Quantcast
Viewing all articles
Browse latest Browse all 15459

கஞ்சி குடித்தால் நோய் தீர்க்கும் வேள்விமலை முருகன்

  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்துள்ள வேள்வி மலையில் பழமையான முருகன் கோவில் உள்ளது இங்கு முருகப்பெருமானுக்கும், வள்ளிக்கும் திருமணம் நடந்த போது அதற்காக வேள்வி நடந்த இடம் வேள்வி மலை என்று கூறப்படுகிறு. இப் போது மாறி வேளிமலை என்று அழைக்கப்படுகிறது வேலி என்றால் திருமணம் என்று பொருள் பழனியில் எப்படி பஞ்சாமிரதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறதே ! அதேபோல் இங்குள்ள முருக பெருமானுக்கு  வெள்ளிக் கிழமை தோரும் கஞ்சி இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பிரசாதமாக தரும் கஞசியை குடித்தாள் நோய் தீரும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

வள்ளியைக் கரம் பற்றியத் தலம்:

  Image may be NSFW.
Clik here to view.
valli_vedar_murugan
இந்த ஆலயத்தின் தல மரம் வேங்கை மரமாகும். முருகப்பெருமான் புள்ளிமானைத் தேடி வந்து, விநாயகர் அருளால் வள்ளியைக் கானகத்தில் கரம் பற்றியத் தலம் இது. மலைக்கோவிலான இந்த ஆலயத்திற்குச் செல்ல 38 திருப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள முருகப்பெருமானின் வலது திருக்கரம் வரத ஹஸ்த முத்திரையுடன் அருள, இடது திருக்கரம் தொங்கவிட்டவாறு காட்சி தருகிறது. வேடனாய் வந்த முருகப்பெருமான், வள்ளியை கவர்ந்து சென்றபோது, அவருடன் போரிட்ட மலைக்குறவர்களுக்கு முருகன் வேடன் உருவிலேயே காட்சி கொடுத்தார். நமக்கும் அதே கோலத்திலேயே வள்ளி மணாளனாக, காண்போரை கவரும் கந்தசுவாமியாக காட்சியளித்து அருள்புரிகிறார். மூலவர் முருகப்பெருமான் குமாரசுவாமி என்னும் திருப்பெயரில், 9 அடி உயரத்தில் தென் கிழக்குப் பக்கமாக வீற்றிருக்கிறார். அருகில் வள்ளியம்மை காட்சி தருகிறார். இந்த மூலவர் சுதையால் ஆனவர். உற்சவர் முருகப் பெருமானுக்கு, மணவாள குமரன் என்று பெயர். ஆலயத்தின் வலது புறம் ஆலயத் திருக்குளமும், அதன் முன்புறம் விநாயகப்பெருமான் சன்னிதியும் உள்ளன. மூலவரின் சன்னிதியை அடுத்த,

வேங்கை மரமாக மாறி திருவிளையாடல் புரிந்தார்:

 சிவபெருமான் நந்தியோடு காட்சி தருகிறார். ஆறுமுக நயினார் மற்றும் நடராஜ பெருமானும் தெற்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக் கிறார்கள். முருகன், வள்ளியைக் காதலித்த காலத்தில், மலைக்குறவர் கூட்டம் முருகனைத் துரத்தியது. அப்போது முருகப்பெருமான் வேங்கை மரமாக மாறி திருவிளையாடல் புரிந்தார். எனவே ஆலயத்தில் உள்ள தல மரமாக வேங்கை மரம், முருகப்பெருமானாகவே பாவிக்கப்படுகிறது. தல மரத்திற்கு தனிச் சன்னிதி அமைக்கப்பட்டு, தினமும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. விரும்பிய வண்ணம் திருமணம் கைகூட விரும்புபவர்கள், கருத்து வேறுபாடு கொண்ட தம்பதியர் ஆகியோர் இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனை வழிபட்டால் வளம் கூடும்; வாழ்வு சிறக்கும்.

ஆட்டுத் தலையுடன் உள்ள தட்சன்:

  இந்தக் கோவிலில் தட்சனுக்கு தனி சன்னிதி உள்ளது. சிவபெருமானை அழைக்காமல் தட்சன் யாகம் செய்தான். அவனது ஆணவத்தால் யாகம் அழிந்ததும், தட்சனும் அழிந்து ஆட்டுத் தலையுடன் விமோசனம் அடைந்தான். ஆட்டுத் தலையுடன் உள்ள தட்சனே இந்த சன்னிதியில் காட்சி தரு கிறார். இங்குள்ள தூண் ஒன்றில் பின்னிப் பிணைந்திருக்கும் இரு பெரிய பாம்புகளுக்கு நடுவில் சிவலிங்கம் ஒன்று எழிலாக காட்சி தருகிறது. இதற்கு முன்பாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ராகு காலத்தில் வழிபட்டால், நாக தோஷம் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் வள்ளியை முருகப்பெருமான் மணம் செய்த மண்டபம் காணப்படுகிறது. அதன் அருகில் விநாயகருக்கு ஒரு கோவிலும், வள்ளியம்மை குகைக்கோவிலும் உள்ளன. குகைக் கோவிலுக்கு அருகில் தினைப்புனம், வள்ளிச் சோலை, கிழவன் சோலை, வட்டச் சோலை முதலியன உள்ளன. வள்ளி நீராடிய சுனைக்கு அருகில் உள்ள பாறையில், விநாயகர், முருகன் மற்றும் வள்ளியின் சிற்ப வடிவங்கள் காணப்படுகின்றன.

திருவிழாக்கள்: 
கார்த்திகை தினத்தில் மாலையில் இந்த ஆலயத்தில் சொக்கப்பனை எரிக்கப்படுகிறது. அந்த நிகழ்வின் போது கலந்துகொண்டால், நமது முன் ஜென்ம பாவ வினைகளும் எரிந்து போகும் என்பது நம்பிக்கை. பங்குனி மாதம் அனுஷ நட்சத்திரம் அன்று, இரவில் இங்கு வள்ளி திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு, தேனும், தினை மாவும், குங்குமமும் பிரசாதமாக வழங்கு கிறார்கள். சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் நடை பெறும் தேரோட்டத்தின் போது, இத்தல குமாரசாமி பல்லக்கில் புறப்பட்டு, அன்று இரவு கிருஷ்ணன் கோவில் ஆலயத்தில் தங்குவார். மறு நாள் வெள்ளிக்குதிரை வாகனத்தில் சுசீந்திரம் சென்று அங்குள்ள பக்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் குமாரகோவில் திரும்புகிறார். அதே போல் நவராத்திரி விழாவின் போதும், குமாரகோவில் முருகப்பெருமான் பல்லக்கில் பத்மநாபபுரம் சென்று, அங்கிருந்து சரஸ்வதி அம்மன் மற்றும் சுசீந்திரத்தில் இருந்து வரும் முன்னுதித்த நங்கை அம்மன் சகிதம் திருவனந்தபுரத்திற்கு எழுந்தருள்கிறார். பின்னர் அன்றிரவு குழித் துறையில் தங்கி, மறுநாள் புறப்பட்டு கரமனை என்னும் ஊரில் வெள்ளிக் குதிரையேறி திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் காட்சியளிக் கிறார்.

The post கஞ்சி குடித்தால் நோய் தீர்க்கும் வேள்விமலை முருகன் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>