சிவரூபமான தட்சானாமூர்த்தி கல்விக்கும் நடராஜமூர்த்தி(nataraaja moorthi) நடனத்திற்க்கும். லிங்கமூர்த்தி (linga moorthi) அருவ வழிபாட்டிர்க்கும் பைரவமூர்த்தி(bairava moorthi) காவலுக்கும் அதிபதியாக மக்களால் தொன்று தொட்டு வணங்கப்பட்டு வருகிறார்கள்.
பைரவரின் சிறப்பு:
சிவபிரானின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றியவர் காசியம்பதியில் சிவகணங்களுக்கு தலைவராக விளங்குபவர். ஆணவம் கொண்ட பிரம்மனின் சிரம் கொய்தவர். மன்மதனின் கர்வம் அடங்கச் செய்தவர். முனிவரின் (munivarin) சாபத்திலிருந்து தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக் காத்தவர். சனியை சனிஸ்வரராக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமை சேர்த்தவர் என்ற பெருமைமிகு சிறப்புகளைக் கொண்டவர். இவரை காலபைரவர் , மார்த்தாண்ட பைரவர் , க்ஷேத்ரபாலகர் ,சத்ரு சம்ஹார பைரவர், வடுக பைரவர் , சொர்ணகர்சன பைரவர் என்று பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறோம், பிரம்மனின் செருக்கு அழித்தல்
ஓரு காலத்தில் ஜந்து தலைகளுடன் விளங்கிய பிரம்மா (bramahaa) தனக்கு ஜந்து தலை. ஈசனுக்கும் ஜந்து தலை ,ஆகவே தானே உயர்ந்தவன். தன்னை போற்ற வேண்டும். துதிக்க வேண்டும் என்று சித்த , ரிஷி , முனிவர்களை வற்புறுத்தத் தொடங்கவே அவர்கள் சிவனாரை தரிசித்து பிரம்மனின் ஆணவப் போக்கை எடுத்துக் கூற பைரவப் பெருமானை அழைத்து பிரம்மாவின் ஜந்தாவது தலையை நீக்க அவரை நான்முகன் ஆக்கினார்.பிரம்மாவை நான்முகன் ஆக்கிய சிவசொரூபமே ஸ்ரீ கால பைரவர் என்று காசி காண்டம் சொல்கிறது.
சனீஸ்வரருக்கு அருளுதல்:
சூரிய பகவானின் புத்திரர்களாகிய எமதருமரும் ,சனியும் சகோதர்களாவார்கள். இதிலே எமதருமர் நல்ல அழகுடனும் ஆரோக்கியத்துடனும் திகழ்ந்து. சனி ஊனமான காலுடன் சற்று அழகு குறைந்தும் காணபட்டதால் தனது சகோதரனால் அலட்சியப்படுத்தப்பட்டு வந்தார். இதனால் மனம் வருந்திய சனி தனது தாயான சாயதேவியிடம் மனவருத்தத்தை எடுத்நுக்கூற நீ இன்று முதல் பைரவரை உள்ளன்போடு வழிபட்டு வா அவர் உனக்கு நல்ல நிலையைத் தருவார். உனது மனத்துயரம் யாவும் தீர்ந்து போகும் என்று தாயார் கூறிய அறிவுறையை ஏற்று சனியும் பைரவப் பெருமானை வழிபாடு செய்து வரலானார்.
சனியின் உன்மை அன்பால் கள்ளமில்லா வழிபட்டால் மனம் மகிழ்ந்த பைரவர் சனியின் உன்மை அன்பை மக்களுக்கு எடுத்துகாட்டும் விதமாக ஈஸ்வர பட்டம் அளித்து சனீஸ்வராக நவக்கோள்களில் சக்தி மிகுந்த கோள்களாக உயர்த்தி பெருமைபடுத்தினார்.
ஆகவே பைரவ மூர்த்தியை வழிபட
ஏழரைச்சனி
அஷ்டமச்சனி
கண்டச்சனி
ஜன்மச்சனி
அர்த்தாஷ்டமச்சினி
போன்ற சனி தோசங்கள் பனி போல நிங்கி விடும்.
பிடித்த மாலைகள்
பைரவருக்கு
*தாமரைப்பூ மாலை , வில்வ மாலை , தும்பைப்பூ மாலை ,
சந்தன மாலை அணிவித்து மல்லிகைப்பூ தவிர்த்து செவ்வரளி , மஞ்சள் , செவந்தி மற்றும் வாசனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது உதமம்.
பைரவ வழிபாடு:
பைரவப் பெருமானை காலையில் வழிபட சர்வ நோய்கள் நிங்கும். பகலில் வழிபட விரும்பியது யாவும் கிட்டும். மாலையில் வழிபட இதுவரை செய்த பாவம் யாவும் விலகும். இரவு அதாவது அர்த்தஜாமத்தில் வழிபட வாழ்வில் எல்லாம் வழமும் பெருகி மன ஓருமைப்பாடும் கிடைத்து முக்திநிலை என்ற இறைப்பரம்பொருளான பைரவப் பெருமானை அடையும் சாகாக் கல்வியும் , மரணமில்லாப் பெருவாழ்வும் கூட கிட்டும்.
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post ஸ்ரீ கால பைரவர் தோன்றிய வரலாறும் வழிபாட்டு முறையும் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.