திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்துள்ள பாடகம் என்னும் கிராமத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு அம்பாள் அபிதகுஜாம்பாளுடன் அபிராமேஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருள் பாலிக்கிறார், இவரை பவுர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் வணங்கி பக்தர்கள் பால் அபிஷேகம் செய்தால் சகல செல்வமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.
‘பாடகம்” என்ற சொல் பண்டைய கல்வெட்டுகளில் ‘நிலம்”
‘பாடகம்” என்ற சொல் பண்டைய கல்வெட்டுகளில் ‘நிலம்” ‘நில அளவு” என்ற பொருளில் வருகிறது. பாடகம் என்றால் பெண்கள் காலில் அணியும் அணிகலன் என்ற குறிப்பும் காணப்படுகிறது. இவ்வூரின் பெயரே தொன்மைச் சிறப்பு மிக்கதாக விளங்குகிறது. நிலவளம் மிக்க பாடகம் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயில் வீற்றிருக்கும் அம்பாள் திருநாமம்’அபிதகுஜம்பாள்” என்பதாகும்
கிழக்கு நோக்கிய திருக்கோயில் பலிபீடம், தீபஸ்தம்பம், நந்தி மண்டபம் ஆகியவை கிழக்கில் அமைந்துள்ளன. தீப ஸ்தம்பத்தின் அமைப்பு சிறப்பானது. அதன் அடிப்பகுதியில் சதுரமான வடிவத்தில் நான்கு பக்கங்களிலும் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன.கிழக்கிலும் மேற்கிலும் சங்க நிதி பதும நிதியின் வடிவங்கள் காணப்படுவது மிகச் சிறப்பாகும் மற்ற இருபக்கங்களில் ஓரு பெண் அகல் விளக்கைத் தாங்கிக் கொண்டிருக்கும் கோலத்திலும் மற்ற பக்கத்தில் பெண் ஓருத்தி தனது கைகளில் சாமரத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் அற்புத வடிவத்தைக் காணலாம். இக்கோயிலுக்கு வந்து வழிபடுபவர்களுக்கு வற்றாத செல்வத்தை அளிக்கும் வகையில் இச்சிற்ப வடிவங்கள் அமைந்துள்ளன.
இறைவன் லிங்க வடிவிலே காட்சிதருகிறார்:
கருவறையில் இறைவன் லிங்க வடிவிலே காட்சித்தருள்கிறார். அழகிய, பெரிய திருமேனி. அர்த்த மண்டப வாயிலில் விநாயகரும் சண்முகரும் அருள்புரிகின்றனர். அடுத்து முகமண்டபத் துண்கள் அழகிய சிற்பங்களுடன் காட்சி தருகின்றன. கருவறை தேவகோட்டங்களில் பிள்ளையார் , தட்சிணர்முர்த்தி, திருமால்,பிரம்மா, துர்;க்கை ஆகிய வடிவங்களைக் காணலாம்.திருச்சுற்றில் விநாயகர், முருகன் சந்நிதிகள் அமைந்துள்ளன. வடக்கு திருச்சுற்றில் அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது திருக்கரங்களில் அங்கு சம் பாசம் ஏந்தியும் கீழிரு கரங்களில் அபயவரத முத்திரைத் தாங்கி அருள் புரியும் அழகிய வடிவத்தைக் கண்டு வணங்கலாம். இத்திருச்சுற்றில் தலமரமான வில்வமரம் அமைந்துள்ளது
இக்கோயில் வரலாற்றுச் சிறப்புடையதாக விளங்குகிறது. சோழர் காலத்திலேயே இங்கு கோயில் இருந்ததற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. சோழர் காலத்தில் சிறப்பு பெற்றிருந்த இக்கோயில், பிற்காலத்தில் திருப்பணி செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இப்போதைய கோயிலின் கட்டடக் கலைப்பாணி விஜயநகர நாயக்கர் கால அமைப்புடன் விளங்குகிறது. இக்கோயிலில் பிரதோஷம், ஐப்பசி அன்னாபிஷேகம், தைப்பொங்கல், சிவராத்திரி போன்ற நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இக்கோயிலுக்கு அருகாமையில் முத்தாலம்மன் என்ற மாரியம்மன் கோயிலில் சிறப்பாக வழிபாடுகளும் விழாக்களும் நடைபெறுகின்றன.வற்றாத செல்வத்தை அருளும் சங்கநிதி- பதுமநிதி வடிவங்கள் இக்கோயிலின் தீபஸ்தம்பத்தில் இடம் பெற்றுள்ளுது குறிப்பிடத்தக்கது
தொடர்புக்கு :
திரு.கே.ராஜா : 9176678003
திரு.கனேசன் குருக்கள்: 8124807579
அமைவிடம்:
திருவண்ணாமலையில் இருந்து 32 கி.மி. தூரத்திலும் போளூரில் இருந்து 9 கி.மி. தூரத்தில் உள்ளது.
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post பாலபிஷேகம் செய்தால் வற்றாத செல்வம் தரும் அபிராமேஸ்வரர் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.