Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

வேண்டிய வரம் தரும் சூரனூர் கைலாசநாதர்

$
0
0

 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சூரனூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது இங்கு அம்பாள் ஆனந்த வள்ளியுடன் கைலாச நாதர் என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கி வேண்டினால்  வேண்டிய வரம் தருவார் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை மகாவிஷ்ணு, மகாலெட்சுமி சன்னிதானங்கள் உள்ளன. இந்த கோயில் குறித்த புராணக்கதை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. சிவபக்தரான பத்மாசூரன் இவ்வூரில் பிறந்து வளர்ந்து, பின்னர் இப்பகுதியை ஆண்டு வந்தார் என்று கூறப்படுகிறது. இங்குள்ள ‘கைலாசநாதர் புஸ்ப கல ஊருணியில்’ நீராடி தினமும் அதிகாலையில் பத்மாசூரன் சிவனை வழிபட்டுள்ளார்.

வரம் கொடுத்தவர் தலையிலேயே கை

 spt-co-karatholuvu-1இதைக் கண்டு மகிழ்ந்த சிவன், பத்மாசூரனுக்கு, ‘யார் தலை மீது நீ கை வைத்தாலும் அவர்கள் அழிந்து விடுவர்’ என்ற வரத்தைக் கொடுத்தார். ‘வரம் கொடுத்தவர் தலையிலேயே கை வைப்பது’ என்ற சொலவடைக்கேற்ப, பத்மாசூரன், சிவபெருமானின் தலையில் கையை வைத்து சோதிக்கலாம் என்றாராம். இதனால் சிவபெருமான் தனக்கு உகந்த ‘காசி அரளி பூவில்’ மறைந்து கொண்டார். இதையறிந்து அங்கு வந்த மகாவிஷ்ணு, மோகினி உருவம் தரித்து பத்மாசூரன் முன்பு காட்சியளித்தார். மோகினி மீது இச்சை கொண்ட பத்மாசூரன், அவரை அடைய விரும்பினார். ‘நீராடி வந்தால் தன்னை அடையலாம்’ என மோகினி அவதாரம் தெரிவித்திட, சிறிது தண்ணீரை எடுத்து, தனது தலையில் வைத்து பத்மாசூரன் தேய்க்க, தானே அழிந்து போனார்.

இந்த நிகழ்வு இத்தலத்தில்தான் நடந்தது என கூறப்படுகிறது. மேலும் சூரனை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமான் இந்த சூரனூரில் இருந்தே திருச்செந்தூர் புறப்பட்டார் என்கின்றனர் இப்பகுதி மக்கள். சூரனை வென்ற பிறகு தேவர்களோடு மறுபடியும் இங்கு வந்து, இங்கிருந்து புறப்பட்டு திருப்பரங்குன்றம் சென்று தெய்வானையை திருமணம் செய்து கொண்டார்.

அமைவிடம்:

  விருதுநகர் மாவட்டம் கைலாசப்பட்டி அடுத்து உள்ள சூரனூரில் கோவில் உள்ளது.

தொடர்புக்கு:    9500485233

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post வேண்டிய வரம் தரும் சூரனூர் கைலாசநாதர் appeared first on Swasthiktv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>