Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

காமகோடி சக்தி பீடம் காஞ்சி காமாட்சி அம்மன்

$
0
0

 காமாட்சி அம்மன்(kamatchiamman) பொதுவாக குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மிகவும் முக்கியம். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம், தாம்பத்யம், ஒருத்த‌ர் ஒருத்தரு‌க்கு இடையே வேறுபாடுகளை மறப்பது, கணவன்-மனைவிக்குள் ஒற்றுமையை உண்டாக்கக் கூடிய அம்பாள் காமாட்சி அம்மன்.

 அம்பாளுக்கு வலப்பக்கமாக இன்னொரு அம்பாள் தவக் கோலத்தில் இருக்கிறார்கள். நின்ற நிலையில், ஒன்றைக்காலில் ஒரு அம்மா தவம் செய்கிறார்கள். அதனால்தான் அந்த அம்பாளுக்கு எல்லா சக்தியும் உண்டு என்று சொன்னது. மற்றொரு பக்கம் இடப்பக்கத்தில் பார்த்தீர்களென்றால் அரூபமாக லட்சுமியும் இருக்கிறார்கள். பக்கத்தில் அன்னபூரணி, அதற்கும் மேலே சரஸ்வதி இருக்கிறார். இதுபோல பல சக்தி பீடங்கள் காமாட்சி அம்மனை சுற்றி இருக்கிறது.

 சிவாலயங்களில் பார்த்தீர்களானால், தில்லை நடராஜர் (Thillai Natarajar) கோயிலிற்குப் போனால் எல்லா சிவாலயங்களுக்கும் போன நன்மை உங்களுக்கு கிடைக்கும். அதேபோல, காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலிற்குக் போனால் அனைத்து அம்பாள் சன்னதிக்கும் போன பலன் உங்களுக்குக் கிடைக்கும். அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த ஒரு அம்மன் (amman) . காமாட்சி அம்மனுக்கு விருத்தம் இருக்கிறது. அதில் உருகி உருகி பாடியிருக்கிறார்கள். அந்த விருத்தத்தில் ஒரு பாடலையாவது பாடி வழிபட்டால் அது இன்னமும் விசேஷமாக இருக்கும். இந்த அம்மனுக்கு விருச்சிப்பூவால் மாலை கட்டி வணங்கிவிட்டு வந்தாலும் விசேஷம். சகல நலன்களும் உண்டாகும்.

 காஞ்சிபுரத்தில் உள்ள எந்த கோயிலில் திருவிழா நடந்தாலும் உற்சவர்கள் தங்கள்  கோயிலை சுற்றுவதை தவிர்த்து, காமாட்சியம்மன் கோயிலை சுற்றி வரும் பழக்கம் காலம்  காலமாக இருந்து வருகிறது.  காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும், அவற்றில்  அம்மன் சன்னதி கிடையாது. காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாக  திகழுகிறாள்.  அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும்.  அம்மனுக்கு  முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது.  இத்தலத்தில் தான் ஆதிசங்கரர்  ஆனந்தலஹரி பாடினார்.

தல வரலாறு :

  முன்னொரு காலத்தில் கயிலை மலையில், ஒளிமயமான தூய மணிமண்டபத்தில், முதன்மைப் பொருந்திய சிங்காதனத்தின் மீது, தன் அன்புக்கு உரிய உமாதேவி ஒரு பாகத்தில்  இருக்க, வேதங்களின் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தார்.  தாருகன் அழிவுக்குப் பின்னர்  ஈசனும், தேவியும் கயிலை மலையில் தங்களுக்கு என அமைந்த ஏகாந்த மண்டபத்தில்  ஆனந்தமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.  அப்போது தேவி விளையாட்டாக ஈசன் முதுகுப்புறம்  வந்து அவருடைய கண்களைத் தன் இரு கரங்களில் பொத்தினார்.  இதனால் உலகம் இருண்டது.   இருளையே அறியாத தேவலோகம் ஒளி இழந்தது.  எங்கும் இருள் சூழ்ந்ததால் படைப்புத் தொழில்  நின்றது.  யாகங்கள் தடைப்பட்டன.  தவங்கள், தானங்களும் கைவிடப்பட்டன.  தெய்வ வழிபாடு  அறவே ஒழிந்தது.  உயிர்கள் மகிழ்ச்சி இல்லாமல் வருந்தின.  அறிவு வளர்ச்சித் தடைப்பட்டது.   மறை நூல்கள் மறைந்தன.  இருளின் வயப்பட்டு உலகமெல்லாம் மயங்கி நின்றன. தேவர்களும் முனிவர்களும் தம் காரியங்கள் தடைப்படவே, என்ன ஆகியதோ? என்ன ஆபத்து  சூழ்ந்ததோ? எனப் பதைபதைத்து சப்தமிட்டனர்.  இக்குரல் அன்னையின் திருச்செவியில் ஒலித்தது.  உடன் அன்னை தன் திருக்கரங்களை இறைவன் திருக்கண்களிலிருந்து எடுத்தார்.  உடனே  இறைவன் திருக்கண்கள் இரண்டும் ஒளிவீசின, மீண்டும் உலகம் புத்தொளிப் பெற்றது.

 சிவபெருமான் தேவியை நோக்கி, நீ எமது கண்களை மூடிய நொடிப் பொழுதில், உயிர்கள் வருந்தி  அறங்கள் தடைப்பட்டு பாவம் சூழ்ந்தது.  அப்பாவம் நீங்க, நீ பிராயச்சித்தம் செய்தாக வேண்டும்  என்றார்.  அதற்கு வழியையும் கூறினார்.  தேவி, யாம் எழுந்தருளியிருக்கும் இடத்திலாவது, நம்  அடியார் சிறப்புடன் வீற்றிருக்கும் இடத்திலாவது எம்மை வழிபடுவாயாக என்று அருளச் செய்தார்.  இறைவன் கூறியபடி அன்னை பிராயச்சித்தம் செய்வதற்குப் புறப்பட்டார்.

 அன்னை இறைவனிடம் விடைபெற்று முதலில் காசி நகரத்தை அடைந்து, விஸ்வநாதரைப் பணிந்து வழிபட்டு, பின்பு தொண்டை நாட்டில் அமைந்துள்ள காஞ்சியை அடைந்த அன்னை, காஞ்சியில்  உள்ள சிவத்தலங்களை முறையாகத் தரிசித்துக் கொண்டு திருவேகம்பத்தை அடைந்தார்.  அங்கு  ஏகாம்பர நாதரைக் கண்களால்  கண்டனர்.  அதன் பிறகு அன்னை பிலாகாசத்தை அடைந்த 32 அறங்களைச் செய்து தவம் இயற்றி, பின்பு  இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார் என்பது புராண வரலாறு. உலக நாயகியான காமாட்சி அன்னை எழுந்து அருள் புரியும் மண்டபம் காயத்திரி மண்டபம் என அழைக்கப்படுகிறது.  அம்பிகை அச்சந்நிதியில் தென்கிழக்குத் திசை நோக்கி எழுந்தருளி உள்ளார்.  அமர்ந்த திருக்கோலத்தில், சுகாசனயோகத் திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன், பாசம், அங்குசம், புஷ்ப பாணம், கரும்பு வில் முதலான படைக் கருவிகளைக் கரங்களில் கொண்டு  பக்தர்களுக்குக் காட்சி அளித்து அருள்புரிந்து கொண்டுள்ளார்.

நடைதிறப்பு :

  காலை 5.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு  8.00 வரை திறந்திருக்கும்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post காமகோடி சக்தி பீடம் காஞ்சி காமாட்சி அம்மன் appeared first on Swasthiktv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


சித்தன் அருள் - 1881 - அன்புடன் அகத்தியர் - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024...


ஆசீர்வாத மந்திரங்கள்


ச.துரை –நான்கு கவிதைகள்


கணவன் கண் முன்னே துப்பாக்கி முனையில் மனைவி கூட்டு பலாத்காரம்..!


பட்டைய கிளப்பும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் 2வது டிரைலர்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்கள்


இரண்டு பழைய புத்தகங்கள்!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>