பூரணி யோக புவனேஸ்வரி கதி நீயே அம்மா
நாரணி ஜீவத் தாரணியே சிவ நாயகியே மோக்ஷதாயகியே
அரணருளாகவே ஐந்தொழில் புரிந்திடும் ஆதிபராசக்தி நீயே அம்மா
வரதாயகி சித்தகௌரி மனோன்மணி வாசாமா கோசரி நீயே அம்மா
மஹேஸ்வரி தாயே ஜெய மங்களம், சுப மங்களம்
ஸர்வ சைதன்யரூபாம் தாம் ஆத்யாம் சக்திம் ச தீமஹி
ஹ்ரீங்கார ரூபிணீம் தேவீம் தியோ யோந: ப்ரசோதயாத்
(சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளியது)
கால வெள்ளத்தில் புவனவெளிகளை பூத்து மலரச் செய்தவள் அன்னை புவனேஸ்வரி ஏகாட்சரமான ஹ்ரீம் பீஜமே, சாக்த ப்ரணவம் என போற்றப்படுகிறது. அந்த ஹ்ரீம் பீஜத்தில் விரும்பி உறைபவள் புவனேஸ்வரி. ஹ்ரீங்காரம் என்ற கூட்டை அழகுபடுத்தும் பெண் கிளியாகவும் கோடிக்கணக்கான பிரமாண்டங்களை காப்பாற்றும் திறனுடையவளாகவும் சதாசிவமயமான பீடத்தில் அமர்ந்தருள்பவளுமானவள் புவனேஸ்வரி. ஹ்ரீங்காரம் எனும் மஹா மந்திரம் வர்ணிக்கும் பெருமையுடையவள். புவனங்கள் எல்லாம் பூக்கக் காரணமாகிய புவனேஸ்வரி உலகங்களைப் படைப்பதற்கு முன்தான் தங்குவதற்குரிய இடம் வேண்டுமென எண்ணி மணித்வீபத்தைப் படைத்தாள்.
நவரத்தினங்களால் ஆன பதினெட்டு பிராகாரங்களைக் கொண்டு மூவுலகிலும் நிகரற்ற அழகு வாய்ந்த நகரமாகத்திகழ்கிறது . அமுதமயமான கடலின் நடுவில் உள்ள மணித்வீபத்தில் அமுதமயமான கடலின் நடுவில் சங்கநிதி, பத்மநிதி இரண்டிற்கும் நடுவில் தேவி புவனேஸ்வரருடன் அமர்ந்து அருள்கிறாள். ஸ்ரீசக்ரதாடங்கங்களை அணிந்து தாமரை போன்ற முகத்துடன், சந்திரப் பிரபை, சூரியபிரபையைத் தலையில் சூடி அருட்காட்சியளிக்கிறாள்.
சந்தனக்குழம்பு, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ போன்ற வாசனைத் திரவியங்கள் பூசி, சங்கு போன்ற கழுத்து, மாதுளை முத்துகள் போன்ற பற்கள், ரத்தினங்கள் இழைத்த கிரீடங்கள், கங்கையின் சுழல் போன்ற நாபிக் கமலம், மாணிக்கக் கற்களால் ஆன மோதிரம், தாமரை தளம் போன்ற முக்கண்கள், இச்சா, க்ரியா, ஞான சக்திகள் துலங்கத் திகழ்கிறாள். லஜ்ஜை, துஷ்டி, புஷ்டி, கீர்த்தி, காந்தி, க்ஷமை, தயை, புத்தி, மேதை, ஸ்ம்ருதி, லக்ஷ்மி போன்ற பணிப்பெண்கள் தேவிக்கு பணிவிடை செய்கிறார்கள்.
விஜயா, அஜிதா, அபராஜிதா, நித்யா, விலாஸினி, தோக்த்ரீ, அகோரா, மங்களா, நவா ஆகிய பீட சக்திகள் தேவியை சேவிக்கிறார்கள். ரக்தா, சாமுண்டா, பத்ரா, மஹாமாயா போன்றோர் புவனேஸ்வரியின் நாற்புறங்களிலும் இசைக் கருவிகளை இசைக்கிறார்கள். துர்க்கா, ராதா, லட்சுமி, சரஸ்வதி, சாவித்திரி ஆகிய பஞ்ச சக்திகளின் ஜனனீ. செல்வமும் புகழும் பெற ஸ்ரீ புவனேஸ்வரி மந்திரம், மந்திர சாஸ்திர நூல்களான மந்திர மகாநிதி,குலார்ணவ தந்திரம் ,தத்த சம்ஹிதை முதலான எல்லா புகழ்பெற்ற நூல்களும் உயர்வாக குறிப்பிடுகின்றன.ஒவ்வொரு குறிப்பிட்ட பயனுக்கும் ஒரு தெய்வத்தை வணங்குவோம் ஆனால் இவளை வழிபட கல்வி,செல்வம்,வீரம்,என யாவும் கிட்டும்.இவள் ஒரு தெய்வமே .
இவளை உபாசிக்க இந்திரனை போல் செல்வம் நிறைந்தவராகலாம் என்று ரிக் வேதம் சொல்கிறது.பூர்வ ஜன்ம புண்யம் உள்ளவர்களே இவளை உபாசிக்க முடியும்.ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகத்தின் போது அவர்களது குரு வசிஷ்டர் :- “இந்த உலகத்தில் செல்வம் இல்லாதவன் உறவினர்களால் கூட மதிக்கப்படமாட்டான் .உயர் புகழும் செல்வமும் பெற புவனேஸ்வரி வழிபாடே ஆகச் சிறந்தது.இவளை வழிபடுபவனும் அவன் தலைமுறைகளும், வறுமையைக் காணமாட்டார்கள் ” என ஸ்ரீ ராமனிடம் கூறினார்.ராம ராஜ்ஜியம் செழிப்புடன் விளங்க ராமரின் புவனேஸ்வரி வழிபாடே காரணம்.
ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா துவாரகா நகரத்தைப் பெற உதவியதும் இவளை வழிபாட்ட பயனே . எவ்வளவு மோசமான தரித்திரனும் புவனேஸ்வரியை வழிபட செல்வமும் உயர்வும் பெறுவான் என்று சிவபிரானும் கூறுகிறார். நமது பூமியைப்போல் 224 உலகங்கள் இருப்பதாக வேதம் கூறுகிறது அவை யாவற்றுக்கும் புவனேஸ்வரியே அதிபதி.புவனம் என்றால் அண்டம்,உலகம் என்றும் ஈஸ்வரி என்றால் காப்பவள் என்றும் பொருள் எனவே இவள் புவனேஸ்வரி எனப்படுகிறாள். நெய் விளக்கேற்றி விளக்கில் ஸ்ரீ மாதா புவனேஸ்வரியை ஆவாஹனம் செய்து ,வாழையிலையில் பச்சரிசி பரப்பி அதில் புவனேஸ்வரி யந்திரம் வைத்து அந்த யந்திரத்தை குங்குமம்,ரோஜா இதழ்கள் மற்றும் அக்ஷதையால் அர்ச்சித்து 3000 தடவை மந்திரம் சொல்ல வேண்டும்.இதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்ய மந்திரம் சித்தியாகும்.பின்னர் அந்த யந்திரத்தையும் ஜப மாலையையும் ஆற்றில் விட்டு விட வேண்டும்.
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #amman
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post செல்வமும் புகழும் பெற ஸ்ரீ புவனேஸ்வரி மந்திரம் appeared first on Swasthiktv.