பயிர்களை விளைவித்து, பலன் தரும் அன்னை வராஹி
அன்னை வராஹியின் உருவம்
அன்னையை, வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வராஹ (பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி என்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட வராஹியின் வரம் அவசியம்.
மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவரது அவதார சக்தியாக உருவானவள் வராஹி, சப்த கன்னிமார்கள் பிராமி, வைஷ்ணவி, மகேஷ்வரி, கவுமாரி, வராஹி, இந்திராணி, சாமுண்டி இவர்கள் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன், குமரன், இந்திரன், யமன், திருமால் ஆகிய தெய்வங்களின் சக்திகள். இவர்களில் வராஹி, பன்றி முகமும், பெண்ணின் உடலும் கொண்டவர். நான்கு கரங்களை உடையவர். பின்இரு கரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் கொண்டிருப்பார். இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி, சிம்ம வாகனத்தில் அமர்ந்திருப்பார்.
சக்தி வழிபாட்டு முறையில் ராஜராஜேஸ்வரி என்ற ஸ்ரீ வித்யா வழிபாடு சிறப்பானது. இவருக்கு நான்கு கைகள், முன்கைகளில் கரும்பு வில், புஷ்பபாணங்களையும், மேல்கைகளில் அங்குசம், பாசமும் ஆயுதங்களை கொண்டிருப்பவர். இந்த நான்கு ஆயுதங்களும் நான்கு சக்திகளாக உருப்பெருகின்றன. இவற்றில் கரும்பு வில் சியாமளாவாகவும், புஷ்பபாணங்கள் வராஹியாகவும், அங்குசம் சப்தகன்னிகளாகவும், பாசம் அஸ்வாரூடாவாகவும் உருப்பெறுகின்றன.
ஆனிமாதம் அமாவாசை கழிந்த பஞ்சமி திதியில் ஸ்ரீ வித்யாவின் கையில் இருந்த புஷ்பபாணங்கள் வராஹியாக உருவாகின. இவற்றில் வராஹி அம்மன் படைத்தலைவியாக இருப்பதால் தேவி மகாத்மியத்தில் வரக்கூடிய மதுகைடபவதம், சும்பரிசம்பவதம், சண்டமுண்டவதம், மகிஷாசுரவதம் போன்ற அசுரர்களுடைய யுத்தத்தில் முக்கிய பங்கு வகித்தது. அம்பாள் வெற்றியைத் தேடித் தருகிறாள்.
சக்தி வழிபாட்டு சங்ககாலம் முதலே சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சக்தி வழிபட்டிற்கும் நவராத்திரிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. புரட்டாசி மாதம் அமாவாசையை அடுத்து சாரதா நவராத்திரி, தை அமாவாசையை அடுத்து சியாமளா நவராத்திரி, பங்குனி அமாவாசைக்கு அடுத்து வருவது வசந்த நவராத்திரி, ஆனி அமாவாசையை அடுத்து ஆஷாட நவராத்திரியும் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத்தலைவியான வராஹி அம்மன் பக்தர்கள் வேண்டிக் கொள்வதை வழங்கக் கூடியவள். விவசாயம், வீடு, நிலம் தொடர்பானவற்றில் வெற்றியை அருள்பவள். பயிர்களை விளைவிப்பதும், பலன்தருவதும் கடமையாக கொண்டவள்.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post பயிர்களை விளைவித்து, பலன் தரும் அன்னை வராஹி appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.