சுவாமி ஐயப்பன் களரி பயின்ற இடம் ஆலபுழா முகம்மா எனும் பகுதியில் உள்ளது. களரி குரு சீரப்பன் பரம்பரை இன்றும் இங்கே வசித்து வருகிறார்கள்.
பழமை மாறாத வண்ணம் இருக்கும் அவர்களது வீடும் கோவிலும் ,
அந்த கோவிலில் உத்திர திருநாள் முதல் துடங்கி மார்ச் 1 வரை விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் ஆலங்காடு சங்கத்தின் திருவிளக்கு உற்சவமும் நடைபெறும்..
கோவிலின் சிறப்பு என்னவென்றால் சபரிமலை ஏறிசெல்ல முடியாமல் இருந்த குருவின் கனவில் அய்யன் தோன்றி உடம்பு முடியாமல் இருக்கும் நீங்கள் இனி சபரிமலை வரவேண்டாம் வேம்பு நாட்டு அருவியில் ஒரு மரம் மிதந்து வரும் அந்த மரம் கொண்டு எனக்குஇங்குஒரு கோவில் அமைத்து என்னை வணங்கி வாருங்கள் என்னுடை முக்கால்வட்ட சக்தி இந்த இடத்தில் இருக்கும் என்று கூறி கனவில் மறைந்திருக்கிறார்.
அதே போல் அருவியில் மிதந்துவந்த மரம் கொண்டு கோயில் அமைத்தார்கள். இங்கேபகவான் வீராசனத்தில் அருள்பாளிக்கிறார்.இந்த இடத்தில் தற்பொழுது சீரப்பன் பரம்பரையில்10ம் தலைமுறை குருவாக திரு கேசவலால் அவர்கள் பூஜா கர்மங்களை நடத்திவருகிறார். மகரவிளக்கன்று உலகில் எல்லா அய்யப்பகோவில்களிலும் பூஜை நடைபெறும் ஆனால் இந்த கோயில் அன்று மூடப்பட்டிருக்கும் காரணம் ஸ்வாமியின் முழு சக்தியும் சபரிமலையில் அன்று இருக்கவேண்டும் என்பதற்காக இந்த கோயில் அடைக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
மகரவிளக்கு அன்று இவர்கள் அனைவரும் சபரிமலையில் இருப்பார்கள்.ஸ்வாமியின் முக்கால் வட்ட சைதன்யம் இங்கே குடிக்கொண்டிருப்பதால் இந்த கோவிலுக்கு முக்கால் வட்டம் அய்யப்பன் கோயில் என்று பெயர்.இந்த கோயில் வாரம் 3 நாட்கள் மட்டுமே திறக்கப்படுகிறது.நித்ய பூஜைக்கு உண்டான வசதிகள் இல்லாததால் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே நடைதிறந்து பூஜைகள் நடைபெறுகிறது.
பூழியங்கம் வித்தை கற்க்க அய்யப்பசுவாமி இந்த கோலத்தில் அமர்ந்து பயிற்சிசெய்வாராம் அதே கோலத்தில் இங்கே ஸ்வாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.இங்கே அய்யன் கொடுத்து சென்ற வாளும் ,கச்சை துணியும் இன்றும் பூஜை அறையில் உள்ளது.
ஸ்வாமியே சரணம்
ஜயப்பா……
The post ஐயப்பன் ஸ்பெஷல் ! appeared first on SwasthikTv.