Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

மரணப்படுக்கையில் தண்ணீர் கொடுப்பதுஏன்?

$
0
0

குருசேத்திரப் போர் நடந்து கொண்டிருந்த
போது, பிஷ்மரின் தந்தை சந்தனு மகனுக்கு ஒரு  வரமளித்தார்.

‘எப்பொழுது பீஷ்மர் மரணமடைய விரும்புகிறாரோ  அப்போது_மரணமடைவார்

என்பதே அது. பத்தாம் நாள் போர் அனறு, பீஷ்மர் பாண்டவர் படைக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தினார்.அப்போது அவருக்குத் தான் செய்யும் செயலில் சலிப்பு ஏற்பட்டது. உடன் தான் இறக்க நினைத்தார்.
அவரின் நிலையை அறிந்த அர்ச்சுணன்  தேரின்_முன்னால் சிகண்டியை நிறுத்தி விட்டு பீஷ்மர் மேல்  அம்பெய்தினான். சிகண்டி முன் போர் புரிய விரும்பாத பீஷ்மர்  அமைதியாயிருந்தார். அர்ச்சுனனின் அம்புகள் அவரது  உடலைத்_துளைத்தன.

 உத்திராயண_காலத்தில் இறக்க விரும்பிய 
 பீஷ்மர்அம்புப்_படுக்கையில் இருந்தார்.
 அவரைத்_தரிசிக்கவும் ஆசி பெறவும் பல அரசர்களும் வீரர்களும் வந்தனர். உடலில் காயங்களுடன் படுத்த படுக்கையாக இருந்த பீஷ்மர் இதனால் மிகவும் களைப்படைந்தார்.
 தாகம்_ஏற்படவே  அருந்தத்தண்ணீர்_கேட்டார்.

துரியோதனனும் கர்ணனும் நறுமணம் மிக்க இனிய பானங்களைக் கொண்டு வந்தும் அதை  அருந்தவில்லை.

அர்ச்சுணனை நோக்கி, ‘ சாத்திரங்கள்_கூறும்  வழியில்_எனக்கு தண்ணீர்_தருவாயாக’ என்றார். அர்ச்சுணன் தன் காண்டீபத்தை நாணேற்றி பீஷ்மரின் தலைக்கருகே ஏவினான். உடனே பூமி பிளந்து பீஷ்மரின் தாயான  கங்கை_நீர் ஊற்றாகப்_புறப்பட்டு_நேராக 
 பீஷ்மரின்_வாயின்  அருகில்_பாய்ந்தது பீஷ்மரும்_அதைப்_பருகித்  தாகம்_தணிந்தார்.
மங்காத புகழ் பெற்ற பீஷ்மருக்கு மரணப் படுக்கையில் 
 ஏற்பட்ட_தாகம் கங்கையான_அவளது  தாயால்_தணிந்தது இதனால்தான்_இன்றும்  மரணப்படுக்கையில்  இருப்பவருக்குக்கங்கை  எனும்_நீர்_கொடுக்கும் பழக்கம்_இருக்கிறது

The post மரணப்படுக்கையில் தண்ணீர் கொடுப்பதுஏன்? appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>