Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

சபரிமலை யாத்திரை பாகம் –31 நெய் அபிஷேகம்

$
0
0

சபரிமலை (Sabarimala) யாத்திரை (yatra)

பாகம் –31

 நெய் அபிஷேகம் செய்யும் முறை:

நெய் அபிஷேகம் செய்கிறவர், நெய்பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அய்யப்பனின் சன்னிதானம் வலது பக்கம் உள்ள அதற்கானஅலுவலகத்தில் நெய் பாத்திரத்தைக் கொடுக்க வேண்டும். பிறகு திருக்கோவிலின் இடதுபுறம் வந்துதனது அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.  பாத்திரத்தில் கொடுத்த நெய்யில் பாதிதான் கிடைக்கும். இந்த நெய்யைப் பிறகு குருசாமி,எல்லாச்சாமிகளுக்கும் பிரித்துத் தனித்தனி டப்பாவில் போட்டுக் கொடுப்பார். இப்படி நெய்அபிஷேகம் செய்வதற்கு முறைப்படி டிக்கெட் எடுக்க வேண்டும். எங்கே தெரியுமாப மஞ்சமாதாகோவிலின் எதிரில் (கீழே) தேவஸ்தான போர்டு தனி அறை வைத்து செயல்படுகின்றது

  இந்த நெய் அபிஷேக டிக்கெட் காலை முதல் இரவு வரை தரப்படுகிறது.சபரிமலையில் அய்யப்பனுக்கு மாலை நேரத்தில் அர்ச்சனை நடத்தப்படுகிறது.  அர்ச்சனை செய்ய விரும்புவோர் அர்ச்சனைச் சீட்டு ஆபீஸ் கவுண்டரில் பெற்று சீட்டின் பின்பக்கத்தில் உங்கள் பெயர், நட்சத்திரம் முதலியவற்றை ஆங்கிலத்தில் எழுதி, சன்னதியிலிருக்கும்அர்ச்சகரிடம் கொடுத்தால் அவர் அர்ச்சனை செய்து விபூதி பிரசாதம் கொடுப்பார். விபதி, குங்குமம்முதலியன தனியாகவும் கிடைக்கும்

  சன்னிதானம் அருகில் உள்ள ஆபீஸ் கவுண்டர்களில் விபூதி, குங்குமம், அய்யப்பன் தகடு போன்றவைவிற்கப்படுகிறது. நெய் அபிஷேகம் (நேரம்) முடிந்து விட்டபின் நமது நெய்யை அவசரமாக அபிஷேகம்செய்து விட்டு ஊர் திரும்ப எண்ணுபவர்கள் கவலைப்பட வேண்டாம். இவர்களுக்காகக் கோவில்சன்னிதான மூலையில் (ஆபீஸ் ஒரமாக) நெய் தோணி உள்ளது

 சபரிமலையில் சாஸ்தாவின் சன்னிதானத்தில் அங்கப்பிரதட்சணம் செய்வதாகவேண்டிக்கொண்டவர்கள், அதிகாலை பஸ்மகுளத்தில் குளித்து விட்டு உள்கால் சட்டை துண்டுஅணிந்து கொண்டு அய்யப்பனின் சன்னதி கொடிமரத்தில் ஆரம்பித்து உருண்டு வந்துகொடிமரத்தை மீண்டும் அடைந்ததும் அய்யப்பனை வணங்கி தங்குமிடம் செல்ல வேண்டும்.  அங்கப்பிரதட்சணம் செய்தவர் வேண்டிக் கொண்டது நடக்கும்.

 ஓம குண்டம்  : 

இதில் தேங்காய் உடைத்து, நெய் தோணியில் நெய்யை ஊற்றி விட்டால் அந்த நெய் கோவிலின்அபிஷேக நெய்யுடன் சேர்ந்து விடும். உங்களுக்கு அபிஷேக நெய் தனியாக வேண்டியிருந்தால் மஞ்சமாதா கோவிலுக்கு போகும் வழியில் தேவஸ்தான அலுவலர் டப்பாவில் அடைத்து அபிஷேகம்செய்த நெய்யை விற்கிறார்கள்.  விலை கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். பதினெட்டாம் படிகளுக்கு முன்பாகவே இடதுபுறமாக ஒருகுண்டம் இரவு பகலாகத் தீக் கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருக்கும். நெய் அபிஷேகம்முடிந்தவுடன் ஒரு தேங்காய் மூடியைப் பக்தர்கள் இக்குண்டத்தில் வீசுவார்கள்

  நாம் வீட்டிலிருந்து கொண்டு செல்லும் இருமுடியில் ஒன்று ஆத்மா என்றும், இன்னொன்று ஜடம்என்றும் சொல்லப்படும். ஜடம் என்கிற மூடியை எரிந்து விட்டு ஆத்மா என்கிற மூடியை வீட்டிற்குக்கொண்டு போகிறோம் என்று இதற்கு அர்த்தம். பக்தர்கள் ஓம குண்டத்தில் போடுகின்ற தேங்காய்அக்னி தேவனால் அது கணபதி ஹோமமாக மாறுகின்றது.

 –  சபரிமலை யாத்திரை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post சபரிமலை யாத்திரை பாகம் –31 நெய் அபிஷேகம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>