Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவராத்திரி ஹோமங்கள்

$
0
0

விஜய தசமியை  முன்னிட்டு ஸ்ரீ விஜயலக்ஷ்மி ஹோமம் மற்றும் அட்சராப்யாசம்

 வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 11.10.2016, செவ்வாய் கிழமை அன்று திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டும், நவராத்திரி மற்றும் விஜய தசமியை  முன்னிட்டும் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் முன்னிலையில் சிறப்பு விஜயலக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு திருவோண அபிஷேகமும், குழந்தைகளுக்கான அட்சராப்யாசமும்  நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆயுதம் என்பதன் உண்மையான பயன்:

 ganஉயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை எனவும் சொல்லலாம். ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணெய் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.

 ஆயுத பூஜையன்று எல்லா ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே இந்த உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம், மற்ற அழிவு செய்கைகளுக்கு பயன்படுத்தமாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம் விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல் நன்று. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஆயுத பூஜை நாள் அன்று வாழ்வில் மக்கள் அனைவரும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அஷ்டலக்ஷ்மிகளில் ஒருவரான ஸ்ரீ விஜயலக்‌ஷ்மியின் அருள் வேண்டி ஸ்ரீ விஜயலக்ஷ்மி ஹோமம் நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் எண்ணற்ற பழங்கள், பல வகையான புஷ்பங்கள், பட்டு பீதாம்பரங்கள் 100க்கு மேற்பட்ட மூலிகைகள் சேர்க்கப்பட உள்ளன. பக்தர்கள் மேற்கண்ட ஹோமத்தில் பங்கேற்று ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்று நலமாய் வாழ அன்புடன் அழைக்கிறோம்.

                                  ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சரஸ்வதி ஹோமம்

 saaaaaவேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 10.10.2016 திங்கட் கிழமை அன்று காலை 10.00 மணியளவில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மாபெரும் சரஸ்வதி ஹோமம் நடைபெற உள்ளது. ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் நடைபெறும் இந்த ஹோமத்தில் பங்கு பெறுபவர்களுக்கு  கல்வி ஆற்றல் பெருகும். கலைத்துறை திறமைகள் அதிகரிக்கும். உங்கள் படைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். பேச்சாற்றல், திறன்பட செயல்பட இந்த சரஸ்வதி ஹோமம் பலன் தரும். மேலும் கல்வி, கலை, விவேகம், கற்றல் திறம், புத்தி, மனம், மனித அருமை இவை அனைத்தும்  ஸ்ரீ சரஸ்வதி அருளாசியும் கிடைக்க பெறுவர்..

  ஸ்ரீ சரஸ்வதி ஹோமத்தினால் கிடைக்கும் நன்மைகள் மாணவர்களுக்கு பெரிய வர பிரசாதமாக இருக்கும். கல்வியில் வெற்றி பெற உதவும். கலைதுறையில் இருப்பவருக்கும் கண்டிப்பாக முன்னேற்றம் கிடைக்கும். நடிப்பு, பாடல், பேச்சு, எழுத்து இவை அனைத்துக்கும் சரஸ்வதி அருள் கிடைக்கும். ஆன்மீகம், பாசம், அன்பு   இவை அனைத்தும் முழுமையாக கிடைக்க பெற நாம் சரஸ்வதி ஹோமத்தில் பங்கு பெற வேண்டும். அரசியல்வாதிகள், பேச்சாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் பிரபலங்கள் இவர்கள் அனைவர்களுக்கும் சரஸ்வதி ஹோமம் முழுமையான பலனை தருகிறது. நாம் வேத முறைப்படி இந்த ஹோமம் செய்வதால் பல நினைத்த காரியத்தை அடைந்து முழுமையான தீர்வு பெறலாம் என்கிறார் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

தொடர்புக்கு:

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்

கீழ் புதுப்பேட்டை, அனந்தலை மதுரா

வாலாஜாபேட்டை – 632513

Ph : 04172-230033/9488209877/9488213701

e-mail: info@danvantritemple.org

     homam@danvantritemple.org

     danvantripeedam@gmail.com

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #danvantri

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

 

 

The post ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவராத்திரி ஹோமங்கள் appeared first on Swasthiktv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>