Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

முருகனின் கையில் சேவலை அடைத்து வைத்திருப்பது இக்கோவிலில் அதிசயம்

$
0
0

   நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அவாரத்தில் உள்பே ளுக்குறிச்சியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பழனி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு இங்குள்ள முருகனை வணங்கினால் தோல் நோய், எலும்பு நோய், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராதநம்பிக்கை.

ஆண், பெண்ணாக முருகன்:

 மூலவர் பழனி ஆண்டவர் தணியாக வேடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் மூலவரை நேருக்கு நேராக  வணங்கினால் வேடன் போலவும், வலதுபுறம் நின்று வணங்கினால் ஆண் வடிவமாகவும், இடதுபுறம் நின்று வணங்கினால் பெண்வடிவமாக காட்சி தருகிறார்.

போகர் பழனியில்:

  3 அரை அடி உயரம் கொண்ட சிலையை பார்த்து, போகர் பழனியில் நவபாசான முருகனை உருவாக்கினார். முருகன் கோவிலில் சேவல் சின்னம் கொடியில்தான் இருக்கும் ஆனால் இங்கு முருகன் சேவல் கையில் அடைத்து வைத்திருப்பது இங்கு அதிசியம்

வீரக் கோலத்தில் முருகன்:

 திருமுருகனுக்கு, இந்தத் திருமலையில் முதன்முதலில் கோயில் எழுப்பி பிரதிஷ்டை செய்தவர், கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான வேட்டுவ வேந்தனான கொல்லியாண்ட வல்வில் ஓரி ஆவார். இதனை மெய்ப்பிக்கும் விதத்தில், கூவைமலை பழனியாண்டவரை கைகூப்பி தொழுத வண்ணம் அவர் தன் மனைவி ராசாயியுடன் சிலையாகக் காணப்படுகிறார். மேலும், மூலவருக்கு குலத் தலைவர் என்பதால் உருமாலையை தலையில் கட்டி, கொல்லி மலைக்கே உரிய கொன்றை மலரைச் சூட்டி, இடக்கரத்தில் சேவலை அணைத்தும், வலக்கரத்தில் வஜ்ராயுதத்தைப் பற்றியும், இடுப்பில் பிச்சுவா கத்தியை வைத்துக் கொண்டும், கால் களில் வீரக்கழல் அணிந்தும் முருகன் இங்கே வீரக் கோலத்தில் திருக்காட்சியளிக்கின்றான்.

அருணகிரிநாதர், கிருபானந்த வாரியார்:

 இத்தலத்து முருகப் பெருமானை தரிசித்து ஒன்றுக்கு இரண்டாக இவர்மீது திருப்புகழ் பாடி தனது பித்தம் தெளிந்து சித்தம் நிறைந்துள்ளார். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளும் இந்த முருகனை தரிசித்து, ‘அழகா? எத்தலத்திலும் நான் தரிசித்திராத கோலத்தில் கையில் சேவலோடு என் ஆவலைத் தீர்த்த முருகனின் மனம் அழகா?’’ என்று வியந்து நின்று கண்ணீர்  வடித்துள்ளார். மலையழகா? மலைமகளின் மகன் அழகா? வள்ளி மணாளனின் இந்தத் தலம் அழகா? சித்தர்கள், மகான்கள், முனிவர்கள் அனைவரும் இந்த புள்ளி மயில்வாகனனை வணங்கி வழிபட்டு சித்திகள் பல கைவரப்பெற்று முக்தி அடைந்தனர். ஒற்றையாக, பழனியாண்டவர் மட்டுமே திருக்கோயில் கொண்டிருந்த நிலைமாறி இப்பகுதி முருக பக்தர்களின் முழு முயற்சியால் விநாயகர், சிவன், பார்வதி, பெருமாள், கிருஷ்ணர், சனி பகவான், நவகிரக சந்நதி, இடும்பன் சந்நதி என்று பல்வேறு தெய்வ சந்நதிகள் எழுப்பப்பட்டு கோயில் விஸ்தரிக்கப்பட்டது. இத்திருக்கோயிலுக்கு படிவழியாகவும், வாகனப்பாதை வழியாகவும் செல்லலாம். முருகனுக்கு உரிய திருநாட்கள் யாவற்றையும் ஆத்மார்த்தமாகக் கொண்டாடி வருகின்றனர். கிருத்திகை மாதம் வெகு சிறப்பாக வழிபாடுகள் நடத்தப்பட்டு சிறப்பிக்கப் பெறுகின்றது. மாதா மாதம் பௌர்ணமி பூஜை இரவு 12 மணிக்கு நடைபெறுகின்றது. கிரிவலப்பாதை அரை கி.மீ. தூரத்திற்கு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

திருவிழாக்கள்:

 கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்திற்கு முதல் நாள் பரணி தீபம். மறுநாள் கார்த்திகை தீபம். கார்த்திகை முப்பது நாளும் தீபதானம் செய்ய வேண்டும். கோயில், மடம், வீடு, நாற்சந்து, வீதி முதலான இடங்களில் நிறைய தீபம் ஏற்ற வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது. கார்த்திகை மாதத்தில், மாலை நேரத்தில் இந்த முருகன் கோபுர சிகர வாசற்படி, மண்டபம், மூலஸ்தானம் முதலிய இடங்களில் பக்தர்கள் விளக்கேற்றி வறுமை நோய் அகன்று செல்வமும், உடல்நலமும், அமையப் பெறுகிறார்கள்.

 #swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #murugan #balamurugan #palani andavar

  Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post முருகனின் கையில் சேவலை அடைத்து வைத்திருப்பது இக்கோவிலில் அதிசயம் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>