Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 13)

$
0
0

 நாராயணன் அன்னையை வணங்கி மோகினி அவதாரம் எடுத்து தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்கும் படி செய்தார். அதன் பலத்தால் அசுரர்களை வென்று மீண்டும் தேவலோகத்தைக் கைப்பற்றினர். லக்ஷ்மி கடாட்சத்தால் தேவேந்திரன் முன்போல வானுலகை சந்தோஷத்துடன் ஆட்சி செய்யலானான்.

இனி : சாஸ்தா அவதாரம் நடந்த அனைத்து அற்புதங்களையும் தேவரிஷி நாரதர் மூலம் அறிந்து கொண்ட சிவபெருமான், அந்த அழகிய அவதாரம் காணும் பொருட்டு, பாற்கடல் நோக்கி விரைந்தார்,ஈசனை கண்ட நாராயணன், அவரை ஆரத் தழுவி ஆசனத்திலமர்த்தி வந்த காரணம் யாதென வினவினார். ஜகன் மோகனகரமான மோகினி அவதாரம் காண வந்ததாக அவர் கூறினார்.

 அதைக் கேட்ட மாதவன் ஏதும் கூறாமல் அங்கிருந்து மறைந்தார். சிவபெருமான் அவரை நாற்புறமும் தேட, திடீரென அழகிய ஒரு வனம் தோன்றியது.

 அந்த வனத்தில், மலர்களில் சுற்றி வரும் வண்டுகள் ரீங்காரமிட, சம்பகாதி மலர்களின் மணமும், மகிழ்ச்சியில் கூவும் குயிலின் ஓசையும், மெல்லிய காற்றால் அசையும் தாமரை தடாகமும் மனங்கவரும் வண்ணம் அமைந்திருந்தது.

 அங்கு ஒரு பாரிஜாத மரத்தடியில், உதிக்கும் சூரியன் போல சிவந்த நிற மேனி கொண்டவளும், நவ யௌவனம் நிறைந்தவளும், பத்மராகம் போன்ற காந்தியுடைய பாதம், நகம் கொண்டவளும், செம்பருத்திப்பூ போன்ற சிவந்த பாதங்களை உடையவளும், அழகிய சலங்கைகள் அணிந்தவளும், மன்மதனின் அம்பறாத் தூணிகளை பழிக்கும் முழங்கால்களை உடையவளும், யானையின் துதிக்கைகள் போன்ற தொடைகளை உடையவளும், மெல்லிய, சிவந்த பட்டாடை உடுத்தியவளும், புதிய மாணிக்கம் பதித்த ஒட்டியாணத்தை அணிந்தவளும், குழிந்த நாபியின் மீது மூன்று மடிப்புகளை உடையவளும், பெரிய ஸ்தனங்களின் மீது அழகிய முத்துக்களாலான ஆபரணங்களை அணிந்தவளும்

 காட்டுவாழை போன்ற நீண்ட, அழகிய கைகளும், அதில் கங்கணங்களும், விரல்களில் மோதிரங்கள் அணிந்தவளும், அழகிய சங்கு போன்ற கழுத்தை உடையவளும் , கண்ணாடி போன்ற முகம் உடையவளும், கொவ்வைப்பழம் போல சிவந்த உதடுகளை உடையவளும், தாழை மடல் போன்ற அழகிய கண்களை உடையவளும் , நெற்றியில் கஸ்தூரி பொட்டும், கறுத்த கேசமும் கொண்டவளாகிய மோகினி அங்கே அமர்ந்து வீணா கானம் செய்து கொண்டிருந்தாள்.

 அவளைக் மாத்திரத்தில் சிவபெருமான், அவள் மீது மோகங் கொண்டு துரத்தி சென்றார். அவளை ஆரத் தழுவி ஆலிங்கனம் செய்து கொண்டார்,உடனே சிவ வீர்யம் சிந்த, அதிலிருந்து சகல ராட்சஸர்களையும் வெல்லத்தக்க மஹாசாஸ்தா தோன்றினார். உடனே, சிவனும், ஜகன் மோகினியும் அங்கிருந்து மறைந்தனர்.

மேலும் ஹயக்ரீவர் கூறியதாவது:

 என் மனதிலேயே உள்ள ஒரு அற்புதத்தைக் கூறுகிறேன். முன்னொரு சமயம், பண்டன் என்றொரு அசுரன் அனைவரையும் வென்று சிருஷ்டியை அவனது ஆட்சியில் துன்புறுத்தி வந்தான்.

அவனை சம்ஹாரம் செய்ய லலிதை மீண்டும் அவதாரம் செய்தாள்.
(நாளை முதல் பண்டாசுர சரிதம்)
தொடரும்…

The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 13) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>