தேவை: செவ்வாழைக்காய் (பெரியது) – ஒன்று செவ்வாழையிலை – ஒன்று மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் மிளகுத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) – தலா ஒரு டீஸ்பூன் தயிர் – ஒரு டீஸ்பூன் நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி – தலா ஒரு குழிக்கரண்டி அளவு இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன் புளிக்கரைசல் – ஒரு டேபிள்ஸ்பூன் சாம்பார் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
தாளிக்க: எண்ணெய் – தேவையான அளவு கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை: வாழைக்காயைத் தோல் சீவி நறுக்கி அதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகுத்தூள் மற்றும் புளிக்கரைசல்விட்டு நன்றாகப் பிசிறவும். தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு வாழைக்காயைச் சேர்த்து வறுத்து எடுக்கவும் (முக்கால் பாகம் வெந்தால் போதும்). பிறகு ஒரு கடாயில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைக்கொண்டு தாளிதம் செய்து, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, பிறகு தக்காளி மற்றும் இஞ்சி – பூண்டு விழுது, சாம்பார் பொடி சேர்த்து மேலும் வதக்கவும். அதனுடன் தயிர் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான நீர் தெளித்து (தேவைப்பட்டால் மட்டும்) நன்றாகக் கிளறவும். அதனுடன் வறுத்த வாழைக்காய் சேர்த்துப் புரட்டி அதை அப்படியே எடுத்து வாழையிலையின் நடுவில் வைத்து மடித்து, நாரால் கட்டி, இட்லி பாத்திரம் அல்லது ஸ்டீமரில் ஆவியில் வேகவைத்து எடுத்தால் வீடே மணக்கும் செவ்வாழையிலை கறி தயார்.
பயன்: வாழையிலையோடு சமைத்து உண்ணும்போது, அந்த இலையில் உள்ள ‘குளோரோபில்’ உணவை எளிதில் ஜீரணமாக்கும் சிறந்த பசி தூண்டியாகும். வயிற்றில் உள்ள புண்களைக் குணமாக்கும். வாழையிலை மற்றும் காயில் உள்ள நார்ச்சத்து கெட்ட கொழுப்பைக் கரைக்கும். மலச்சிக்கலைச் சரியாக்கும். வாழையிலை ஒரு நல்ல நச்சுமுறிப்பானும்கூட.
↧
செவ்வாழையிலை கறி
↧