதை ஜெபிக்காமல் விட்டிருப்போம். இந்த மந்திரத்தை தினசரி ஜெபிப்பதன் மூலமாக, நாம் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு அகலும். அனைத்து மந்திரங்களுக்கும் தாய் போன்றது காயத்திரி மந்திரம். ஆகையால் இந்த காயத்திரி மந்திரத்தை ஜெபித்து பலனை அடையுங்கள்.
Top of Form
Bottom of Form
The post பூர்வ ஜென்ம பாவங்கள் போக்கும் காயத்ரி மந்திரம் appeared first on SwasthikTv.