‘அண்டமாய்’ என்று தொடங்குவது – அண்டத்தின் தேவலோகத்து தெய்வயானைப் பிராட்டியை முன்னே வைத்து பாடியதாகும்.
எத்தனையோ கவசங்கள் இருந்தாலும் சண்முக கவசம் என்ற மகாமந்திர நூலை என்னுடைய கண்ணோட்டத்தில் கூறுவதென்றால் கவசச்சக்கரவர்த்தி சண்முக கவசம் என்றே கூற வேண்டும். பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த சண்முகக் கவசம் என்ற அற்புதமான அருள் நூல் ஆபூர்வ சக்தி படைத்தது, உடற்பிணி, உள்ளப்பிணி இவைகளை போக்குவதில் தனக்கு நிகர் தானே என்ற நிலையில் உள்ளது. பாரத தேசம் செய்த தவப்பயனால் சுவாமிகளின் தவமுதிர்ச்சி பெற்ற ஞானத்தால் – சிவம் பெருக்கும் கலையால் தோன்றி யதே சண்முகக் கவசம். வேதங்களும் ஆகமங்களும் உபநிடதங்களும் இதிகாசங் களும் தத்துவங்களும் உணர்ந் தோர்கள் போற்றிப் புகழ்ந்து வாழ்த்தி வழிபடும் நூல் சண்முகக்கவசம் ஆகும்.
நல்ல காலம் நல்ஊழ் வந்த நேரத்தில் சண்முகக் கவசம் பாராயணம் தோன்றுவதற்குரிய சிந்தனை ஏற்படும். தவச்சீலராகிய பாம்பன் சுவாமிகள் முருகன் கவசம் என்றுரைக்காமல்; கந்தன்கவசம் என்றுரைக்காமல்;
ஓம் சண்முக பதயே நமோ நமே; ஓம் சண்மத பதயே நமோ நமே”
என்ற இரண்டு மந்திரங்களின் அரும் பெரும் கருத்தை உள்ளடக்கியது சண்முகக்கவசம் ஆகும்.
முழு முதல் பரம்பொருள் முருகனே என்று தெளிந்து உணர்ந்து அப்பரம்பொருள் மீது ‘ஆறாயிரத்து அறநூற்று அறுபத்தாறு” பாடல்களை அருளிச்செய்து ஆறு மண்டலங்களாக வகுத்து சிவனருள் கலைகளஞ்சியம் என்று போற்றத்தக்க வகையில் முருகனைப் புகழ்வது; அப்படிப்பட்ட தவச்சீலர் சண்முகக் கவசத்தை தொடங்குகின்ற பொழுது ‘அண்டமாய் அவனியாகி’ என்று தொடங்குகின்ற பாங்கு ‘அண்டம்’ என்பது விண், வெளி, தகனம், விசும்பு, கம் என்று பலபொருள்படும்.
மந்திரங்களில் தலைசிறந்தது திருவாறெழுத்து மந்திரம் இதனை வலியுறித்தி சுவாமிகள் அகச் சான்று, புறச்சான்று, அனுபவித்து, நிரூபித்து, அருள் தன்மையால் விளக்கி, குமார பரமேஸ் வரனின் திருநாம மகிமையை குறிப்பிட்டுள்ளது. ‘அகரம் முதல் னகரம்’ வரை முப்பது எழுத்துக்கள் 30 பாடல்களால் அருளிச்செய்த இக்கவசம் மகாமந்திர சக்தியுடையது என்பதற்கு ஓர் சான்று ‘ஓம் ஐம் ரீம்வேல் காக்க’ என்று குறிப்பிட்டுள்ளது. வேலின் திறத்தை நன்கு விளக்கி உயிர்களை காக்க வேண்டுமென்று பிராத்தனை செய்த குருநாதரின் உள்ளக்கிடக்கை எவ்வாறு வர்ணிப்பது, முழு முதல் பரம்பொருள் முருகனே என்று தெளிந்து உணர்ந்து அப்பரம்பொருள் மீது ‘ஆறாயிரத்து அறநூற்று அறுபத்தாறு” பாடல்களை அருளிச்செய்து ஆறு மண்டலங்களாக வகுத்து சிவனருள் கலைகளஞ்சியம் என்று போற்றத்தக்க வகையில் முருகனைப் புகழ்வது; அப்படிப்பட்ட தவச்சீலர் சண்முகக் கவசத்தை தொடங்குகின்ற பொழுது ‘அண்டமாய் அவனியாகி’ என்று தொடங்குகின்ற பாங்கு ‘அண்டம்’ என்பது விண், வெளி, தகனம், விசும்பு, கம் என்று பலபொருள்படும்.
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #lordshiva
#shanmuga kavasam #lordmurugan
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post உடற்பிணி போக்கும் ஷண்முக கவசம் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.