Quantcast
Channel: SwasthikTv
Viewing all 15459 articles
Browse latest View live

திருகடையூர் அபிராமி அம்மன் கோவிலில் யமனை எச்சரித்த சிவன்

$
0
0

 

திருகடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

திருகடையூர் என்ற இத்திருதலம் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஸ்ரீ அபிராமி அம்மன், மார்கண்டேயர் மற்றும் அபிராமி பட்டர்பற்றிய புராதன செவி வழிக்கதைகளுக்கு தொடர்புடையதாகவும் உள்ளது.

சோழர் கால மாபெரும் கோவில்களின் கட்டிடக்கலை ஏற்ப, இக்கோயில் மிக பரந்த பகுதியில் 11 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து. 5 பிரகாரங்கள் கொண்டும் (தாழ்வாரங்கள்), கம்பீரமான கோவில் கோபுரங்கள் மற்றும் பெரிய விசாலமான மண்டபம் கொண்டு பரந்தது நிற்கிறது. இக்கோவிலை புனரமைப்பு செய்தவிவரங்களை யார் என்று அறுதியிட்டு கூற முடியாது என்றாலும், அது 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, இராஜராஜன் சோழன் காலத்திலிருந்து இருந்து வந்துள்ளது என்று கோவில் கல்வெட்டுகளில் இன்றும் காணப்படுகிறது.

குலோத்துங்கசோழன் (1075 – 1120) காலத்தில், கோவில் செங்கல் சுவர் மாற்றி கல் சுவர் மற்றும் முன் மண்டபம் கட்டப்பட்டது. கோவில் ராஜகோபுரம் முழுவதும் புராணங்களின் படிச் சித்தரிக்கப்பட்டுள்ளது,  மற்றும் அதன் தொடர்புடைய படங்கள், சிலைகள் சுண்ணாம்பு கலவையால் செய்யப்பட்டு நிறைந்து உள்ளன.

யமதர்மனை பற்றி பிரபல கதை :

மிருகண்டு என்ற முனிவர் ஒரு சிவபக்தராக இருந்தார். அவர் ஒரு மகன் வேண்டும் என்று கடவுளை வேண்டினார் . சிவன் அவர் வேண்டுக்கோலுக்குகினங்க ஒரு மகன் பிறப்பான், ஆனால் அவன் 16 ஆண்டுகள் மட்டுமே வாழ்வான் என்று ஆசி கூறினார்.

அவருக்கு மார்கண்டேயன் என்று ஒரு மகன் பிறந்தான். மேலும் அவன் ஒரு சிவபக்தனாக வளர்ந்து சிறுவன் ஆனான். அவரது தந்தையின் ஆலோசனை படி இறைவன் திருகடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரரை இக்கோவில் பாதால வழி மூலம் புகழ்பெற்ற கங்கை நதி நீரை கொண்டு வழிபடலனான். (இன்றும் அந்த பாதால வழிபகுதியில் 20 படிகள் உள்ளது)

விதி முடியும் நாள் அன்று எமன் மார்கண்டேயனை பிடிக்க சுருக்குடன் கூடிய தனது பாசகயிறுடன் தோன்றினார். எமனை கண்ட மார்கண்டேயன் உடன் ஒடி இறைவனிடம் தஞ்சம் அடைந்து இறைவனை கட்டிக்கொண்டார்.

உடனே இறைவன் தனது பாதுகாப்பின் கீழ் இருந்த மார்கண்டேயனை தொடாதே என எச்சரித்தார், இருந்தும் யமன் கேட்காமல் மார்கண்டேயனை பிடிக்க பாசகயிறு வீசினான். அந்த பாசகயிறு மார்கண்டேயன் கட்டிக்கொண்டிருந்த கடவுள் (லிங்கம்) மேலும் சுருக்குடன் விழுந்தது. இந்த துடுக்குத்தனம் கண்டு கோபம் கொண்ட சிவன் விஸ்வருபம் எடுத்து தனது இடது காலால் உதைத்தார் மற்றும் அவரது இடது காலின் கீழ் அவரை மிதித்து,யமனை செயலற்று ஆக்கினார்.

பகவான் ஆள்க்காட்டி விரலை உயர்த்தி யமனை எச்சரிக்கை செய்யும் படங்கள் இன்றும் கோவிலில் சித்தரிக்கின்றன. யமன் வீசிய பாசகயிற்றின் அடையாளம் இன்றும் லிங்கத்தில் தெரியும்.

யமன் செயலற்று இருப்பதால் பூமியில் எப்பொழுதும் எற்படும் இறப்பு இல்லாமல் இருந்தன.என்றும் பூமி அதன் இயல்பான வழியில் சஞ்சரிக்க வேண்டும் என இறைவன் உரைத்து, காலசம்ஹாரமூர்த்தியாய் எழுந்தருளிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் யமனை மீண்டும் உயிர்பித்தார்.

‘இடது காலால் உதைத்து’ யமனின் துடுக்குத்தனமான செயலுக்குதான் தண்டனை என்றும் அதன் முக்கியத்துவத்தை பற்றி இன்றும் பேசப்படுகிறது இல்லையெனில் ஸ்வாமி வலது காலால் உதைத்து யமனை முற்றிலும் செயலற்று ஆக்கியிருப்பார் என ஐதீகம். இறப்பை வென்ற ஸ்தலம் இந்த திருகடையூர் என்பதால் இங்கே வழக்கமாக வயதான ஜோடிகள் தங்கள் சஷ்டியப்தபூர்த்தி (60 ஆண்டுகள் நிறைவு), பீமரதசாந்தி (70 வது பிறந்தநாள்) மற்றும் சதாபிஷேகம் (80 ஆண்டுகள் நிறைவு) கொண்டாடப்பட்டு காலசம்ஹாரமூர்த்தியை தரிசனம் செய்வதை வெகுவாக பார்க்க முடியும்.

பௌர்னமி பற்றிய மற்றோறு கதை :

அபிராமி பட்டர், சரபோஜி மஹாராஜா ஆட்சியின் போது வாழ்ந்து வந்தார். அவர் முற்றிலும் தன்னை அபிராமி அம்மனுக்கு அர்ப்பணித்து பல மணி நேரம் என்றில்லை, பல நாட்கள் தேவி முன்னிலையில் அமர்ந்து பேரின்ப நிலையில் தியானம் இருப்பார்.

ஒரு முறை ராஜா சரபோஜி கோயிலுக்கு விஜயம் செய்தார். அபிராமி பட்டர் அப்பொழுது தன்னையே மறந்த நிலையில் தியானம் இருந்ததினால் ராஜா சரபோஜி வருவதை கவனிக்காமல், ஒரு அடிப்படை மரியாதையின்

அடையாளமாக எழுந்து கூட நிற்காமல் தேவி அபிராமியின் ஒளிரும் தெய்வீக முகத்தோற்றம் கண்டு பார்வை ஒன்றி மூழ்கியிருந்தார். அப்பொழுது மரியாதை காட்டாத அபிராமி பட்டரை, கோபமான மன்னர் அருகில் நின்ற நபர்களிடம் அவரை பற்றி விசாரித்தார். துரதிருஷ்டவசமாக, அருகில் நின்ற நபர்கள் இவர் ஒரு மோசடி பேர்வழி என்று கூறினார்

பின்னர் சரபோஜி மஹாராஜா அபிராமி பட்டரை அணுகி இன்று என்ன திதி என்று கேட்டார். மன்னர் கேட்ட அன்று அமாவசை நாள். அபிராமி பட்டர் தேவியின் ஒளி வீசுகின்ற முகத்தோற்றம் கானும் கற்பனையில் கண்கள் திறக்காமல் அன்று முழு நிலவு நாள் என்று கூறினார்.

இந்த பதில் மூலம் கோபமடைந்த மஹாராஜா இந்த மோசடி பேர்வழியை தண்டிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது என எண்ணி இன்று மாலை முழு நிலவு இல்லையென்றால் நீங்கள் மரணத்தை சந்திக்க நேரும் என்று அவர் எச்சரித்து சென்றார். நீண்டநேரத்திற்கு பிறகு அபிராமி பட்டர் தனது தியானம் கலைந்து, கண்களை திறந்து என்ன நடந்தது என்று அறிந்தார். இதயங்களை உருக வைக்கும் கவிதையாக, பதிகம் என நூறு அதிகாரம் கொண்ட பதிகங்கள் அபிராமி அம்மனை புகழ்ந்து பாடினார்.

அதுவே அபிராமி அந்தாதி ஆகும். அபிராமி அந்தாதி கவிதை ஒரு வகையான தனிப்பட்ட கவிதையாகும். முந்தைய ஒரு கவிதையின் கடைசி அடி, அடுத்த கவிதையின் முதல் வரியில் முதல் வார்த்தையாக தொடங்குகிறது. இந்த வகையான கவிதை ஒரு தனிப்பட்ட ரகம் என்று கூறப்படுகின்றன. மனமுருகிய தேவி அபிராமி தன் காது தோடு எடுத்து வானில் எறிந்தார். அது முழு நிலவாக நடு வானில் பிரகாசமான பிரகாசித்தது. ராஜா சரபோஜி அபிராமி பட்டரின் பெருமையையும் ,பெருந்தன்மையும் உணர்ந்து, பட்டர் தொடர்ந்து மறுத்த போதிலும், அவருக்கும் மற்றும் அவர் சங்கதியினருக்கும் எல்லா கிராமங்கள் தோரும் வரும் வருவாயில் ஒரு நூறு பகுதியை தானம் செய்யவதாக அவரது கட்டளையை செப்பு தகடுகளில் ஆவண செய்தார் என ஆவணங்கள் சொல்கின்றன. இன்றும் அந்த செப்பு பட்டயம் பட்டரின் சங்கதியினரிடம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திருதலத்தில் மூன்று குளங்கள் (புஷ்கரணி) உள்ளன. அவை அம்ரிதா தீர்த்தம், காலா தீர்த்தம் மற்றும் மார்கண்டேய தீர்த்தம் ஆகும்.

கோவிலில் ஒரு நாள் 6 முறை வழிபாடுகள், சேவைகள் வழங்கப்படுகிறது. இன்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் 60 வது, 70 வது,80 வது பிறந்த நாள் மற்றும் பிற சிறப்பு சந்தர்ப்பங்களில் இங்கு கொண்டாட வருகின்றனர்.

மற்ற முக்கியத்துவங்கள்

 

கள்ள பிள்ளையார் :

முதல் கடவுள் கணபதியை வழிபடாமல் தேவர்கள் அவரை அசட்டை செய்துவிட்டு அமிர்தம் எடுக்க பாற்கடலை கடையும் போது, அசட்டை செய்த தேவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க அவசரமாக கணபதி யாருக்கும் தெரியாமல் அமிர்தபானையை திருடி ரகசிய இடத்தில் அதை மறைத்து வைத்துவிட்டார். தேவர்கள் அதை தேடிதேடி கிடைக்காமல் சிவனிடம் முறையிட்டனர், சிவன் தேவர்களை கணபதியிடம் மன்னிப்பு கேட்க அறிவுரை கூறினார். பிறகு விநாயகாபெருமான் அமிர்தபானையை தந்தருளினார். அமிர்தபானையை பெற்ற தேவர்கள் ஒரு குளியல் போட சென்றார்கள். அவர்கள் திரும்பி வந்து பார்த்த போது, அவர்கள் பானையை எடுக்க முடியவில்லை அது ஒரு சிவலிங்கமாக மாறிவிட்டது. அந்த சிவ லிங்கம் தான் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் அதாவது அமிர்தம் + கடம், அதுவே, ஸ்ரீ அமிர்தகடேஸ்வரராய் திருகடையூரில் அருள்பாலிக்கிறார்.

ஜாதி மல்லி:

ஸ்ரீ மார்கண்டேயன் கங்கை நீரை கொண்டு அமிர்தகடேஸ்வரரை அபிஷேகம் செய்யும்பொழுது ஜாதி மல்லியும் தண்ணீரின் கூடவே வந்தது. பிஞ்சிலம் எனப்படும் ஒரு பெயரும் அதற்கு உண்டு. ஜாதி மல்லி ஒரு ஆண்டு முழுவதும் பூக்கும் ஒரு மலர் ஆகும். இந்த மலர் கடவுளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது மற்ற மனித நோக்கங்களுக்காக பயன்படுத்த கூடாது. ஒரு பூ கொண்டு செய்யும் ஒரு அர்ச்சனை 1008 அர்ச்சனைக்கு சமமாக கருதப்படுகிறது.

திருக்கோயில் புகழ்கள்:

இங்கு லிங்கம் சுயம்புவாக உள்ளது. கோவில் மேற்கு நோக்கி எதிர்கொண்டுள்ளது. நீங்கள் நெருக்கமாக நோக்கினால் மற்றொரு லிங்கமும் உங்களால் பார்க்க முடியும்.

8 அஷ்டவீரட்டன புனித கோயில்களிள் திருகடையூரும் ஒன்றாகும். இறைவன் செப்பு விக்கிரகத்தில் காலசம்ஹாரமூர்த்தியாய் சீற்றம் தெரிகிற தோற்றத்தில் எமன் மீது இடது கால் வைத்து தாக்கி கம்பீரமாய் காட்சி அளிக்கிறார்.

பல சித்தர் இங்கே தவம் செய்யதுள்ளனர் அதில், பாம்பாட்டி சித்தரும் ஒருவர்.

நவகிரகங்களுக்கும் இங்கு சக்தி இல்லை.அனைத்து பக்தர்களும் காலசம்ஹாரமூர்த்தியையே பூஜை செய்கின்றனர். திருகடையூரில் ராகுவின் எந்த விளைவுகளும் இருக்காது. இங்கு தேவி அபிராமி ஸ்ரீ மகா விஷ்ணுவின் நகையில் இருந்து தோன்றியதாகவும் கூறப்படுகிறது. பிரம்மா, அகஸ்திய, புலஸ்திய மற்றும் துர்கா தேவி ஆகியோர் இங்கு கடவுள் வழிபாடு நடத்தியதாகவும் கருதப்படுகிறது.

63 நாயன்மார்களிள் கரிய மற்றும் குங்கிலியகாலய நாயனார் இங்கே வாழ்ந்து இறைவன் பணியாற்றினார்கள் என்றும் கூறப்படுகிறது. ஸ்ரீ அபிராமி பட்டரை பெற்றெடுத்த புனித மண் இதுவாக கருதப்படுகிறது அப்பர், சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தர் மூவரால் பாடப்பட்ட ஸ்தலம் இது. நிகழும் தமிழ் மாதம் சித்திரை (ஏப்ரல்/ மே) 18 நாட்கள் யமா சம்ஹர விழா கொண்டாடப்படுகிறது. நிகழும் தமிழ் மாதம் கார்த்திகை திங்கட்கிழமையின் (நவம்பர்/ டிசம்பர்) போது 1008 சங்காபிஷெகம் மிகவும் பிரபலமானது. புரட்டாசி நவராத்திரி மற்றும் மார்கழி விதிபதம் ஒரு நாள் திருவிழாக்களாக கொண்டாடப்படுகிறது. ஆடிபூரம், நவராத்திரி,பௌர்னமி, ஸ்கந்த சஷ்டி, மாஹா சிவராத்திரி, பங்குனி உத்திரம், அபிராமி அந்தாதி பாராயணம், மாதாந்திர பிரதோஷ நாட்கள் மற்றும், தமிழ், ஆங்கிலப்புத்தாண்டு நாள் மற்றும் பொங்கல் அன்று கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

The post திருகடையூர் அபிராமி அம்மன் கோவிலில் யமனை எச்சரித்த சிவன் appeared first on Swasthiktv.


இந்த வார ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்

BATU CAVE TEMPLE

$
0
0
  • Batu cave temple is one of the most popular Hindu shrines outside India, dedicated to Lord Murugan. Batu cave houses several Hindu shrines beneath its 100-metre-high arched ceiling. Wooden steps up to the Temple Cave were built in 1920 and have since been replaced by 272 concrete steps. Of the various cave temples that comprise the site, the largest and best known is this Temple. Rising almost 100 m above the ground, the Batu Caves temple complex consists of three main caves and a few smaller ones. The biggest, referred to as Cathedral Cave or Temple Cave, has a very high ceiling and features ornate Hindu shrines.

The star attraction to Batu caves is the world’s tallest & largest statue of Lord Murugan (42.7m/ (140.09 feet ).

Hindu festival ‘Thaipusam’, dedicated to lord Muruga, is one of the festivals that the temple celebrates in a grand manner.  Thousands of devotees throng around the temple during thaipusam (end of January). The limestone forming Batu Caves is said to be around 400 million years old. Some of the cave entrances were used as shelters by the indigenous Temuan people the largest and most popular cavern in Batu Caves.

 At the foot of Batu Hill are two other cave temples – the Art Gallery Cave and Museum Cave – which houses numerous Hindu statues and paintings. Batu Caves was promoted as a place of worship by K. Thamboosamy Pillai, an Indian trader. He was inspired by the ‘vel’-shaped entrance of the main cave and was inspired to dedicate a temple to Lord Murugan within the caves. In 1890, Pillai, who also founded the Sri Mahamariamman Temple, Kuala Lumpur, installed the murti (consecrated statue) of Sri Murugan Swami in what is today known as the Temple Cave.   

Many of the shrines relate the story of Lord Murugan’s victory over the demon Soorapadam. An audio tour is available to visitors.

The Ramayana Cave is situated to the extreme left as one faces the sheer wall of the hill. On the way to the Ramayana Cave, there is a 50-foot (15 m) tall statue of Hanuman and a temple dedicated to Lord Hanuman, devotee and aide of Lord Rama.

The consecration ceremony of the temple was held in November 2001. The Ramayana Cave depicts the story of Rama in a chronicle manner along the irregular walls of the cave.

 

After bathing in the nearby Sungai Batu (Rocky River), the devotees make their way to the Temple Cave and climb the flights of stairs to the temple in the cave. Devotees use the wider centre staircase while worshippers and onlookers throng up and down those balustrades on either side.

 

Opening Hours: Daily, 06:00 – 21:00

Address: Batu Caves, Sri Subramaniam Temple, Kuala Lumpur, Malaysia

 

The post BATU CAVE TEMPLE appeared first on Swasthiktv.

உக்கிர தெய்வமான காளியை ஒரு குழந்தை போல பாவித்து அவளிடம் தினமும் பேசி, அமுதூட்டி மகிழ்ந்தவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

$
0
0

வங்க தேசத்தின் தலைநகரான கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் குதிராம் – சந்திரமணி என்னும் தம்பதியருக்கு மகனாக 1836 ஆம் ஆண்டு அவதரித்தார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.  ராமக்ரிஷ்ணரின் இயற்பெயர் ககாதரன் என்பது.

சிறு வயதில் படிப்பின் மேல் நாட்டம் இல்லாத ராம கிருஷ்ணர் தன் அண்ணன்  ராம்குமார்  பூசாரியாக இருந்து வந்த தட்சினேஸ்வர காளி கோவிலுக்கு சென்று வரும் பழக்கத்தால்  காளி தேவியின் தீவிர பக்தரானார். 

பார்க்கும் அனைத்தையுமே தன் இஷ்ட தெய்வமாக பாவிக்கும்  ப்ராப்தம் அனைவருக்கும் அமையாது. அந்த ப்ராப்தம் முழுதாக அமையப்பெற்றவர் ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்சர். காளியின் மேலுள்ள பக்தி பல முறை அவரை பித்து நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இதனால் அவருடைய பெற்றோர்களும் ஊர் உலகத்தினரும் அவருக்கு சித்த பிரமை பிடித்துவிட்டதாக எண்ணிய காலமும் உண்டு.

அதற்கு உதாரணமாக  இரு  சம்பவங்களை  இங்கே  காணலாம்.சாதாரண சம்பவங்கள் அல்ல அன்னை காளியே நேரில் தோன்றிய மெய்சிலிர்க்கும் சம்பவங்கள்.

தன் அண்ணனின் மறைவுக்கு பின் காளி தேவிக்கு   நித்ய  பூஜை செய்யும் பாக்கியத்தை பெற்ற ராமகிருஷ்ணர் அன்னையை எப்படியாவது நேரில் பார்த்திட பேராசை பட்டார். எனவே  அன்னையை எண்ணி தொடர்ந்து  தீவிர தியானத்தில் இருந்தார். அன்னை நேரில் வரவில்லை.ஒருகட்டத்தில் விரக்தியின்  உச்சத்தை அடைந்த ராமகிருஷ்ணர் நேரே காளியின் சிலை அருகே சென்று அவளுடைய ஒரு கையில் உள்ள வாளை உருவி “உன்னை எனக்கு காட்டமாட்டாயா ? ” என்று  கேட்டுக்கொண்டே தன்னுடைய கரங்களை துண்டிக்க துணிந்தார். உடனே அங்கே காலி தேவி தோன்றி தன் பக்தனுக்கு காட்சியளித்ததோடு மட்டுமல்லாமல் அவருடைய செயலை தடுத்து நிறுத்தவும் செய்தாள். கேட்கவும் வேண்டுமா ராமக்ரிஷ்ணரின் நிலையை? காளியை கண்டதும் பேரானந்தப்பரவசமடைந்தார்  அன்னையை  தவிர வேறொன்றும் அவர் கண்ணிற்கு புலப்படவில்லை.

பேரொளிப்ரவாகமாக தன் முன்  காலி தோன்றிய அந்த நாளுக்குப்பிறகு அவருடைய பக்தி மேலும் முற்றியது.  எப்படி என்கிறீர்களா  ? அன்னையை அவர் கோபித்துக்கொள்ளும் அளவிற்கு..

தினமும்  காளிக்கு பூஜையின் முடிவில்  நிவேதனம் செய்யப்படும் உணவு, பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படும். இப்படி இருக்க ஒரு நாள் ராமகிருஷ்ணர் காளியை நோக்கி ” இது என்ன தினமும்   உனக்கு உணவு படைப்பதும் அதை நீ உண்ணாமலேயே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதுமாக வெறும்  ஒரு சடங்காகாகவே எனக்கு தோன்றுகிறது. எனக்காக நீ ஒரு நாள் இந்த உணவை சாப்பிட வேண்டும் என்றும், என் கையாலேயே அதை உனக்கு நான் ஊட்டி விட வேண்டும் என்றும் காளியிடம் முறையிட்டார். 

காலி தேவியும் ஒரு குழந்தையை   போல்  ராமக்ரிஷ்ணரின் முன் தோன்றி  ” இவ்வுலக உயிர்கள் அனைத்தும் என்னுள் அடக்கம் அப்படி இருக்க அவர்கள் சாப்பிட்டால் நான் சாப்பிட்டதாகத் தானே அர்த்தம்” என்றாள் .இருப்பினும் தன் பக்தனின் சொல்லை ஏற்று அவர் உணவை உருட்டிக்கொடுக்க தான் அதை வாங்கி உண்டாள்.

காளி மாதா  கரங்களில் ஆயுதங்களுடன், தோற்றத்தில் பயங்கரியாக இருந்தாலும்,  ஒரு குழந்தையை போல் ஒரு பக்தனின்  ஆசைக்கு இசைந்து, அவன் உருட்டிக்கொடுத்த உருண்டையை வாஞ்சையுடன் வாங்கி உண்டதை நம் அகக்கண்ணில்  நினைத்துப்பார்த்தால் புரியும் – பக்தி  என்பது எத்தகைய அற்பணிப்பை உள்ளடக்கியது  என்பது..

The post உக்கிர தெய்வமான காளியை ஒரு குழந்தை போல பாவித்து அவளிடம் தினமும் பேசி, அமுதூட்டி மகிழ்ந்தவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். appeared first on Swasthiktv.

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 27/04/2016

$
0
0

  உலகெங்கும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ஸ்வஸ்திக் டிவி.காம் நேயர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு பரிகாரமும்,பயன்களும் என்ற இந்த அற்புதமான தலைப்பில் நாம் எடுத்துக் கொண்ட சித்தர்களுடைய அடை வரிசையில் குதம்பை சித்தர்.

    Kudhambaiகேதுவின் ஏழு வருட காலத்தை நமக்கு மாற்றக்கூடிய வல்லமை கொண்ட சித்தராக இருக்கிறார்.இந்த சித்தரின் இரத்தின சுருக்க அந்த வாழ்க்கை வரலாறு என்னவென்றால் யாதவ குலத்திலே பிறந்த இவர் பெண் போன்றே இருப்பதால் இவரது பெற்றோர்கள் குதம்பை என்ற ஒரு நகையை அணிந்து இவர் அழகை பார்த்து வந்தார்கள்.இவருக்கு 16 வயது வரும்போது முற்பிறவியின் காரணமாக திடீரென்று காட்டுக்குச் சென்று அந்த அத்தி மரம் ஒன்றில் உட்கார்ந்து கொண்டு த்யானம் செய்யும் பொழுது பல விதமான சித்திகளைக் கையாடல் கொண்டார். அப்படிப்பட்ட அந்த குதம்பைச் சித்தரை வணங்குவதால் இந்த கேது தசை என்பது அனைத்து தசைகளிலும் பெரும்பாலான நபர்களுக்கு அதிக சோதனையைக் கொடுக்கக் கூடிய தசையாக இந்த கேது தசை இருக்கிறது.கேதுவை கெடுத்து கொடுக்கும் ஆன்மீக கிரகம் என்று கூறுகிறார்கள்.

    kumarஒரு மனிதனுக்கு அவனுடைய ஜனன காலத்தை ஆராய்ச்சி செய்யும் போது கேது பகை சாரம் பெற்று அல்லது பகை   வீடுகளிலே இருந்து அல்லது 6,8,12 லே மறைந்து அவர் தசை நடப்பு செய்யும் பொழுது மனக்கோளாறு ஏற்பட்டு பைத்தியம் பிடிக்கும் பெரிய பெரிய வியாதிகளான குஷ்டம் கேன்சர் இவருடைய தூண்டுதலால் வரும் மேலும் இவர்கள் ஆசையால் ஈர்க்கப்பட்டு வியாபாரம் செய்யும் போது அதிக பட்சமான நஷ்டங்களை அடைந்து தற்கொலை செய்து கொள்கிற சூழ்நிலைக்கே இவர்கள் தள்ளப்படுகிறார்கள்.சிறை வாசம் செய்பவர்கள் இந்த கேது தசையில் தான் நிறைய நடக்கிறது.இந்த மாற்று நிலைக்கு செய்வினைக்கு சூனியத்திற்கு ஒரு மனிதன் கட்டுப்படுகின்றான் என்றால் இந்த 7 வருட காலத்தை  மந்திரவாதிகள் தெரிந்து கொண்டு அவர்களை மோசமான நிலைக்கு அழைத்து செல்ல முடியுமென்றால் இந்த கால கட்டத்தில் தான் அது நடக்கும்.

   கேது தசை வந்தாலே கேடு தசை என்று தான் சொல்வார்கள் அதாவது ஒரு மனிதனுக்கு கேது நல்லபடியாக இருந்து தசை நடத்தும் போது இது ஒரு அற்புதமான தசையாக இருக்கிறது ஆனால் அதற்கு எதிர்மாறாக இந்த தசை மோசமாக இருந்து செயல்பட்டால் அந்த 7 வருட காலத்திலே மூன்று ஜன்மத்திற்குரிய அதாவது மூன்று பரம்பரைக்குரிய சொத்துக்கள் இருந்தாலும் வெள்ளமென அது கரைந்து விடும்.தண்ணியிலே உப்பு போட்டால் எப்படி அது கரைந்து விடுமோ.குந்தித் தீர்த்தால் குன்றும் மாறும் என்று சொல்வார்களே அப்படி இவர்கள் சொத்து சேர்க்கையைப் பெற்றிருந்தாலும் அந்த கேது தசை நடந்து வரும் போது அப்படிப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும் இந்த குதம்பைச் சித்தர்களை நோக்கி காலையிலேயே அமர்ந்து ஓம் க்லீம் குதம்பை சித்தர் போற்றி போற்றி என்று கிழக்கு முகமாக அல்லது வடக்கு முகமாக அமர்ந்து அவர்கள் தியானம் செய்யும் பொழுது அந்தக் கேதுவை ஞானக் காரகன் என்று அழைக்கிறார்கள்.

  kumaஅந்த விநாயக பகவானுக்கு மட்டும் தான் கட்டுப்படுவார் அப்படிப்பட்ட அந்த கேது இந்த குதம்பை சித்தருக்கும் கட்டுப்படுவார்.அந்த குதம்பை சித்தரை வணங்கி நீங்கள் செய்கிற காரியங்கள் அனைத்தும் லாபகரமாக இருக்கும்.நஷ்டங்களைக் கொடுக்காது.மனிதனின் மனதை  மூன்று நிலை என்று சொல்கிறார்கள்.மேல் மனம்,அடி மனம்,அடிகள் மனம்.முற்பிறவியை பதிவு செய்யும் அறை என்று சொல்கிறார்கள்.அங்கே ஒரு அழ்ந்த நித்திரை மனிதன் அவன் அந்த அனுபவத்தைப் பெறும் போது இந்த சித்தர்கள் அந்த சூப்பர் கான்சியஸ் என்று சொல்லப்பட்ட அந்த பகுதியிலே இருந்து வந்து இவர்களுக்கு வழி நடத்துவார்கள்.இந்த வழிநடத்துதல் கூட இவர்களுக்கு ப்ராப்தம் இருக்க வேண்டும்.

  இவர்களுடைய சொந்த ஜாதகத்தை என்னிடம் தர வேண்டும்.ஏனென்றால் இந்த சித்தர் வரலாறை அனைவராலும் அவ்வாறு சுலபமாக பெற்றுவிட முடியாது.இதை பார்பவர்கள்,கேட்பவர்கள்,அனைவரும் பாக்யசாலிகள்,புண்ணியவான்கள்,என்றால் அதில் ஒரு சிறிதளவும் சந்தேகம் இல்லை.ஏனென்றால் முற்பிறவியிலே எந்த மனிதனுக்கு சித்தரின் உறவு ஏற்படுகிறதோ அவனுக்கு இந்த பிறவியிலே அந்த ஞாபகம் வந்து சரியான நேரத்திற்கு அவன் சதுர மலைக்கு செல்கின்றான்.சரியான நேரத்திலே திருவண்ணாமலைக்குச் செல்லுகின்றான்.செல்லாத நேரத்திலே வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லுகிறான்,காசிக்கு செல்லுகிறான் ஆன்மீகத்தடங்களுக்குச் செல்லுகிறான் என்றால் கேதுவின் தூண்டுதளில்.நீங்கள் செய்ய வேண்டிய ஒரு காரியம் இந்த குதம்பை சித்தரை நோக்கி இரவில் 30 நிமிடம் ஓம் ஸ்ரீ குதம்பை சித்தரே போற்றி போற்றி என்ற இந்த மந்திரத்தை சொல்லும் போது உங்கள் வாழ்க்கையிலே பல விதமான அற்புதங்களை அடையாளம் காட்டும் என்று சொல்லி இந்தப் பகுதியை பூர்த்தி செய்து நாளைய தினம் உங்களை சந்திக்க இருக்கிறேன்.நன்றி வணக்கம்.

ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்

9962081424

The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 27/04/2016 appeared first on Swasthiktv.

திருதேங்கூர் இரஜதகிரீஸ்வரர்

$
0
0

அருள்மிகு இரஜதகிரீஸ்வர சுவாமி திருக்கோயில் திருவாரூர் – திருத்துறைப்பூண்டி ஒரு மைல் தொலைவில் அமைந்துள்ளது. திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் , திருநாவுக்கரசு நாயனார் , சுந்தர மூர்த்தி நாயனார் பதிகம் பாடல் பெற்ற ஸ்தலமாகும். உலகம் கடல் நீரால் கொள்ளப்பட்டும் இத்தலத்தில் மட்டும் தெளிந்த நீர் தேங்கி நின்றதால் திருதேங்கூர் என்னும் காரணப்பெயரை இத்தலம் அடைந்தது.

 

இறைவன்  –  வெள்ளிமலை நாதர்

இறைவி  –  பெரிய நாயகி

 

ஸ்தல விருட்சம்  – தென்னை

 

மஹாலக்ஷ்மி வழிபட்ட வரலாறு ;

பொருளுக்கு அதிதேவதையான லக்ஷ்மிதேவி , தனது கடைக்கண் நோக்கம் பட்டவுடனே எத்தகையருக்கம் செல்வம் பெருகும்படியான வரதைப்பெற விரும்பினாள். இத்தலத்தில் கைலாய கிரியிலுள்ள ஆயிரத்தெட்டு கொடு முடிகளில் ஒன்றைக் கொண்டு வந்து நிறுவி சிவபூஜை செய்ய வேண்டுமென்று நினைத்தாள். இதற்காக கருடனை அனுப்பி சிவபெருமானிடமிருந்து வெள்ளியிலான கொடுமுடியை கொண்டு வரச்செய்து இத்தலத்தில் வைத்து தவம் செய்தாள். லக்ஷ்மி தேவி இத்தலம் வெள்ளிமலையாக உமாதேவியுடன் சிவபெருமான் என்றும் இருந்து வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் கொடுத்தருளவும் வேண்டியதால் சிவபெருமானும் அப்படியே அருள் புரிந்தார். அன்று முதல் சுவாமியின் பெயர் ” வெள்ளிமலை நாதர்” என்றானது.

 

சிவபெருமான் சடையிலுள்ள கங்காதேவி தினம் தன்னிடம்

முழுகுவோரது பாபம் போக்கியதால் கங்காதேவியின் பாபம் அதிகரிக்கவே , இதனை நீக்கிக் கொள்ள திருதேங்கூரிலுள்ள திருக்குளத்தில் தீர்த்தமாடி பெரியநாயகியையும் , வெள்ளிமலை நாதரையும் பூஜித்து நவக்கிரக லிங்கங்களையும் வழிபட்டு பாபத்தைப் போக்கிக் கொண்டாள்.

 

இத்தலத்தில் அமாவாசை , பௌர்ணமி , உத்தராயண , தெட்சணாயான , அர்தோதய , மகோதய புண்ணிய காலங்களில் முழுகி வழிபடுவோர் நலம் பெறுவர்.

 

வெள்ளிமலை நாதரை வழிபடுங்கள் !

 

நவக்கிரக லிங்கங்களை பூஜை செய்யுங்கள் !

 

நலம் பல பெற்றிடுங்கள் !!

The post திருதேங்கூர் இரஜதகிரீஸ்வரர் appeared first on Swasthiktv.

“பானகம் பருகும்” அதிசய ஸ்ரீநரசிம்மரின் திருத்தலம் !

$
0
0

ஆந்திர பிரதேசம், விஜயவாடா அருகிலுள்ள குண்டூர் மாவட்டத்தில் மங்களகிரி எனுமிடத்தில் யானை வடிவ மலையில் பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட பானக நரசிம்மர் திருத்தலம் அமைந்துள்ளது. இவரை வழிபட்டு இவருக்கு பானகம் பிரசாதமாக கொடுத்தால் சகல பிரச்சினைகளும் தவிடு பொடியாகும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

மங்களகிரி மலையின் சிறப்புகள்:

  panakaமங்களகிரி என்றால் மங்களகரமான மலை என்று பொருள். மங்கள+கிரி=மங்களகிரி. இந்தியாவில் உள்ள எட்டு மகாசேஷத்திரத்தில் இதுவும் ஓன்று. இந்த எட்டு இடத்திலும் ஸ்ரீ மஹா விஷ்ணு அமைந்திருக்கிறார். (1) ஸ்ரீரங்கம், (2) ஸ்ரீமுஷ்ணம் (3) நைமிசம் (4) புஷ்கரம் (5) சலகமாத்ரி (6) தோதாத்ரி (7) நாராயணஸ்ரமம் (8) வெங்கடாத்ரி தோதாத்ரி. ஸ்ரீ மஹாலக்ஷ்மி வாசம் செய்வதால் இந்த மலை மங்களகரமான மலை எனப் பெயர் பெற்றது. மங்களகிரியில் மொத்தம் மூன்று நரசிம்ம சுவாமி கோயில்கள் உள்ளன. ஓன்று, மலையில் அமைந்துள்ள பானக நரசிம்மர் சுவாமி கோயில். இரண்டு, மலை அடிவாரத்தில் உள்ள லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில். மூன்றாவது, மலை உச்சியில் உள்ள கண்டல நரசிம்ம சுவாமி இகும். இந்த மலை யானை வடிவில் அமைந்துள்ளது. எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் இம்மலை யானை வடிவிலேயே காண்பது இதன் தனிச் சிறப்பாகும். இம்மலை உருவான கதை மிகவும் சுவாரசியமானது. பழங்காலத்தில் பாரியாத்ரா என்ற ஓரு அரசன் இருந்தான். அவனது மகன் ஹரஸ்வ ஸ்ருங்கி பல புனித இடங்களுக்கும் சென்று தவம் புரிந்து கடைசியில் புனிதக்ஷேத்ரமான மங்களகிரியை வந்தடைந்தான்.

  அங்கு மூன்று ஆண்டு காலம் கடுமையான தவம் புரிந்தான். அப்பொழுது அனைத்து தேவர்களும் தோன்ற அவனிடம் அங்கேயே தொடர்ந்து தவம் புரியுமாறு கூறினர். அவனும் ஸ்ரீ மஹா விஷ்ணுவை நினைத்து தியானம் செய்தான். அப்பொழுது அவனது தந்தையான பாரியாத்ரா தன் மகனை தன்னோடு அழைத்துச் செல்ல வந்தான். ஆனால் ஹரஸ்வ ஸ்ருங்கியோ யானை வடிவம் பெற்ற மலையாக மாறி பகவான் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் இருப்பிடமாக உருவெடுத்தான். அங்குள்ள மக்கள் அந்த இறைவனை பானக நரசிம்ம சுவாமி என்று அழைத்தனர்.

பானகமே பிரதான பிரசாதம்:

  Mangalagiri-Laxmi-Narasimha-Swamy-Temple-2இந்த பானக நரசிம்மர் கோயிலில் பிரத்யோக உருவம் கொண்ட விக்ரஹம் எதுவும் கிடையாது. ஆனால் 15 செ.மீ. அகலம் உடைய வாய்ப்பகுதி மட்டும் உண்டு. கடவுளின் இந்த வாய்ப்பகுதியானது வெங்கலத் தகட்டினால் சுற்றி மூடப்பட்டிருக்கும். இந்த கோயில் உச்சி காலம் வரையே திறந்து வைக்கப்படும். ஏனென்றால் இரவில் தேவதைகள் வந்து பூஜை செய்வதாக ஐதீகம். அங்குள்ள அந்த நரசிம்ம சுவாமியின் வாயில் பானகம் எனப்படும் வெல்லம் கரைத்த நீர் தீர்த்தமாக விடப்படும். அப்படி விடும்பொழுது இறைவன் அதை நிஜமாகவே பருகுவது போல் “மடக் மடக்” என பருகும் சத்தம் கேட்கும். சற்று நேரம் கழித்து அந்த சத்தம் நின்று விடும். அப்படி அந்த சத்தம் நின்றதும் மிச்சம் உள்ள பானகம் அப்படியே வாய்வழியாக வெளியேறிவிடும். இது ஓரு நாள் இரு நாள் நடைபெறும் அதிசயம் அல்ல. தினந்தோறும் எப்பொழுதெல்லாம் பக்தர்கள் நரசிம்மருக்கு பானகத்தை படைக்கின்றனரோ அப்பொழுதெல்லாம் இந்த அதிசயம் நடந்துகொண்டு தான் இருக்கின்றது. இப்படி இறைவன் வாயிலிருந்து வெளிவரும் பானகத்தை முக்கிய பிரசாதத் தீர்த்தமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆச்சர்யமூட்டும் விஷயம் என்னவென்றால் இவ்வாறு பானகம் தினமும் பருகும் நரசிம்ம சுவாமி கோயிலில் ஓரு எறும்பு கூட கிடையாது. இவ்வளவு ஏன், அந்த கோயிலில் எங்கும் எறும்பு காணப்படுவதில்லை. பானகமே பிரதான பிரசாதம். இதனால் இந்த கடவுளுக்கு பானக நரசிம்மர் என்று பெயர் வந்தது.

  Korukuonda-Sri Lakshmi Narasimha Swamy Temple-2 மேலும் முன்னொரு காலத்தில் இந்த மலைப் பகுதியானது எரிமலைப் பகுதியாக இருந்ததாகவும் காலப்போக்கில் இந்த பானகத்தை பக்தர்கள் ஏற்றி வருவதால் அந்த எரிமலையின் வீரியம் குறைந்ததாகவும் வரலாறு சொல்கிறது. பானகம் பருகும் அறிய தெய்வமாக உள்ள நரசிம்மரை வாசகர்களே நாமும் சென்று வணங்கி வருவோமா?

திருவிழா :-

  பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் 11 நாட்கள் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கும். தேர் திருவிழாவில் லட்சக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

திருக்கல்யாணம் :-
சாந்த நரசிம்மர், ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். மேலும் ஸ்ரீராம நவமி, அனுமன் ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி,வைகுண்ட ஏகாதேசி போன்ற விழாக்கள் வெகு விமரிசையாக இத்திருத்தலத்தில் நடத்தப்படுகிறது.

அமைவிடம் :-

  ஆந்திர பிரதேசம், விஜயவாடா அருகே உள்ள குண்டூரிலிருந்து மங்களகிரி 13வது கி.மீட்டரில் உள்ளது.

செய்தி : ப.பரசுராமன்,
படங்கள் : ப.வசந்த்

The post “பானகம் பருகும்” அதிசய ஸ்ரீநரசிம்மரின் திருத்தலம் ! appeared first on Swasthiktv.

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 28/04/2016

$
0
0

 உலகெங்கும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ஸ்வஸ்திக் டிவி.காம் நேயர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு பரிகாரமும்,பலன்களும் என்ற இந்த அருமையான ஒரு பகுதியில் சூரியனின் தாந்திரிக பரிகாரங்களைப் பார்த்து ஒரு தந்தைக்கும் மகனுக்கும் அடிக்கடி பிரச்சனை வருகிறது என்றால் ஒருவருடைய ஜனன ஜாதகத்திலே சூரியன் பழுதுபட்டிருகிறார் என்று அர்த்தம்.அரசாங்க வேலையில் முயற்சி செய்து கிடைக்கவில்லை என்றால் சூரியன் அவர்களுக்கு பாதகமான நிலையில் இருக்கிறார் என்று அர்த்தம்.பிதுர் சொத்துக்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றால் சூரியன் 6,8,12 இல் இருக்கிறார் என்று அர்த்தம்.

 kumarமேலும் அரசாங்கம் மூலமாக அவர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை என்றால் அரசு வழியில் அவர்களுக்கு ஆதாயம் கிடைக்கவில்லை என்றால் அங்கு சூரியன் எதிரி சாரத்தில் இருக்கிறார் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.மேலும் இதயம் என்ற கருவி அடிக்கடி பழுதுபட்டால் சூரியன் நல்ல நிலையில் அவரது பிறப்பு ஜாதகத்தில் இல்லை என்று அர்த்தம்.இப்படி எப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலும் உங்கள் ஜாதகத்தில் சூரியன் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் சரி,பாதகமாக இருந்தாலும் சரி,இந்த சுலபமான தாந்திரிகபரிகாரங்களில் ஏதாவது ஒன்றை நீங்கள் அந்த நிலையை சரி படுத்தி உங்கள் வாழ்க்கையிலே இனிமையாக உங்கள் நாட்களைக் கடத்தலாம்.அதாவது சூரியனின் சக்தியைப் பெற அருளாசியை பெற ஒவ்வொரு ஞாயிறு அன்று நம் வீட்டிற்கு உறவினர்களை அழைத்து சப்பாத்தி,கோதுமையிலான தோசை,ஹல்வா,சிறுவர்களுக்கு செய்து கொடுத்து சூரியனின் அருளாசியைப் பெறலாம்.

  ஜாதகத்தில் சூரியன் சனியோடு நின்று பலன் தரவில்லை என்றாலும்,சூரியன் ராகுவோடு கலந்து பலன் தரவில்லை என்றாலும்,சூரியன் உங்களுக்கு பாதகமான கிரகங்களில் இருந்தாலும்,சூரியன் மறைவுஸ்தானமான 6,8,12இல் மறைந்தாலும்,நான் சொன்ன இந்த தாந்திரிக பரிகாரம் ஏதாவது ஒன்றை  நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அரசாங்க வசியத்தை ஏற்படுத்தி அரசு வேலையை முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.தந்தை மகன் என்ற உறவு உங்களுக்கு இனிப்பாக இருக்கும்.மேலும் தந்தை மூலம் கிடைக்கக்கூடிய சொத்துக்கள் உங்களுக்கு கிடைக்கக்கூடும்.இருதயம் என்ற கருவி உங்களுக்கு பலம் கொடுக்கும்.மேலும் சூரியனை ஆத்ம கிரகம் என்று கூறுவதால் நம் ஆன்மாவைப் பற்றி அறிகின்ற ரகசியங்களை அவர் வெளிப்படுத்தி இவ்விதமான தாந்திரிக பரிகாரங்களில் ஏதாவது ஒன்றை நீங்கள் கடைபிடித்து வந்து சூரியனால் ஏற்படுகின்ற அந்த சூரிய தசை நடப்பில் இருக்கின்ற அந்த 6 வருட காலம் உங்களுக்கு இனிப்பாக இருக்கும் என்றால் இந்த தாந்திரிக சாஸ்திரம் என்பது மிக மிக எளிமையானது.அதே நேரத்தில் வலிமையானது என்பதை நீங்கள் உணர்ந்து செயல்பட்டால் உங்கள் வாழ்க்கையில் வெற்றியே தவிர தோல்வி இல்லை என்று சொல்லி இந்தப் பகுதியை இறுதி செய்து நாளைய தினம் சந்திரனுக்கு உரிய தாந்திரிக பரிகாரம் என்னென்ன என்பதைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் நாம் பெற இருக்கிறோம் என்று சொல்லி இந்தப் பகுதியை பூர்த்தி செய்து நாளைய தினம் உங்களை சந்திக்க இருக்கின்றேன்.நன்றி.வணக்கம்.

 

ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்

9962081424

The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 28/04/2016 appeared first on Swasthiktv.


பகவான் பக்தனிடம் பார்ப்பது என்ன?

$
0
0

ஆன்மிகம் என்றால் அன்புதான்.அன்பு செலுத்த தெரியாதவர்களால் நிச்சயமாக பக்தி செலுத்த முடியாது.

திருமூலர் அருளிய திருமந்திரத்தில் ஒரு மந்திரம்:

thirumoolar1அன்பில்லாதவன் கடவுளை அறிய முடியாது. ஏனென்றால் அன்புதான் கடவுள்.

“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்,அன்பே சிவமாவது ஆரும் அறிகிலர்” என்பது நம் திருமூலர் திருமந்திரமாகும்.

எங்கோ வானத்தில் நீண்ட தூரத்தில் இருக்கும் நிலாவில் கூட ஈரப்பசை இருக்கிறது. ஆனால் இங்கே பக்கத்தில் உள்ள மனித உள்ளத்தில் தான் அது இல்லை.ஈரம் – அன்பு. அன்பு சுரந்தால்தான் மனம் விசாலமாகும்.திருமூலர் அருளிய திருமந்திரத்தில் ஒரு மந்திரம்,

திருமந்திரம்:

“யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே”

இந்த மந்திரம் வேதத்திற்கு சமமானதாகும்.எளிமையான ஆனால் வலிமையான பதப்பிரயோகம்.இதில் உபதேசிக்கப்பட்ட தர்மங்களை யாரும்,எவ்வித கஷ்டமும் இல்லாமல் எப்போதும் செய்யலாம்.பகவான் பக்தியைத்தான் பார்கிறார்.பக்தன் என்ன கொண்டு வருகிறான் என்று பார்பதில்லை.

thirumoolar2ஒரு கை புல்,ஒரு கை பொரி,அன்போடு படைத்தால் விநாயகர் வசப்படுவார்.சில துளசி இலைகளில் மஹா விஷ்ணு வசப்பட்டுவிடுவார்.சில துளி கங்கா தீர்த்தம்,வில்வம் இவற்றால் பரமேஸ்வரன் உச்சி குளிர்ந்து விடுகிறார்.சின்னச் சின்ன அகல் விளக்குகளில் மகாலட்சுமி பிரசன்ன மாகிவிடுகிறார்.

இப்படி அன்போடு செய்யப்படும் பக்தியால் இறைவனை அடையலாம்.

                                                              அன்பே ஆன்மிகம் ! ஆன்மீகமே அன்பு !!

The post பகவான் பக்தனிடம் பார்ப்பது என்ன? appeared first on Swasthiktv.

சிவனின் சொரூபம் -ருத்ராக்ஷம்

$
0
0

 ருத்ராக்ஷம் என்பது ஒருவகையான மரத்தின் விதைகள்.ருத்ராக்ஷம் என்றால் ருத்ரன்+அக்ஷம்=சிவன்கண்.அதாவது சிவனின் கண்களில் இருந்து தோன்றியதாகும்.மேலும் இதனை சிவனின் சொரூபம் என்றும் கூறலாம்.ருத்ரன் என்றால் தீமைகளை அழிப்பவன்.

 ருத்ராக்ஷம் தோன்றிய புராணக்கதை:

 rudraksh3முன்னொரு காலத்தில் தாரகாஷன்,கமலாஷன்,வித்யுன்மாலி என்ற அசுரர்கள் இருந்தார்கள்.இவர்களுக்கு திரிபுர அசுரர்கள் என்று பெயர்.திரிபுர அசுரர்கள் கடுமையான தவம் செய்து பெற்ற வரங்கள் மற்றும் சக்திகளை கொண்டு பூலோகம் ,தேவலோகம் மீது படையெடுத்து சென்று மக்களையும்,தேவர்களையும் வாட்டி வதைத்தனர்.இதனால் துன்புற்ற தேவர்கள் சிவனிடம் சென்று தங்களை காப்பாற்றுமாறு வேண்டினர்.தேவர்கள் நிலைமையைக் கண்ட சிவன் அவர்களை காக்கும் பொருட்டு ஆயிரம் ஆண்டு கண் விழித்து “அகோரஸ்த்ரம்” என்ற அஸ்த்ரத்தை படைத்து அந்த அஸ்த்ரத்தின் மூலம் திரிபுர அசுரர்களை வதம் செய்தார்.தேவர்களின் நிலைக் கண்டு வருந்தினார்.அப்பொழுது சிவனின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் பூமியில் விழுந்து ருத்ராக்ஷம் மரங்களாக தோன்றின.

நலம் தரும் ருத்ராக்ஷம்:

 ஒன்று முதல் இருபத்து ஒன்று முகங்கள் கொண்ட ருத்ராக்ஷங்கள் உண்டு என்பர்.ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் இருந்தாலும் சிவ அம்சமான ருத்ராக்ஷம் அணிவதன் பொதுவான பலன்களைக் காண்போம்.

 rudraksh11.அறிவும் ஞானமும் அடைய முடியும்.

2.குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவும்.

3.மன அமைதியும்,ஒருமுகப்படுத்துதலும் சித்திக்கும்.

4.நோயற்ற நீண்ட வாழ்க்கை அமையும்.

5.தொழில் செய்வோருக்கு குறைவற்ற லாபம் கிடைக்கும்.

6.அதன் கந்தக சக்தி நரம்பு மண்டலத்தை சீராக வைத்திருக்க உதவும்.

7.மன அழுத்தம்,இரத்த அழுத்தம் போன்ற நோய்களும் அடங்கும்.

8.மாணவர்கள் அணிவதனால்,அவர்கள் கல்வியில் அறிவுத்திறனில் பிரகாசிப்பர்.

9.இரத்த ஓட்டம் சீராக அமையும்.

10.நவக்ரஹ தோஷங்கள் விலகும்.

11.அனைத்து பாவங்களையும் போக்கும்.

12.பிறவிப்பயனை அளிக்கும்.

ஓம் நமசிவாய

The post சிவனின் சொரூபம் -ருத்ராக்ஷம் appeared first on Swasthiktv.

திருநீறு (விபூதி)பற்றிய திகைப்பூட்டும் தகவல்கள்

$
0
0

 நாட்டுப்பசுமாட்டின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறுதான் தெய்வசக்தி உடைய திருநீறு ஆகும்.எனவே முறைப்படி தயாரிக்கப்படும் திருநீற்றில் இயற்கையிலேயே தெய்வீக ஆற்றல் நிரம்பியுள்ளது.திருநீறு (விபூதி)பற்றிய திகைப்பூட்டும் தகவல்கள் இதோ உங்களுக்காக :

 thiruneerநாட்டுப்பசுமாட்டின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறுதான் தெய்வசக்தி உடைய திருநீறு ஆகும்.எனவே முறைப்படி தயாரிக்கப்படும் திருநீற்றில் இயற்கையிலேயே தெய்வீக ஆற்றல் நிரம்பியுள்ளது.

 திருநீறு (விபூதி) செய்யும் போது பின்வரும் மந்திரங்களை கூறுதல் வழக்கம்.

 1.ஓம் ஈசான மூர்தையெஹ் நமஹ

2.ஓம் தத்புருஷ வக்த்ராய நமஹ

3.ஓம் அக்ஹோற ஹ்ருதையாய நமஹ

4.ஓம் வாமதேவ குஹ்யாய நமஹ

5.ஓம் ச்தயோஜாத மூர்தயெஹ் நமஹ

6.ஓம் சிரசே நமஹ

7.ஓம் சிகாயை நமஹ

8.ஓம் கவசாய நமஹ

9.ஓம் நேஹ்த்ரேப்யோ நமஹ

10.ஓம் அஸ்த்ராய நமஹ

தீமைகள் அகற்றும் திருநீறு (விபூதி)

 திருநீறு பஸ்மம் என்றும் அழைக்கப்படும் விபூதியில் நிலைத்து நிற்கும் எல்லாம் வல்ல ஈசன் அதை அணிபவர்க்கு

  • மந்திரமாகி – அகத்தையும் பலத்தையும் தூய்மைப்படுத்துகிறார்

  • மருந்தாகி – உடலை காக்கும் கவசமாகிறார்

  • நெருப்பாகி- பகை,தீமைகள், நோய் அழித்து நலம் அளிக்கிறார்

  • நீராகி- கோபம்,அகங்காரம் அகற்றி மனத்தெளிவை அளிக்கிறார்

  • கருணையாகி- பாவங்களை அழித்து புகழடையச் செய்கிறார்.

  • ஐஸ்வர்யமாகி – சகல செல்வங்களையும் அளிக்கிறார்

  • ஒளிமயமாகி- வணங்கத்தோன்றும் தேஜசை அளிக்கிறார்

  • திரிபுண்டரமாகி- தீங்கிழைக்கும் எண்ணத்தை அழிக்கிறார்

  • பரமனாகி- அல்லும் பகலும் இறையுணர்வைக் கொடுக்கிறார்

  • பஞ்சாட்சரமாகி- பஞ்ச இந்திரியங்களையும் அடக்கியாள்கிறார்

  • சிவமாகி- சிவனருள் சித்திக்கிறார் .

The post திருநீறு (விபூதி)பற்றிய திகைப்பூட்டும் தகவல்கள் appeared first on Swasthiktv.

ஒரு பிடி அரிசி,ஒரு கோடி புண்ணியம்!!

$
0
0

  காஞ்சி ஸ்ரீ மகாஸ்வாமிகள் பிடி அரிசித்திட்டம்.ஒவ்வொரு மனிதனும் ஐந்து கடன்களுடன் பிறக்கிறான்.அவை தெய்வ கடன்,பித்ரு கடன்,ரிஷி கடன்,மனித கடன் மற்றும் பூத கடன்.மனித கடன் தவிர மற்ற நன்கு கடன்களை இறைவனுக்கு பூஜை செய்தல்,பித்ருகளுக்கு மற்றும் ரிஷிகளுக்கு தர்ப்பணம் அளித்தல்,மற்ற ஜீவராசிகளுக்கு உணவு அளித்தல் போன்றவற்றால் நிவர்த்தி செய்துவிடலாம்.மனித கடனுக்கு தினமும் வறியவர்க்கு உணவு அளிப்பது முக்கிய கடமை.

 mahanதற்போது தினமும் ஒருவருக்கு உணவு அளிப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமாகாத நிலை.ஒவ்வொருவரும் இந்த மனித  கடனை தீர்க்க வேண்டிய அவசியத்தை மனதில் கொண்டு ஸ்ரீ காஞ்சி மகாஸ்வாமிகள் பிடி அரிசித்திட்டம் என்ற முறையை நமக்கு காட்டிக்கொடுத்தார்கள்.அதன்படி ஒவ்வொரு வீட்டிலும் சோறு சமைக்கும் முன் ஒரு பிடி அரிசியை தனியாக ஒரு இடத்தில சேமிக்க வேண்டும்.அத்துடன் ஒரு ரூபாய் காசும் போடலாம்.இவ்வாறு சேமிக்கப்பட்டதை ஒருவர் அல்லது இரண்டு பேர் எல்லா வீடுகளுக்கும் சென்று எடுத்து வந்து கிராமத்தில் உள்ள அம்மன்கோயில் அல்லது ஈஸ்வரன் கோயில் அல்லது பெருமாள் கோயில் ஏதாவது ஒன்றில் சுவாமிக்கு நிவேதனம் செய்து படைக்கப்பட்ட அந்த பிரசாதத்தை எல்லாருக்கும் பகிர்ந்து அளிக்கலாம்.பசியால் வாடும் மக்கள் இறை பிரசாதத்தை உண்டு பசியாறுவார்கள்.சேர்ந்த பணத்தை கொண்டு சுவாமிக்கு அபிஷேக பொருள்,எண்ணெய்,புஷ்பங்கள்,வஸ்திரம் போன்றவற்றை வாங்கலாம்.மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதற்கேற்ப இறை அருளும் புண்ணிய சக்தியும் எல்லோருக்கும் கிடைக்கும்.இறை அருளால் இவ்வுலகில் எல்லா நலமும் பெற்று வாழ்வார்கள்.இறைவன் பிரசாதம் உணர்வைத்தூண்டி மனதை தூய்மைப் படுத்தும் வல்லமை வாய்ந்தது.

குறிப்பு:ஈஸ்வரன் கோயிலில் மகாப்ரதோஷம் அன்று மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பிடி அரிசித்திட்ட வழிபாட்டை செய்வது அளப்பரிய புண்ணியசக்தியை கொடுக்கும்.

பெருமாள் ஆலயத்தில் திருவோணம் நக்ஷத்ரம் அல்லது சனிக்கிழமை அன்று செய்வது மிகவும் விசேஷ பலனைக் கொடுக்கும்.ஊரில் உள்ள அம்மன் கோயிலில் ஒரு வெள்ளிக்கிழமை அன்று செய்வது விசேஷம்.

 ஹர  ஹர  சங்கர ,ஜெய  ஜெய  சங்கர.

The post ஒரு பிடி அரிசி,ஒரு கோடி புண்ணியம்!! appeared first on Swasthiktv.

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 29/04/2016

$
0
0

  உலகெங்கும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ஸ்வஸ்திக் டிவி.காம் நேயர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு பரிகாரமும்,பலன்களும் என்ற இந்த அருமையான ஒரு பகுதியில் ஒருவருடைய ஜனன காலத்தில் சந்திரனுடைய ஆட்சி நேரம் சுமார் பத்து வருட காலம். சந்திரனின் மறைவிடமான 6,8,12இல் மறைந்தால் அந்த விருச்சிகத்திலே சந்திரன் நீச்சம் பெற்றால் அந்த கேடு அல்லது ராகு போன்ற பகை கிரகங்களோடு கலந்தால் மேலும் சந்திரன் பாகுபட்டிருந்தால் அப்பொழுது தாயாருக்கும், மகனுக்கும் அங்கே எப்பொழுதும் பிரச்சனை இருந்து கொண்டிருக்கும்.  தாயார் மூலம் கிடைக்கின்ற நன்மைகள் அனைத்தும் பழுதுபடும் நின்றுவிடும். தாயாருக்கும் தனயனுக்கும் எப்பொழுதும் வாஸ்தானம் கசப்பு ருசி ஏற்படுத்தும் சலித்தொல்லை ஏற்படும். சந்திரனால் அவர்கள் பாதிக்கப்பட்டால் மாமியாரால் கிடைக்கக்கூடிய சுகங்கள் கிடைக்காது. பெண்களால் அவர்களுக்கு அவமானமும் அசிங்கமும் வர நேரிடும். மேலும் சந்திரனுடைய தாரத்துவமாக இருக்கின்ற திரவ விரபாகங்களில் நஷ்டத்தை அடைவார்கள்,கஷ்டத்தைப் பெறுவார்கள். இப்படிப்பட்ட நிலையெல்லாம் நாம் மாற்றி அமைக்க நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் சந்திரனுக்குரிய தாந்திரிக பரிகாரங்களை நாம் செய்து வர வேண்டும்.

  kumaதாந்திரிக பரிகாரம் என்றால் சுலபமாக செய்யக்கூடிய பரிகாரம். சந்திரன் வசியமாகி இருக்கிற நெல்லை நீங்கள் ஒரு தாம்பாளத் தட்டில் திங்களன்று நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால் அந்த நெல்லை பரப்பி அதன் மீது கற்பூரம் ஏற்றி வைத்து இரவு நேரங்களில் சந்திரனை வணங்கி வர வேண்டும். இரண்டாவதாக பௌர்ணமி தினங்களிலே சந்திரனை வசியம் செய்ய நாம் இரவு நேரங்களிலே சந்திரனை நோக்கி நாம் பூஜை செய்ய வேண்டும். முடிந்தால் அன்றைய தினத்திலே திருவண்ணாமலையிலே கிரிவலம் செய்வது சாலச் சிறந்தது. மேலும் திங்கட்கிழமையிலே 6 மணியிலிருந்து 7 மணி வரை சந்திர ஓரை ஓடிக்கொண்டிருக்கின்ற அந்த நேரத்திலே தாம்பாளத் தட்டில் நெல்லை பரப்பி அதன் மீது ஒன்பது வெற்றிலை ஒன்பது  பாக்கு  ஒன்பது ஒரு ருபாய் நாணயங்களை வைத்து நீங்கள் சந்திரனின் பாகமான அக்னியை நின்று வணங்க வேண்டும்.  மேலும் சந்திரனை வசியப்படுத்த திங்களன்று பால்,தயிர்,வெண்ணெய் போன்ற திரவங்களை வைத்து பூஜையிலே நீங்கள் சந்திரனை வசப்படுத்த ஒவ்வொரு திங்களன்று 6 மணியிலிருந்து  7 மணியளவில் இந்த பூஜைகளை செய்து நாம் சந்திரனை கவர்ச்சி செய்யலாம்.

  அம்மா,சித்தி,பெரியம்மா என்று அம்மா வகையிலே இருக்கின்ற அம்மாவைப் போன்ற மரியாதைக் குரிய பெண்மணிகளை நாம் வணக்கம் செய்து அவர்களுக்கு வஸ்த்ர தானம் செய்ய சந்திரன் வசப்படுகின்ற அந்த ஒரு சூழ்நிலை நமக்கு வரும்.  மேலும் சந்திரனின் ஆதிக்கத்திலே இருக்கின்ற அந்த குளிர்ச்சியான நேரம் என்று சொல்லுகின்ற அந்த இரவு நேரத்திலே ஒரு திங்களன்று ஒரு கைப் பிடி நெல்லை எடுத்து அதை ஒரு வெள்ளைத் துணியிலே முடிந்து அதை தலையனைக் கீழே வைத்து ஒன்பது நாள் அதாவது ஒரு திங்கட்கிழமை ஆரம்பித்து செய்வாய்க்கிழமை முடிகின்ற அந்த தருணத்தில் அதை ஓடுகின்ற நீரில் ஆறிலே,அல்லது ஓடையிலே அல்லது கடலிலே கலந்துவிட சந்திரனின் அருளாசி வரும் மேலும் சந்திரனை வசப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் அம்மனுக்கும் அம்பாளுக்கும் திங்கள் மாலையன்று நெய் தீபம் போட்டு வர ஆலயங்களிலே சந்திரன் வசப்படுவான்.  சந்திரனைக் கட்டிப்  போட பார்வதி தேவியை நீங்கள் வணங்கி வர இந்த 10 வருட காலங்களில் உங்களுக்கு அபாயம் இருந்தாலும் இந்த தாந்திரிக பரிகாரங்களில் ஏதாவது ஒன்றைக் கடைபிடித்து நீங்கள் செய்து வர சந்திரனால் பெறுகின்ற கஷ்டங்கள் தவிர்த்து அதனால் பெறுகின்ற நன்மைகள் இந்த பத்து வருட காலம் உங்களை வந்து எட்டும் என்றால் அதில் எந்தவித வியப்பும் இல்லை. நம் முன்னவர்கள் இப்படிப்பட்ட தாந்திரிக பரிகாரங்களை எல்லாம் நமக்கு அழகாகச் சொல்லி நமக்கு வழி நடத்திச் சென்றார்.  நாம் செய்ய வேண்டியதெல்லாம் சந்திர தசை ஒரு மனிதனுக்கு விருச்சிகத்தில் நீச்சமான இடத்திலிருந்து நடந்தால் நான் சொன்ன இந்த பரிகாரங்களில் ஒன்றை நீங்கள் கடைபிடித்து வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட வேண்டும் என்று சொல்லி இந்த பகுதியை பூர்த்தி செய்து நாளைய தினம் செவ்வாய் அதற்குரிய தாந்திரிக பரிகாரங்கள் என்பது என்ன எல்லாம் விரிவாக பார்க்க இருக்கிறோம் என்று சொல்லி இந்த பகுதியை பூர்த்தி செய்து நாளைய தினம் உங்களை சந்திக்க இருக்கிறேன்.நன்றி,வணக்கம்.

ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்

9962081424

The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 29/04/2016 appeared first on Swasthiktv.

How to remove worries? Periyava explains…

$
0
0

A business pramukha — notable, came to Kanchipuram, had darshan of Maha Swamigal and said: “My business is dull for so many days now. Several worries I have. Can’t sleep at night. Can’t withstand the mental agony. I require Periyaval’s arul–blessing.”

Shri Periyaval, “Will you do one thing?”

“I am waiting to listen.”

“On the night of paurnami — day of full moon, as much as possible for you, keep looking at the purna chandran — full moon, in the akasham–sky, and do dhyanam–meditation, imaging that Kamakshi Ambal is in that Chandramandalam–lunar region. All the worries will leave you.”

what a compassion !!

தென்னாடுடைய பெரியவா போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
சர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்
மாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி !

The post How to remove worries? Periyava explains… appeared first on Swasthiktv.

ஜொலிக்கும் மகாதீபத்தில் தீப கொப்பரையின் சிறப்பு

$
0
0

 கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவு நாளில், மகா தீபத்திருவிழா நடைபெறுகிறது. அப்போது 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். கருணையே வடிவான அண்ணாமலையை, ஜோதி பிழம்பாக ஏந்தி நிற்கும் பாக்கியம் பெற்றது தீப கொப்பரை.

    deepoma231115-2 மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் தீப கொப்பரை, வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்டது. கடந்த 1668ம் ஆண்டு, நாலரை பாகம் எடையுள்ள வெண்கல தீப கொப்பரையை, வேங்கடபதி எனும் சிவனடியார் திருக்கோயிலுக்கு அர்ப்பணித்தார்.                 தொடர்ந்து பயன்படுத்தப்பட்ட தீப கொப்பரை சேதமானது. எனவே கடந்த 1991ம் ஆண்டு புதியதாக 92 கிலோ செப்பு, 110 கிலோ இரும்பு சட்டங்களால் உருவான புதிய தீப கொப்பரை உருவானது. கொப்பரையின் அடிபாக விட்டம் 27 அங்குலம். மேல் விட்டம் 37 அங்குலம், மொத்த உயரம் 57 அங்குலம்.

78  மகா தீப விழாவுக்கு முன்பாக, தீப கொப்பரையை மலை உச்சிக்கு தலைச்சுமையாக கொண்டு செல்வது வழக்கம். 11 நாட்கள் மலை உச்சியில் தீபம் பிரகாசிக்கும். அதனை தொடர்ந்து, மலையில் இருந்து தீப கொப்பரை கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும்.

  மகா தீபம் ஏற்றுவதற்காக, ஆயிரம் மீட்டர் பருத்தி துணியை (காட்டன்) திரியாக பயன்படுத்துகின்றனர். பக்தர்கள் வழங்கும் நெய் காணிக்கையை கொண்டு தீபம் ஏற்றப்படும். அதற்காக 3,500  கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. திரியும் நெய்யும் தீபம் ஏற்றும் முன்பாக அண்ணாமலையார் சன்னதியில் வைத்து பர்வதராஜகுல மரபினர்கள் சிறப்பு பூஜை செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்கின்றனர்.

தொடர்புக்கு : குமார்- 9442805327

செய்தி : ப.பரசுராமன்

படங்கள் : ப.வசந்த்

The post ஜொலிக்கும் மகாதீபத்தில் தீப கொப்பரையின் சிறப்பு appeared first on Swasthiktv.


தெய்வீக இசை இடையறாது ஒலித்துக்கொண்டிருக்கும் திருவண்ணாமலை.

$
0
0

   இந்த மலையிலிருந்து பல்வேறு சிவத்தலங்களுக்கு ரகசிய பாதைகள் செல்கின்றன.சூட்சம உலகில் உலவக்கூடியவர்கள் மட்டுமே இப்பாதைகளைப் பயன்படுத்த முடியும். பசிப்பிணியைப் போக்கக் கூடிய கனிதரும் விருட்சம் இந்த மலையில் உள்ளது. மிகப்பெரும் கணியையும், மிகப்பரந்த இலைகளையும் கொண்டது. மேல்நாட்டவர் திருவண்ணாமலையை உள்ளே நடமாட்டங்களை கொண்ட மலை என்றும் கூறியிருப்பது இங்கு நினைத்துப் பார்க்க தக்கதாகும். எண்ணிலா சித்தர்களும், ஞானிகளும், தபோதனர்களும், முனிவர்களும், ரிஷிகளும் செம்பொன் மயமான சிவஜோதியில் ஐக்கியமாக தவமிருப்பதும் இந்த மலையில் தான். இந்த மலையில்  தான் பிரம்மயாகம் நடக்கிறது. அந்த குறிப்பிட்ட நேரத்தில் எந்த குருவும் தன் சீடர்களுக்கு பிரம்ப உபதேசம் செய்ய மாட்டார்கள்.

   KANTHASRIMAMஉலக ஷேமத்திற்காக உலகை அழிவில் இருந்து பாதுகாக்கப் பலவித ஹோமங்களை இந்த மலையில் இருக்கும் மகான்கன் நடத்தி உலகைக் காக்கின்றனர். தெய்வீக அரசு இந்த மலையில் செயல்படுகிறது என்றும் சொல்லலாம். தெய்வீக இசை இடையறாது ஓலித்துக் கொண்டே இருக்கின்றது. அதற்கேற்ப தாண்டவமாடும் தேவ நாட்டியமும் இடைவிடாது நடந்து கொண்டே இருக்கிறது. தெய்வீக இசையும், தாண்டவமும் நின்று போனால் உலகம் அழியும், பிரளயம் ஏற்படும். அது ஊழிக் கூத்தாக அமையும். மலையின் உள்ளே தினசரி பூஜை நடைபெறுகிறது. தேவர்களும், ரிஷிகளும், மகான்களும், நல்ல ஆத்மாக்களும், புண்ணியம் செய்தவர்களும், நல்ல மனமுடையவர்களும் தத்தமக்குரிய காலங்களில் தெய்வீக தரிசனம் கண்டு வணங்குகின்றனர். மலையில் சூட்சம் ரூபத்துடன் வசித்து வருபவர்களுக்கு நித்திய கடமைகள் உண்டு. அவர்கள் தெய்வீக கடமைகளுடன் மலைவலமும் அருவமாக செய்து வருகின்றனர்.

 மலையிலிருந்து எப்போதும் ஓரு ஓளி வீசிக் கொண்டே இருக்கிறது. அது செம்பொன்னிரமான ஓளிக்கற்றைகள் ஆகும். மலையின் அதிர்வலைகள் மகத்தானது. மலையின் ஓவ்வொரு பூஜை வேளைக்கும் சங்கொலி கேட்டுக்கொண்டே இருக்கும். கோயிலில் அண்ணாமலையாருக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது. அந்த அர்ச்சனை வில்வத்தின் சூட்சமரூபம் மலையாகிய அண்ணாமலையார் முன் குவிந்திருக்கிறது. கோயிலில் சுவாமி முன் காட்டப்படும் நிவேத்தியத்தில் இருந்து கற்கள் கூட மலையாக அண்ணாமலையாரிடம் போய் சேர்கின்றனர்.

    yogiar மலையில் வெள்ளியை நிகர்த்த மீன்களும் தங்கம் போன்ற மீன்களும் உலவும் தடாகங்கள் உள்ளன. இவற்றில் பணியின் வெண்மையைத் தோற்கடிக்கும் வெள்ளி ஓளியுடைய நீர் நிரம்பி உள்ளது. இதன் பிரகாசம் கண்களை கூச வைக்கும். ருசியில் சிறந்த நீர் சுனைகளும் தெய்வீக சக்தி கொண்ட மூலிகை வாசம் பொருந்திய சலசலக்கும் அருவிகளும் உள்ளன. இது போல ஏராளமான ரகசியங்கள் மலையில் உள்ளன.

     சாதாரணமாக இறைவன் பெயரால் ஊர்ப் பெயர் அமையும், ஆனால் இங்கு ஓரு மலையின் பெயரால் ஊர் விளங்குகிறது. ஈசனின் பெயர் கூட மலையின் பெயரால் அண்ணாமலை, அருணாசலேஸ்வரர் என்று தான் வழங்கப்படுகிறது. இறைவனுக்கு உருவம் கிடையாது. ஏகம்சத்விப்ரம் பஹீதா வதந்தி என்கிறது வேதம் உருவமில்லாத ஓன்றை எப்படி கிரகிப்பது? லிங்கத்திற்கு சொரூபம் உண்டா? மலைக்கு உருவம் உண்டா? கிடையாது. அதனால் தான் இறைவனை லிங்கமாகவும், மலையாகவும் கற்பித்தனர். பாமர மக்களுக்கு பிடித்துக் கொள்ள ஓரு ஊன்று கோல் வேண்டுமே? இறைவனை சிலர் சோதி சொரூபமாகவும் வணங்குவர். அந்த சோதி சொரூபமும் இங்கே உள்ளது. ஆக இத்தலத்தில் இறைவன் லிங்கமாகவும், மலையாகவும், சோதியாகவும், காட்சி அளிக்கிறார். இந்த மூன்று உருவங்களுக்கும் புராணக்கதைகள் உண்டு.

 imagesMALAIபல தலங்களைக் காட்டிலும் இத்தலம் மேன்மையானதற்கு காரணம் இந்த மூன்று அஸ்தவதைகளும் இத்தலத்தில் நிகழ்ந்ததால் தான் இத்தலத்தைப் பற்றி பெருமை பேசும் புராணங்களுக்கு கணக்கு கிடையாது. பல புனித ஸ்தலங்களுக்கு மத்தியில் இத்தலம் இரத்தினம் போல் ஜொலிக்கிறது. ஓரு கொடியின் வேரில் நீர் வார்த்தால் அது எங்கும் பரவி, அக்கொடியை மலரச் செய்கிறது. அதுபோல அருணாசலேச்ரவருக்கு பூசை முதலியன செய்தால் பெருத்த பயன் அளிக்கும் என்றெல்லாம் இதன் சிறப்பை மார்க்கண்டேய முனிவருக்கு நந்தி தேவர் உரைத்தார்.

    விஞ்ஞான ரீதியாக பார்த்தாலும் இதைவிட புரதான மலை இல்லை என்பது விளங்குகிறது. இந்தியாவின் வடக்கே கோட்டை மதில் போல் வியாபித்தும் உயர்ந்தும் விளங்குகின்ற இமயமலை கூட காலத்தால் பிந்தியது தான் மிகப் பழைய காலத்தில் இது கடலில் மூழ்கியிருந்தது. இப்பொழுதும் இங்கு சில நீர் தேக்கங்களில் இருக்கும் ஜந்துக்கள் கடலில் மூழ்கியிருந்தது. இப்பொழுதும் இங்கு சில நீர் தேக்கங்கள் இருக்கும் ஜந்துக்கள் கடலில் வாழ்பவனாய் உள்ளன. நிலநடுக்கம் போன்ற இயற்கை கோளாறுகளால் கடல் மலையாகியது. இது பிற்கால சம்பவமே. திருவண்ணாமலையின் கதை வேறு. உலகிலேயே புராதனமான மலை இது.

   அண்ணாமலை நமது பூமியின் மத்திய பாகம் என புராணங்கள் வர்ணிக்கின்றன. புவியை ஐந்து பிரிவுகளாக வகுத்தனர். பிருதிவி(மண்) தலம் காஞ்சி, இகாயதலம் சிதம்பரம், வாயுத்தலம் காளத்தி, நீர்த்தலம் திருவாணைக்காவல் (திருச்சிக்கு அருகே) நெருப்புத்தலம் அண்ணாமலை என்று பிரித்தார்கள். உண்மையிலேயே விஞ்ஞான ரீதியாக நெருப்புக்கோளம் குளிர்ந்து மலையாகியது. இதைத்தான் புராணங்கள் ரசமான கதைகளால் வர்ணிக்கின்றன.

 அருண+அசலம் = அருணாசலம் அருணம் என்றால் சிவப்பு, அசலம் என்றால் மலை. அதாவது செம்மலை என்று அர்த்தம். தீவினைகளை நீக்கி நலம் தரும் மலை இது. திரு அண்ணாமலையானது எண்கோண அமைப்பில் காணப்படுகிறது. எட்டு திசைகளிலும் எட்டு லிங்கங்கள் காணப்படுகின்றன. மலையின் சுற்றளவு எட்டு மைல். எட்டு திசைகளிலும் எட்டு லிங்கங்கள் இருப்பது அபூர்வ ஓற்றுமை. மலை சுற்றும் வழியின் எட்டுத்திசைகளிலும் இருக்கும் நந்திகள் மலையை பார்த்த வண்ணம் உள்ளன. லிங்கத்தை பார்த்து அமர்ந்திருப்பது தானே நந்தியின் அமைப்புமுறை. அப்படி கவனித்தால் மலையை லிங்கம் என்பது நிரூபணமாகிறது.

 5450564081_645808c836_b நம் உடலுக்கு ஓன்பது வாசல்கள் அண்ணாமலையார் கோயிலிலும் ஓன்பது கோபுரங்கள். அதுபோல திருவண்ணாமலைக்குள் நுழையலாம். எந்த சாலை வழியாக வந்தாலும் எதிர்நின்று அழைப்பது அண்ணாமலையார் தான். எண் கோலத்தில் அண்ணாமலை அமைந்துள்ளதால் எட்டு திசைகளிலும் எட்டுவித அமைப்புகளில் தெரியும். மலையே லிங்கமாக இருப்பதால், தீபதிருவிழா நாளைத் தவிர மற்ற நாட்களில் மலைமீது எவரும் செல்லமாட்டார்கள்.

 மலையாகவே இறைவன் எழுந்தருளி விட்டதால் மிகப்பெரிய அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்விக்கவும் பூமாலை சூட்டவும்,வில்வம் அர்ச்சிக்கவும் மனிதர்களாலும் முடியாது. தேவர்களாலும் முடியாது. எனவே எல்லோரும் வழிபட வசதியாக எளிமையாக மலையின் அடிவாரத்தில் சிறிய எளிய சுயம்பு லிங்கமாக சிவபெருமான் தோன்றி அருளினார். அதுவே இன்றை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்.

செய்தி : ப.பரசுராமன்

படங்கள்: ப.வசந்த்

 

The post தெய்வீக இசை இடையறாது ஒலித்துக்கொண்டிருக்கும் திருவண்ணாமலை. appeared first on Swasthiktv.

செல்வம் பெருக மகாலக்ஷ்மி மந்திரம்

$
0
0

செல்வம் பெருக மகாலக்ஷ்மி மந்திரம்.

மகாலக்ஷ்மி என்பவள் செல்வத்திற்கும்,தனத்திற்கும்,ஐஸ்வர்யத்திற்கும் உரிய கடவுள்.ஸ்ரீ மகாவிஷ்ணுவின் மனைவியான இவர் “திருமகள்” என்றும் போற்றப்படுகிறாள்.தீபாவளியும்,சரத் பூர்ணிமா என்கிற கொஜகிரி பூர்ணிமா என்கிற பண்டிகைகள் மஹா லக்ஷ்மிக்கு பூஜை செய்யும் வகையில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

mahalashmi image

மகாலக்ஷ்மி ஸ்லோகத்தினால் என்ன நன்மை என்பதைப் பார்ப்போம்:

ஒரு ஊரில் ஒரு ஏழை பிராமண தம்பதிகள் வாழ்ந்து வந்தார்கள்.வறுமை அவர்களை வாட்டிய நிலையில் நான்கு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு மிகுந்த இன்னல்களுக்கிடையே போராடிக் கொண்டிருந்தார்கள்.நான்கு பெண் குழந்தைகளை எப்படி படிக்க வைத்து,திருமணம் செய்து கொடுக்கப் போகிறோம் என்ற அச்சம் அவர்களை அல்லும் பகலும் வாட்டியது.உண்ண உணவு,உடுத்த உடை கூட இன்றி வறுமையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமெனக் கழிந்துகொண்டிருந்தது.இந்த நிலையில் ஒரு நாள் அவர்களது வீட்டிற்கு ஒரு துறவி யாசகம் கேட்டு வர,அந்தத் தம்பதிகள் என்ன செய்வது என்று புரியாமல் ஐயோ! நம் வீட்டில் எதுவும் இல்லையே இவருக்கு பிக்க்ஷையிட என்று கலங்கி நிற்க அந்தத் துறவி அவர்களைப் பார்த்து உங்கள் நிலைமை எனக்குப் புரிகிறது.உங்கள் நிலைமை மாற வேண்டுமானால் நான் சொல்லவதை செய்வீர்களா? என்றார்.அதற்கு அந்த தம்பதிகள் என்ன செய்ய வேண்டும் சுவாமி எங்களால் முடியுமானால் நிச்சயம் செய்கிறோம் என்று கூறினார்கள்.அப்போது அந்தத் துறவி அவர்களைப் பார்த்து “நீங்கள் தினமும் காலையிலும்,மாலையிலும் நான் சொல்லும் இந்த மந்திரமான

ஓம்,

ஸ்ரீம்,

ஹ்ரீம்,

க்லீம்,

மகாலக்ஷ்மி,மகாலக்ஷ்மி,

யேகி,யேகி,

சர்வ சௌபாகியமே

தேகி ஸ்வாஹா”

 மகாலக்ஷ்மி மந்திரத்தை 108 முறை பக்தியுடன் சொல்லி வாருங்கள்.

mahalakshmi image2

அப்படிச் சொன்னால் உங்களுக்கு அந்த மகாலக்ஷ்மியின் கடாக்ஷம் கிடைக்கும்.உங்கள் வறுமை நீங்கும்” நான் சில காலம் கழித்து வருகிறேன். என்று கூறிவிட்டுச் சென்று விடுகிறார்.

அந்தத் துறவியின் அறிவுரைப்படி பிராமணரின் மனைவி தினமும் என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து வந்தாள்.அந்தத் துறவி கூறியது போல் அவர்கள் வீட்டில் மகாலக்ஷ்மி கடாக்ஷம் பெருகி அவர்களது நான்கு பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்து மிகுந்த செல்வத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தனர்.அப்பொழுது அந்தத் துறவி மீண்டும் வந்து அவர்களின் வாசலில் நிற்க,அந்த தம்பதிகள் அவரது காலில் விழுந்து வணங்கி,அவரை உள்ளே அழைத்து வந்து விருந்து உபசரித்து,சுவாமி! நீங்கள் கூறியது போல் அந்த மகாலக்ஷ்மி ஸ்லோகத்தை நான் விடாமல் தினமும் சொல்லி வருகிறேன்.இப்பொழுது நங்கள் செல்வச் செழிப்போடும்,மிகுந்த சந்தோஷத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றார்கள்.துறவியும் அவர்களை ஆசீர்வதித்துச் சென்றார்.

மகாலக்ஷ்மியின் பூரண கடாக்ஷத்தைப் பெற:

இன்றைய காலகட்டத்தில் வருமானத்திற்கு ஏற்ப செலவுகளும் வருவதால் செல்வத்தைக் கட்டிக் காப்பது அவசியம்.இப்படிப்பட்ட நிலைமையில் நாம் இவ்வாறு மகாலக்ஷ்மியின் மந்திரத்தைச் சொல்லி வருவோமானால் நம் வீட்டில் மகாலக்ஷ்மி குடி கொண்டு அனுக்ரஹம் செய்வாள்.செல்வத்தை வரவழைக்கவும்,வந்த செல்வத்தை தக்கவைத்துக் கொள்ளவும் இந்த மந்திரத்தை சொல்லி நல்ல பல செல்வங்களைப் பெற்று வாழுவோமாக.

இந்த மந்திரத்தை சொல்வதனால் நாம் மகாலக்ஷ்மியின் பூரண கடாக்ஷத்தைப் பெற்று வாழலாம்.தினமும் சொல்லி வருவதால் பல நன்மைகள் உண்டாகும்.

மகாலக்ஷ்மி மந்திரத்தை சொல்லும் முறை:

இந்த மகாலக்ஷ்மி மந்திரத்தை மிகவும் கவனமாக, உடலும் உள்ளமும் சுத்தமாக வைத்து பூஜை அறையில் உட்கார்ந்து,யாரிடமும் பேசாமல்,கண்களை மூடிக்கொண்டு மகாலக்ஷ்மியை மனதில் நினைத்து  108 முறை சொல்லவேண்டும். மகாலக்ஷ்மிக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் வீட்டு வாசலில் மாக்கோலம் இட்டு,வீடு முழுவதும் சம்பராணி,தூபம் போட்டு,குத்து விளக்கு ஏற்றி பின்பு கிழக்கு திசை நோக்கி அமர்ந்து இதைச் சொல்வது நல்ல பலனைத் தரும்.

குறிப்பு:

நண்பர்களே! நாமும் இந்த மகாலக்ஷ்மி ஸ்லோகத்தை தினமும் சொல்லி லக்ஷ்மியின் கடாக்ஷத்தைப் பெறுவோம்.

 

The post செல்வம் பெருக மகாலக்ஷ்மி மந்திரம் appeared first on Swasthiktv.

Chettinadu Moor Kuzhambu

$
0
0

Chettinad recipe is the one of the best south indian style food.Mor Kuzhambu can be made with many vegetables like Bindi(Lady’s finger, White pumpkin, drumstick).best suited will be Vendakkai or Okra and white pumpkin(poosanikkai). Authentic and Traditional South Indian recipe which is most famous in agraharam as well. It tastes yummy when eaten with pappad or pickle.

 

Ingredients

 

Ladies finger-8

Onion-little

Curd-2 cups

Set – I  (To grind)

Coriander seeds-1 table spoon

Cumin seeds-1 teaspoon

Channa dhal (kadalai paruppu)-1 table spoon

Red chillies – 2

Green chillies – 2

Ginger-a very small piece

Grated coconut-2 table spoons

Set – II- (To Seasoning)

Coconut oil- 1 teaspoon

Red chillies -2

Mustard seed-1 teaspoon

Curry leaf-little

 

Method

 

Soak the items given in (Set-I). After 20 minutes grind the soaked (Set-I) until it will become a smooth paste.

Beat the curd in a mixer (grinder) with little salt and turmeric powder.

Add one more cup of water into a curd and keep it aside.

Cut the ladies finger or white pumpkin (poosanikkai) into small pieces.

In a pan or kadai in little oil saute and then cut the onion length wise.

Add ladies finger or white pumpkin (poosanikkai) pieces and onion and fry nicely for 5 minutes.

Add half cup of water and cook it until the pieces cook well. Once the pieces are cooked add the ground masala mixed in half cup of water with the salt needed.

Let the mixture comes to boil. Now add the curd and switch off within a minutes. Otherwise the curd curdles will form and spoil the recipe.

Now in a separate kadai or pan  seasons  the curry in coconut oil with the items given in To season and pour on top of the curry(don’t mix the seasoning immediately)

The post Chettinadu Moor Kuzhambu appeared first on Swasthiktv.

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 30/04/2016

$
0
0

  உலகெங்கும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ஸ்வஸ்திக் டிவி.காம் நேயர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு பரிகாரமும்,பலன்களும் என்ற இந்த அருமையான ஒரு பகுதியில் நாம் இன்று எடுத்துக் கொண்ட தலைப்பு தொகுப்பு என்னவென்றால் செவ்வாய்க்கு உரிய தாந்திரிக பரிகாரங்கள்.செவ்வாய் தோஷம் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயமாகும்.ஒரு மனிதனுக்கு செவ்வாய் பாதிக்கப்பட்டால் சகோதர வகையிலே கசப்புணர்ச்சி உண்டாகும்.பூமி யோகம் அவனுக்கு கிட்டாது.ரத்த சம்பந்தப்பட்ட வியாதிகள் தலையெடுக்கும்.மேலும் எப்பொழுது பார்த்தாலும் விபத்து,ஆபத்து ஏற்படும்.செவ்வாய் அவர்களுக்கு சாதகமாக இல்லை என்றால் அவர்கள் எப்பொழுது பார்த்தாலும் கோழைகளாகவே இருப்பார்கள்.

   இராணுவம்,போலீஸ் போன்ற துறைகளிலே அவர்களுக்கு வேலை கிடைக்காது.செவ்வாய் அங்கே பழுதுபட்டால் வைத்தியராகக் கூடிய முயற்ச்சிகள் தடுக்கப்படும்.செவ்வாய் பழுதுபட்டால் பெண்களுடைய ஜாதகத்திலே பொருத்தமான கணவர்கள் அமையமாட்டார்கள்.இப்படி செவ்வாயுடைய பாதிப்பு அவர்களுக்கு பல வகையிலே பல விதமான சோதனைகளை ஏற்படுத்தக் கூடிய நிலை இருக்கும் போது அவர்களுடைய ஜாதகத்திலே செவ்வாய் கடகத்திலே நீச்சம் பெற்று பங்கம் பெறாத ஒரு சூழ்நிலையிலோ அல்லது செவ்வாய் தன் எதிரியான புதனோடும் அல்லது சனியோடும் ராகு கேதுஒடும் இணைந்திருந்தாலும் அல்லது செவ்வாய் மறைந்திருந்தாலும் அவருடைய தசை 7 வருட கல கட்டத்திலே இதைப் போன்ற சோதனைகள் பல வரும். அதனால் அவருக்கு பூமி,சொத்து,சகோதரன்,தைரியம்,ரத்த சம்பந்தப்பட்ட வியாதி,விபத்து போன்றவற்றில் ஆபத்தைக் காட்டும்.அதனால் நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் அவரை வசியம் செய்கின்ற அந்த துவரம்பருப்பு என்ற தானியத்தை எடுத்து அடிக்கடி நாம் சாம்பார் சாதம் படைத்து அதை உண்ண வேண்டும்.

   kumarஅதற்கு அடுத்தபடியாக செண்பக மலர் செவ்வாயை வசியம் செய்வதால் அதை முருகனின் கோயிலில் கொடுத்து நாம் வெற்றியைப் பெறலாம்.செவ்வாய் சகோதரனை அடையாளம் காட்டுவதால் நம் சகோதரர்களுக்கு அல்லது சகோதரிகளுக்கு தானம் அல்லது அவர்களுக்கு வேண்டிய அந்த நன்கொடையைக் கொடுத்து அல்லது அவர்களுக்கு பரிசுகளைக் கொடுத்து உதவிகளைச் செய்து நாம் ஆசீர்வாதத்தை பெறலாம்.மேலும் நல்ல உடல் நலனோடு இருப்பவர்கள் ரத்த தானம் செய்து செவ்வாயின் ஆதரவைப் பெறலாம்.முருகனுடைய வழிபாடு தொடர்ச்சியாக செவ்வாய் மாலையன்று முருகனின் கோயில்களில் விளக்கேற்றி வருவது  அருமையான ஒரு தாந்திரிக பரிகாரமாகும்.ஹோமங்கள் நடந்தால் கோயிலில் அதற்குரிய ஹோமப் பொருள்களை நாம் வாங்கிக் கொடுத்து அதிலும் நாம் செவ்வாயின் அருளாசியை பெறலாம்.சில கோயிலிலே அன்னதானம் செய்கின்ற சூழ்நிலையிலே அவர்களுக்கு வேண்டிய அந்த விறகு,மேலும் கட்டைகளை வாங்கிக் கொடுத்து மரக்கட்டைகளை வாங்கி கொடுத்து அந்த சமைப்பதற்கு உதவி செய்யும் பொழுது அக்னியின் பாகமாய் இருக்கின்ற அந்த செவ்வாயின் அருளாசியைப்  பெறுவதற்கு ஒளி தானம் அந்த மின்சார விளக்குகளை அந்த கோயிலில் ஏற்றப்படுகின்ற அனைத்து விளக்குகளுக்கும் நெய் அல்லது நல்லெண்ணெய் நாம் தானம் கொடுத்து அந்த கோயிலிலே திருவிலக்குகளை ஏற்றி நந்தா விளக்குகளை ஏற்றுகின்ற அந்த பாகங்களுக்கு நமது அந்த பொருள் நன்கொடையாகக் கொடுக்கும் பொழுது செவ்வாயுடைய கடாக்ஷம் உங்களுக்கு இயற்கையாகவே வந்து விடுகிறது.அதனால் அந்த காலத்துவமான அந்த வீடு கட்டுகின்ற பாக்யம் அவனுக்கு ஏற்படுகிறது.

 சகோதர வழியிலே பகை வருவதில்லை அதன் மூலமாக இவர் கோர்ட் வாசலை மிதிப்பதில்லை.மேலும் ரத்த சம்பந்தப்பட்ட வியாதி வருவதில்லை.ரத்தத்தை சிந்துகின்ற விபத்துக்கள் இவர்களைத் தாக்குவதில்லை என்றால் இவையெல்லாம் அவருடைய அருளாசியைப் பெற்றிருப்பதால் இவ்விதமான தாந்திரிக பரிகாரங்களை நாம் ஏதாவது ஒன்றையோ பலவற்றையோ தொடர்ந்து செய்யும் பொழுது நமது ஜனன ஜாதகத்தில் செவ்வாய் பழுதுபட்டிருந்தால் அது நமக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி பாதகமான நிலையைக் குறைக்கிறது.ஒவ்வொரு செவ்வாய் இரவு அன்று நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் அவருக்கு வசியத்தை ஏற்படுத்துகின்ற துவரம்பருப்பு ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிகப்பு துணியிலே அதை முடிந்து தலையனை அடியிலே வைத்து செவ்வாயிலிருந்து தொடர்ந்து அடுத்த செவ்வாய் வருங்கின்ற வரையில் ஒன்பது நாட்கள் அந்த தலையனைக் கீழே வைத்து உறங்கி அதை எடுத்து ஓடுகின்ற நீரிலே போடுகின்ற போது பலவிதமான செவ்வாயால் வருகின்ற அபாயகரமான அந்த விளைவுகள் தடுக்கப்படுகின்றது என்றால் தாந்திரிக சாஸ்திரத்தின் நன்மைகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி இந்த பகுதியை பூர்த்தி செய்து நாளைய தினம் புதனின் தாந்திரிக பரிகாரங்கள் என்னென்ன என்பதை விரிவாகவும்,விளக்கமாகவும் பார்க்க இருக்கிறோம் என்று சொல்லி இந்த பகுதியை பூர்த்தி செய்து நாளைய தினம் உங்களை சந்திக்க இருக்கிறேன்.நன்றி,வணக்கம்.

The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 30/04/2016 appeared first on Swasthiktv.

மகா தீபம் ஏற்றும்போது முழங்கும் பாடல்

$
0
0

1 (1)

அண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றும் திருப்பணியை, பர்வத ராஜகுல மரபினர்கள் தொன்றுதொட்டு ஏற்றிவருகின்றனர். மாமலை மீது மகா தீபம் ஏற்றும்போது, பர்வதராஜகுல மரபினர்கள் சங்கொலி முழங்க அண்ணாமலையாரை போற்றி பாடுவதும் இசைப்பதும் வழக்கம்.

விண்ணதிர முழங்கும் பாடல் வரிகள்:-

கார்த்திகைக்கு கார்த்திகை நாள் ஜோதியாய்
மலைமீது நிற்கும் அண்ணாமலை போற்றி ..!
உண்ணாமுலை அம்பிகைக்கு இடபாகம் அளித்து

அர்த்தநாரீஸ்வரராய் நிற்கும் அண்ணாமலை போற்றி ..!
எங்கும் எப்போதும் எல்லோரையும் கைவிடாமல்
காத்து அருள்புரியும் அண்ணாமலை போற்றி ..!
ஞான தபோதனரை வாவென்று அழைத்து
வாழ்வளித்து காக்கும் அண்ணாமலை போற்றி ..!
எங்கிருந்து நினைத்தாலும் நினைத்தபோதே
முக்திஅருளும் அண்ணாமலை போற்றி ..!
மாலும் நான்முகனும் முயன்றும் அடி முடி78
அறியாமல் நின்ற அண்ணாமலை போற்றி ..!
ஓங்கி வளர்ந்து ஓளியாய் காட்சியளித்து

காத்தருள் புரியும் அண்ணாமலை போற்றி ..!
வள்ளால ராஜாவுக்கு மகனாய் தோன்றி அண்ணலும்
அம்மையுமாய் காட்சி அளிக்கும் அண்ணாமலை போற்றி ..!
புண்ணியம் ஒன்று செய்தால் பலவாக வெளிபட்டு
அருள்மழை பொழியும் அண்ணாமலை போற்றி ..!
வீட்டிடில் கஷ்டமாம் விட்டிடாது உனை
உயிர்விட்டிட அருள்புரி அண்ணாமலை போற்றி ..!
தேவரும்,அடியாரும் தொழும்போது
துணையாகும் அண்ணாமலை போற்றி ..!
மலையாய் வடிவுகொண்ட மகேசன்
தீபமாய் எழுந்தருளும் அண்ணாமலை போற்றி ..!
மலையுருவாய் சிவவுருவாய் எழுந்தருளி
எளியார்க்கு காட்சிதரும் அண்ணாமலை போற்றி ..!

தொடர்புக்கு : ப.வசந்த் – 8015564718
செய்தி : ப.பரசுராமன்
படங்கள்: ப.வசந்த்

The post மகா தீபம் ஏற்றும்போது முழங்கும் பாடல் appeared first on Swasthiktv.

Viewing all 15459 articles
Browse latest View live