நாட்டுப்பசுமாட்டின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறுதான் தெய்வசக்தி உடைய திருநீறு ஆகும்.எனவே முறைப்படி தயாரிக்கப்படும் திருநீற்றில் இயற்கையிலேயே தெய்வீக ஆற்றல் நிரம்பியுள்ளது.திருநீறு (விபூதி)பற்றிய திகைப்பூட்டும் தகவல்கள் இதோ உங்களுக்காக :
நாட்டுப்பசுமாட்டின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறுதான் தெய்வசக்தி உடைய திருநீறு ஆகும்.எனவே முறைப்படி தயாரிக்கப்படும் திருநீற்றில் இயற்கையிலேயே தெய்வீக ஆற்றல் நிரம்பியுள்ளது.
திருநீறு (விபூதி) செய்யும் போது பின்வரும் மந்திரங்களை கூறுதல் வழக்கம்.
1.ஓம் ஈசான மூர்தையெஹ் நமஹ
2.ஓம் தத்புருஷ வக்த்ராய நமஹ
3.ஓம் அக்ஹோற ஹ்ருதையாய நமஹ
4.ஓம் வாமதேவ குஹ்யாய நமஹ
5.ஓம் ச்தயோஜாத மூர்தயெஹ் நமஹ
6.ஓம் சிரசே நமஹ
7.ஓம் சிகாயை நமஹ
8.ஓம் கவசாய நமஹ
9.ஓம் நேஹ்த்ரேப்யோ நமஹ
10.ஓம் அஸ்த்ராய நமஹ
தீமைகள் அகற்றும் திருநீறு (விபூதி)
திருநீறு பஸ்மம் என்றும் அழைக்கப்படும் விபூதியில் நிலைத்து நிற்கும் எல்லாம் வல்ல ஈசன் அதை அணிபவர்க்கு
- மந்திரமாகி – அகத்தையும் பலத்தையும் தூய்மைப்படுத்துகிறார்
- மருந்தாகி – உடலை காக்கும் கவசமாகிறார்
- நெருப்பாகி- பகை,தீமைகள், நோய் அழித்து நலம் அளிக்கிறார்
- நீராகி- கோபம்,அகங்காரம் அகற்றி மனத்தெளிவை அளிக்கிறார்
- கருணையாகி- பாவங்களை அழித்து புகழடையச் செய்கிறார்.
- ஐஸ்வர்யமாகி – சகல செல்வங்களையும் அளிக்கிறார்
- ஒளிமயமாகி- வணங்கத்தோன்றும் தேஜசை அளிக்கிறார்
- திரிபுண்டரமாகி- தீங்கிழைக்கும் எண்ணத்தை அழிக்கிறார்
- பரமனாகி- அல்லும் பகலும் இறையுணர்வைக் கொடுக்கிறார்
- பஞ்சாட்சரமாகி- பஞ்ச இந்திரியங்களையும் அடக்கியாள்கிறார்
- சிவமாகி- சிவனருள் சித்திக்கிறார் .
The post திருநீறு (விபூதி)பற்றிய திகைப்பூட்டும் தகவல்கள் appeared first on Swasthiktv.