அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் வர்ணனை கண்டு வருகிறோம்.
இனி : இரண்டாவது ஆவரணம் முற்கூறிய முத்ரா தேவிகளின் பிரகாரத்திற்கு மேல் நித்யகலா தேவிகளின் பிரகாரம் இருக்கிறது.
இதுவும் 20 முழம் உயரமும், 1600 முழம் விசாலமும் உள்ளது. முன் பிரகாரத்தை போலவே இதற்கும் படிக்கட்டுகள் அமைந்திருக்கின்றன.
அந்த பிரகாரத்தில் குப்த யோகினிகள் என்று அழைக்கப்படும் பதினாறு சந்திரகலா ஸ்வரூபிணிகளான சக்திகள் நாற்புறத்திலும் தங்கி மிக சீதளமான அமிர்த பெருக்கினால் எட்டு திசைகளையும் மகிழ்வித்த வண்ணம் விளங்குகின்றனர்.
மூன்றாவது ஆவரணம்
நித்யகலா தேவிகளின் பிரகாரத்திற்கு மேல் 20 முழம் உயரமும், 1600 முழம் சுற்றளவுமுள்ள அதிசுந்தரமான சக்ரம் ஒன்றிருக்கிறது. இதற்கும் முன் பிரகாரத்தை போலவே படிக்கட்டுகள் உண்டு.
இங்கே மஹா பயங்கரமானவையும், அதி தீவிரமானவையுமான கண்களை உடைய குப்ததர யோகினிகள் என்னும் எட்டு சக்திகள் மஹாராக்ஞியை சேவித்து வருகின்றனர்.
இவர்களது பரிவாரங்கள் கோடி கோடியாக இருக்கின்றனர்.
நான்காவது ஆவரணம்
குப்ததர யோகினிகளின் பிரகாரத்திற்கு மேல் 20 முழம் உயரமும், 1600 முழம் விசாலமானதுமான பிரகாரம் ஒன்றிருக்கிறது.
அங்கு மதங்கொண்ட சம்பிரதாய யோகினிகள் எனப்படும் 14 சக்திகள் இருக்கின்றனர்.
இங்கும் கோடிக்கணக்கான பரிவார சக்திகள் இருக்கின்றனர்.
தொடரும்…
The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 77) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.