கருவறையில் இருந்து ஜன்னல் வழியாக மகானுக்காக திரும்பிகாட்சி தந்த உடுப்பி கிருஷ்ணர் கோவில்
கர்நாடக மாநிலம் மங்களூரு அடுத்துள்ள உடுப்பியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிருஷ்ணர் கோவில் உள்ளது இத்தல கிருஷ்ணன் ருக்மணியால் பூஜிக்கப்பட்ட சாளக்கிராமத்லானவர் இவரை வணங்கினால் குழந்தைகளுக்கு கல்வி அறிவு பெருகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. இக்கோவிலில் கனகதாசர் என்ற மகானுக்காக கருவறையில் இருந்து ஜன்னல் வழியாக திரும்பி காட்சியலித்தார்.
நட்சத்திர தலைவன்
உடு – என்றால் நட்சத்திரம் பா.என்றால் தலைவன் உடுபா. என்பதே மருவி உடுப்பி ஆனாது சந்திரன் தனக்கு ஏற்ப்பட்ட தோசத்திற்காக 27 நட்சத்திரங்களுடன் இத்தல கிருஷ்ணனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான். எனவே இங்குள்ள கிருஷ்ணன் நட்சத்திர தலைவனாகவும், கிரகங்களின் நாயகனாக கருதப்படுகிறார்.
எட்டு மடங்கள்
உடுப்பி கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்வதற்காக எட்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்து கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பேஜாவர் மடம், பாலிமார் மடம், கிருஷ்ணாபுரம் மடம், சிரூர் மடம் என எட்டு மடங்களையும் நிர்மாணித்து ஒவ்வொரு மடமும் இரண்டு மாதங்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்வர் ஏற்படுத்தினார். புதிய சுவாமி மடத்தின் பொறுப்பை ஏற்கும் விழா பர்யாய வைபவம் என்று கொண்டாடப்படுகின்றது. உடுப்பியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவாக இது அமைகிறது. இவ்விழாவின் போது விறகுத்தேர் அமைக்கப்படுகின்றது. இத்தேர் விறகுதான் கோயில் சமையலுக்குப் பயன்படுகின்றது.
ஒன்பது துவரங்கள்
முன்பு கனகதாசர் என்ற மகான் தாழ்த்தப்பட்டிருந்த குலத்தில் பிறந்திருந்ததால் உடுப்பி கோவிலில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர் தினமும் உடுப்பி கிருஷ்ணனின் கருவறைக்குப் பின்னால் நின்று ஏகதாரி வீணை எனும் ஒரு கம்பி மட்டும் கொண்ட வாத்தியக் கருவியை மீட்டி வழிபட்டுவந்தார். ஒருநாள் கருவறையின் பின்பக்கச் சுவரின் கற்கள் தாமாகவே விழுந்து உடுப்பி கிருஷ்ணரும் பின்புறச்சுவர் நோக்கித் திரும்பி கனகதாசருக்கு காட்சியளித்தார். கனகதாசர் கண்ணனை வழிபட வழிவகுத்த ஒன்பது துவாரங்கள் கொண்ட பலகணி கனகதண்டி என அழைக்கப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் கனகதாசர் கிருஷ்ணரை தரிசித்த பலகணி வழியாகவே மூலவரை தரிசனம் செய்யும் வழக்கமும் இந்நிகழ்வுக்குப் பின்னர் ஏற்பட்டது.
அயோத்தியில் இருந்து கருடன்
வெள்ளியால் ஆன இந்த தூவாரத்தை நவகிரக தூவாரம் என்கின்றனர் இதில் கிருஷ்ணனின் 24 வகையான உருவங்கள் பெரிக்கப்பட்டுள்ளது. இதன் முன்புள்ள மண்டபம் தீர்த்த மண்டபம் எனப்படுகிறது. இங்குதான் தினமும் இரவு சாமர பூஜை, மண்டல பூஜை நடக்கிறது. தீர்த்த மண்டபத்தில் உள்ள கருடன் அயோத்தியில் இருந்து வாதி ராஜா தீர்த்தா என்பவரால் கொண்டு வரப்பட்டது. அமைவீடம் – கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து உடுப்பிக்கு பஸ் வசதி, ரயில் வசதி உள்ளது.
The post கல்வி அறிவு பெறுக – உடுப்பி கிருஷ்ணர் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.