விழுப்புரம் மாவட்டம் தும்பூர் தாங்கலில் உள்ள நாகாத்தம்மன் கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த அம்மனை வணங்கினால் ராகு, கேது, தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. தலையை ஒரு இடத்திலும், வால் ஒரு இடத்திலும். 10 கிமி. தூரம் உள்ள பாம்பு சிலை 21,41,77அடி என இப்போது அமைக்கப்படும் உயரமான சிலைகளை பார்த்தும் நாம் மூக்கின் மீது விரல் வைக்கிறோம். ஆனால் ஒருகாலத்தில் 10 கி.மி தூரத்திற்கு பாம்பு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இன்று அச்சிலையை முழுமையாக பார்க்க முடியாவிட்டாலும் தலையை ஒரு இடத்திலும், வாலை ஒரு 10 கி.மி தூரம் தள்ளி சென்றுதான் பார்க்க முடிகிறது. இந்த அதிசய தெய்வத்தை நாகக்கன்னி என்று அழைக்கப்படுகின்றனர்.
பாம்பு கடித்து இறந்து விடுவான்:
தீராத வழக்குகலை பெருத்தவரை அரசர்கள் இங்குள்ள திருவட்ட பாறை ஒரு வரப்பிரசாதம். ஒருவன் பொய் சொல்வதாக கருதினால். அவனை இப்பாறை மீது ஏறச்சொல்வது வழக்கம் ஒரு வேலை அவன் பொய் சென்னால் அவனது கண்கள் குறுடாகிவிடும் என்பதும், பாம்பு கடித்து இறந்து விடுவான் என்பது நம்பிக்கை. பங்காளியக்கு தண்டனை ஒரே வயிற்றில் பிறந்த தோன்றி, ஒரே ரத்தமான பங்காளியையே ஏமாற்றியவனுக்கு கடுமையான தண்டனை நிறைவேற்றி தீர்ப்பு வழங்கியவள், தும்பூர் தாங்கல் நாகம்மன் ஆவாள்.
நீண்டு கொண்டே போன நாகாத்தம்மன்:
சிதிலம்அடைந்த இடத்தில் இருந்த நாகம்மனைத் தோண்டி எடுத்து உயரமான பீடத்தில் வைத்து புதிய ஆலயம் எழுப்ப அடியார் முயன்றார். ஆழம் எடுக்க எடுக்க அந்த கல்நாகம் பருத்த உடலுடன் முழு வடிவமாக பூமியின் கீழே நீண்டு கொண்டே போனது. அது மட்டுமின்றி, நாகர் உருவத்தைச் சுற்றி ஏராளமான நீர் சுரந்து கொண்டு வெள்ளமாக நின்றது. இத்தனைக்கு அருகேயுள்ள திருக்குளம் வறண்டு காணப்படுவதுதான் அதிசயம். இதற்கு மேலும், தோண்டுவது அம்மனின் சக்தியையே சோதிப்பதற்கு ஒப்பாகும் என்று பக்தர்கள் அஞ்சினர். எனவே பழையபடியே தோண்டிய பகுதிகளை மீண்டும் மண்ணால் மூடிவிட்டு இருக்கின்ற இடத்திலேயே உயர்ந்த மண்டபம் கட்டி, ஆலயம் எழுப்பினார்கள். பின்னர் குடமுழுக்கு விழாவும் நடத்தப்பட்டது. மேற்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. வலது புறம் விநாயகர் சன்னிதியும், இடதுபுறம் வள்ளி -தெய்வானை சமேத ஆறுமுகர் சன்னிதியும் உள்ளன. அருகே அரசமரமும், அதன் அடியில் நாகர்களும் அமைந்துள்ளன. இவற்றில் பக்தர்கள் தாலிச்சரடு உள்ளிட்ட காணிக்கைகளைச் செலுத்துகின்றனர்.
அன்னை நாகம்மன் உருவம் மேற்கு முகமாய் மெய்சிலிர்க்கும் வண்ணம் காட்சி தருகின்றது. அகன்ற நாகமாய் அன்னை கருணையோடு காட்சி தருகின்றாள். அன்னையின் தலைப்பகுதி மட்டும் 5 அடி அகலமும், 3 அடி நீளமும் கொண்டதாகும். ராகு- கேது தோஷங்கள், காள சர்ப்ப தோஷம் உள்ளிட்ட அனைத்து விதமான தோஷங்களுக்கும், கண்கண்ட பரிகாரத் தலமாக தும்பூர் தாங்கல் ஆலயம் திகழ்கின்றது. ஆலயத்தின் வடமேற்கே அமைந்துள்ள இயற்கையான புற்றில், இதற்கான பரிகார பூஜை செய்யப்படுகிறது.
முத்தாம்பிகையே நாகமாக:
தும்பூர் தாங்கல் நாகம்மன் ஆலயத்திற்குத் தென்மேற்கே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில், இவ்வாலயத்தோடு தொடர்புடைய பழம்பெரும் தேவாரத் தலமான திருவாமாத்தூர் அமைந்துள்ளது. இங்கு முத்தாம்பிகை சமேத அபிராமேஸ்வரர் ஆலயம் உள்ளது. தனிக்கோவிலாக விளங்கும் முத்தாம்பிகை அம்மனே, நாகமாக வந்து தர்மத்தையும், சத்தியத்தையும் நிலை நாட்டியதாகக் கூறப்படுகின்றது. தும்பூர் தாங்கலில் வெளியே காட்சி தரும் நாகத்தின் நிறைவுப் பகுதியான வால், முத்தாம்பிகையின் திருமேனியில் இன்றும் காணப்படுகிறது. இதனை அபிஷேக காலங்களில் மட்டுமே காண முடியும்.
வெட்டப்பட்ட வடுமாறாமல் உள்ள அம்மன்:
தும்பூரில் தாங்கல் நாகம்மனின் தலைப்பகுதி ஆலயமாக விளங்குவது போல, நடுப்பகுதி ஆலயத்தின் பின்புறம் சுமார் 300 அடி தூரத்தில் தெற்கே பூமிக்கு வெளியே காணப்படுகிறது. இது மண்வெட்டியால் வெட்டப்பட்டு காணப்படுவது குறிப்பிடத்தக்கது. பல நூறாண்டுகளுக்கு முன்பு வயதான ஒருவர், வயலில் மண்ணைச் சீர் செய்து கொண்டிருந்தார். அப்போது ஏதோ ஒரு பொருளின் மீது வெட்டுப்பட, ரத்தம் பீறிட்டு வந்தது. அதைக் கண்ட விவசாயி மயக்கமடைந்து விழுந்தார். விவரம் அறிந்து அங்கு வந்த ஊர்மக்கள் உண்மையை உணர்ந்து, அம்மனிடம் மன்னிப்பு வேண்டி நின்றனர். அதன்பின் பீறிட்ட ரத்தம் நின்று போனது. ஆனால் அந்த வடு மட்டும் மாறாமல் நிலைத்துவிட்டது. அதனை இன்றும் நாம் கண்டு வியக்கலாம். தமிழகத்தில் நாகாகோவில் உள்ள நாகராஜா கோவில் பாம்புதான் இங்கு மூலவராக இதுவரை உள்ளது என கேள்விப்ட்டுலோம் தூம்பூர் கோவிலில் பாம்பே மூலவர், நாகர்கோவலில் நாகராஜவாகவும் தும் தூம்பூரில் நாகக்கண்னியாகவும் வழிப்படுகின்றனர்.
The post ராகு, கேது தோஷம் தீர்க்கும் தலை, வால் வெவ்வேறான தும்பூர் நாகாத்தம்மன் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.