Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

புத்திர பாக்கியம், பல பேறுகள் கிட்டும் வைகாசி விசாகம்

$
0
0

நாளை 07 / 06 / 17  புதன் கிழமை வைகாசி விசாகம் –

சிறப்புகள் வாய்ந்த வைகாசி விசாகம்

   தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் தனிச் சிறப்புடையதுதான். இவற்றுள் வைகாசி மாதத்தினை மாதவ மாதம் என்பர். இம்மாதத்தில் புனித நீராடி மகா விஷ்ணுவை துளசியால் பூஜை செய்தால் பேறுகள் பல பெறலாம். பிரகலாதனுக்காக விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்த தினம் வைகாசி சுக்ல சதுர்த்தி.

  புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றது வைகாசி விசாக பௌர்ணமியில். திருவேட்களத்தில் அர்ச்சுனனுக்கு பரமன் பாசுபதாஸ்திரம் வழங் கியதும் வைகாசி விசாகத்தில்தான். விசாகம் ஞானச் சிறப்புக்குரிய சிறந்த நட்சத்திரம்.

   தமிழ்க் கடவுள் எனப் போற்றப்படும் முருகப் பெருமான் அவதரித்தது விசாக நட்சத்திரத்தில்தான். சரவணப் பொய்கையில் தோன்றிய ஆறு குழந்தைகளை உமையவள் ஒரே குழந்தையாக சேர்த்த நாள் வைகாசி விசாகம். விசாகத்தன்று முருகனின் அனைத்து திருத்தலங்களும் விழாக்கோலம் பூணும். இந்நாளில் விரதம் மேற்கொண்டு முருகன் ஆலயம் சென்று வழிபட்டால் புத்திர பாக்கியம் உள்ளிட்ட பல பேறுகள் கிட்டும். வைகாசி விசாகத்தன்று பிறக்கும் குழந்தைகள் அறிவில் சிறந்து விளங்குவர் என்பர்.

 வைகாசி விசாகம் முருகனுக்கு மட்டுமின்றி சிவனுக்கும் உகந்த நாள்தான். சிவனை நினைத்து கலச ஸ்தாபனம் செய்து யாககுண்டம் அமைத்து வழிபட வேண்டும். சிவனுக்கு நடைபெறும் பல்வேறு அபிஷேகங்களில் சந்தனாபிஷேகம் செய்வதைத் தரிசித்தால் மகாலட்சுமி யின் அருள் கிட்டும்.

 பௌர்ணமி வழிபாட்டில் சிவனுக்கு அலரி, செவ்வந்தி, தாமரை மலர் மாலைகள் அணிவித்து அர்ச்சனை செய்தால் பாவங்கள் அகலும், புண்ணி யங்கள் பெருகும். அம்மன் கோவில்களிலும் வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்படும். மாரியம்மன், திரௌபதி அம்மன், காளியம் மன் கோவில்களில் அன்றைய தினம் தீமிதி விழா சிறப்புடன் நடைபெறும்.

 “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ எனப் பாடிய வள்ளலார் வடலூரில் சத்ய ஞான சபையை நிறுவியதும் வைகாசி விசாக தினத்தில்தான். அதுமட்டுமின்றி கும்பகோணத்தில் கருட சேவை, காஞ்சி வரதர் ஆலய பிரம்மோற்சவம், குடந்தை ஆதிகும்பேஸ்வரர் தீர்த்தவாரி என எல்லா விழாக்களும் இந்த வைகாசி விசாகத்தன்றுதான் நடைபெறும்.

  திருவானைக் கோவில் ஜம்புகேஸ் வரர் ஆலயத்தில் வைகாசி விசாகத்தன்று ஏக வசந்தம் நடைபெறும். அன்று அன்னாபிஷேக மும் பால் மாங்காய் நிவேதனமும் செய்வார்கள்.

The post புத்திர பாக்கியம், பல பேறுகள் கிட்டும் வைகாசி விசாகம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>