Quantcast
Channel: SwasthikTv
Viewing all 15459 articles
Browse latest View live

பிள்ளையார் பிறந்த சரித்திரம்

$
0
0

 ஒருமுறை சிவபிரான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச் செல்வதற்கு எண்ணினார். அப்போது தனக்குக் காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் சமைத்துத் தமது அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார். அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது. எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்திவிட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்றுவிட்டார். அச்சமயத்தில் மீண்டுவந்த சிவபிரானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் சினங்கொண்ட சிவபிரான் பிள்ளையாரின் சிரத்தை அரிந்துவிட்டு உள்ளே சென்றுவிடார். நீராடி முடிந்ததும் தேவியார் வெளியே வந்து, பிள்ளையார் சிரச்சேதமுற்றுக் கிடந்த கோலத்தைக் கண்டு சீற்றங்கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்துவிட்டதை அறிந்த அவர் ஆவேசங் கொண்டவராக காளியாக உருக்கொண்டு வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார்.

 
காளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். காளியைச் சாந்தப்படுத்துவதற்கு சிவன் எண்ணி, தனது கணங்களை அழைத்து ‘வடதிசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் கொய்து வருமாறு பணித்தார். பணிப்பின் பிரகாரம் கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையைக் கொய்து சென்று இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பார்வதியின் பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டிவிட்டார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக்கொண்டார்.இது நடந்தது ஆவணி மாதத்து சுக்கில பட்ஷ சதுர்த்தியன்றாகும். அன்றிலிருந்து அந்த தினம் விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடப்படுகிறது

விநாயகருக்கு உகந்த விரதங்கள்: 
ஒவ்வோர் ஆண்டிலும் விநாயகருக்கான விரத நாட்கள் அனேகமாக சதுர்த்தித் திதியன்றே கூடுவதை அவதானிக்கலாம். சுக்கில பட்ச சதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி என்றும் இரண்டு சதுர்த்தி விரத தினங்கள் இருக்கிறது. சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘சதுர்த்தி விரதம்’ என்று கொள்வர். அவற்றுள்ளும் ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘நாக சதுர்த்தி’ என்றும் ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘விநாயக சதுர்த்தி’ என்றும் கொண்டாடுகின்றனர்
மாதாந்தம் கிருஷ்ண பட்ஷத்தில் வருகின்ற சதுர்த்தி ‘சங்கடஹர சதுர்த்தி’ ஆகும் . விநாயகரைத் துதிப்போரின் சங்கடங்களை அவர் நீக்கியருளுவார் என்பதனால் அத்தினத்தில் வருகின்ற விரதத்தை ‘சங்கடஹர சதுர்த்தி விரதம்’ என்கின்றனர். ஆவணி மாதத்தில் வருகின்ற கிருஷ்ண பட்ஷச் சதுர்த்தியை ‘சங்கடஹர விநாயக சதுர்த்தி’ என்று வழங்குவர். ஆவணி மாதத்தில் வருகின்ற இரண்டு சதுர்த்தி விரதங்களும் முக்கியமானவை. எனினும் ‘விநாயக சதுர்த்தி விரதமே அதிவிஷேடமானது. சுக்கில பட்ஷ சதுர்த்தியின் அதிபதியான ‘தேவி’ விநாயகரை வழிபட்டு மத்தியான நேரத்தில் தரிசனம் பெற்று உய்ந்தாள் என்றும், அந்நாளில், அந்நேரத்தில் விநாயரைக் குறித்து விரதம் அனுஷ்டித்து வழிபடுபவர்களுக்கு விநாயகரின் அருளும், சுகபோக சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவது நிச்சயம் என்றும் கூறுவர்.

 #swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #shiva #duraj #omkara

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post பிள்ளையார் பிறந்த சரித்திரம் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.


ஆத்ம ஞானத்தின் திறவுகோல் –ரமண மஹரிஷி

$
0
0

Chennai : பகவான் ரமண மகரிஷி இந்த நூறாண்டின் ஒரு மிக பெரிய மகான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே , பகவான் அறிவுரைகள் அனைத்தும் நம் வாழ்க்கைக்கு முக்கியமான ஓன்றாகும் , இன்றும் பகவான் தன் சூட்சும ரூபத்தில் தனது பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார், பகவானின் அருளுரைகள் ஏராளம் , அதில் ஒன்றான ஆத்ம ஞானத்தை பற்றி பகவான் கூறியதாவது.

ஆத்ம ஞானம் என்பது மிக எளிதாகப் பெறக்கூடிய ஒன்று.ஏனெனில் அதை எங்கேயும் தேடிச் செல்ல வேண்டியதில்லை. அது உன்னிடத்திலேயே உள்ளது. எப்போதும் இருந்து கொண்டே இருப்பது. நீ செய்ய வேண்டியதெல்லாம் வெளியே நோக்குவதை விட்டுஇ விட்டு உள்ளே திரும்பி நோக்க வேண்டும். அவ்வாறு நோக்கஇ நோக்க. நீ உடனே ஒரு பிச்சைக்காரன் என்ற நிலையிலிருந்து சக்கரவர்த்தி என்ற நிலைக்கு உயர்கிறாய்.ஆத்ம சிம்மாசனத்தில் அமர்ந்து ஞான சாம்ராஜ்யத்தை ஆளத்துவங்குகிறாய். நீ செய்ய வேண்டியதெல்லாம் திரும்பி காண வேண்டியதுதான்.அதுவே ஆத்ம ஞானத்தின் திறவுகோல்.

இதுவரை நீ கற்றதெல்லாவற்றையும் மறந்து விடு.உனது புத்திசாலித்தனம்இசாதுர்யம்எல்லாவற்றையும் துறந்துஇஒரு குழந்தை போன்ற தன்மையுடனும்இநம்பிக்கையுடன் உள் நோக்கிச்செல். உன்னைத் தவிர வேறு ஒன்றுமே இப்பிரபஞ்சத்தில் இல்லை. எனவே ஒரு திறந்த இதயத்துடன் ஞானத்தை வரவேற்பாய். இதுவே உண்மையான சிரத்தை உண்மையான அறிதல் என்கிறார் ரமண பகவான்.

நாமும் சற்று நமது சிந்தனையை உள் நோக்கி செலுத்தி மனதை வென்று ஆத்ம ஞானம் பெற முயற்ச்சிப்போம். அதற்கு புற துறவு அவசியம் அல்ல. அக துறவே அவசியம்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #shiva #sivaperuman

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post ஆத்ம ஞானத்தின் திறவுகோல் – ரமண மஹரிஷி appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

அகத்தியரால் தோன்றிய விநாயகர் வணக்கம்

$
0
0

 விநாயகர் வணக்கம் கரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது, யோக சாஸ்திரங்களின்படி, நம் தலையின் இரு பக்கமிருக்கும் அமிர்தமானது சுண்டிவிடப்பட்டு, சுரந்து சுழுமுனாநாடி (தண்டுவடம்) வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிஷேகமாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்குமென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது.

 புராண காலத்தில் ஒரு சமயம் அகத்தியர் பொதிகை மலை வந்து, தவத்திலிருக்க, உலக நன்மைக்காக விநாயகர் காக்கை வடிவம் கொண்டு அகத்தியரின் கமண்டலத்தை உருட்ட, அந்தக் கமண்டலத்திலிருக்கும் நீர் பெருக்காக எடுத்து காவிரி ஆறாக பிரவாகித்தது. தவம் நீங்கிய அகத்தியர், கமண்டலத்தை உருட்டிய காகத்தைக்காண, அது ஒரு சிறுவன் வடிவாக நிற்க, கோபத்தில் அகத்தியர் அச்சிறுவனின் தலையில் குட்டினார். அதன் பின், கோபம் மறைந்து தனது ஞானக் கண் திறக்க அங்கே ஸ்ரீ விநாயகர் நிற்பதைக் கண்டு மனம் பதைத்து மன்றாடினார்.


தலையில் ஒரு முறை குட்டியதற்கு பிராயச்சித்தமாக தனது இரு கைகளாலும் குட்டிக்கொண்டு, நமஸ்காரம் செய்யும் பாவனையில் தனது இரு காதுகளையும் பிடித்துக்கொண்டு அமர்ந்து எழுந்தார். இச்செய்கையில் மனம் மகிழ்ந்த விநாயகர் அவருக்கு பல வரங்கள் தந்து அருளினார். இந்த புராண சம்பவத்தை மையமாகக் கொண்டே பிள்ளையார் குட்டிக்கொள்வது, தோப்புக்கரணம் போடுவது என்பது விநாயகர் வழிபாட்டுக்கு முக்கியமானதாகின்றது.

 #swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #shiva #duraj #omkara

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

 

The post அகத்தியரால் தோன்றிய விநாயகர் வணக்கம் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

எண்ணிய எண்ணம் நிறைவேறும் கொல்லிமலை அறப்பளீஸ்வரர்

$
0
0

 நாமக்கல் மாவட்டத்தில் காடுகள் சூழ்ந்த அறிவிகள் மத்தியின் 1500அடி உயரத்தில் கொல்லிமலையில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.இங்கு சிவபெருமான் அம்பாள் அறம் வளர்த்த நாயகிவுடன் அருள் பாலிக்கிறார். இவரை வணங்கி குளத்தில் உள்ள மீன்களுக்கு பொறி போட்டால் உடல் நலமும் மனநலமும் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

கொல்லிமலையில் அறைப்பள்ளி:

 கொல்லிமலையைப் பற்றி 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்க காலத்து புலவர்களால் புகழப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு மிகுந்த கொல்லிமலையில் அறைப்பள்ளி என்ற பகுதியில் அறப்பளீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அறப்பள்ளி ஈஸ்வரர் என்பதன் மருவுப் பெயரே ‘அறப்பளீஸ்வரர்’ ஆகும். இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் கிடையாது. அதற்கு பதிலாக சிவசக்தி வடிவம் கொண்ட சுதை சிற்பத்துடன் நுழைவு வாசல் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு வாசலைக் கடந்ததும், கொடிமரத்தையும், நந்தியம் பெருமானையும் தரிசிக்கலாம். அதைத் தொடர்ந்து கருவறையில் கிழக்கு நோக்கிய நிலையில் சுயம்பு வடிவான அறப்பளீஸ்வரர் காட்சி தருகிறார்.

மண்ணுக்குள் சிவலிங்கம்:

 இந்தப் பகுதியில் ஒருவர், விவசாயப் பணிக்காக மண்ணை உழுது கொண்டிருந்தார். அப்போது உழவுக் கலப்பை மண்ணில் புதைந்திருந்த சிவலிங்கத்தின் மீது பட்டது. இதனால் நிலத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த விவசாயி, ரத்தம் வந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது மண்ணுக்குள் சிவலிங்கம் ஒன்று இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த லிங்கத்தை அந்தப் பகுதியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். இப்போதும் சிவலிங்கத்தின் மீது உழவுக் கலப்பை பட்டு காயம் ஏற்பட்ட தடம் காணப்படுவதாக கூறுகிறார்கள். இத்தல அம்பாள் அறம் வளர்த்த அன்னை என்றும், தாயம்மை என்றும் அழைக்கப்படுகிறார். தெற்கு நோக்கி நின்ற நிலையில் அருள்பாலிக்கும் அன்னையை வணங்கினால், எண்ணிய எண்ணம் அனைத்தும் நிறைவேறும்.

‘கொல்லிமலை குமரா’

 ஆலயத்தின் சுற்றுப் பிரகாரத்தில் பொலிவுடன் விளங்கும் தனி சன்னிதியில், அம்பாளை பார்த்தவாறு வடதிசை நோக்கி முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். வள்ளி– தெய்வானை சமேதராக மயில் வாகனத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப்பெருமான், அருணகிரிநாதரால் புகழப்பட்டவர். ‘கொல்லிமலை மேல்நின்ற பெருமாளே’ என்று முருகனை அருணகிரிநாதர் பாடுகிறார். கந்தகுரு கவச பாடலில் ‘கொல்லிமலை குமரா’ என்று அழைக்கப்படுபவரும் இந்த முருகப்பெருமானே என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தென்மேற்கு மூலையில் விநாயகரும், அவருக்கு அருகில் காசி விசுவநாதரும், விசாலாட்சி காட்சி தருகின்றனர். லட்சுமி, சரஸ்வதி தனித்தனி சன்னிதிகள் உள்ளன. ஆலயத்தின் தேவ கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், வடபுறம் துர்க்கையும்  எதிரில் சண்டிகேஸ்வரர் காட்சி தருகிறார். ஆலயத்தில் நவக்கிரக சன்னிதியும் உள்ளது.

 அறப்பளீஸ்வரரே இங்கு மீன் வடிவமாக கோரக்கர் முதலான சித்தர்கள் பலரும் தவம் செய்த பூமியாக விளங்குவது கொல்லிமலை. இங்கு இன்னும் சித்தர்கள் அருவமாக வந்து சிவபெருமானை வழிபட்டுச் செல்வதாக நம்பிக்கை நிலவுகிறது. குளங்களும், நதிகளும் தீர்த்தமாக உள்ள சிவாலயங்களை நாம் தரிசித்திருக்கிறோம். ஆனால் இந்தத் தலத்தில் 150 அடி உயரத்தில் இருந்து அருவியாய் குதித்தோடி வந்து ஐந்து நதிகளின் கூடலாக சேரும் தீர்த்தம் வேறெங்கும் இல்லாத சிறப்பு. இந்த மூலிகை குளத்தில் மூழ்கி இறைவனை வழிபட்டால் நமது உடல் நலமும், மன நலமும் சிறப்பாக இருக்கும். இந்த ஐந்து நதிகளின் கூடலில் வண்ண வண்ண மீன்கள் துள்ளிச் செல்லும் அற்புதக் காட்சியைக் காணலாம். அறப்பளீஸ்வரரே இங்கு மீன் வடிவமாக இருப்பதாக நம்பிக்கை உள்ளது. எனவே இங்குள்ள மீன்களுக்கு பொரி போன்ற உணவுகளை வழங்கி விட்டுத்தான், பக்தர்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்கிறார்கள்.

 நாமக்கல்லில் இருந்து, மலை மீது 70 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய 42 கிலோமீட்டர் தூரத்தை கடந்து கொல்லிமலையை அடையவேண்டும்.

தொடர்புக்கு :

       எஸ்.குமார் – 9442805327

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #shiva #duraj #omkara #kollimalai #arappaleeshvarar

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post எண்ணிய எண்ணம் நிறைவேறும் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

பில்லி, சூனியம், ஏவல், நீங்க சரபேஸ்வரர் வழிபாடு

$
0
0

சரபேஸ்வரர் அவதார நோக்கம் என்ன? அவரை வணங்குவதால் என்ன பலன்கள் என்று காண்போம்..

ஹிரண்யனை வதம் செய்வதற்காக நரசிம்மர் அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு , வதம் முடிந்த பின்னரும் தன்னுடைய உக்கிரத்தை அடக்க முடியாமல், இருக்க அவன் மார்பில் வாசம் செய்யும் அந்த “ஸ்ரீ” கூட நரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் தவித்தாள். அண்ட சராசரங்களும் நடுங்கின அவரின் கோபத்தில். செய்வதறியாது திகைத்த தேவாதி தேவர்கள் சிவபெருமானைச் சரணடைய அவர் தான் ஒருத்தன் தான் இவரை அடக்கவல்லவன் என்று சொல்லி சரபரின் தோற்றத்தில் உருமாறியதாகக் காளிகா புராணம் சொல்லுகிறது.

 இந்த சரபரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார். இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள்.

 சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் “பட்சிகளின் அரசன்” என்றும் “சாலுவேஸ்வரன்” என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர். இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா, மற்றும் சூலினி. இதில் தேவி பிரத்யங்கிரா சரபரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன. காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது. லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது.

 எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள்.

 இவரைக் “கலியுக வரதன்” என்றும் குறிப்பிடுகிறார்கள். “நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி” என்றும் குறிப்பிடுகின்றனர். தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும் சொல்கின்றனர். பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சரபரின் சிற்பங்கள் காணப் படுகிறது. இதில் திருபுவனம் கோவிலில் தனி சன்னதி இருக்கிறது.  சிதம்பரம் கோவிலில்  தனிச் சன்னதி உள்ளது.  ஞாயிற்றுக் கிழமை , தின பிரதோஷ நேரம் வரும் ராகு கால வேளையில் – சரபேசர் வழிபாட்டில் , கலந்து கொள்ளுங்கள்… ஞாயிற்று கிழமை – பிரதோஷம் வந்தால் , தவறாமல் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்..  அபரிமிதமான பலன்கள் ஏற்படும்..

 திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் , நவக்கிரக சந்நிதி அருகில் – சரபேசர் சிலை , தூணில் உள்ளது… மஞ்சள் அல்லது சந்தன காப்பு அணிந்து நீங்கள் வேண்டினால், கேட்டது கிடைக்கும்.. சரபேசரை வணங்கினால் வியாதிகள், மனக்கஷ்டங்கள், கோர்ட் விவகாரங்கள், பில்லி, சூனியம், ஏவல், மறைமுக எதிரிகள் தொல்லை, திருஷ்டி தோசங்கள், சத்ரு தொல்லைகள், ஜாதக தோசங்கள், கிரக தோசங்கள் அனைத்தும் நீங்கும்.

 கல்வி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி , மனம் விரும்பும் படியான வாழ்க்கை, உத்தியோக உயர்வு போன்ற நினைத்த காரியங்கள் கைகூடும்.குழந்தை பேறு கிடைக்கும் கடன் தொல்லை நீங்கும். சுவாமி கம்பகேசுவரரை வணங்குவோர்க்கு நடுக்கங்கள், நரம்புதளர்ச்சி,தேவையற்ற பயம், மூளை வளர்ச்சியடையாமல் இருத்தல் ஆகிய பிரச்சினைகள் நீங்கி ஆயுள் விருத்தி, நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். அம்பாள் தருமத்தை வளர்த்து காப்பவள் என்பதால் அவளை வணங்குவோர்க்கு பாவங்கள் நீங்கப் பெறும்.பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.குழந்தை பாக்கியமும் கிடைக்கப்பெறுவார்கள்

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #shiva #duraj #omkara #sarabeshwarar

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post பில்லி, சூனியம், ஏவல், நீங்க சரபேஸ்வரர் வழிபாடு appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

விநாயகர் சதுர்த்தி வழிபாடும் அதன் முறைகளும்

$
0
0

 பிரணவமே வேதத்தின் மூலம். ஓம் என்ற ஒலியின் வடிவமே விநாயகர். எனவே பிரணவப் பொருள் என்று விநாயகரை  அழைக்கிறோம். ஈஸ்வரனின் மகனான விநாயகர் பூதகணங்களின் தலைவரும் ஆவார். அதனால் அவருக்கு கணபதி என்ற பெயரும் உண்டு. தேவர்களுக்கு துன்பம் கொடுத்த கஜமுகன் என்ற அரக்கனை  அழிப்பதற்காக சிவபெருமான் அருளால் விநாயகப் பெருமான் அவதரித்தார். விநாயகர் கஜமுகனுடன் போர் புரிந்தார். அவன் ஆயுதங்களால் அழியாத  வரம் பெற்றவன்.. விநாயகர் தனது வலக் கொம்பை ஒடித்து சிவமந்திரத்தை உச்சரித்து ஏவ, அது கஜமுகனை சாய்த்தது. அவன் பெருச்சாளி வடிவில்  எதிர்த்து வந்தான். விநாயகர் அவன் மீது கருணை புரிந்தார். அவன் அறியாமை அகன்றது. விநாயகரை வணங்கி நின்றான். விநாயகர் அவனை தன் வாகனமாக்கி அருள்புரிந்தார்.இதிகாச காவியமான மஹாபாரதத்தை தனது தந்தத்தை எடுத்து எழுதியதன் வாயிலாக விநாயகப் பெருமானே எழுத்துக்கலைக்கு வித்திட்டவர் ஆகிறார்.

 பிள்ளையார் சுழி :
எழுதத் தொடங்கும் முன் பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் சுழியும் –ஆதியும் அந்தமும் அவரே, தும்பிக்கையை நினைக்கவைக்கும் கோடும் – இணைந்து “உ” எனும் பிள்ளையார் சுழி உருவானது. பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடிந்துவிடும் என்பது ஆன்றோர் வாக்கு.

விநாயகர் சதுர்த்தி வழிபடும் முறைகள்:

 மஞ்சள் பொடியிலும், மண்ணிலும், சாணத்திலும் விநாயகரை பிடித்து வழிபடலாம். அருகம்புல், பூ, எருக்கம்பூ, விபூதி, குங்குமம், சந்தனம் போன்றவற்றால் அலங்கரிக்க வேண்டும். கொழுக்கட்டை பிரசாதம் மிகவும் பிடிக்கும். அவல், பொரி, வெல்லம், கடலை, பழம், தேங்காய், எள் உருண்டை முதலியன விநாயகருக்கு விருப்பமான பிரசாதமாகும். தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா, அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார்.
விநாயகர் சதுர்த்தி அன்று விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கி வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி , இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைத்து , பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மனையை வைக்க வேண்டும். 
அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும் , இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.

 
பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம். பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம். அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம். உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.

 
விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி.
பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம். பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #shiva #duraj #omkara #ganapathideva

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post விநாயகர் சதுர்த்தி வழிபாடும் அதன் முறைகளும் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

இருபத்தியேழு நட்சத்திரங்களும் அதற்குண்டான தெய்வங்களும்

$
0
0

ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்கள், பனிரெண்டு ராசிகள் உள்ளன. ஜோதிட சாஸ்த்திரத்தில் மிக மிக முக்கியமானது நட்சத்திரம் ஆகும். பஞ்ச அங்கங்களில் நட்சத்திரமும் ஒன்றாகும். ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஒவ்வொரு நட்சத்திரம் அமையும். . நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது. நமது நட்சத்திரத்திற்கும் வாழ்விற்கு தொடர்பு உள்ளதாக ஜாதக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள்.

எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த தெய்வத்தினை வழிபாட்டால் திர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பதை பற்றி காணலாம்.

அஸ்வினி – ஸ்ரீ சரஸ்வதி தேவி

பரணி – ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)

கார்த்திகை – ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)

ரோகிணி – ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு)

மிருகசீரிடம் – ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)

திருவாதிரை – ஸ்ரீ சிவபெருமான்

புனர்பூசம் – ஸ்ரீ ராமர் (விஷ்ணு)

பூசம் – ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)

ஆயில்யம் – ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)

மகம் – ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)

பூரம் – ஸ்ரீ ஆண்டாள் தேவி

உத்திரம் – ஸ்ரீ மகாலக்மி தேவி

ஹஸ்தம் – ஸ்ரீ காயத்திரி தேவி

சித்திரை – ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

சுவாதி – ஸ்ரீ நரசிம்மமூர்த்தி

விசாகம் – ஸ்ரீ முருகப் பெருமான்

அனுசம் – ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்

கேட்டை – ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)

மூலம் – ஸ்ரீ ஆஞ்சனேயர்

பூராடம் – ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)

உத்திராடம் – ஸ்ரீ வினாயகப் பெருமான்

திருவோணம் – ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு)

அவிட்டம் – ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு)

சதயம் – ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)

பூரட்டாதி – ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)

உத்திரட்டாதி – ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)

ரேவதி – ஸ்ரீ அரங்கநாதன்

அந்தந்த நட்சத்திரக்கு உரியவர்கள் தங்களுக்குரிய தெய்வங்களை வணங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறலாம் என ஜாதகபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #shiva #duraj #omkara #sarabeshwarar

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post இருபத்தியேழு நட்சத்திரங்களும் அதற்குண்டான தெய்வங்களும் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

முருகனின் கையில் இருக்கும் வேலின் மகத்துவம்

$
0
0

 வேல் வெற்றிக்கும், அறிவுக்கும் அடையாளமாகத் திகழ்கிறது. வேல் நடுவில் அகன்றும், உருவில் நீண்டும், முனையில் கூர்மையாகவும் இருக்கிறது. இதுபோல் இகபர வாழ்வில் மனிதன் சிறந்தோங்க அகன்ற, ஆழ்ந்த, கூர்மையான அறிவுடையவனாக இருக்கவேண்டும்.

 முருகன் கையில் இருக்கின்ற வேல் அவனை நம்பி வணங்குகின்றவர்களுக்கு அறிவையும் ஆற்றலையும் அளித்து அவர்களின் பகைவர்களையும் அழித்து அருள்புரியும். கூவுகின்ற கோழி நாத வடிவானது. கோழிக் கொடி வெற்றியின் சின்னமாக விளங்குகின்றது. அழகிய மயிலின்மிசை வீற்றிருக்கின்றான் முருகன்.மயில் மனத்தின் சின்னம். பரிசுத்தமான, அழகான உள்ளம் தான். இறைவனின் உண்மையான கோயில் என்பதனை மயில் வாகனம் விளக்குகிறது. பாம்பின் மீது மயில் நிற்பது முருகன் எல்லா சக்திகளையும் ஆட்சி செய்கின்றான் என்பதைக் காட்டுகிறது.

 கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம்பற்றி கூறப்பட்டுள்ளது வேல் விடுமினையோன், திறல்வேலன், வேல் கொண்டன்று பொருதவீரன்,துங்கவடிவேலன், ப்ரசண்ட வடிவேலன், வேல் தொட்ட மைந்தன், அசுரர் தெறித்திட விடும் வேலன் என பலவாறாக முருகனைப் புகழ்ந்துரைக்கும் அருணகிரியார். வேலைப்பற்றித் தனித்தனியாகப் பாடிய ஒரே முருக பக்தரும் புலவருமான அருணகிரியார் வேலானது இருளினை அகற்றக்கூடிய சுடரொளிகளான தீ, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இயற்கைச் சக்திகளை விளக்கக் கூடிய குறியீடெனக் குறிப்பிட்டுள்ளார்.

வேலின் பெருமை

வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட

தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், – வாரி

குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்

துளைத்த வேல் உண்டே துணை

– இது திருமுருகாற்றுப்படையை ஒட்டி எழுந்த பின்னாளைய வெண்பா !

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #murugan

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post முருகனின் கையில் இருக்கும் வேலின் மகத்துவம் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.


சகல விதமான சத்துருக்கள் தோஷம் நீக்கும் ஆறுமுக பெருமான்

$
0
0

எல்லாம் வல்ல பரம்;பொருள் காலத்தின் நலங்கருதி வையகத்தை ஆட்கொள்ள புதிய உருக்கொண்டு உலகில் உதயமாவதையே அவதாரம் என்கிறோம். இறைவன் மேலிருந்து கீழ் இறங்கும் அந்த அவதாரம் முழுமையாகவும், அவன் இயல்களைக் கொண்ட அம்ச அவதாரமாகவும் அமைவதுண்டு. இறைவளின் இந்த இனிய வருகையை இன்ப வருகையாம் மூவுலகும் போற்றும் முருகனின் வருகையோ பரம் பொருளின் முழுமையான வருகையாம்.

muruganஆறுமுகம் தாங்கி 12 கரத்துடன் மயிலர் வாகனத்தையும், தண்டாயுதத்தையும் சேவல் கொடியும் கொண்டு கருணை வள்ளலாக அவதாரம் செய்து கண்கண்ட தெய்வமாகி,

தருணம் அறிந்து தன்னருள்பாலிக்கும் தனித்தெய்வம். கால்கொண்ட துன்பத்தை வேல்கொண்டு போக்கி அருள்பாலிக்கும் தெய்வம்.

அரோகரா வார்த்தை சொல்லி ஆர்ப்பரிக்கும் அனைவரையும் அகமகிழ்வு கொள்ளவைக்கும் ஆனந்தத் தெய்வம். அவன் புகழ் அளவிடற்கரியது. நீர், நெருப்பு, மண், ஆகாயம் காற்று என்னும் ஐந்தையும் ஐம்பூதங்கள் என்கின்றோம். ஐம்பூதங்களும் மனிதனின் உடலில் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலனாய் உள்ளன. ஆத்துடன் மனிதன் ஆறாம் அறிவாகிய பகுத்தறிவையும் பெற்றுள்ளான். இந்த ஆறு அறிவை உணர்த்தவே முருகன் ஆறுமுகத்துடன் ஆறுமுகப் பெருமானாய் விளங்குகிறான். இவருக்கு உலகிலேயே மிக உயரமான வரலாற்று சிறப்புமிக்க 81 அடி விஸ்வரூப ஆறுமுகப்பெருமான் அருள்பீடத்தைத் தரிசிப்போம். அருள் பெறுவோம்.விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் திருக்கோவிலூர் திருவண்ணாமலை கூட்டு சாலை சேருமிடத்திற்கு அருகில் (சு.குளத்தூர்) சரவணபுரத்தில் சர்வ சத்துரு சம்ஹார பரிகார பீடம் அமைந்துள்ளது. 81 அடி உலகளாவிய விஸ்வரூப ஆறுமுகப்பெருமான் அருட்பார்வை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஸ்தல விருட்சமாய் அத்திமரம் விளங்குகிறது.

லிங்க வடிவிலான பீடம்

www.swasthiktv.com

வேப்பமரத்து நிழல் நம் திருமேனியில் தென்றலாய் வீச நுழைகின்றோம் ஆலயத்தின் நுழைவாயிலில், நுழைந்தவுடன் உள்ளம் உருகி பக்தியால் வணங்கும்போது ஆன்மீக அதிர்வலைகள் நம் மனதில் தானாக எழும்புகிறது. நுழைவு வாயிலைக் கடந்து இடது புறத்தில் 16 அடி உயரமுள்ள லிங்க வடிவிலான பீடம். அதனடியில் லிங்கேஸ்வர கணபதி நம் கவலையைப்போக்கிஅ ருள்பாலிக்கிறார். இவரை வலம் வருகிறபோது வாழ்க்கை சிறக்க குரு தட்சழணாமூர்த்தியைக் காணக்கிறோம். கந்தனை எண்ணியவாறு உள்ளே செல்கிறோம். வான்ளாவிய விஸ்வரூப ஆறுமுகத்துடன் பனிரெண்டு கைளால் பக்தர்களைக் காத்து ஆறு திசைகளிலும் தன் அருட்பார்வையை நமக்கு அளிக்கின்றார். நாம் மனம் உருகி வேண்டினால் விளைநீக்கி விடியலைத் தந்து சத்துரு பிரச்சினைகளைப் போக்கி சந்தோஷம் அளிக்கும் சரவணபுரமாய் திகழ்கிறது. 81 அடி உயரத்திலிருந்து அபிஷேகம் தீர்த்தம் நம் சிரசு மீது கொட்டும் பாவம் தொலையும் புண்ணியம் கிடைக்கும்.

www.swasthiktv.comகருவறையில் பலமாநில மடாதிபதிகளால் வேதபாராயணங்கள் சரவணபவ மூல மந்திரங்களால் உருவேற்றப்பட்ட பீடத்தில் 6 அடி உயர சக்திவாய்ந்த ஆறுமுகப் பெருமான் வேலோடும், சேவல் கொடியோடும் காட்சியளித்து கருணை பொழிகிறார். கருவறையில், முருக உபாசகரும், ஸ்தாபகருமான ஸ்ரீ ஆறுமுக அடிகளார் விடியல் சின்னத்தம்பி ஸ்வாமிகளே அவரது திருக்கரங்களால் அபிஷேகம் ஆராதனை நித்திய பூஜை நடைபெறுகிறது. மலைபோல் தோற்றமுள்ள குகைக்குள் 102 அடி வலம் வருகிறது போது 16 செல்வங்களை வழங்கும் வகையில் 16 வகை அவதார முருகப் பெருமானை காணலாம். முருகன் ஆலயத்தில் வேறு எங்கும் காணாத வகையில் ஸ்ரீ வராகி அம்மன் ஸ்ரீ பிரித்தியங்கிரா தேவி, ஸ்ரீ சர்வேஸ்வரர், ஸ்ரீ பூவராகவர், ஸ்ரீ வீர ஆஞ்சனேயர், ஸ்ரீ அய்யப்பன், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ குருலிங்கம், ஸ்ரீ இடும்பன், ஸ்ரீ கடம்பன், ஸ்ரீ அருள்சக்தி அம்மன், ஸ்ரீ விஷ்ணு துர்க்கை, தம்பதிகளோடு நவகிரக பீடம், அருள்ஜோதி வள்ளலார், ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் ஆகிய தெய்வங்கள் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றன.

சூட்சம வடிவத்தில் பல சித்தர்கள்

இந்தபீடம் சர்வ சத்துரு சம்ஹார பரிகார ஸ்தலம்  – ஒவ்வொரு மாத கிருத்திகைதோறும் சர்வதோஷ நிவாத்தி வேள்வி பக்தர்களுக்காக பக்தர்களே நடத்தும் சிறப்பு வேள்வி நடைபெறுகிறது. அன்று இரவு சூட்சம வடிவத்தில் பல சித்தர்கள் பீடத்தை வலம் வருகிறார்கள். அப்போது பலவகையான மூலிகைகளின் ரம்மியமான வாசனைகளை பக்தர்கள் உணர்கிறார்கள். இந்த வேள்வியில் கலந்துகொண்டு சகலவிதமான சத்துருகள்-சங்கடங்கள் நீங்கி திருமணத்தடை, குழந்தைப்பேறு இல்லாமை, வியாபாரத்தில் நஷ்டம், குடும்பப் பிரச்சனைகள், கணவன் மனைவி ஒற்றுமையின்மை, பித்ரு தோஷம் சர்வ தோஷம் நீங்கி அனைத்து விதமான நன்மைகளும், பலன்களும் கிடைத்து தொழிலில் ஏற்றம், புதிய வீடு, வானக அமைப்புகள், கல்வி கேள்விகளில் தேர்ச்சி போன்ற நற்பலன் கிடைக்கும். ஆறு கிருத்திகை அல்லது ஆறு சஷ்டி அல்லது ஆறு செவ்வாய்க்கிழமை தொடர்ந்து தரிசனம் செய்தால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் என்பது ஜதீகம்.

திருவிழாக்கள்

பங்குனி உத்தரம்-தைப்பூசம்-வைகாசி விசாகம்-ஆடிக்கிருத்திகை-போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனையும் காவடி ஊர்வலமும்-திருத்தேர் பவனியும் அன்னதானமும் நடைபெறுகிறது. அனைத்தும் அறிவான், ஆதரவு தருவான், ஆறுமுகப் பெருமான், சத்துருகளை நீக்குவான், சந்தோஷம் அளிப்பான், சரவணபுரத்தான்.

ஆமைவிடம்

விழுப்புரம் மாவட்;டம் சங்கராபுரத்தில் இருந்து திருக்கோவிலூர், திருவண்ணாமலை கூட்டு சாலையில் (சு.குளத்தூர்) சரவணபுரத்தில் உள்ளது.

தொடர்புக்கு : ஸ்ரீ ஆறுமுக அடிகளார் விடியல் சின்னத்தம்பி சுவாமிகள்

9443398068, 9677936607.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #murugan

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post சகல விதமான சத்துருக்கள் தோஷம் நீக்கும் ஆறுமுக பெருமான் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

ஸ்ரீ சக்கரத்தின் மகிமைகள்

$
0
0

  எந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீசக்கரம் என்பது ஆன்றோர் வாக்கு. ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம், மனித குலத்துக்கு சங்கரரின் அருள்கொடை. காஞ்சி காமாட்சியம்மன் கோயில், திருவானைக்காவல், திருவொற்றியூர் போன்ற எண்ணற்ற தலங்களில் இந்த ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

 மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் உபாயமே ஸ்ரீசக்கரம். உலகை ரட்சிக்கும் நாயகியான ராஜராஜேஸ்வரி மகாமேருவில் உறைபவள். மகாமேருவின் உருவையே ஸ்ரீசக்கரத்தில் பொறிக்கிறார்கள். மகாசக்தியை மந்திரம், எந்திரம், தந்திரத்தால் வழிபடுவர். இம்மூன்றும் முக்கோணத்தின் மூன்று மூலைகள். அன்னையின் அருளைப் பெற, ஸ்ரீசக்கர வழிபாடே சிறந்தது என்கிறது தேவி புராணம்.

மூன்றின் பலம்

 முக்காலங்கள், மும்மூர்த்திகள் அனைத்தும் அன்னையின் அமைப்புகளே. இதன்பொருட்டே திரிபுரசுந்தரியை மகாமேரு என்னும் மந்திரம், எந்திரம், தந்திரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்தின் மூலம் வழிபடு கின்றனர். அனைத்து விதமான சக்கரங் களுக்கும் தலையாயது இந்த ஸ்ரீசக்கரம். அதன்பொருட்டே ஸ்ரீசக்கரத்தினை `ஸ்ரீசக்கர ராஜ’ என்றே ஆன்மிகத்தில் சிறந்த மகான்கள் குறிப்பிடுவர். ஒன்பது நிலைகளைக் கொண்ட ஸ்ரீசக்ரத்தினைப் பூஜிக்கும் முறை நவா ஆவரணம் என அழைக்கப்படும்.

முதல் ஆவரணம்:

   இந்த ஆவரணத்தின் கிரகமாக வியாழ பகவான் விளங்குகிறார். முதல் ஆவரணத்தை வணங்குபவர்களுக்கு எல்லா செல்வங்களும் நிலைக்கும். தடைகள் நீங்கும். புத்தி பலம் கூடும்.

இரண்டாவது ஆவரணம்:

   பதினாறு யோகினிகள் வாசம் செய்யும் தாமரைப் பூ ரூபம் இது. மனதின் தீய எண்ணங்கள் நீங்கும். அகம் தூய்மையாகும்.

மூன்றாவது ஆவரணம்:

 பூஜிப்பவரின் மனதை ஒருமுகப்படுத்தும் தேவதைகள் எட்டு தாமரை இதழ்களில் வாசம் செய்வதாக ஐதீகம். இவர்கள் பக்தியின் மேன்மையை பக்தர்களுக்கு அளிப்பவர்கள்.

நான்காவது ஆவரணம்:

   இந்த ஆவரணத்தில் 14 யோகினிகள் வாசம் செய்கின்றனர். சந்திரன் வடிவில் அன்னை காட்சி தருவாள். புத்திர பாக்கியத்தை அளிக்கும் ஆவரணம் இது.

ஐந்தாவது ஆவரணம்:

   பத்து கோணங்களில் பத்து யோகினிகள் வாசம் செய்கின்றனர். உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் தரும்.

ஆறாவது ஆவரணம்:

   அன்னை சூரியனின் உருவில் இருக்கும் ஆவரணம் இது. பொறாமை இருளை அகற்றி, அருளின் ஒளியை ஏற்ற உதவும்.

ஏழாவது ஆவரணம்:

   புதன் கிரகம் அமையப்பெற்ற ஆவரணம். இந்த ஆவரணத்தை பூஜிப்பதின் மூலம் ஆத்ம ஞானம் பெருகும்.

எட்டாவது ஆவரணம்:

  மகா திரிபுரசுந்தரியாக அன்னை வீற்றிருக்கும் ஆவரணம் இது. அங்குசம், பாசம், கரும்பு வில் மற்றும் பாணம் ஆகிய அம்பாளின் நான்கு ஆயுதங்கள் இந்த ஆவரணத்தில் வழிபடப்படுகின்றன.

ஒன்பதாவது ஆவரணம்:

 பேரின்பத்தை நிலைபெறச் செய்யும் ஆவரணம் இது. அர்த்தநாரீஸ்வரர் வீற்றிருக்கும் இந்த ஆவரணத்தைப் பூஜிப்பதின் மூலம் சகல நன்மைகளும் ஏற்படும்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #amman

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post ஸ்ரீ சக்கரத்தின் மகிமைகள் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

பன்னிரண்டு ராசிக்காரர்களின் தோஷம் நீங்க பைரவரை வணங்கும் முறை

$
0
0

 கஷ்டமான நேரங்களில் நாம் மனதை ஒருமுகப்படுத்தி நினைத்தாலே போதும், பைரவர் ஓடோடி வந்து உதவுவார்.கடவுளை வழிபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்றுதான் வழிபடுகிறார்கள். வெகு சிலரே வீடு பேறாகிய முக்தி வேண்டும் என்று கடவுளை உருகி, உருகி நினைப்பதுண்டு.

 பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். காலம், காலமாக உள்ள இந்த உண்மையை சமீபகாலமாகத்தான் மக்கள் முழுமையாக உணர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். எல்லா கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர் இவர்தான். சிவபெருமானின் அம்சமாக பைரவர் கருதப்படுகிறார்.ஈசனின் மகனாகவும் புராணங்கள் இவரை குறிப்பிடுகின்றன. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்து கோடானு கோடி மக்களை இவர் காத்து வருகிறார். இதற்காக இவருக்கு திரிசூலம் ஆயுதமாக வழங்கப்பட்டுள்ளதாம். இதனால்தான் “பைரவர் வழிபாடு கைமேல் பலன்” என்ற பழமொழி ஏற்பட்டது.

“பைரவா….” என்று மனதுக்குள் நினைத்த பாத்திரத்தில் அவர் நம்முன் வந்து நிற்பார். அவருக்கு நாம் பூஜை செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, கஷ்டமான நேரங்களில் நாம் மனதை ஒருமுகப்படுத்தி நினைத்தாலே போதும், பைரவர் ஓடோடி வந்து உதவுவார். பைரவர் பற்றற்ற நிலையில் நிர்வாணமாக, நீல நிற உடலமைப்புடன் இருப்பவர்.எனவே எல்லாரும் அவரைத் தொட்டு வணங்கக் கூடாது. அவர் பாதங்களில் பூக்களைப் போட்டு வழிபடலாம். பைரவர் மொத்தம் 64 வடிவங்களில் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அந்த 64 வடிவங்களில் கால பைரவர் தனித்துவம் கொண்டவராகக் கருதப்படுகிறார்.

 கால பைரவருக்கு தனிக்கோவில் கட்டக் கூடாது என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதனால் சில தலங்களில் மட்டுமே கால பைரவ வழிபாடு உள்ளது. தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் 9-ம் நூற்றாண்டில் அரசர் அதியமான் கட்டிய கால பைரவர் கோவில் உள்ளது.

  அஷ்டமி நாட்களில் பைரவரை வணங்க உகந்த நாளாகும். பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்த உளுந்து வடை மற்றும் வடையை மாலையாக சாற்றுதல் மற்றும் வெண் பூசணிக்காய் வெட்டி பலியிடுதல், எலுமிச்சை சாதம் படைத்தல் போன்றவைகள் ஸ்ரீபைரவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும்.

 பால், இளநீர், தேன் இவற்றால் யந்திரத்தை அபிஷேகம் செய்து, பீடத்தில் சந்தனம், குங்குமம் வைத்து சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து, கிழக்கு முகமாக அமர்ந்து தினம் 1008 வீதம் ஜெபித்து பூஜிக்க வேண்டும். சுண்டல், வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், நிவேதனம் செய்ய வேண்டும். இது ஆயுஷ்ய யாகத்திற்கு நிகரான பலனைக் கொடுக்கும். இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும். பைரவரின் உடம்பில் நவக்கிரகங்களும், அனைத்து ராசிகளும் அடங்கியுள்ளன. எனவே மேஷ ராசிக்காரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும். மேஷம் தலை ,ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.

 நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமானால் விளக்கினை கால பைரவர் சன்னதியில் ஏற்றிவிட்டு கோவிலினை 18 சுற்றுகள் அல்லது 8 சுற்றுகள் சுற்றி வர வேண்டும். இந்த வழிமுறையினை 12 ஞாயிற்று கிழமை, 3 தேய்பிறை அஷ்டமி தினங்களில் கடைபிடித்தால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும். குழந்தை பாக்கியம் இல்லாத கணவன்-மனைவியர் ஆறு தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிகப்பு அரளியால் பைரவ சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பைரவர் திருமேனியின் முன்னாள் மிளகை சிறுதுணியில் சிறுமூட்டையாக கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்தால் இழந்த பொருளும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும். வளர்பிறை அஷ்டமியில் சதுர்கால பைரவருக்கு சொர்ண புஷ்பம் அல்லது 108 ஒரு ரூபாய் காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை அலுவலகம் அல்லது வீட்டில் உள்ள பணப்பெட்டியில் வைத்து பூஜித்து வந்தால் செல்வம் குறையாது.

 செழிக்கும். சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் எல்லாம் உடனே நீங்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும், திருமணம் கைகூடும். 6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.

 இவ்வளவு பெருமைகளையும் அருட்திறனும் கொண்டு விளங்கும் பைரவரை சிவாலயங்களிலும் தனி ஆலயங்களிலும் கண்டு வழிபடலாம்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #bairavar

  Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post பன்னிரண்டு ராசிக்காரர்களின் தோஷம் நீங்க பைரவரை வணங்கும் முறை appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் 23 வகையான இலைகளைக் கொண்டு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது.

$
0
0

  வேலுார் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று காலை  விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு  மஹா கணபதி ஹோமமும் 23 வகையான இலைகளை கொண்டு சிறப்பு அர்ச்சனையும்  நடைபெற்றது. 13 ஆண்டுகளுக்கு முன்பு தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறுங்கும் இல்லாத வகையில் நான்கடி உயரத்தில் சிம்ம பீடத்தில் ஓரே கல்லில் ஓரு புறம் வினைதீர்க்கும் விநாயகர், மறுபுறம் பீணிதீர்க்கும் தன்வந்தரி வடிவமைக்கப்பட்டு அவ்வப்போது கணபதிக்குரிய கணபதி ஹோமமும் சிறப்பு அபிஷேகமும்  நடைபெற்று வருகிறது…சமீபத்தில் 1,32 ஆயிரம் மோதகங்களை கொண்டுவாஞ்சாகல்ப கணபதி ஹோமம் சிறப்பாக நடைப்பெற்றது.

  இன்று காலை 10.00 மணியளவில்  விநாயகர் சதூர்த்தியை முன்னிடடு, கர்ம வினைகள் தீரவும், காரியங்கள் சித்தி பெறவும், பிராத்தனைகள் நடைபெறவும் மகாகணபதி ஹோமம், நடைபெற்றது..

இலைகளின் பெயர்கள் :

 முல்லை இலை, கரிசலாங்கண்ணி இலை, வில்வம் இலை, அருகம்புல், இலந்தை இலை,ஊமத்தை இலை, வன்னி இலை, நாயுருவி , கண்டங்கத்தரி, அரளி இலை, எருக்கம் இலை,மருதம் இலை, விஷ்ணுகிராந்தி இலை, மாதுளை இலை, தேவதாரு இலை, மருக்கொழுந்து இலை, அரசம் இலை, ஜாதிமல்லி இலை, தாழம் இலை, அகத்தி இலை, தவனம் இலை,தும்பை இலை, குண்டுமணி இலை ஆகும்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #danvantri

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் 23 வகையான இலைகளைக் கொண்டு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

Ayurveda for Asthma and Respiratory disorders – By Dr.Gowthaman Krishnamoorthy

$
0
0

 Respiration is life. Through respiration body gets the required oxygen and removes the unwanted CO2.

 Anatomy of Human respiratory tract – Basically divided into two, upper and lower. Upper respiratory tract includes of Nasal passage, Pharynx, Larynx and Sinus glands. Lower respiratory tract includes trachea, Bronchi and lung as whole. Common diseases affects the respiratory tract are cold, sinusitis, flu, cough, whooping cough, bronchitis, Asthma, tonsillitis, hiccough, Tuberculosis and pneumonia etc.

Common conditions

  1. Cold – Usually bacterial or viral with common symptoms like Sneezing, running nose, cough, head ache, body ache, fever. In Ayurveda, it is termed as ‘Pratishyaya’
  2. Sinusitis – Inflammation of sinus glands. Most cases sinusitis can lead to asthma or connected to Asthma. Common symptoms includes Head ache, tenderness over head, eyes, water or purulent discharges from nose, nasal blocks, bad breath, facial pain, sore throat, swelling around the eyes and early morning and continuous sneezing
  3. Tonsillitis – Inflammation of Tonsils, common in children
  4. Cough- Reflex or sudden explosive movement to bring out the foreign body is termed as cough. Usually any respiratory disorder is connected with cough. It is of two types. Wet and Dry cough.
  5. Whooping Cough – It is a deadly bacterial infectious disease. Children are mostly affected. Symptoms starts with running nose, sneezing, watery eyes, throat pain or irritation, fever and cough. Later stages cough turns persistent and becomes continuous.
  6. Bronchitis – It is the common condition affects all age groups especially children due to external irritants and infections (Viral and Bacterial). This condition is associated with fever, clear or purulent sputum, vomiting etc. Repeated bronchial infection could lead to emaciation, thin and weakness. Tuberculosis in adults and older is usually connected to Bronchitis.
  7. Asthma – Literally means Short breath. It is a allergic disorder usually caused by weather conditions, food, drugs, dust, smoke, perfumes, insect repellents etc. stress, physical exertion, anxiety, anger do contribute. Breathing difficulty, shortness of breath, repeated cold, fatigue, itching or heaviness of the chest, stomach, loss of appetite is commonly seen. It can affect any age and can strike any time.

Why Ayurveda for common respiratory disorders?

 Ayurveda, the science of medicine treats not the symptom but the cause itself. Ayurveda does not see this condition as confined to respiratory tract alone but to consider this as full body’s functional elements derangement and immune deficiency. Very important factor is that Ayurveda not only heals the disease but also enhances the body’s immune system which in turn helps in the prevention of any disease.

Herbs good for Respiratory Disorders

 Following are the common Ayurveda Herbs very effective to prevent and heal the immunity and respiratory system

  1. Vasa – Adathodavasica
  2. Thulasi – Ocimum sanctum
  3. Pippali – Piper longum
  4. MadhuYashti – Glycyrrhizaglabra
  5. Pudina – MenthaArvensis
  6. Tagara – Tylophoraindica
  7. Rasna – Alpiniagalanga
  8. Omam – Hyoscyamusniger
  9. Shunti – Zingiberofficinale
  10. Black pepper – Piper nigrum
  11. Jatipatri – Myrsticafragrans
  12. Talisapatra – Abieswebbiana
  13. Katntakari – Solanum xanthocarpum / Indicum

Home relief measures

  1. Inhaling the smoke of burning turmeric is one of the best home remedies for Asthma
  2. Milk mixed with 1 gm of long pepper, palm sugar, black pepper and Turmeric is effective to improve respiratory tract immunity
  3. Betel leaf juice 5 ml with 2 gm of honey is effective for cold, cough, fever and improve appetite and immunity
  4. Inhaling hot steam or full body steam bath cleanses the channels in no time and remove the blockages etc
  5. Vitamin C and D are very important to protect the respiratory tract, check your diet
  6. Pouring too hot water over head / too cold bath to be avoided.
  7. Dry cough and whooping Cough – 10 ml warm milk + 2 gm of melted ghee – This combination improves the dryness of the tract and removes weakness. This also helps easy removal of the sputum
  8. For wet cough – Equal amounts of black pepper+ Long Pepper + honey each 2 gm helps
  9. Black pepper with ghee helps to improve both wet and dry cough.
  10. Onion juice mixed with Jaggery is a very good expectorant good for both dry and wet cough
  11. Fresh Juice of Coleus aromaticus and fresh basil is good to prevent, heal and rejuvenate the respiratory system
  12. Ginger juice mixed with honey is good to improve the congestion, running nose very well
  13. Warm milk with a pinch of turmeric powder is good to improve the respiratory tract functions
  14. Every day intake of honey mixed with milk is good for respiratory tract
  15. Juice of Adathodavasica is a very good remedy for cough, cold and all kind of respiratory infections.
  16. Add orange, pine apple, custard apple, Drum stick and mint to protect and improve immunity

Precautions to avoid respiratory tract infections

  1. Avoid house dust, mites etc
  2. Avoid exposure to excessive cold weather, moisture etc
  3. Pets could cause. Check your allergy status
  4. Avoid banana, curs, ladies finger, deep fried, salty, sour, spicy foods and drinks
  5. Good to avoid alcohol and smoking

 #swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #Dr.Gowthaman Krishnamoorthy

  Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post Ayurveda for Asthma and Respiratory disorders – By Dr.Gowthaman Krishnamoorthy appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

ஆயுளை நிர்ணயிக்கும் வல்லமை பெற்ற யந்திர சனீஸ்வர பகவான்

$
0
0

 திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்துள்ள திருஏரிகுப்பத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த எந்திர சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இந்த சனீஸ்வரபகவானை வணங்கினால் ஜாதக ரீதியான தோஷம் உள்ளவர்கள், வியாபாரத்தில் தொழில் சிறக்கவும், நீண்ட ஆயிலுடன் இருக்கவும் இங்குள்ள பாஸ்கரா தீர்த்தத்தில் நீராடி எள்;தீபம் ஏற்றினால் அனைத்து பிரச்சனைகளும் விலகும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. நவகிரகங்களில் ஒருவரான சனி பகவானை சிலைவடிவில் தரிசித்திருப்பீர்கள் ஆனால் இத்தலத்தில் சனி பகவான் எந்திரம் பொரித்த சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார்.

 இங்கு மூலஸ்தானத்தில் 2 அரை அடி சிவலிங்க வடிவமாக அமைந்துள்ளது சிவனை போலவே சூரியன் சந்திரன் மற்றும் வருனன் நடுவே காகம் உள்ளது.

ஆறுகோன அமைப்பில் உள்ள ஸ்டார் கோனத்தில் உள்ளது

 சனீஸ்வரரே இங்கு பிரதான மூலவர் கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் படைவீட்டை தலைநகராகக் கொண்டு சம்புவராய மன்னர்கள் அரசு புரிந்து வந்தனர். அவர்களின் படை தளபதிகளுள் ஒருவராக விளங்கிய வையாபுரி என்பவர் ஒருசமயம் குதிரையில் செல்லும்போது தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

 அதற்கு பரிகாரமாக அவர், தான் கீழே விழுந்த இடத்தில் யந்திர வடிவில் சனீஸ்வர பகவானைத் தாபித்து வணங்கி பூரண குணமடைந்தார். கால மாற்றத்தால் புதைந்து கிடந்த ஆவ்விக்கிரகத்தைச் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர் என்பது வரலாறு. இங்குள்ள திறந்த வெளிக்கருவறையில் சுமார் 5 அடி உயரமும் 2 அடியாக உள்ளது.

பிராத்தனை :

 சனிப் பெயர்ச்சியால் உண்டாகும் தோஷம் நீங்கவும், ஜாதக ரீதியாக சனிநீசம் பெற்றவர்கலும், திருமணம் குழந்தைபாக்கியம் கிடைக்கவும், வழக்குகளில் வெற்றிபெறவும் இங்கு வந்து வழிபடுகிறார்கள். சனிபகவான் மனிதர்களின் ஆயுளை நிர்ணயக்கும் வல்லமைப்பெற்றவர் நீண்ட ஆயுளுடன் இருக்கும் வியாபாரம் செழிக்கவும் எள்தீபம் ஏற்றி பிராத்தனையை நிறைவேற்றிக்கொள்கின்றனர்.

அமைவிடம்:

   திருவண்ணாமலையில் இருந்து 45 கி.மி தூரத்திலும் வேலூரில் இருந்து 30 கி.மி. தூரத்தில் உள்ளது.

தொடர்புக்கு :  04181-248424

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #enthirasaneeswarar

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

 

The post ஆயுளை நிர்ணயிக்கும் வல்லமை பெற்ற யந்திர சனீஸ்வர பகவான் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரியபாளையம் பவானி அம்மன்

$
0
0

 திருவள்ளூர் மாவட்டம் அடுத்துள்ள பெரியபாளையத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பவாணி அம்மன் கோவில் உள்ளது இந்த அம்மனுக்கு எலுமிச்சை பழம் விளக்கு ஏற்றினால் வாழ்வில் வளம் பெறலாம் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. கம்சன் என்னும் அசுரனின் தங்கை தேவகிக்கும், வசுதேவருக்கும் திருமணம் நடைபெற்றது. தங்கையையும், மைத்துனரையும் தேரில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றான் கம்சன். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது உன்னுடைய தங்கைக்கு பிறக்கப்போகும் 8-வது ஆண் குழந்தையால் உனக்கு மரணம் நிகழும் என்றது அந்தக் குரல். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த கம்சன், தங்கையென்றும் பாராமல் தேவகியை கொல்ல முயன்றான். அவனைத் தடுத்து நிறுத்திய வசுதேவர், தங்களுக்கு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளையும், பிறந்த மறு கணமே கொடுத்துவிடுவதாக கம்சனிடம் வாக்குறுதிகொடுத்தார்.

 கம்சனும் இதற்கு ஒப்புக்கொண்டான். இருப்பினும், தங்கை தேவகியையும், வசுதேவரையும் தன் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்று சிறையில் அடைத்தான். சிறையிலேயே வாழ்க்கை நடத்திய தேவகிக்கும், வசு தேவருக்கும் பிறந்த 7 குழந்தைகளை கம்சன் அழித்து விட்டான். 8-வதாக கண்ணன் பிறந்தார். அது ஒரு நள்ளிரவு நேரம். கண்ணன் பிறந்ததும் ஒரு அசரீரி ஒலித்தது வசுதேவரே உங்கள் மகனை கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மனைவி யசோதையிடம் சேர்த்து விட்டு, அங்கு யசோதையிடம் இருக்கும் பெண் குழந்தையை இங்கே தூக்கி வந்து விடுங்கள்’ என்றது. மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் வசுதேவர், தன்னுடைய மகன் கண்ணனை கூடையில் வைத்து தலையில் சுமந்தபடி சென்று, யசோதையிடம் வைத்து விட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்து வந்து தேவகியின் அருகில் வைத்தார். அதிகாலையில் தேவகிக்கு 8-வது குழந்தைப் பிறந்தது பற்றி கம்சனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த கம்சன்:

  விரைந்து வந்த கம்சன், ஆண் வாரிசுக்கு பதிலாக பெண் குழந்தை இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தான். இருப்பினும் 8-வது குழந்தையால் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்தக் குழந்தையை கையில் எடுத்து, அந்தரத்தில் சுவரில் வீசி கொல்ல முயன்றான். அந்தரத்தில் பறந்த குழந்தை, சக்தியின் உருவம் எடுத்து காட்சியளித்தது. கம்சனே  உன்னைக் கொல்லப்போகிறவன், ஏற்கனவே பிறந்துவிட்டான். அவன் கோகுலத்தில் வளர்ந்து வருகிறான். உரிய நேரத்தில் உன்னைக் கொல்வான்’ என்று கூறி மறைந்தது. அந்த சக்தியே அங்கிருந்து இங்குள்ள பெரியபாளையம் தலத்தில் பவானியாக வந்து அமர்ந்ததாக தல வரலாறு கூறுகிறது. பாளையம் என்பதற்கு படைவீடு என்று பெயர். அம்மன் வீற்றிருக்கும் பெரிய படைவீடு என்பதால், பெரிய பாளையம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

ஓங்கார வடிவமாக:

  ஆலயத்தின் சுற்று பிரகாரத்தில் பவானி அம்மனின் உற்சவர் சன்னிதி அமைந்திருக்கிறது. பிரகார வீதியில் வள்ளி- தெய்வானை சமேத முருகப் பெருமான், தாயாருடன் பெருமாள், ஆஞ்சநேயர், பரசுராமர் ஆகியோரது சன்னிதிகள் உள்ளன. கருவறையில் பவானி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஓங்கார வடிவமாக, சங்கு சங்கரதாரிணியாக, பாதி திருவுருவத்துடன் அமர்ந்த கோலத்தில் அன்னை வீற்றிருக்கிறார். நான்கு கரங்களுடன் காட்சியளிக்கும் அன்னையின் மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரமும், கீழ் இரு கரங்களில் வாள், அமுத கலசமும் தாங்கியிருக்கிறார். அன்னையின் அருகில் கண்ணன், நாகதேவன் ஆகியோரது திருவுருவங்கள் உள்ளன. இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானது. வாழ்வில் வளம் பெருகவும், குழந்தை வரம் கிடைக்கவும் வழிபடுபவர்களும் ஏராளம். வேப்பிலை ஆடை உடுத்தி பிரார்த்தனை செய்தால், அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அன்னைக்கு எலுமிச்சைப் பழ விளக்கேற்றி வழிபட்டாலும் கோரிக்கைகள் நிறைவேறும்.

தொடர்புக்கு :  9444487487

அமைவிடம் :

   சென்னை திருவள்ளூரில் இருந்து பஸ் வசதி உள்ளது

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #periyapalayam #bavaaniamman

  Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரியபாளையம் பவானி அம்மன் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.


சஷ்டியில் ஷண்முகன் தரிசனம்

$
0
0

ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவருடைய திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன். அவருடைய மந்திரம் ஆறெழுத்து – நம: குமாராய அல்லது சரவண பவ; அவருடைய இருப்பிடம் அறுபடை வீடுகள், அவருக்குரிய விரதநாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன. சஷ்டி என்பது வளர்பிறைஅல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகராகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவர் குகப்பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம்பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன் என்றும் இதற்குப் பொருள். ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள் ஆறாவதாக விளங்குவது அர்த்தஜாம பூஜையாகும். சஷ்டிபதி என்றால் இந்த வேளையில் (அர்த்தஜாமத்தில்) செய்யப்பெறும் வழிபாட்டில் மிகவும் விருப்பம் கொள்பவன் என்றும் பொருள். திருவிடைக்கழி திருத்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்த ஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #murugan #shanmugan #sasti thithi #sasti

  Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

ஆதிசேஷன் உணர்த்திய கூட்டுப்பிரார்த்தனையின் பலன்கள்

$
0
0

 வசிஷ்டரும், விஸ்வாமித்திரரும் எதிரிகள் என்பது ஊரறிந்த விஷயம். ஒருமுறை இருவருக்கும் ஒரு பிரச்னையில் தகராறு ஏற்பட்டது. விஸ்வாமித்திரர் வசிஷ்டரிடம், ஓய் வசிஷ்டரே! உலக உயிர்கள் அனைத்தும் இறைவனை அடைய வேண்டும் என்பது என் ஆசை. உயிர்கள் இறைவனை அடைய மனம் ஒருமித்த தவம் இருக்க வேண்டும். நான் அப்படிப்பட்ட தவசீலன் என்பதால் தான் இறைவனை பார்க்க முடிந்தது. எனவே தவத்தின் பெருமை குறித்து பிரசாரம் செய்யப் போகிறேன். உலகமக்கள் என்னைப் பின்பற்றி இறைவனை அடைவார்கள், என்றார். வசிஷ்டர் சிரித்தார். விஸ்வாமித்திரரே! நீர் எப்போதும் அவசர குடுக்கை தான். ஏற்கனவே, ஒரு அரிச்சந்திரனை உம் பொருட்டு பாடாய் படுத்தினீர். இப்போது உலகத்தையே பாடாய் படுத்தப் போகிறீரோ! இறைவனை அடைய நினைப்பவன் தவம் இருக்க வேண்டும் என்று அவசியமே இல்லை. தவம் என்பது உலகத்தாருக்கு ஏற்புடையதும் அல்ல. உடலை வருத்தி இருக்கும் உண்ணாவிரதம் கூட இறைவனை அடைய உதவுமா என்பது சந்தேகமே! துறவிகள் வேண்டுமானால் தவமிருக்கலாம,. இறைவனை அடையலாம். ஆனால், சம்சார சாகரத்தில் மூழ்கிக் கிடக்கும் குடும்பஸ்தர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். இதுவே அவர்களை இறைவனிடம் சேர்ப்பித்து விடும், என்றார்.

 இருவரும் நீண்ட நேரமாக விவாதித்தனர். பிரச்னை தீர்வுக்கு வரவில்லை. நேராக பிரம்மாவிடம் சென்றார்கள். பிரம்மா இவர்களிடம், நான் படைப்புத் தொழிலில் ரொம்பவும் மும்முரமாக இருக்கிறேன். நீங்கள் சிவனைப் பாருங்கள், என சொல்லி விட்டார். சிவனிடம் சென்றார்கள் இருவரும். என் பரமபக்தன் ஒருவன் பூலோகத்தில் மிகவும் கஷ்டப்படுகிறான். என்னை வருந்தி அழைத்தான். அவனைப் பார்க்கப் போகிறேன். பெருமாள் தான் இது போன்ற விஷயங்களுக்கு தகுதியானவர். அமைதியானவர். உங்கள் கேள்விக்கு பொறுமையாக பதில் சொல்வார், என்றார். பெருமாளிடம் ஓடினார்கள் இருவரும். முனிவர்களே! இதற்கு எனக்கு பதில் தெரியுமாயினும், என்னை விட இதோ படுத்திருக்கிறேனே! ஆதிசேஷன். அவனுக்கு ஆயிரம் நாக்கு. நீங்கள் கேட்ட கேள்விக்கு ஒரு நொடியில் பதில் சொல்லி விடுவான், என்று தப்பித்துக் கொண்டார். அவர்கள் ஆதிசேஷனிடம் கேட்டனர்.

 முனிவர்களே! உங்கள் கேள்விக்கு என்னிடம் பதில் இருக்கிறது. ஆனால், அதைச் சொல்ல ஒரு நிபந்தனை. நான் தான் இந்த உலகைத் தாங்குகிறேன். இப்போது பாரம் அதிகமாக இருக்கிறது. பேசவே முடியவில்லை. இதை நீங்கள் குறைத்து வையுங்கள். பதில் சொல்கிறேன், என்றது. விஸ்வாமித்திரர் தான் செய்த தவத்தில் நூறில் ஒரு பங்கை ஆதிசேஷனுக்கு கொடுத்தார். பாரம் இறங்கவில்லை. அவ்வளவு தவத்தையும் கொடுத்தார்.ஓரளவு கூட அசையவில்லை. வசிஷ்டர் ஆதிசேஷனுக்கு, தன் சிஷ்ய கோடிகளுடன் செய்த கூட்டுப்பிராத்தனையின் பலனில் லட்சத்தில் ஒரு பங்கு தான் கொடுத்தார். ஆதிசேஷனின் பாரம் நீங்கி விட்டது. விஸ்வாமித்திரர் தலை குனிந்தார். தவம், தியானம், விரதம் முதலானவை கடினமானவை. கூட்டுப் பிரார்த்தனை இலகுவானது. இது வீட்டில் ஒற்றுமையை வளர்க்கும். வெளியிடங்களில் சகோதரத்துவத்தை உருவாக்கும். ஊர் கூடி தேர் இழுத்தால் தான் தேர் நகரும். அதுபோல், குடும்பத்திற்காகவும், தேசத்தின் பாதுகாப்புக்காகவும் ஒட்டு மொத்தமாக கூடி பிரார்த்தனை செய்வோம். நம் கோரிக்கை இறைவனால் நிறைவேற்றப்படும் என்று கூறுகின்றனர்

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #kuttupirathanai

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post ஆதிசேஷன் உணர்த்திய கூட்டுப்பிரார்த்தனையின் பலன்கள் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

ஹனுமன் என்று பெயர் வரக்காரணம்

$
0
0

 ஹனுமன் ஒரு இந்துக் கடவுளாக வணங்கப்படுகிறார். வைணவ ஆலயங்களில் இவரது உருவச்சிலையைப் பார்க்கலாம். இராமாயணத்தில் இராமனின் மிக முக்கியமானதொரு பாத்திரமாக வானரப் படையில் இடம் பெறுகிறார். அனுமனுக்கு மாருதி, ஆஞ்சநேயன் போன்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன. ஹனுமனின் தாய் அஞ்சனாதேவி, தந்தையின் நாமம் கேசரீ (வானரத் தலைவர்). இவர்களின் குல தெய்வம் வாயு (பஞ்சபூதங்களில் ஒன்று) ஆவர், இவரே ஹனுமனுக்கு தந்தையாகவும், குருவாகவும் இருந்து வழி நடத்தியதால் ஹனுமன் வாயுபுத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

 இராமாயணம் தவிர மகாபாரதம் மற்றும் புராணங்களிலும் ஹனுமனைப் பற்றிய குறிப்புகள் உண்டு. ஹனுமன் இராமன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் இராமனின் தொண்டனாக விளங்கியவர். ஹனுமன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடித்தவர்.பிற்காலத்தில் வட இந்தியாவில் ஹனுமனை சிவனின் அவதாரமாகவும் கருதுபவர்கள் உண்டு.

 சமஸ்கிருதத்தில் “ஹனு” என்பதற்கும் “தாடையும்”, “மன்” என்பதற்கு “பெரிதானதது” என்பதால், “ஹனுமன்” என்பதற்கு பெரிய தாடையை உடையவன் என ஒரு பெயர்காரணம் உண்டு. இன்னொரு வழக்கில் “ஹன்” என்பதற்கு “கொன்றவன்”, “மானம்” எனபதற்கு “தற்பெருமை” என்பதல், “ஹன்மான்”, என்பதற்கு தற்பெருமையைக் கொன்றவன் என ஒரு பெயர்காரணம் உண்டு. ஆண்மந்தி (ஆண் குரங்கு) என்பதுதான் அனுமன் என்றும் அதிலிருந்து தான் ஹனுமன் என சமஸ்கிருதத்தில் வழங்கப்பட்டதாகவும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #anuman

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

 

The post ஹனுமன் என்று பெயர் வரக்காரணம் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

கஷ்டங்களை போக்கும் கர்நாடக சொக்கநாதப்பெருமாள்

$
0
0

 சோழமன்னர்கள் ஆட்சி காலத்தில் கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் பல இடங்களில் கோயில்கள் கட்டியுள்ளனர். சொக்கநாதபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமத அருள் பலிக்கிறார். கவலையோடு வேண்டுவோரின் கண்ணீரை துடைத்து, கஷ்டங்களை போக்கும் சொக்கநாதபெருமாள் பக்தர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.

முழுக்க முழுக்க சைவ நெறியை:

 சிக்பள்ளாபூர், சிந்தாமணி தாலுகாகளில் நந்தீஸ்வரன் என்ற பெயரில் கோயில் கட்டினர். பங்காருபேட்டை தாலுகா, கோலார் தங்கவயலில் சோமேஷ்வரன், முல்பாகல் தாலுகாவில் உள்ள ஆவணியில் ராமலிங்கேஷ்வரன், முல்பாகலில் கணபதி ஆகிய பெயர்களில் கோயில் கட்டியுள்ளனர். முழுக்க முழுக்க சைவ நெறியை பின்பற்றி அதனடிப்படையில் வழிபாடுகள் நடத்தியது மட்டுமில்லாமல் சைவ முறையை போற்றும் வகையில் ஆங்காங்கே சிவன், கணபதி, சுப்ரமணியசுவாமி, சவுடேஷ்வரி கோயில்கள் கட்டினர்.

 அதே சோழ மன்னர்கள் பெங்களூரு மாநகரின் மைய பகுதியில் இருந்து சில மையில் தூரத்தில் உள்ள தொம்மலூர் பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சொக்கநாதபெருமாள் என்ற பெயரில் விஷ்ணு கோயில் கட்டி வெகுவிமர்சையாக கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார். எலகங்கா, அல்சூர், தொம்மலூர் உள்பட அதை சுற்றியுள்ள பகுதியில் விஷ்ணுவை போற்றி வணங்கும் வைணவர்கள் அதிகம் வாழ்ந்தனர். அவர்களின் வேண்டுக்கோளை ஏற்று சொக்கநாதன் என்று சிவபெருமானை அழைப்பது போல், சொக்கநாத பெருமாள் என்ற பெயரில் விஷ்ணு கோயில் கட்டியுள்ளனர். இது தொடர்பாக கோயிலை சுற்றி அவர்கள் தமிழ் மொழியில் செதுக்கியுள்ள கல்வெட்டில் பதிவு செய்துள்ளனர்.

சோதனை போக்கும் சொக்கநாதபெருமாள்:-

 பெங்களூரு மகாத்மாகாந்தி சாலையில் இருந்து பழைய ஏர்போர்ட் சாலைக்கு செல்லும் வழியில் தொம்மலூர் உள்ளது. சோழமன்னர்கள் ஆட்சி செய்தபோது அதை தாமல்ஊரு என்று தமிழில் அழைத்துள்ளனர். அப்பகுதியில் இருந்த குளங்களில் அதிகளவு தாமரை மலர்கள் மலர்ந்திருந்த காரணத்தால் இப்பெயரை அவர்கள் சூட்டியதாக தெரியவருகிறது. தாமல் ஊரு என்ற பெயரில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் டொம்பலூர் என்றும் பிறகு தொம்மலூர் என்று அழைக்கப்படுகிறது.  கருவறையில் சொக்கநாதபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமத அருள் பலிக்கிறார். கவலையோடு வேண்டுவோரின் கண்ணீரை துடைத்து, கஷ்டங்களை போக்கும் சொக்கநாதபெருமாள் இன்றளவும் பக்தர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.

5 கால பூஜை

 சொக்கநாதபெருமாள் கோயிலில் தினமும் காலை 8.30 மணி முதல் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் 9 மணிவரையும் நடை திறக்கப்படுகிறது. தினமும் 5 கால பூஜை நடக்கிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.கன்னட வருட பிறப்பான உகாதி, வைகுண்ட ஏகாதசி, தீபாவளி பண்டிகை நாட்களிலும், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் சிறப்பு வழிப்பாடுகள் நடக்கிறது.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #chokanaathaperumal

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post கஷ்டங்களை போக்கும் கர்நாடக சொக்கநாதப்பெருமாள் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

தென் கயிலாயம் என்று போற்றப்படும் ஸ்ரீகாளகஸ்தி கோவிலின் அற்புதங்கள்

$
0
0

 ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக வழிபடக் கூடிய ஆலயமாக இருப்பது ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருக்கும் காளஹஸ்தீஸ்வரர் கோயில் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கை.

தல வரலாறு:

  சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த அந்த பாம்பு பாதாளத்தில் இருந்து மாணிக்கங்களை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு தினமும் பூஜை செய்தது. பாம்பு பூஜை செய்து முடித்த பின்னர் அங்கு வரும் யானை, மாணிக்கங்களை தனது துதிக்கையால் அப்புறப்படுத்திவிட்டு பூக்கள், தண்ணீர், வில்வ இலை கொண்டு சிவனை பூஜித்தது. தான் வைக்கும் மாணிக்கங்களை தள்ளிவிடுவது யார் என்பதை அறிய ஒரு நாள் அந்த பாம்பு பூஜைக்குப் பின்னரும் அங்கேயே காத்திருந்தது. வழக்கம் போல் வந்த யானை, மாணிக்கங்களை தள்ளிவிட்டு பூஜை செய்தது. கோபம் கொண்ட பாம்பு, யானையின் துதிக்கை வழியாக அதன் தலைக்குள் புகுந்து, யானை மூச்சு விட முடியாதபடி செய்தது. பரிதவித்த யானை துதிக்கையால் சிவலிங்கத்தை தொட்டு வழிபாடு செய்துவிட்டு, பாறையில் மோதி இறந்தது. யானையின் தலைக்குள் இருந்த பாம்பும் நசுங்கி இறந்தது. இதேபோன்று, சிவன் மீது பக்தி கொண்டிருந்த சிலந்தி ஒன்றும் அதே சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. தனது உடலில் இருந்து வரும் நூலினால் சிவனுக்கு கோவில் கோபுரம், பிரகாரம் கட்டி பூஜித்து வந்தது. காற்றில் நூல் அறுந்து போனாலும் மீண்டும் கட்டியது.

 ஒரு முறை சிலந்தி கட்டிய நூல் கோபுரத்தை எரிந்து சாம்பலாகும்படி செய்தார் சிவபெருமான். கோபம் கொண்ட சிலந்தி, எரிந்து கொண்டிருந்த தீபத்தை விழுங்க சென்றது. சிலந்தியின் பக்தியை கண்டு வியந்த சிவபெருமான், அதனிடம் என்ன வர வேண்டும் என்று கேட்டார். மீண்டும் பிறவாமை வேண்டும் என்று வேண்டிய அந்த சிலந்திக்கு முக்தி கொடுத்து தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் சிவன். இதே போன்று, தன் மீது கொண்டிருந்த அபரிமித பக்தியால் இறந்து போன யானை, பாம்பு ஆகியவற்றுக்கும் முக்தி அளித்தார் சிவன்.

ஸ்ரீ ஞானபிரசுனாம்பிகை அம்மன்:

  இந்த அற்புதங்கள் நிகழ்ந்த தலம் தான் ஸ்ரீகாளஹஸ்தி. இங்கு லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திருமேனியை கூர்ந்து கவனித்தால், கீழ் பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம். இங்கு எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.

பெயர்க் காரணம்:

 சீகாளத்தில் என்ற சொல்லில், சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம், அத்தி என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும், அத்தி என்பது யானையையும் குறிக்கிறது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது என்கிறார்கள் சிலர். ஸ்ரீகாளஹஸ்தி எவ்வாறு உருவானது என்பதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. சிவபெருமான் ஆணைப்படி பிரம்மன் கயிலாயத்தை படைத்த போது அதில் இருந்து ஒரு பகுதி பூமியில் தவறி விழுந்து விட்டது. அந்த இடமே சீகாளத்தி என்ற இப்போதைய ஸ்ரீகாளஹஸ்தி என்கிறார்கள் சிலர்.

கோயில் அமைப்பு:

 கோவிலின் உள் பிரகாரத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் தனி சன்னதிகள் உள்ளன. காசி விஸ்வநாதர், பால ஞானாம்பா, நந்தி, விநாயகர், சுப்பிரமணியர், அஷ்டோத்ரலிங்கம், சுயம்புநந்தி, வாயுலிங்கம், கண்ணப்பன், சகஸ்ரலிங்கம், சனிபகவான், துர்கா, 63 நாயன்மார்களுக்கு தனி சன்னதிகள் உண்டு. ஞானபிரசுன்னாம்பிகை சன்னதியை கடந்து சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு சென்றால் அங்கிருந்து கண்ணப்ப நாயனார் மலை சிகரத்தை காணலாம். தென் கயிலாயம் என்று போற்றப்படும் ஸ்ரீகாளகஸ்தி, பஞ்சபூத தலங்களில் வாயு (காற்று) வுக்கு உரிய தலமாகும். இங்குள்ள லிங்கம் வாயு லிங்கமாகும். இன்றைக்கும் காற்றுப்புக முடியாத கர்ப்பக கிரகத்தில், சுவாமிக்கு ஏற்றி வைத்திருக்கும் அகல் தீபம் படிப்படியாக சுடர் விட்டு மேலெழுந்து அங்கும், இங்கும் அசைந்தாடுவது ஓர் அற்புத நிகழ்ச்சியாகும்.

பாதாள விநாயகர்:

 கோவிலின் வெளிப்பிரகாரத்தில் பாதாள கணபதி கோவில் உள்ளது. ஒரு சமயம் அகத்தியர் சிவபெருமானையும், விநாயகரையும் வழிபட மறந்தார். இதனால் விநாயகரின் கோபத்தால் ஸ்ரீகாளஹஸ்தியை ஒட்டி ஓடும் பொன்முகலி என்ற சொர்ணமுகி ஆறு வற்றிவிட்டது. தன் தவறை உணர்ந்த அகத்தியர் விநாயகரை பூஜை செய்து வழிபட்டு விநாயகரின் அருளுக்கு உரியவர் ஆனார் என இக்கோவில் தலபுராணம் கூறுகிறது. காலப்போக்கில் விநாயகர் கோவில் இருந்த பகுதியை விட, அதை சுற்றியிருந்த பகுதிகள் எல்லாம் உயர்ந்து விட்டன. அதனால் விநாயகர் கோவில் பாதாளத்திற்கு போய் விட்டது. இதனால் இங்குள்ள விநாயகர், பாதாள கணபதி என்று அழைக்கப்படுகிறார். படிக்கட்டுகள் வழியே 20 அடி கீழே இறங்கிச் சென்று இந்த விநாயகரை வழிபட வேண்டும்.

தோஷங்கள் விலக பரிகார பூஜை:

 ஸ்ரீகாளஹஸ்தி, காளஹஸ்தீஸ்வரர் கோவில் ராகு மற்றும் கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் திகழ்கிறது. ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் இங்கு வந்து ராகு மற்றும் கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்து கொண்டால், பிரச்சினையில் இருந்து விடுபடுகின்றனர்.

அமைவிடம்:

 ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை செல்லும் சாலையில் ஸ்ரீகாளஹஸ்தி அமைந்துள்ளது. சென்னையிலிருந்து நேரடியாக இந்த ஊருக்கு பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #sreekalahasthi

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post தென் கயிலாயம் என்று போற்றப்படும் ஸ்ரீகாளகஸ்தி கோவிலின் அற்புதங்கள் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

Viewing all 15459 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>