விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள செல்லப்பிராட்டியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ரிஷ்ய சிருங்க மகரிஷியால் யந்திர வடிவில் பிரதிஷ்டை செய்து கருவறையில் உள்ள கல்லில் பதித்து வழிப்பட்டார். மேலும் இங்குள்ள அம்பாள் கல்வியும், செல்வமும், வீரமும் தரும் பார்வதி, லட்சுமி, சரஸ்வதியாக மூன்று சக்திகளும் ஒரே சக்தியாக விளங்கி இங்கு பரப்பிரம்ம சக்தியாக லலிதா செல்வாம்பிகை என்ற பெயரில் அம்பாள் அருள் பாலிக்கிறார், அம்மனின் சக்திபீடங்களில் இது பரப்பிரம்ம சக்தி பீடமாக கருதப்படுகிறது.
நவராத்திரி நாயகி:
இங்கு நவராத்திரி 9 நாட்களும் ராவணனை வெல்ல ராமன் வழிப்பட்டதால் இத்தலநாயகியை நவராத்திரி நாயகி என்று அழைக்கின்றனர். இங்கு 12 ராசிகாரர்களையும் ரிஷ்யசிருங்கர் என்னும் முனிவர் தன்னுடைய தவவலிமைகளை ஒன்றிணைத்து, மூன்று சக்திகளையும் ஒருங்கிணைத்து, உலகை காக்கும் தாயாக மூல ஒலிக் கோடுகளை கொண்டு சூரியனின் 12 ராசிகாரர்களையும் 12 அக்ஷரங்களாக யந்திர வடிவில் எழுதி வழிப்பட்டுள்ளார், இத்தலத்திற்கு குறைவென்று வரும் பக்தர்களை அம்பாள் வாவென்று அன்புகலந்த பார்வையால் அரவணைக்கிறார், பல புகழ்பெற்ற தலங்களில் ஒன்றாய் இத்தலம் விளங்குகிறது.
கல்யாணமாலை சாற்றினால்:
இந்த அம்பாளை நீண்டநாள் திருமணம் ஆகாதவர்கள் பவுர்ணமி நாட்களில் 12 நெய்தீபங்கள் ஏற்றி அம்பாளுக்கு கல்யாணமாலை சாற்றினால் திருமணம் நிச்சயம் நடக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை, பிராத்தனை நிறைவேறியதும் தம்பதிகளாக வந்து அம்பாளை வணங்கி செல்கின்றனர், மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் பவுர்ணமி நாட்களில் நடக்கும் யாகத்தில் கலந்து கொண்டால் தீராதநோயும் தீரும் என்பது இங்கு வரும் பக்தர்களின் தீராத நம்பிக்கை.
யந்திர வடிவில் அம்பாள்:
பல கோவில்களில் அம்பாளை சிலை வடிவமாக பார்த்திப்ருபீர்கள் ஆனால் இங்கு யந்திர வடிவில் அம்பாள் 4அடி அகலமும், 6 அடி உயரமும், செவ்வக வடிவம் கொண்ட பலகையில் 12 சதுர கட்டங்களுக்கு நடுவே நின்ற கோலத்தில் ‘திரிசூலவடிவில் பீஜாட்சர” எழுத்துக்களுடன் காட்சி தருகிறார்.
இங்குள்ள அம்பாளை; கொம்பு மகரிஷி என்னும் ரிஷ்ய சிருங்கா யாந்திர வடிவில் பிரதிஷ்டை செய்து வழிப்பட்ட தலமாக விளங்குகிறது.
இந்தியவில் பல தலங்கள் உள்ளது. ஆனால் இங்கு மட்டும் அம்பாள் கொம்பு மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ராமன் சீதையை மீட்க இலங்கை செல்வதற்காக இத்தலத்தில் நவராத்திரி 9 நாட்களும் தசமாக வித்ய யாகங்கள் செய்து வழிப்பட்டு ராவணனை வென்றார் என்று தல புராணம் கூறுகிறது, ஆதலால் இத்தலத்தில் உள்ள அம்பாளை 12 ராசிகரர்களுக்கும் அதிபதியாக நவராத்திரி நாயகியாக இத்தலத்தில் அருள்பாலிக்கிறார், பிரகாரத்தில் சிவசக்தி, விஷ்னு சக்தி, பிரம்ம சக்தி உள்ளனர்.
கோவில் அமைப்பு:
ஐந்து நிலை ராஜகோபுரம் மூலஸ்தான ஸ்ரீமுகவிமானம் ஆகியவை பல்லவகாலத்தில் கட்டிட கலைகளை சார்ந்துள்ளது.
எட்டுதிக்கு காவல் தெய்வங்கள்:
கோவிலை சுற்றி எல்லையை காக்கும் காவல் தெய்வங்களாக விநாயகர், வேடியப்பன், வனதுர்க்கை, பீடாரி அம்மன், சப்த கன்னியர், ஐய்யனார், சூலினிதேவி, அம்மாச்சர் அம்மன் ஆகியோர் உள்ளனர்.
முப்பெரும் தேவியார்:
அம்மனுக்கு எட்டு கரங்கள், நெற்றியில் பிறைசந்திரன், ஐந்து தலை நாகம் ஆகிய வற்றுடன் இடதுகாலை மடித்து வலது காலை தொங்கவிட்டு தாமரை பீடத்தில் சாந்த ரூபினியாக அமர்ந்துள்ளார், வலது திருக்கரம் பக்தர்களை காக்கும் படியும், இடது திருக்கரம் பாதத்தை நோக்கியபடியும் அமைந்துள்ளது, பின்கரங்களில் பார்வதிக்குரிய பாசம், லட்சுமிக்குரிய சங்கு சக்கரம், சரஸ்வதிக்குரிய கமண்டலம், அக்ஷயமாலை ஆகியவை உள்ளன.
கற்பலகையின் வடிவமைப்பு:
இங்கு மூலவராக வணங்கப்படும் அம்மன் கற்பலகை வடிவில் இருக்கிறார், முன்காலத்தில் கற்பலகையில் மந்திரங்களை எழுதி கடவுலாக வழிப்பட்டுள்ளனர். எனவே இத்தலம் ராமயண காலத்தில் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இந்த கற்பலகை 4 அடி அகலமும், 6 அடி உயரமும், செவ்வக வடிவம் கொண்டது, பலகையில் 12 சதுரங்கள் உள்ளன இந்த கட்டங்களை சுற்றி உலக நாயகியான ஆதிபராசக்தியின் ‘பீஜாட்சர மந்திர எழுத்துக்கள”; உள்ளன நடுவில் திரிசூலம் உள்ளது.
வலது மேல்பாகத்தில் சூரியனும், இடது மேல் பாகத்தில் சந்திரனும் குறிக்கப்பட்டுள்ளது, நடுநாயகமாக முப்பெரும் தேவியாரின் அம்சங்களை ஒருங்கினைத்து அம்மனின் திருவுருவம் ஓவிய வடிவில் உள்ளது, இங்கு உருவ வழிபாடு கருதி கற்பலைகக்கு கீழே 3 அடி உயரத்தில் அம்பாள் சிலை வைத்துள்ளனர்.
ஆதிசங்கரர் காஞ்சிபுரம் செல்ல வழி தெரியாத தவித்தபோது அம்பாள் அவருக்கு காட்சியளித்து அவருக்கு வழி கூறி அனுப்பினார்.
தேனீக்கள் பறக்கு போது சத்தம்:
மேலும் இங்கு 18 சித்தர்களும் தினமும் அம்பாளை தேனீக்கள் வடிவில் வந்து வழிபாடு செய்கின்றனர் எனவும் இங்கு தேனீக்கள் பறக்கு போது சத்தம் கேட்பதில்லை.
தேனீகள்:
இங்கு வரும் தேனீகள் பக்தர்களுக்கு இடையூறு செய்வதில்லை, செஞ்சியை ஆண்ட மாவீரன் தேசிங்குராஜா போருக்கு செல்லும் முன் இத்தலத்திற்கு வந்து அம்பாளை வணங்கிவிட்டு தான் போருக்கு செல்வது வழக்கமாக கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தவ வல்லமையால் உருவாக்கப்பட்டது:
கர்நாடகவில் உள்ள கொல்லூர் தாய்மூகாம்பிகை, கேரளாவில் உள்ள சோட்டானிக் கரை பகவதியம்மன் ஆகிய கோவில்களை பழமையானது என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள் ஆனால் இக்கோவில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று கல்வெட்டுகளின் மூலம் தெரியவருகிறது, மேலும் இராமாயணக் காலத்தில் வாழ்ந்த ருஷ்யசிருங்கர் என்னும் கொம்புமகரிஷி என்னும் முனிவரின் தவ வல்லமையால் இத்தலம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நடைதிறப்பு:
காலை 6 மணிமுதல் 11 மணிவரை மாலை 4 மணிமுதல் 8.30 மணிவரை
அமைவிடம்:
செஞ்சியில் இருந்து சேத்துப்பட்டு செல்லும் சாலையில் 5-வது கிலோமீட்டரில் உள்ளது. இங்கு செல்ல அடிக்கடி பஸ் வசதிஉள்ளது.
தொடர்புக்கு:
அறங்காவலர் குழுத்தலைவர் : இராம கன்னியப்பன் – 9444067172
ஆலையஅச்சகர் : ஈஸ்வரன் குருக்கள் – 9865988281.
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #lordshiva #navaraateri naayagi
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post 12 ராசிகளின் அதிபதியான நவராத்திரி நாயகி appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.