Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

கரிநாள் என்றால் என்ன?

$
0
0

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் கரிநாள் என்பது “சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள்” என்பதே.. !

அதாவது, அன்றைய தேதியில் சூரிய கதிர்வீச்சின் தாக்கம், பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும்..!

நமது முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக ஆராய்ந்து முடிவு செய்து வைத்திருக்கும் நாட்கள் இவை…!

இந்நாட்கள் வருடத்திற்கு வருடம் மாறுபடாதவை..அதே தேதி (நிலையாக இருக்கும் )

தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் இந்நாட்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள்…!

உதாரணமாக தை மாதம் 1, 2, 3 ஆகிய நாட்கள் கரிநாட்கள். மாறாக, இது ‘அஷ்டமி, நவமி’ போன்றோ அல்லது ‘பரணி, கிருத்திகை’ போன்றோ திதிகள் அல்லது நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைந்தது அல்ல..!

சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும் பொழுது, நமது உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும்..

ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று கூடுதலாக அதிக அளவில் தூண்டப்படுகின்றன..!

இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல் போன்ற வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்..!

இது போன்ற காரணங்களால் கரிநாட்களில் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்த்திருக்கிறார்கள்…!

இது வானவியல் ரீதியாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாட்களேயன்றி …

ஜோதிட ரீதியாக கடைபிடித்து வரும் விஷயம் அல்ல..!

ஒவ்வொரு தமிழ் வருடமும் கரிநாட்களின் விவரம் :

சித்திரை-6, 15

வைகாசி- 7, 16, 17

ஆனி- 1, 6

ஆடி-2, 10, 20,

ஆவணி-2, 9, 28,

புரட்டாசி- 16, 29,

ஐப்பசி-6, 20,

கார்த்திகை-1, 10, 17,

மார்கழி-6, 9, 11,

தை-1, 2, 3, 11, 17,

மாசி-15, 16, 17,

பங்குனி-6, 15, 19.

இந்த நாட்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். . மாறவே மாறாது..!

கரிநாட்களில் சுபநிகழ்ச்சிகளை மேற்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது..!!

The post கரிநாள் என்றால் என்ன? appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>