Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

ஓசை கொடுத்த நாயகி த்வனிப்ரதாம்பாள் !!!

$
0
0

ஓசை கொடுத்த நாயகி த்வனிப்ரதாம்பாள் !!!

“தோடுடைய செவியன்.. என் உள்ளம் கவர் கள்வன்’ என்று ஞானசம்பந்தர் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய திருத்தலம் சீர்காழி! இத்தலத்திற்கு மேற்கே 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது “திருக்கோலக்கா’ என்னும் அற்புத திருத்தலம். திருத்தாளமுடையார் கோயில், தாளபுரீசுவர சுவாமி திருக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. அம்பாள் திருநாமம் “த்வனிப்ரதாம்பாள்’ என்பதாகும்.

தலவரலாறு:

 இறைவன்- இறைவி அருளால் ஞானப்பால் உண்ட ஞானசம்பந்தர் பெருமான் திருத்தல யாத்திரையை துவங்கினார். கொன்றை வனமாகிய திருக்கோலக்காவை அடைந்து தாளபுரீசுவரையும் த்வனிப்ரதாம்பாள் என்ற ஓசை கொடுத்த நாயகியையும் போற்றி, “”மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கை கோலக்காவுளான்” எனத்துவங்கும் திருப்பதிகத்தைப் பாடி அருளினார்.

 “கைகளால் தாளமிட்டு’ பாடி அருளியதால் ஞானக்குழந்தையின் தளிர்கரங்கள் சிவந்தன. இறைவன் மனமிரங்கி திருஞானசம்பந்தருக்கு பொன்னால் ஆகிய தாளங்களை அளித்தார். ஆனால் அதிலிருந்து ஓசை வரவில்லை. உடனே, அம்மை தனது அளவற்ற கருணையால் பாடலுக்கு ஏற்றவாறு தாளங்களிலிருந்து இசை ஒலி வருவதற்கு ஓசை கொடுத்தருளினார். இதனால் அம்பாள், “ஓசை கொடுத்த நாயகி’ எனச் சிறப்பாகப் போற்றப்படுகிறார்.

 இத்தலத்து இறைவன் இறைவியைப் போற்றி “ஸ்ரீ தாளபுரீஸ்வரர் பஞ்சரத்னம்’, “ஸ்ரீ த்வனிப்ரதாம்பாள் பஞ்ச ரத்னம்’ என்ற போற்றி பாடல்கள் இயற்றப்பட்டு கல்வெட்டுகளாக பதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புராண வரலாறு:

  திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது சிவபெருமான் சரபமூர்த்தியாக அவதாரம் எடுத்து அவரை அடக்கியதாக புராண வரலாறு கூறுகிறது. மகாலட்சுமி தனது கணவனான திருமாலை அடைய கொன்றை வனமாகிய இத்தலத்தில் தவமிருந்தார். சிவபெருமான் மகிழ்ந்து அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்தருளினார் எனவும் எனவே, இத்தலம் “திருக்கோலக்கா’ என அழைக்கப்படுவதாக புராணவரலாறு தெரிவிக்கிறது. இத்திருத்தலத்தில் சூரியபகவான் தவமிருந்து நவக்கிரகங்களுக்கு தலைமை பொறுப்பினை ஏற்றதாகவும் தலவரலாறு கூறுகிறது. கோயிலுக்கு எதிரில் உள்ள தீர்த்தம் “சூரிய தீர்த்தம்’ எனப்படுகிறது.

திருக்கோயில் அமைப்பு:

 காவிரி வடகரைத் தலங்களில் 17 ஆவது திருத்தலம். கிழக்கு நோக்கிய திருக்கோயில்; ஒரு திருச்சுற்று! திருச்சுற்றில் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்ரமணியர், மகாலட்சுமி, சனிபகவான், பைரவர், சண்டிகேசுவரர், சூரியன் சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறை தேவக்கோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை திருமேனிகளை கண்டு வழிபடலாம். திருக்கோயில் கட்டடக்கலை அமைப்பில் நகரத்தார் திருப்பணியைக் கண்டு மகிழலாம்.

  கருவறையில் இறைவன் லிங்கத்திருமேனியாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இறைவன் சந்நிதியை அடுத்து தனியே கிழக்கு நோக்கி அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. அம்பாள் கருணைபொங்கும் முக அழகுடன் அபய கரம் தாங்கி காதுகளில் அழகிய ஸ்ரீ சக்ர தாடகங்களுடன் காட்சி தருவதைக் காணலாம். திருஞானசம்பந்தர் தம் திருப்பதிகத்தில் இத்தலத்தை வழிபடுபவர்களுக்கு ஏற்றமிகு வாழ்வு, பாவம் விடுபடுதல், வாழ்வில் துயரமில்லா நிலை மற்றும் வினைகளும் நீங்கும் என்று தலவரலாறு கூறுகிறது.

தலச்சிறப்பு:

 பேசும் குறையுள்ளவர்களும் செவி கேட்கும் திறன் இல்லாதவர்களும் கல்வி தேர்ச்சி பெறவும் இத்திருக்கோயிலுக்கு வந்து இறைவன் இறைவியை வழிபட்டு வாழ்வில் சிறப்படைகின்றனர்.

திருப்பணி:

 சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாலயத் திருப்பணிகளில் பக்தர்கள் பங்கு கொண்டு நலம் பெறலாம்.

The post ஓசை கொடுத்த நாயகி த்வனிப்ரதாம்பாள் !!! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>