தேவை: ஆப்பிள் (சிறியது), பீட்ரூட், கேரட், நெல்லிக்காய் – தலா ஒன்று இஞ்சி – ஒரு சிறிய துண்டு பேரீச்சை – 3 மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன் பனங்கற்கண்டுத்தூள் – ஒரு டீஸ்பூன் தண்ணீர் – 200 மில்லி.
செய்முறை: பீட்ரூட், இஞ்சியைத் தோல் சீவவும், பேரீச்சை, நெல்லிக்காயைக் கொட்டை நீக்கவும். சுத்தம் செய்து நறுக்கிய ஆப்பிள், பீட்ரூட், கேரட், நெல்லிக்காய், இஞ்சி மற்றும் பேரீச்சை, மிளகுத்தூள், சீரகத்தூள், பனங்கற் கண்டுத்தூள் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்றவும். பிறகு தண்ணீர்விட்டு மையாக அரைத்து வடிகட்டாமல் அப்படியே அருந்தவும். இதைக் காலை உணவுக்குப் பதில் ஒரு கிளாஸ் அருந்தலாம். வயிறு நிறையும்; புத்துணர்ச்சி கிடைக்கும்.
பயன்: இது அனைத்துவிதமான வைட்டமின்கள், நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள் ஒருசேர பெற்றிருக்கும் பானம். தலைமுடியில் தொடங்கி கால் பாதம் வரை உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் பயனளிக்கும் விதமாகவும் நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பதாகவும் விளங்கும்.
↧
நோய் எதிர்ப்பு சக்தி பானம்
↧