Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

இலட்சார்ச்சனையுடன் குருவருள் சேர்க்கும் குருப் பெயர்ச்சி மகா யாகம்

$
0
0

02.09.2017, காலை 9.20 மணிக்கு சனிக்கிழமை இலட்சார்ச்சனையுடன் குருவருள் சேர்க்கும் குருப் பெயர்ச்சி மகா யாகம்

புதுவை அடுத்துள்ள யில் உள்ள சனீஸ்வர பகவான் கோவிலில் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி  காலை 9.20 மணிக்கு கணபதி ஹோமத்துடன் குருப் பெயர்ச்சி மகா யாகம் தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், நட்சத்திர, ராசி, தட்சிணாமூர்த்தி ஹோமங்கள் நடக்கிறது.மாலை 6 மணிக்கு கலச அபிஷேகம் நடைபெறுகிறது.

வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி குரு பகவான், கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையடுத்து 12 அடி உயர குரு பகவானுக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகமும், 1008 கிலோ சுண்டல் நைவேத்தியமும் நடக்கிறது. காலை 09.30 மணிக்கு நட்சத்திர ராசி பரிகார ஹோமங்களும், காலை 09.30 மணிக்கு சிதம்பர குருக்களால் சகல அபிஷேகமும் நடக்கிறது.

வருகிற 02.09.2017 சனிக் கிழமை காலை 10.30 மணிமுதல் 1.00 மணி வரை மாலை 5.30 மணிமுதல் இரவு 7.00 மணிவரை 03.09.2017 ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை இலட்சார்ச்சனையுடன் குருப்பெயர்ச்சி மஹாயாகம் மற்றும் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.

images

மனித வாழ்க்கையின் ஏற்றம் – இறக்கம் எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை அளிப்போர் நவகிரகங்கள் எனப் போற்றப் பெறும் நவநாயகர்களே ஆவர். இந்த ஒன்பது கிரகங்களில் ஐந்தாவதாக, நடு நாயகராகத் திகழ்பவர் குரு பகவான். தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரகம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான் ‘குரு பார்க்க கோடி நன்மை’, குரு பார்வை தோஷ நிவர்த்தி’ என்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப் பெறுகின்றது.

குருபகவான் ராசி மண்டலத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் காலம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். அதாவது, ஒரு ராசியைக் கடக்க ஓர் ஆண்டு ஆகிறது. குரு, சூரியன் இருவரும் கும்பத்திலும் சந்திரன் மகம் நட்சத்திரத்தில் சிம்ம ராசியிலும் இருக்கும் காலத்தில், மகா கும்பமேளா கொண்டாடப் படுகிறது. குருபகவான் ஒரு ராசியில் 2, 5,7,9,11, ஆகிய ஐந்து இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் குறிப்பிட்ட ஜாதகர் நற்பலன்களை அடைகிறார். அதே குருபகவான், 1,3,4,6,8,10,12 ஆகிய ஏழு இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் அசுப பலன்களைப் பெறுவார்.

இப்படி நன்மையற்ற பலன்களைப் பெறக்கூடிய ராசி அன்பர்கள், குருப்பெயர்ச்சி நாளில் உரிய பரிகாரம், ஹோமம் மற்றும் பூஜைகளில் பங்கேற்பதால், அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடலாம். இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி 02.09.2017 சனிக்கிழமையன்று கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது.

அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடவேண்டியும்,சுப பலன்களான திருமணம், குழந்தைப்பேறு, தொழில், பொருளாதாரம், உயர்பதவி, அரசாங்க உதவி ஆரோக்யம் போன்றவைகளில் நன்மை பெற வேண்டி அவசியம் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம். மீனம். இராசி நேயர்கள் குருபுத்தி குருதிசை, நடைபெறும் அன்பர்கள் பரிகாரம் செய்து கொள்வது மிகவும் சிறப்பு.

நெய் தீபம் –                Rs.60/-

பால் அபிஷேகம் –   Rs.200/-

இலட்சார்ச்சனை –   Rs.300/-

குரு சாந்தி ஹோமம் – Rs. 600/-

பரிகார ஹோமம் – Rs. 1000/-

கலந்து கொள்பவர்களுக்கு மகா யாகத்தில் வைத்து பூஜிக்கப்பெற்ற  குரு பகவான் யந்திரம், கனக புஷ்பராகம் ராசிக்கல், முடிக்கயிறு  மற்றும் தாயத்து  ஹோம பிரசாதத்துடன் வழங்கப்படும்

For Details and news updates contact:
 Send Your Feedback at : editor@swasthiktv.com
Image result for mobile icon png9941510000     Related image8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post இலட்சார்ச்சனையுடன் குருவருள் சேர்க்கும் குருப் பெயர்ச்சி மகா யாகம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles