Chennai : பகவான் ரமண மகரிஷி இந்த நூறாண்டின் ஒரு மிக பெரிய மகான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே , பகவான் அறிவுரைகள் அனைத்தும் நம் வாழ்க்கைக்கு முக்கியமான ஓன்றாகும் , இன்றும் பகவான் தன் சூட்சும ரூபத்தில் தனது பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார், பகவானின் அருளுரைகள் ஏராளம் , அதில் ஒன்றான ஆத்ம ஞானத்தை பற்றி பகவான் கூறியதாவது.
ஆத்ம ஞானம் என்பது மிக எளிதாகப் பெறக்கூடிய ஒன்று.ஏனெனில் அதை எங்கேயும் தேடிச் செல்ல வேண்டியதில்லை. அது உன்னிடத்திலேயே உள்ளது. எப்போதும் இருந்து கொண்டே இருப்பது. நீ செய்ய வேண்டியதெல்லாம் வெளியே நோக்குவதை விட்டுஇ விட்டு உள்ளே திரும்பி நோக்க வேண்டும். அவ்வாறு நோக்கஇ நோக்க. நீ உடனே ஒரு பிச்சைக்காரன் என்ற நிலையிலிருந்து சக்கரவர்த்தி என்ற நிலைக்கு உயர்கிறாய்.ஆத்ம சிம்மாசனத்தில் அமர்ந்து ஞான சாம்ராஜ்யத்தை ஆளத்துவங்குகிறாய். நீ செய்ய வேண்டியதெல்லாம் திரும்பி காண வேண்டியதுதான்.அதுவே ஆத்ம ஞானத்தின் திறவுகோல்.
இதுவரை நீ கற்றதெல்லாவற்றையும் மறந்து விடு.உனது புத்திசாலித்தனம்இசாதுர்யம்எல்லாவற்றையும் துறந்துஇஒரு குழந்தை போன்ற தன்மையுடனும்இநம்பிக்கையுடன் உள் நோக்கிச்செல். உன்னைத் தவிர வேறு ஒன்றுமே இப்பிரபஞ்சத்தில் இல்லை. எனவே ஒரு திறந்த இதயத்துடன் ஞானத்தை வரவேற்பாய். இதுவே உண்மையான சிரத்தை உண்மையான அறிதல் என்கிறார் ரமண பகவான்.
நாமும் சற்று நமது சிந்தனையை உள் நோக்கி செலுத்தி மனதை வென்று ஆத்ம ஞானம் பெற முயற்ச்சிப்போம். அதற்கு புற துறவு அவசியம் அல்ல. அக துறவே அவசியம்.
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #shiva #sivaperuman
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post ஆத்ம ஞானத்தின் திறவுகோல் – ரமண மஹரிஷி appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.