Quantcast
Viewing all articles
Browse latest Browse all 15459

அருணகிரி நாதரை வயலூருக்கு வா என்று அழைத்த முருகன்

 திருச்சி அடுத்துள்ள குமர வயலூரில் சிவபெருமான் உடன் மகன் முருகப்பெருமான் அருள் பாலிக்கிறார் இவரை நாகசர்ப தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் அன்று திருகுலத்தில் முழுகி முருகனை தரிசித்தால் திருமணத்தடை நீங்கி சுபாகாரியம் நடக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

வயலூருக்கு வா என்று அழைத்த முருகன்:

 Image may be NSFW.
Clik here to view.
033_Vayalur-Murugan-Temple-Front-View
திருவண்ணாமலை கோபுரத்திலிருந்து கீழே விழுந்த அருணகிரி நாதரை காப்பாற்றி முத்தை திரு என்று அடிஎடுத்துக் கொடுத்த முருகப்பெருமான் வயலூருக்கு வா என்று அழைக்க இங்கு வந்து தான் முருகப்பெருமானை அருணகிரியார் பொய்யாகணபதியை வணங்கி கண்டு கொண்டார். அருணகிரி நாதருக்கு தன் வேலால் ஒம் என்ற பிரணவ மந்திரத்தை முருகப் பெருமான் எழுதினார். திருப்புகழின் பெருமையில் வயலூர் முருகனுக்கு தனிச்சிறப்பு உண்டு. கிருபானந்த வாரியாரின் தனிப்பட்ட ஈடுபாட்டின் காரணமாக உலகப் புகழ் பெற்ற கோயிலாக இன்று இக்கோயில் திகழ்கிறது.

முத்தைத்தருஎனத்துவங்கும் பாடல்:

 திருவண்ணாமலையில் முருகன் அருள் பெற்ற அருணகிரியார், அவர் அடியெடுத்துக்கொடுக்க ‘முத்தைத்தரு’ எனத்துவங்கும் திருப்புகழ் பாடினார். அதன்பின் அவர் வேறு பாடல் பாடவில்லை. ஒருசமயம் அவர் முருகனைத் தரிசனம் செய்தபோது ஒலித்த அசரீரி  ‘வயலூருக்கு வா’ என்றது. மகிழ்ந்த அருணகிரியார் இங்கு வந்தார். அப்போது, முருகன் அவருக்குக் காட்சி தரவில்லை. தான் ஏமாற்றமடைந்ததாக உணர்ந்தவர்,’அசரீரி பொய்யோ’ என உரக்கக் கத்தினார். அப்போது, விநாயகர் அவர் முன் தோன்றி ‘அசரீரி உண்மையே’ எனச்சொல்லி, இங்கிருந்த சுப்பிரமணியரைக் காட்டினார். முருகன், தனது வேலால் அருணகிரிநாதரின் நாக்கில் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எழுதினார். அதன்பின் இத்தல முருகனைப் போற்றி அவர் 18 பாடல்கள் பாடிய அருணகிரியார், பல முருக தலங்களுக்கும் சென்று திருப்புகழ் பாடினார். இவ்வாறு நமக்கு திருப்புகழ் என்ற ஒப்பற்ற பாடல்கள் கிடைக்க அருள் செய்தவர் இங்குள்ள முருகன் ஆவார்.

எழுத்துத் துறையில் உள்ளவர்கள், பாடலாசிரியர்கள்  சிறப்பு பெற:

 சிவன் சன்னதிக்குப் பின்புறம் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். இது சிவத்தலம் என்றாலும், இவரே விசேஷ மூர்த்தியாக வணங்கப்படுகிறார். சுவாமி, மணக்கோலத்தில் குமரனாக இருப்பதால், செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்டவர்கள் இவரை வழிபட, தோஷம் நீங்கி நல்ல வரன் அமையும். கந்த சஷ்டியின்போது முருகன் தெய்வானை, பங்குனி உத்திர திருவிழாவில் முருகன் வள்ளி திருக்கல்யாணம் நடக்கும். வள்ளி திருமணத்தின் போது, முருகனுக்கு வேடன், கிழவன் போல அலங்காரம் செய்தும், யானையால் வள்ளி விரட்டப்படுவது போலவும் பாவனையாகச் செய்வர். தைப்பூசத்தன்று அருகிலுள்ள 4 கோயில் சுவாமிகளுடன், முருகன் சேர்ந்து பஞ்ச மூர்த்திகளாகக் காட்சி தருவர். அருணகிரியார் திருப்புகழ் பாட அருளிய முருகன் என்பதால், எழுத்துத் துறையில் உள்ளவர்கள், பாடலாசிரியர்கள் இங்கு வேண்டிக்கொள்ள கலையில் சிறப்பிடம் பெறலாம்.

வாரியார் திருப்பணி:

   முருகபக்தரான கிருபானந்த வாரியார், 1934ம் ஆண்டில், இக்கோயிலுக்கு வந்தார்.

பின்னர் கோவில் கும்பாஷேகத்தை நடத்தினார்

அமைவீடம்:

  திருச்சியில் இருந்து குமர வயலூருக்கு பஸ் வசதி உள்ளது

The post அருணகிரி நாதரை வயலூருக்கு வா என்று அழைத்த முருகன் appeared first on SWASTHIKTV.COM.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>