நவராத்திரி சிறப்பு சுண்டல் வகைகள்.
தேவையான பொருட்கள்
வெள்ளை பட்டாணி – ஒரு கப் (ஊறவைத்து, அரை உப்பு போட்டு வேகவைத்தது)
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்
பொடி செய்ய:
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
தனியா – ஒரு டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – இரண்டு
அனைத்தையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
தாளிக்க:
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
கரிவேபில்லை – சிறிதளவு
பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கியது)
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய், கரிவேபில்லை போட்டு தாளிக்கவும்.
பிறகு, வேகவைத்த வெள்ளை பட்டாணி, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து மூன்று நிமிடம் கிளறவும்.
பிறகு, பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.
The post வெள்ளை பட்டாணி சுண்டல் appeared first on SwasthikTv.