காலையில் டிபனாகவும், மாலையில் ஸ்நாக்ஸாகவும் சாப்பிட சத்தான உணவு இந்த அரிசி கடலைப்பருப்பு உருண்டை. இன்று இந்த உருண்டை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி – ஒரு கப்,
துருவிய இஞ்சி, மாங்காய் – சிறிதளவு,
ஊற வைத்த கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய், கொத்தமல்லி விழுது – சிறிதளவு,
நெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
பச்சரிசியை வெறும் கடாயில் போட்டு வறுத்து ரவை போல் உடைத்து கொள்ளவும்.
இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவிட்டு, ஒரு டீஸ்பூன் நெய், ஊற வைத்த கடலைப்பருப்பு, உப்பு, துருவிய இஞ்சி, மாங்காய், பச்சை மிளகாய் – கொத்தமல்லி விழுது, பச்சரிசி ரவை சேர்த்துக் கைவிடாமல் கிளறி தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.
பின்னர் இந்த மாவை உருண்டைகளாகப் பிடித்து, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
இதை சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.
The post அரிசி கடலைப்பருப்பு உருண்டை appeared first on SwasthikTv.