திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமகாளத்தில் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளது.இங்கு அம்பாள் அச்சம் தவீர்த்த நாயகியுடன் மாகாளநாதர் (காளகண்டேஸ்வரர்) என்ற பெயரில் அருள் பாலிக்கிறார், இவரை மரணத்தில் விளிம்பில் உள்ளவர்கள் இங்குள்ள மேட்ச லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பது இத்தலத்தின் ஐதீகம்.
இங்குள்ள அம்பாளுக்கு திருமணமாகதவர்கள் இரண்டு அரளிபூமாலை சார்த்தி அதில் ஒன்றை தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது இங்கு வரும் பக்தர்களின் தீராத நம்பிக்கை.
மாகாளம் என்றால் என்ன
அம்பன் அம்பாசூரன் என்ற இரு அசூரர்கள் பார்வதி தேவியை திருமணம் செய்ய விரும்பினார்கள் இதை அறிந்த அம்பாள் காளி வடிவம் எடுத்து அம்பகரத்தூர் என்ற இடத்தில் அவர்கள் சம்காரம் செய்தாள் இதனால் அம்பாளுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்ப்பட்டது இந்த தோஷம் விளக இத்தலத்தில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வில்வத்தால் அர்ச்சனை செய்து தோஷம் நீங்கப் பெற்றார், காளி சிவபூஜை செய்ததால் சிவன் மகாகாளநாதர் எனப்பட்டார். சிவனின் தோவாரப்பாடல் பெற்ற 274 சிவலயங்களில் இது 118 தேவாரத்தலம் ஆகும்.
ஐந்து நிலை ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், காற்றோட்டமான திறந்த வெளியும், அதனூடே மண்டபங்களும் காணப்படுகின்றனர். இந்த மண்டபங்களைக் கடந்து சென்றால், கிழக்கு நோக்கிய சன்னிதியில் மாகாள நாதர், லிங்க மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். மாகாளப் பெருமானுக்கு வலதுபுறம் தியாகேசப் பெருமான் சன்னிதி உள்ளது. இந்த ஆலயம் சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாகும். ஆலயத்தில் பரிகார கணபதி, தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி, மகரிஷிகள், வில்லேந்திய முருகப்பெருமான், மகாலட்சுமி, சண்டேசர், துர்க்கை மற்றும் நவக்கிரகங்கள் காணப்படுகின்றன. தெற்கு பிரகாரத்தில் காளி அம்மன் கோவில் உள்ளது.
ஆலயத்தின் தெற்கு புறத்தில் அம்பாள் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்புரிகிறார். பட்சயாம்பிகை என்ற பெயரில் வீற்றிருக்கும், இந்த அம்பாளை வழிபடுபவர்களுக்கு திருமணம் தடை அகலும் என்பது நம்பிக்கை. அம்மனுக்கு இரண்டு சிவப்பு அரளி மாலைகளைக் கொண்டு வந்து சாத்தி வழிபாடு செய்தால், அம்பிகை நல்ல வழி காட்டுவாள் என்பது கண்கூடான விஷயம்.. இந்த ஆலயத்தின் தல விருட்சம் கருங்காலி மரம். வேறு எந்தக் கோவிலிலும் இல்லாத தலவிருட்சமாக இது காணப்படுகிறது.
சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரது பாடல் பெற்ற தேவாரத் திருத்தலங் களில் இதுவும் ஒன்றாகும். இந்தத் திருக்கோவிலில் உள்ள மோட்ச லிங்கம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வேண்டிக் கொண்டால், கடைசி காலங்களில் படுத்தப் படுக்கையில் கிடந்தபடி மரண அவஸ்தையில் வாழ்பவர்கள், நிம்மதியாக கண்மூடுவதுடன் மோட்சம் அடைவர் என்பது நம்பிக்கை.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சோமாசி மாற நாயனார், தனது மனைவி சுசீலையுடன் இந்த ஆலயத்தில் வேள்வி செய்தார். அந்த வேள்வியில் இறைவனை கலந்துகொண்டு அவிர்பாகத்தைப் பெற்றுக் கொள்ளும்படி செய்யுமாறு, சோமாசி மாற நாயனார், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு வேண்டுகோள் விடுத்தார். சுந்தரர் கூறியதன் பேரில் இறைவனும் வித்தியாசமான தோற்றத்தில் பார்வதி, விநாயகர், முருகன் ஆகியோருடன் வந்தார்.
வித்தியாசமான கோலம்
இறைவன் வேடுவர் வேடத்தில் நான்கு வேதங்களையும் நாய்களாக்கி அழைத்துக் கொண்டு வந்தார். இறைவி வேடுவச்சியாக தலையில் கள்ளுப் பானையை சுமந்து வந்தார். விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் வேடுவச் சிறுவர்களாக, அந்தணர்கள் வேள்வி நடக்கும் இடத்துக்கு அச்சமூட்டும் தோற்றத்தில் வந்தனர். பின்னர் சோமாசி மாற நாயனாருக்கு, இறைவன் தனது உண்மையான உருவத்தை காண்பித்து அருளினார் என்பது இவ்வாலய புராணக் கதை.
தொடர்புக்கு: 91-4366-29145
அமைவிடம்:
திருவாரூர் மாவட்டம் காரைக்காலில் இருந்து 3-வது கி.மி. தூரத்தில் உள்ளது.
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post பிரம்மஹத்தி தோஷம் நீங்க காளி வழிப்பட்ட மாகாளநாதர் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.