Quantcast
Viewing all articles
Browse latest Browse all 15459

ருத்ராம்ச சக்திகளை உணர்த்தும் [மத்யாஷ்டமி] ருத்ராஷ்டமி

ருத்ராம்ச சக்திகளை உணர்த்தும் மத்யாஷ்டமி [ருத்ராஷ்டமி]

ருத்ராட்ச மகிமை

ருத்ரம் என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. சிவனுடைய பரிபூர்ண அக்னி சக்திகள் நிறைந்தது என்றும், ருத்ர பூமி என்றால் ஆதி சிவசக்திகள் பரிபூரணமாய்ப் பரிமளிக்கும் பூமி என்றும் பொருளாகும்.

 ருத்ராட்சம் என்றால் சிவ அட்சர சக்திகளைச் சிவாக்னியில் பதிக்கப் பெற்றது என்றும், ருத்ர மந்திரங்கள் என்றால் நமசிவாய சக்திகள் வேத பூர்வமாகப் பரிணமிப்பது என்றும் அர்த்தம். ருத்ர ப்ரதமை, ருத்ரத் துவிதியை, ருத்ர அஷ்டமி, ருத்ரச் சதுர்த்தசி, ருத்ரப் பௌர்ணமி, ருத்ர அமாவாசை என்பதாக ஷோடச ருத்ர திதி அம்சங்களும் நிறைய உண்டு.

 திருஅண்ணாமலையில் அருணாசல கிரிவலப் பாதையில், ருத்ர பூமி, ஹரிஹர பூமி, பிரம்மேஸ்வர பூமி, தேவிபுர பூமி, அர்த்தநாரீய பூமி என்று பற்பல மூர்த்தி அம்ச கிரிவல வளாகங்கள் உண்டு.  பண்டைய யுகங்களில் மஹரிஷிகள் தெய்வ மூர்த்திகளுக்கான அந்தந்த உபாசனைகளை, வழிபாடுகளை, விசேஷமான பூஜைகளை, ஆங்காங்கே அருணாசல மலையைச் சுற்றிலும் பர்ணசாலைகள் மூலம், எண்ணற்ற சிஷ்யர்களுக்கு இவ்வாறு உணர்வித்த சர்வ தெய்வ மூர்த்த பூமியே அருணாசல கிரிவல வளாகம்.

ருத்ராட்சத்தில் உள்ள ஒவ்வொரு முகமும், அடைதற்கரிய அருணாசல மலை தரிசன முகட்டையும், பெறுதற்கரிய திருக்கயிலாயத் தரிசனத்தையும் குறிப்பதாகும். திருக்கயிலாயத்தின் சகல திக்குகளிலும் உள்ள அனைத்துத் தரிசனங்களும், அருணாசல மலையின் 64 திக்குகளிலும் தரிசன முகடுகளாகப் பொலிகின்றன.

 எந்தத் திதியில் எத்தனை முக ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்ற நியதியும் உண்டு. அஷ்டமி திதிகளில் எட்டு முக ருத்ராட்சம் அணிந்து கிரிவலம் வருதலால், சிவ பூஜை ஆற்றுதலால் மிகவும் எதிர்பார்க்கின்ற உதவி, முடிவு கனிந்து வர, நமசிவாய அட்சர சக்திகள் துணை புரியும்.

 ஒரு பட்சம் என்பது 15 திதிகளைக் கொண்டதாகையால், அஷ்டமித் திதி என்பது மத்யமான அதாவது நடுத் திதியாகின்றது. அமாவாசையை அடுத்து வரும் உத்தர மத்யாஷ்டமி, பௌர்ணமியை அடுத்து வரும் தட்சிண மத்யாஷ்டமி மகாத்மியங்களும், எந்தெந்த அஷ்டமியில் எத்தகைய வழிபாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்ற நியதிகளும் நிறையவே உண்டு.

 அஷ்டமத்துச் சனி என்பதாக ஜாதகத்தில் எட்டாமிடத்தில் சனி கிரகம் அமைவதைக் குறிக்கின்றது. கலியுக வழக்கில், அஷ்டம இடத்துச் சனி மூர்த்தி துன்பங்களையே தருவார் எனத் தவறாகப் பொருள் கொள்கின்றனர். இதனை இன்று முதலேனும் திருத்திக் கொள்ள வேண்டும்.

 மாளய பட்சத்தின் மத்தியில் வரும் அஷ்டமித் திதியானது மத்யாஷ்டமி ஆகின்றது. நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தின் மத்திய எழுத்தான (அட்சரமான) “சி” என்பதற்கான ருத்ராம்ச சக்திகளை உணர்விக்க வல்லது ருத்ராஷ்டமியின் மகத்துவமாகும்.

For Details and news updates contact:

 Send Your Feedback at : editor@swasthiktv.com

Image may be NSFW.
Clik here to view.
Image result for mobile icon png
+91-9941510000     Image may be NSFW.
Clik here to view.
Related image
+91-8124516666  Image may be NSFW.
Clik here to view.
Image result for youtube subscribe png
Image may be NSFW.
Clik here to view.
https://www.facebook.com/swasthiktv/

The post ருத்ராம்ச சக்திகளை உணர்த்தும் [மத்யாஷ்டமி] ருத்ராஷ்டமி appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>