Quantcast
Channel: SwasthikTv
Viewing all 15459 articles
Browse latest View live

4448 நோய்களும் குணமாக்கும் சித்தர்கள் முறை

$
0
0

சித்தர்களின் சர்வரோகங்கள் நீக்கும் புருவமத்திசாதன முறை விளக்கம் (4448 நோய்களும் குணமாக‌):

இன்று எங்கு பார்த்தாலும் நோய், நோயின்றி வாழதலே வாழ்வின் பெரும் சிறப்பு, சித்தர்கள் கூறிய மருத்துவத்திலிருந்து இன்று நாம் பல லட்சம் செலவு செய்யும் ஆங்கில மருத்துவத்திற்கு சென்று விட்டோம்.

சித்தர்களது மருத்துவம் எளிமையானது, எல்லோருக்கும் பயன்படவேண்டும் என்று சொல்லிவைத்தார்கள். சித்தர்கள் மனித உடலுக்கும் அவனைச் சூழ உள்ள இயற்கையிற்கும், இந்த பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பினை தெளிவாக அறிந்து வைத்திருந்தனர். உடலில் வரும் பாதிப்புகள் பஞ்சபூத சம நிலை இன்மையினால் வருவது, இந்த பஞ்ச பூதங்கள் ஸ்தூல வடிவாக உடலாக பரிணமிக்கும் அதே வேளை, சூஷ்ம உடலிலும் ஆறாதாரங்களாக பரிணமித்துள்ளது.

அவற்றின் இயல்பு வருமாறு:

பிருதிவி பூதம் – மூலாதாரம்
அப்பு (நீர்) பூதம் – சுவாதிஷ்டானம்
தேயு (தீ) பூதம் – மணிப்பூரகம்
வாயு பூதம் – அநாகதம்
ஆகாய பூதம் – விசுத்தி
மனம் – ஆக்ஞா

இதில் ஒவ்வொரு பூதத்தின் குறைபாடுகள் அந்த ஆதாரங்களின் சக்தி குறையும் போது சூஷ்ம உடலில் உருவாகி நீண்டகாலத்திற்கு பின்னர் ஸ்தூல உடலிற்கு வரும். இந்த அடிப்படையிலேயே ஒரு சித்தவைத்தியர் தனது சிகிச்சையினை செய்யவேண்டும்.
மேலே கூறிய ஐம்பூதங்களுக்கும் சூஷ்ம உடலில் உள்ள ஆதாரத்திற்கும் உள்ள தொடர்பினை பார்த்தீர்களானால் ஆறாவதான ஆக்ஞா மனத்துடன் தொடர்பு பட்டுள்ளது. மனம் என்பதே மனிதன் இந்த பிரபஞ்சத்துடன், ஐம்பூதங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு சாதனம்.

இது திருமூலர் கூறிய ஒரு எளிய முறை தியானப்பயிற்சி; சித்தர்களின் பாகுபாட்டி மனிதனுக்கு தோன்றக்கூடிய வியாதிகள் 4448, இதற்குமேல் எந்த வியாதியும் இல்லை, இன்று ஆங்கிலப் பெயரிட்டு அழைக்கப்படும் பல்லாயிரக்கணக்கான வியாதிகளும் இவற்றுக்குள் அடங்கிவிடும். இந்தப்பயிற்சியால் 4448 வியாதிகளும் இல்லாது போய்விடும் என்பது திருமூலே வாக்கு, இந்த சாதனை பற்றிக் கூறும் பாடம் வருமாறு; (திருமூலர் ஞானக்குறி 30, பாடல் 14) ;

நாலாயிரத்தி நானூத்தி நாற்பத்தெட்டு
மாலாம் வியாதியும் மாத மடிந்திடும்
பாலாங் குழந்தையாம் பார் புருவ மையத்தின்
மூலா மனத்தை மூட்டு கண் மூக்கிலே

இதன் பொருள் வருமாறு: மனதினை கண்ணும் மூக்கும் சந்திக்கும் மூட்டில் (மூட்டு கண் மூக்கிலே) அதாவது புருவமத்தியில் வைத்து தியானித்து  4448 வியாதிகளும் மடிந்து குழந்தையைப்போன்ற இளமை தோன்றும் என்கிறார்.

இதனை எப்படி பயிற்சிப்பது?

அதிகாலை காலை 04.00 – 06.30 வரை மிக உகந்த நேரம், அல்லது மாலை 06.00 – 07.00 மணிவரை முதலில் அமைதியாக ஓரிடத்தில் முதுகலும்பு வளையாதவாறு நேராக நாற்காலி ஒன்றிலோ, அல்லது நிலத்தில் கால்மடித்து உட்காரமுடியுமானால் அவ்வாறோ இருக்கவும். அல்லது சாய்வு நாற்காலியில் முதுகினை நேராக சாய்த்தவாறும் செய்யலாம்.
பின்பு கண்களை மூடி புருவமத்தியினை நோக்கி செலுத்தவும், இது பொதுவாக நீங்கள் ஏதாவதொன்றினை ஆழமாக யோசிக்கும் போதோ கண்கள் செல்லும் நிலையினை அவதானித்தால் செய்வதற்கு இலகுவாக இருக்கும். கண்கள் வலிக்காமல் இருக்கும் நிலையே சரியான நிலை,

கண்கள் வலியெடுத்தால் நீங்கள் உங்கள் நிலைக்கு மீறி முயற்சிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இப்படி செய்யும் போது ஆரம்பத்தில் நீங்கள் மனத்திரையில் இருளாகவும், சிறிது நாட்களுக்கு பின்னர் ஒளியும் தோன்ற ஆரம்பிக்கும். அந்த ஒளிதெரியும் நிலையிலிருந்து உங்கள் நோய் படிப்படியாக குணமாக ஆரம்பிக்கும். இதற்கு முன்னர் கீழ்வரும் வாசகத்தினை எழுதி மனப்பாடம் செய்துகொள்ளவும், ஆரம்ப நாட்களில் மறந்தால் கண்களைத்திறந்து வாசித்து மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ளவும்.

எனது நோய் பிரபஞ்ச சக்தியின் ஆற்றலால் குணமாகப் போகிறது, குணமாகிக்கொண்டு வருகிறது, குணமாகி விட்டது, இந்த வாசகங்களை உச்சரிக்கும் போது அது நடக்கும் போது சூழல், உடல் எப்படி இருக்குமோ அதனை மனக்கண்ணில் பார்த்து வரவும். நாட்பட்ட புற்று நோய், நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு தொடர்ச்சியான 40 நாட்கள் பயிற்சியின் பின்னர் நிச்சயமாக உங்கள் உடல் நிலையில் முன்னேற்றம் காண ஆரம்பிக்கும்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #thiruvalivalam #sidhar

  Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post 4448 நோய்களும் குணமாக்கும் சித்தர்கள் முறை appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.


27 நட்சத்திரங்களுக்கான ருத்ராக்ஷம்

$
0
0

ருத்ராக்ஷத்தை சிவனின் வடிவமாகவே கருதி பூஜைகள் செய்வர். பல முகங்களில் ருத்ராக்ஷங்கள் உள்ளன.

நட்சத்திரங்கள் இருபத்தி ஏழாகும். ஒருவன் இந்த 27 நட்சத்திரங்களில் ஒன்றில் தான் பிறப்பான் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே, அனால் 27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அணிய வேண்டிய ருத்ராக்ஷங்கள் மாறுபடும். எந்த நட்சத்திரதாரர் எந்த ருத்ராக்ஷத்தை அணிய வேண்டும் என்பதை பாப்போம் ;

1. அஸ்வினி – ஒன்பது முகம்.

2. பரணி – ஆறுமுகம், பதிமூன்று முகம்.

3. கார்த்திகை – பனிரெண்டு முகம்.

4. ரோஹிணி – இரண்டு முகம்.

5. மிருகசீரிஷம் – மூன்று முகம்.

6. திருவாதிரை – எட்டு முகம்.

7. புனர்பூசம் – ஐந்து முகம்.

8. பூசம் – ஏழு முகம்.

9. ஆயில்யம் – நான்கு முகம்.

10. மகம் – ஒன்பது முகம்.

11. பூரம் – ஆறுமுகம், பதிமூன்று முகம்.

12. உத்திரம் – பனிரெண்டு முகம்

13. ஹஸ்தம் – இரண்டு முகம்.

14. சித்திரை – மூன்று முகம்.

15. ஸ்வாதி – எட்டு முகம்.

16. விசாகம் – ஐந்து முகம்.

17. அனுஷம் – ஏழு முகம்.

18. கேட்டை – நான்கு முகம்.

19. மூலம் – ஒன்பது முகம்.

20. பூராடம் – ஆறுமுகம். பதிமூன்று முகம்.

21. உத்திராடம் – பனிரெண்டு முகம்.

22. திருவோணம் – இரண்டு முகம்.

23. அவிட்டம் – மூன்று முகம்.

24. சதயம் – எட்டு முகம்.

25. பூரட்டாதி – ஐந்து முகம்.

26. உத்திரட்டாதி – ஏழு முகம்.

27. ரேவதி – நான்கு முகம்

அந்தந்த நட்சத்திரதாரர்கள் அவரவருக்கு உரிய ருத்ராக்ஷத்தை அணிந்து பயன் பெறுங்கள்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #thiruvalivalam #sivan # natchatrangal #rudraksham
       

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post 27 நட்சத்திரங்களுக்கான ருத்ராக்ஷம் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

பாப விமோசனம் அருளும் ஸ்ரீ ராஜநாராயண பெருமாள்

$
0
0

பூமியிலிருந்து விழித்தெழுந்த விண்ணகர் ஸ்ரீ ராஜநாராயண பெருமாள்.

ஸ்தல வரலாறு:

இறைவன் வாசம் செய்யும் நல்லூர் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள இளவரசனார்கோட்டையில் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத பூமியிலிருந்து விழித்தெழுந்த விண்ணகர் ஸ்ரீ ராஜநாராயண பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திருமகள் கேள்வனான ஸ்ரீமந் நாராயணன் இவ்வுலகைப் படைத்து இவ்வுலகோர்களை வாழ்விக்க எண்ணங்கொண்டு நவகோடி நாராயண ஷேத்ரங்களில் கோயில் கொண்டு அருள் பாவிக்கிறார். அவற்றுள் ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பெற்ற சிறப்புடைய 108 திவ்ய தேசங்களாகும். அத்திவ்ய தேசங்களில் நடுநாட்டுத் திருப்பதிகள் சீரிய சிறப்புடையவை. அவற்றிலும் முதலாழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பெற்று, நாலாயிர திவ்ய பிரபந்தம் முதலில் அவதரித்த திருக்கோவிலுமே அத்திருக்கோயிலூரின் தெற்குப் பாகத்தில் அமைந்ததுள்ள இராஜநாராயண விண்ணகரமேயாகும். பழங்காலத்தில் இத்திருத்தலம் சோழ கேரள சதுர்வேதி மங்கலம். சோழ கேரள நல்லூர் பிடாகம், இறைவாச நல்லூர் என்னும் பெயர்களால் வழங்கப்பெற்றது. இன்று இத்தலம் எலவானசூர்கோட்டை என்ற பெயரால் வழங்கப்படுகிறது.

????????????????????????????????????

ஸ்ரீ ராஜ நாராயண விண்ணகராகிய இத்தலம் முதலாம் குலோத்துங்கசோழனின் சிறப்புப் பெயரான ராஜநாராயணன் என்ற பெயரில் ஸ்ரீராஜ நாராயண விண்ணகராக காட்சியளிக்கிறார்.

இத்திருமால் கோவிலிலும் அவர் பெயரால் கி.பி. 957 முதல் கி.பி. 970 வரை நிர்மானிக்கப்பட்டது. முற்காலத்தில் சீரும் சிறப்புமாக விளங்கிய இக்கோவிலில் “சீரார் திருவேங்கடமே திருக்கோவிலூரே” என்று திருமங்கையாழ்வார் பாடியுள்ளது திருவேங்கடமுடையாளே இங்கு ஸ்ரீமந் நாராயணன் கோவில் கொண்டுள்ளார். இராஜநாராயண விண்ணகரத்தாழ்வாருக்கும் பிற்காலத்தில் வேங்கடபதிராயரால் நிலர் கொடைகள் வழங்கப்பட்டு பரிபாலிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பரிபாலிக்கப்பட்டு வந்த இக்கோயில் காலப்போக்கில் இயற்கை சீற்றத்தால் பழுதடைந்து தரைமட்டமாகிவிட்டது. கடந்த 04.12.2008 அன்று பெருமாள் கோவில் கட்ட பூமி தேவி பூஜை செய்தபோது பூமிக்கு அடியில் ராஜகோபுரத்தின் அடிபீடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த எழுத்துக்களை ஆராய்ந்தபோது ஸ்ரீராஜ நாராயண விண்ணகர் என்ற பெயர் காணப்பட்டது. அதன்படியாக இக்கோவில் நிர்மானத்தை திருக்கோயிலூர் ஸ்ரீமந் எம்பெருமானார் ஜியர் மடாதிபதி சஸானரனூர் மஹாத்மா ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமி ஆதயேளி 09.01.2009 அன்று துவக்கி வைத்து அருளாசி வழங்கினார்கள். அதன்படியாக திருப்பணிகள் கருவறை விமானம், மஹாமண்டபம், ஊஞ்சல் மண்டபம் ஆகியவை முதல் கட்டமாக நிறைவு செய்யப்பட்டது. 19.06.2013 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

sri-narayan-300x169

இத்தலத்திற்கு வந்து வழிபடும் பக்தர்கள், செல்வ வளம், திருமணம், புத்திர பாக்கியம், உயர்பதவி, பாவ விமோச்சனம் நீங்கி செல்கின்றனர்.
மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவி ராஜநாராயண பெருமாளுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து பக்தர்கள் பலன் பெறுகிறார்கள்.

அமைவிடம் : விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இருந்து 10வது கி.மீ. தூரத்தில் கோவில் அமைந்துள்ளது.

#swasthiktv.com #swasthiktv #spiritual #spiritualwebtv #devotional #devotionalwebtv #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #spirituality #spiritualgrowth #pambanswamigal #mayurabandham #lordmurugan #villupuram #hinduspiritual #spiritualpractice #rajanarayanaperumal #pabavimochanam

 

whatsapp   For Daily Devotional News Update WhatsApp to +91-81245-16666

The post பாப விமோசனம் அருளும் ஸ்ரீ ராஜநாராயண பெருமாள் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

மாந்திரீகத்தை தடுக்கும் வல்லமை படைத்த ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் மயூர பந்தம்

$
0
0

சென்னை : நாம்  பாம்பன் ஸ்வாமிகள் அருளிய காலசர்ப்ப தோஷம் போக்கும் துவித நாக பந்தத்தை பற்றி பார்த்தோம், இந்த பதிவில் நாம் ஸ்வாமிகள் எழுதிய மயூர பந்தத்தை பற்றி தெரிந்துகொள்வோம். 

மயூர பந்தம் என்பது பகை விலக, மாந்திரிக, தந்திர,பில்லி,சூனிய ஏவல் பிணி நீக்க வல்லது. பொதுவாகவே முருக பக்தர்களை பில்லி, சூனியம், ஏவல் போன்றவை தீண்டாது , அதிலும் ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் மயூர பந்தத்தை ஒருவர் வீட்டில் வைத்து தினமும் பூஜித்து வந்தால் அவர்களை இந்த மாந்திரீக ஏவல்கள் அறவே அண்டாது என்பது உறுதி.

“வரதந திபநக ரகமுக வொருகுக வறிதுத புவிரிவிதி
மரகத வரிபர மதுகளி லசலவி மலமழ வெனலிரிய
மரபுறு குறுமுனி வருதிம யலசர மதிவிரி விபுதகுரு
சுரபதி நவரச பரததி நகரம துகமழு முனிவருதி “

ஸ்வாமிகள் எழுதிய மயூர பந்தமானது சகல பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது, இந்த மந்திரத்தை மிகவும் கவனமாகவும் சுத்தமாகவும் பாராயணம் செய்துவந்தால் அணைத்து பிரச்சனைகள் மற்றும் தோஷங்களிருந்து விடுபடமுடியும்  என்பது ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் வாக்கு. இந்த ஸ்லோகத்தை பாராயணம்செய்யும் நாட்களில் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும், ஒழுக்க நெறிகளை கடைபிடிக்க வேண்டும் அப்படி செய்து வந்தால் அணைத்துபிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நல்ல ஒரு வாழ்க்கை அமைத்து கொண்டு எல்லா காரியங்களிலும் வெற்றியை காணலாம்.

முருகனுக்கு உரிய நாள் செவ்வாய்க்கிழமை என்பதால் இந்த மந்திரத்தை அன்று தொடங்கி பாராயணம் செய்வது சிறந்ததாகும். இந்த மந்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது மது பழக்கம், புகை பழக்கம் மற்றும்  அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் கோவில் சென்னையில் உள்ள திருவான்மியூரில் அமைந்துள்ளது , பக்தர்கள் இங்கு சென்று ஸ்வாமிகளின் ஜீவ சமாதியை தரிசித்து பலன் பெறலாம்.

பக்தர்களுக்காக மேலே மந்திரத்துடன் ஸ்வாமிகள் படம்

http://bit.ly/2bFRUdm

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #thiruvalivalam #sivan  #srimatpambanswamigal #mayurabandham #thiruvanmiyur #pambanswamigal #lordmurugan
       

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post மாந்திரீகத்தை தடுக்கும் வல்லமை படைத்த ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் மயூர பந்தம் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி மந்திரம்

$
0
0

18 சித்தர்களுக்கும் நம் வாழ்க்கை  முறைகளுக்கும் நிறைய தொடர்புகள் உண்டு , ஆயுர்வேத மருத்துவம், சித்த மருத்துவம், யோகா பயிற்சிமுறை , சூர்யநமஸ்கரம், உணவு பழக்க வழக்கங்கள் , தெய்வ வழிபாடுகள், குரு வழிபாட்டுமுறை போன்ற இன்னும் பல தொடர்புகள் நாம் அன்றாட வாழ்க்கையில் நடைமுறையில் கொண்டுவர முயற்சிசெய்துகொண்டிருக்கிறோம்,

இப்படிப்பட்ட 18 சித்தர்களில் ஒருவர் தான் பதஞ்சலி சித்தர் ஆவார், இவரை மகரிஷி பதஞ்சலி என்று அழைப்பார்கள் , இவர் விஷ்ணுவின் படுக்கையான (சர்ப்பம்) ஆதிஷேசனின் அம்சமாக திகழ்கிறார். ஒருமுறை சிவன் ருட்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும்பொழுது ஆதிசேஷனால் அந்த அதிர்வுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் திருமாலின் படுக்கையை அசைக்க தொடங்கியது , அப்பொழுது திருமாலிடம் ஆதிசேஷன் இந்த அதிர்வுகளை பற்றியும் சிவனின் ருட்ரதாண்டவத்தை பற்றியும் கேட்டார், அதற்கு திருமால் சிவனின் யோக பயிற்சி முறையே இந்த அபார சக்திக்கு காரணம் என்று கூறினார், மேலும் யோக பயிற்சி நினைத்ததை முடித்து வைக்கும் வல்லமைபடைத்தது என்றும் கூறினார். இதனால் ஆதிசேஷனும் தாம் யோக வல்லமையை கற்க வேண்டும் என்று பிற்காலத்தில் பதஞ்சலியாக பிறந்தார் என்பது சித்தர்கள் குறிப்பு.

இப்படிப்பட்ட பதஞ்சலி சித்தரின் காயத்ரி மந்த்ரிரத்தை நாம் தினமும் பாராயணம் செய்து வழிபட்டால் அனைத்து காரியங்களும் கைகூடும் என்பது சித்தர்களின் வாக்கு , மேலும் இந்த காயத்ரி மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தாலே ஒன்பது கோடி முனிவர்களும் தேவர்களும் அருள்புரிவார்கள்.

பதஞ்சலி சித்தரின் காயத்ரி மந்திரம் :

 “ஓம் சிவதத்வாய வித்மஹே
யோகாந்தராய தீமஹி
தந்நோ பதஞ்சலி குரு ப்ரசோதயாத்.”

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #thiruvalivalam #sivan  #srimatpambanswamigal #mayurabandham #thiruvanmiyur #pambanswamigal #lordmurugan #27stars #natchathirangal #27natchathirangal #rasi #gayathrimantra
       

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி மந்திரம் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

இருபத்தியேழு ( 27) நட்சத்திரங்களின் காயத்ரி மந்திரங்கள்

$
0
0

ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள் , அந்த வகையில் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய காயத்ரி மந்திரத்தை இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது , பொதுவாகவே ராசி, நட்சத்திரம் எல்லாம் நாம் பிறக்கும்போதே கணிக்கப்படுகிறது , இதுபோன்ற மந்திரங்களை நாம் உச்சரிக்கும் பொழுது கெட்ட நிலைகளில் உள்ள கிரகங்களின் பார்வை குறைந்து தெய்வ பார்வை நம் மீது விழும் பொழுது நமக்கு விளையும் தீமைகளானது குறையும் என்பது பெரியோர்களால் நமக்கு சொல்லப்பட்டது.

உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

அஸ்வினி

ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

பரணி

ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்

கிருத்திகை

ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

ரோஹிணி

ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

மிருகசீரிடம்

ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

திருவாதிரை

ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

புனர்பூசம்

ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

பூசம்

ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

ஆயில்யம்

ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

மகம்

ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்

பூரம்

ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

உத்திரம்

ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

அஸ்தம்

ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

சித்திரை

ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

சுவாதி

ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

விசாகம்

ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்

அனுஷம்

ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

கேட்டை

ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

மூலம்

ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

பூராடம்

ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

உத்திராடம்

ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

திருவோணம்

ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

அவிட்டம்

ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

சதயம்

ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

பூரட்டாதி

ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

உத்திரட்டாதி

ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

ரேவதி

ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #thiruvalivalam #sivan #srimatpambanswamigal #mayurabandham #thiruvanmiyur #pambanswamigal #lordmurugan #27stars #natchathirangal #27natchathirangal #rasi #gayathrimantra

 

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post இருபத்தியேழு ( 27) நட்சத்திரங்களின் காயத்ரி மந்திரங்கள் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

அணைத்து தடைகளையும் நீக்கும் புலிப்பாணி சித்தர் அருளிய நரசிம்ம மந்திரம்

$
0
0

தசாவதாரத்திலேயே உக்கிரமான அவதாரம் நரசிம்ம அவதாரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே , நரசிம்மர் தோன்றியதற்கு காரணமே ஹிரண்யகசிபு என்ற ஒரு துர் சக்தியை வதம் செய்வதிற்காகத்தான், எந்த ஒரு காரியத்தில் தடை ஏற்பட்டாலும் அதை நீக்க கூடிய வல்லமை நரசிம்மருக்கு உண்டு, அணைத்து துர் தேவதைகளையும் நம் வாழ்வில் அண்டவிடாமல் பாதுகாக்கும் சக்தி எதுவென்றால் அது நரசிம்மராகத்தான் இருக்க முடியம் என்பதில் எந்தவித மாற்று கருதும் இருக்க முடியாது  என்று சொல்லலாம்,

இந்த தெய்வத்தை வணங்குவதால் நமக்கு  எல்லாவிதமான  தடைகளும் துர் சக்திகளின் தீவினைகளும்  நம்மை விட்டு நீங்கும் , இதை நித்தமும் அனுபவத்தால் உணர்தவர்கள் நம்முள் பலர். இப்படி பட்ட நரசிம்மரின் ஸ்லோகத்தை நமக்காக அருளியுள்ளார் புலிப்பாணி சித்தர். இந்த ஸ்லோகத்தில் நாம் அனைவரும் படித்து  பயன்பெறுவோம்.

“பாரடா நரசிங்கஞ் சொல்லுக் கேளு
பாங்காக ஓம் சிங்கமுகாவா ஓம் ஓம்
கூறடா பிடித்து கடித்தொடுத்து சுற்றிக்
குணமாக கண்டுபிடித்த தறிவாரைப் போல்
தீரடா பிசாசுபேய் பொடிபட் டோடத்
திரமாக நரசிங்க ராஜா வானை
சீரடா ஸ்ரீம் கிலீம் சுவாஹா வென்று
சிறப்பாக லட்சமுரு ஜெபித்துத் தீரே
ஓம் சிங்கமுகவா ஓம் ஓம் நரசிங்க
ராஜா ஆணை ஸ்ரீம் கிலீம் சுவாஹா”

                                               – புலிப்பாணி ஜாலத்திரட்டு 81

நரசிங்க மந்திரத்தின் சிறப்பை சொல்லுகிறேன் கேட்பாயாக. ஓம் சிங்கமுகவா ஓம் ஓம் ஜபித்தபடி சத்தத்துடன் பிசாசு, பேய் பொடிபட் டோட நரசிங்க ராஜா ஆணை ஸ்ரீம் கிலீம் சுவாஹா என்று இலட்சமுறை ஜெபிக்கவும் இதனால் பேய் பிசாசு பிடித்திருந்தால் ஓடிவிடும்.

“காணவே ஓம் சர்வாப்தா நாதா
கனிவாக ஓம்படு சுவாஹா வென்று
வானவே லட்சமுரு செபித்துத் தீரு
வளமான தர்ப்பணமும் மோமான்னங்
கோணாமற் பூசையது பெலத்தச் செய்நீ
குணமாகச் சாமமது சித்தியாகும்
நாணாது நினைத்தபடி யெல்லாஞ் செய்யும்
நாயகனே பிசாசுமுதற் பூதம் போமே.”

                            – புலிப்பாணி ஜாலத்திரட்டு 82

ஒம் சர்வ ஆபத்துரு நாதா ஒம் படு சுவாஹா என்று இலட்சம் தடவைகள் ஜெபிக்கவும். பின்னர் தர்ப்பணம்,ஹோமம், அன்னதானம், பூசை இவைகளைச் செய்யவும். இதனால் ஒரு சாம நேரத்தில் நினைத்தக் காரியங்கள் கைகூடி சித்திக்கும் மற்றும் பிசாசு முதல் பூதம் வரை ஒடிப்போய் விடும்.

ஒரு சாமம் என்பது மூன்று மணி நேரம்

The post அணைத்து தடைகளையும் நீக்கும் புலிப்பாணி சித்தர் அருளிய நரசிம்ம மந்திரம் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

அட்சர பீடங்களின் காவலன்

$
0
0

 அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவ முனிகளை வதைத்தான். தேவர்களைப் பெண் வேடமிட்டு சாமரம் வீசும் ஏவலைச் செய்யும்படி பணித்தான். அந்தகாசுரன் சிவனிமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள்.

தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவர மூர்த்தியாக சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.பைரவ மூர்த்தியை மூர்த்தி, பிரம்மசிரேச்சிதர், உக்ர பைரவர், க்ஷேத்ரபாலகர், வடுகர், ஆபத்துதாரனர், சட்டைநாதர், கஞ்சுகன், கரிமுக்தன்,நிர்வாணி, சித்தன், கபாலி, வாதுகன், வயிரவன் என்று பல பெயர்களின் வணங்குகிறார்கள்.அட்சர பீடங்களின் காவலன்சிவபெருமானை பிரிந்த ஆதி சக்தி பிரம்மாவின் மானசீக குமாரனான பிரஜாபதி தட்சன் மகளாக பிறந்தார். அவர் தாட்சாயினி என்றும் சதி தேவிஎன்றும் அறியப்பட்டார். பருவ வயதில் சிவபெருமானின் மீது காதல் கொண்டு, தட்சனின் விருப்பமின்றி திருமணம் செய்து கொள்கிறார்.

 ஆணவம் கொண்டிருந்த பிரம்ம தேவரின் தலையை கொய்து பூசையின்றி போக சாபம் அளித்தமையினால் சிவபெருமான் மீது பிரம்ம குமாரனான தட்சன் கோபம் கொண்டிருந்தார். அதனால் சிவபெருமான் தாட்சாயினிக்கு அழைப்பு அனுப்பாமல் யாகமொன்றை தொடங்குகிறார்.

 அந்த யாகத்தீயில் சதிதேவி விழுந்து மறிக்கிறார்.சிவபெருமான் சதிதேவியாரின் பூத உடலோடு அழைவதைக் கண்ட திருமால், சிவபெருமானை அந்த மாயையிலிருந்து அகற்றுவதற்காக சக்ராயுதத்தினால் திருமால் அவ்வுடலை தகர்த்தார்.

 சதி தேவியாரின் உடல்கள் பல்வேறு பாகங்களாக பூமியில் சிதருண்டது. அவ்வாறு சிதருண்ட சதிதேவியின் உடல் பாகங்களை சிவபெருமான் சக்தி பீடமாக மாற்றினார். தாராகாசுரன் போன்ற அரக்கர்களிடமிருந்து சக்தி பீடங்களையும், அங்குவரும் பக்தர்களைக் காக்கவும் ஒவ்வொரு சக்தி பீடத்திற்கும் ஒரு பைரவரை காவல் தெய்வமாக நியமனம் செய்தார்.

The post அட்சர பீடங்களின் காவலன் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.


வினாயகருக்கும், அகத்தியருக்கும் சிவ பெருமான் தனது திருமண கோலத்தை காட்டிய திருத்தலம்

$
0
0

நாகப்பட்டினம் மாவட்டம் கிடாரங்கொண்டான்  அடுத்துள்ள நனிப்பள்ளி உள்ளது  2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது..

 இங்கு சிவ பெருமான்  நற்றுணையப்பர் உடன் பருவதராஜ புத்திரி என்ற பெயரில் சிவ பெருமான்   அருள் பாலிக்கிறார் இவரை வணங்கினால் திருமணத் தடை நீங்கும், குழந்தைகளுக்கு கல்வி வள்ர்ச்சி பெரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை….. சிவபெருமானின் தேவார பாடல் பெற்ற 274-சிவாலயம்  சிவாலயங்களில் இது 106 – வது  தேவார தலம் ஆகும்

திருஞானசம்பந்தர். மீண்டும் அந்த நிலத்தை மருதநிலமாக மாற்றினார்

 திருநனிபள்ளி என்னும் புஞ்சை (பொன்செய்) சமணர்பள்ளிகள் இங்கு மிகுதியாகக் காணப்பட்டதால். நனிப்பள்ளி எனப் பெயர் வந்தது இத்தலத்திற்கு, கிடாரங்கொண்டான் புஞ்சை என்று தற்போது அழைக்கப்படும் இவ்வூேர திருஞானசம்பந்தரது தாயார் பகவதியம்மை பிறந்த தலமாகும் சீர்காழியில் அன்னை உமாதேவியிடம் ஞானப்பால் உண்டு, திருக்கோலக்காவில் அப்பன் ஈசனிடம் பொற்றாளம் பெற்ற பின்னர், திருநனிப்பள்ளி அடியார்களின் அழைப்பிற்கு இணங்கி, தந்தையின் தோள் மீதமர்ந்து இங்கு வந்து இறைவன் மீது பதிகம் பாடி, பாலையாக இருந்த நிலத்தினை நெய்தல் நிலமாய் மாற்றினார் திருஞானசம்பந்தர். மீண்டும் அந்த நிலத்தை வளமிகு மருதநிலமாக மாற்றினார்.

இறைவன் விரும்பி உறையும் இடம்:

 சம்பந்தர் மட்டுமல்லாது, அப்பரும், சுந்தரரும் இத்தலம் மீது பதிகம் பாடிப் போற்றியுள்ளனர். இயற்கை வளம் நிறைந்த இப்பதி, இறைவன் விரும்பி உறையும் இடமென்றும், இதுபோன்ற காதல் நகர் கீழுலகிலும், மேலுலகிலும் இல்லை என்றும் பாடிப் பரவசப்படுகின்றார் சம்பந்தர். தனது அடியவரை நரகத்தில் விழாது காக்கும் நற்றுணையப்பர் விளங்கும் நனிப்பள்ளியென்றும் தொன்னூற்று ஆறு தத்துவங்கள் அடங்கிய உடம்பினைக் கொண்டு ஈசனை உணராத நம்மை எண்ணி வருந்தியும் பகர்கின்றார், அப்பர், சுந்தரர். நம்பியாண்டார் நம்பியும், சேக்கிழாரும் இத்தலத்திற்கு சம்பந்தரோடு கூடிய தொடர்பினை செவ்வனே எடுத்துரைத்துள்ளனர்.

 சோழப் பேரரசான ராஜேந்திர சோழன், தந்தை ராஜராஜனின் ராஜராஜேச்சுரம் என்னும் தஞ்சை பிரகதீஸ்வரம் போன்று கங்கை கொண்ட சோழீச்சுரத்தை அரிய சிற்ப நுணுக்கங்களோடு படைத்தான். ‘‘கெடா’’ என்ற நகரத்தை வென்றதன் நினைவாக ‘‘கடாரம் கொண்ட சோழீச்சுரம்’’ என்ற ஊரையும் சோழ நாட்டினில் உருவாக்கினான். இதனால் மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு ‘‘பூர்வ தேசமும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன்’’ என்னும் சிறப்புப் பட்டமும் வழங்கப் பெற்றது! கடாரம் கொண்டான் என்பதே மருவி கிடாரங்கொண்டான் ஆகிவிட்டது. அதியற்புத சிற்ப வேலைபாடுகள் கொண்ட பிரமிக்க வைக்கும் பிரமாண்ட விமானத்தை தன்னகத்தே கொண்டு தனித்துவப் புகழுடன் விளங்குகின்றது. இந்த நனிப்பள்ளி சிவாலயம். இங்கு காணப்பெறும் சிற்பங்கள் ஒவ்வொன்றும் சோழர்களின் சிற்பக் கலைத் திறத்தை உலகிற்கு பறை சாற்றுகின்றது.

பார்வதி, பரமேஸ்வரனின் கல்யாண காட்சி:

 அகத்தியர் இங்கு பார்வதிபரமேஸ்வரனின் கல்யாண காட்சியைக் கண்டுள்ளார். காகம் ஒன்று இத்தல சொர்ண தீர்த்தத்தில் நீராடி, பொன்னிறமானதாக வரலாறு. ஊரின் நடுவே ஓங்கிய மதில்களுடன் ஒய்யாரமாய் ஒளிர்கின்றது திருக்கோயில். முதல் வாயிலின் மேல் பஞ்சமூர்த்திகளின் தரிசனம். முன்னே கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியன உள்ளன. இங்கே இரு அம்மன் சந்நதிகள் உண்டு. முதல் சந்நதி முன், மண்டபத்தின் இடப்புறம் தெற்கு முகமாக அமைந்துள்ளது. இந்த அம்மனை கல்யாண ஈஸ்வரி என அழைப்பர். இந்த முக மண்டபத்தின் இரு பக்கமும் மேற்குத் திருமாளிகைப் பத்தியில் மூன்று விநாயகர் சிலைகள், சூரியன், நால்வர், ராகு, பைரவர், லட்சுமி நாராயணர், வேணுகோபாலர், ரதேஸ்வரர், கிழக்கு முகமுள்ள தனி சனீஸ்வரர் ஆகிய சிலாரூபங்கள் நிறுவப்பட்டுள்ளன. அடுத்ததாக மகா மண்டபம்! இங்கு அழகிய தூண்கள் பல எழுந்து, பிரமாண்டத்தை வெளிப்படுத்துகின்றன.

கர்ப்பகிரகம் ஒரு யானை வலம் வரும் அளவிற்கு:

கர்ப்பகிரகம் மிகவும் விசாலமானது. ஒரு யானை வலம் வரும் அளவிற்கு உட்பரப்பு அதிகமுடையது. அதன் நடுநாயகமாக லிங்கத் திருமேனி கொண்டு நமக்குப் பேரருள் புரிகின்றார், நற்றுணையப்பர். இவரை வணங்கி, பிராகார வலம் வருகையில் தென்கிழக்கில் மடப்பள்ளி உள்ளது. அதற்கடுத்தார்போல் தெற்குப் பிராகாரத்தில் மேற்கு நோக்கியப்படி அம்பாள் சந்நதியுள்ளது. அருகே அம்பாளுடன் கூடிய கல்யாண சுந்தரேஸ்வரர் சந்நதியும் உள்ளது. அம்பாள் இங்கே ஸ்வாமிக்கு எதிராக மாலை மாற்றும் கோலத்தில் வீற்றிருக்கின்றாள். அம்பாள் இங்கு மலையான்மடந்தை என்ற பெயரை தாங்கி கருணை புரிகின்றாள். பர்வதபுத்ரி என்றும் அழைக்கப் பெறுகின்றாள். மேற்கில் கிழக்கு முகம் கொண்ட கணபதி சந்நதியும், வள்ளி- தெய்வானையுடனான கந்தன் சந்நதியும் அமைந்துள்ளது. சுவாமி கருவறை விமானம் மிகவும் பிரமாண்ட அமைப்புடையது.

கம்பீரமாய் துர்க்கை:

அகத்தியர், கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை என ஆறு தெய்வ சிலைகள் இங்கே காணப்படுகின்றன. துர்க்கை மிகக் கம்பீரமாய் ஒரு கரத்தால் அபயம் அளித்தும், மறுகையை இடுப்பில் மடித்தும், கால்களை சற்றே மடக்கியவாறும், மிகுந்த கலை வடிவினளாய் கருணை பொழிகின்றாள்.

இத்தலத்தின் விருட்சம் செண்பகம் மற்றும் புன்னை தீர்த்தம் – சொர்ண தீர்த்தம். முன்வினைக் காரணமாக முன்னேற்றம் இன்றி தவிப்போர் இங்கு வந்து வழிபட நன்மையுண்டாகும். திருமணத் தடை நீங்கும்.

அமைவிடம்:

நாகை மாவட்டம், திருவெண்காடு செல்லும் வழியில் 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது

தொடர்பு கொள்ள  :  91-4364-283188

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman

  Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post வினாயகருக்கும், அகத்தியருக்கும் சிவ பெருமான் தனது திருமண கோலத்தை காட்டிய திருத்தலம் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

தடைகளை தகர்த்தெறியும் ஈச்சனாரி விநாயகர்

$
0
0

 கோவை மாவட்டம் மேலச்சிதம்பரம் என்ற ஊரில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த  கோவில் உள்ளது. இங்கு விநாயகர் விக்னேஸ்வரன் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இவரை வணங்கி வேண்டிக்கொண்டால் எடுத்தகாரியம் தடங்கள் இன்றியும், குழந்தைக் கல்வி, கோள்விகளில் சிறந்து விளங்குவதாகவும் படிப்பில் மிக உயர்ந்த நிலை அடைவதாகவும் இங்கு வரும் பக்தர்களின் தீராத நம்பிக்கை.

வேத மந்திரங்களின் தலைவன்:

 விக்னங்களை அதாவது வினைகளை நமக்கு ஏற்படும் கவலைகளை களைபவர் விநாயகர். அனைத்து காரியங்களிலும், விநாயகரைத் தொழுது தொடங்கிட எல்லை இல்லா ஆனந்தம் நல்கிடுவார் என்பது உறுதி. இவர் வேத மந்திரங்களின் தலைவன் என போற்றப்படுவர். முழு முதற்கடவுள், பிரணவ மந்திரத்தின் உட்பொருளானவர். இந்த கோவில் விநாயகர் 6 அடி உயரமும் 3 அடி பருமனும் கொண்டவர். கோவை அருகிலுள்ள, மேலச்சிதம்பரம் என போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வரசுவாமி திருத்தலத்திற்கு பிரதிஷ்டை செய்ய உருவாக்கி, மதுரையிலிருந்து மாட்டு வண்டியில் எடுத்து வந்தனர்.

விநாயகர் அமர்ந்து விட்டார் அகற்ற முடியவில்லை:

 இந்த இடம் வந்தவுடன் வண்டியின் அச்சு முறிந்து சரிந்துவிட்டது. இந்த இடத்திலேயே விநாயகர் அமர்ந்து விட்டார். எவ்வளவு முயற்சி செய்தும் அகற்ற முடியவில்லை. பின்பு காஞ்சி சங்கராச்சார்யார் சுவாமிகளை அணுகிய பொழுது விநாயகரை இங்கேயே பிரதிஷ்டை செய்யுங்கள், என்று அருள்வாக்கு கூற, ஈச்சனாரி விக்னேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கலானார்.

27 நட்சத் திரங்களுக்கும் 27 வித மலர் அலங்காரங்கள்

 mukkaniஅதிகாலை 5 மணியில் இருந்து இரவு 10 மணி வரையும் இடைவெளி இன்றி தொடர்ந்து இத்திருத்தலத்தில் பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும், கணபதி ஹோமம் கட்டளைதாரர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் 27 நட்சத் திரங்களுக்கும் மலர் அலங்காரங்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் வெவ்வேறு விதமாக அலங்கரிக்கப்பட்டு, அஸ்வினி முதல் ரேவதி வரையிலும், 27 வித மலர் அலங்கார அழகு செய்யப்பட்டு பூஜை நடத்துவது மிகவும் சிறப்பானதாகும். இந்த கோவிலுக்கு இது பிரசித்தமானதாகும். மண வாழ்க்கை அமைவது நிச்சயம் மேலும் தினமும் நடைபெறும் பூஜைக்கு வேண்டிய அனைத்து பொருட்களும், அதாவது, பால், பன்னீர், சந்தனம், குங்குமம், திருநீறு மற்றும் மின் கட்டணங்களும் கட்டளைதாரர்களே செலுத்தி வருவது சிறப்பான அம்சமாகும். இந்த திருத்தலம் வந்து விநாயகரிடம் மனம் உருகி, பிரார்த்தனை செய்ய, குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் கிடைத்து, நல்ல உத்தியோகம் கிடைத்து வாழ்வில் உயர்வு பெறுவது உறுதி. தொழிலில் நல்ல முன்னேற்றம், விவசாயத்தில் அதிக மகசூல், நினைத்தபடி திருமண வாழ்க்கை கிடைப்பதும் நிச்சயம் என்கின்றனர், இதை அனுபவித்து உணர்ந்தவர்கள், பலனை அடைந்தவர்கள் தங்கள் நேர்த்தி கடனை, பால் அபிஷேகம் செய்து, பால் கொழுக்கட்டை படைத்தல், சிதறு தேங்காய் உடைத்தல், சதுர்த்தி விரதம் பூணுதல், அருகம்புல் மாலை சாத்துதல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் ஆகியவைகளால் நிறைவு செய்கின்றனர்.

 இங்கு தினமும் 150 பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது. இங்கு ஏழை எளியவர்களுக்கு திருமணம் எந்தவித தொகையும் பெறாமல் நடத்தப்படுகிறது. தங்க ரதம் ஒன்று தயார் செய்து, தங்க தேர் நேர்ச்சையும் நடைபெறுகிறது. வாகன பூஜைக்கு பெயர்பெற்ற ஆலயம் இது. குடும்பப் பிரச்சினைகளை நினைத்து வருபவர்கள் ஈச்சனாரி விநாயகரை தரிசித்தபின் சுமைகளை இறக்கி சுகமாக வீட்டுக்குச் செல்வர் என்பது கண்கூடு. தட்டு காணிக்கைகளை தனி உண்டியலில் போட்டு, சதவிகித அடிப்படையில் பகிர்ந்து கொள்கின்ற பண்பு வேறெங்குமில்லாத சிறப்பம்சம். அவரவர் நட்சத்திர நாளில் இங்கு வழிபடுவது கூடுதல் சிறப்பாகும். ஜாதகம் இல்லாதவர்கள் தமிழ் வருடப்பிறப்பு, தமிழ் மாதப் பிறப்பு, சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற நாட்களில் தரிசனம் செய்தால் பன்மடங்கு பலன் உண்டாகும்.

அமைவிடம்:

  கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 9 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலையில் உள்ளது ஈச்சனாரி விநாயகர் கோவில்.

தொடர்புக்கு : 91-422-2672000, 2677700.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #Viluppuram #ganesha #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #baalaganapathi #ganapathi

  Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

 

The post தடைகளை தகர்த்தெறியும் ஈச்சனாரி விநாயகர் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

சிவன் காலையில் பச்சை நிறத்துடன் மாலை பொன் நிறத்துடன் மாறும் அதிசயம்

$
0
0

 விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்துள்ள பணைமலையில் 2000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது. தாளகிரீஸ்வரர் அஸ்த தாளாம்பிகை உடன் இங்கு அருள் பாலிக்கிறார் இவரை வனங்கினால் திருமணம், குழந்தைபாக்கியம், கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நிறம் மாறூம் தாளகிரீஸ்வரர் கோவில் காலையில் பச்சை நிறம் மாகவும் மாலை பொன் நிறம் மாக மாறும் அதிசயம் பனைமரங்கள் நிரம்பிய மலையாக இருந்த இத்தலம் பனைமலை என்று வழங்கப்படுகின்றது. ஆனால், இவ்வூரை மலைகள், குன்றுகள் சூழ்ந்துள்ளன. அவை உருண்டைக் கற்களை குவித்து வைத்ததுபோல், ஒரே கல்லால் மிகவும் பருத்தும், பெரியதாகவும், உயர்ந்தும் காணப்படுவதால், இதனைப் ‘பணைமலை’ என்றே குறிப்பிடுகின்றனர். குடைவரைக் கோயில்களையும், ஒற்றைத் தளி என்கிற கற்கோயில்களையும் உருவாக்கியவன் மன்னன் மகேந்திரவர்மன் ஆவான். மலையடிவாரத்திலுள்ள குகையினுள் உள்ள கொற்றவை தெய்வத்தை ராஜசிம்மன் ஏற்படுத்தி வழிபட்டு வந்திருக்கிறான்.

துர்க்கை, மகிஷாசுரமர்த்தினி :

  அக்குகைக் குன்றில் பல்லவ மன்னன் ராஜசிம்மனைப் பற்றிய வாழ்த்துரை ஒன்று, பல்லவர் காலக் கல்வெட்டாய்க் காட்சியளிக்கின்றது. இது துர்க்கைக் கோயில் என வழங்கப்பட்டு, மக்களால் நாளும் வழிபாடு செய்யப்படுகின்றது. அடிவாரத்தில், வலதுபுறமுள்ள குன்றில் விநாயகரின் உருவம் புடைப்புச் சிற்பமாக விளங்குகிறது. இவர் மகுடம், அங்குசம், பாசம் யாவும் சாய்வான மலையில் செதுக்கப்பட்டுள்ளதால் சற்று வித்தியாசமாகத் தோற்றமளிக்கின்றன. இந்த விநாயகர் தம் இரண்டு கால்களையும் குத்திட்டு அமர்ந்துள்ள பாவனையில் திகழ்கிறார். இடதுபக்கம் சிலபடிகள் ஏறிச் சென்றால் குகை போன்ற அமைப்பை அடையலாம். நுழைவிலேயே பலிபீடம், யானை, சூலம் ஆகியவை காணப்படுகின்றன. இக்குகைக் கோயிலிலுள்ள இறைவியை துர்க்கை, கொற்றவை, மகிஷாசுரமர்த்தினி என்று போற்றி மக்கள் வழிபடுகிறார்கள்.

 அன்னை, தலையில் ராசகிரீடம் புனைந்து எட்டுத் திக்குகளையும் எட்டுக் கரங்களாகக் கொண்டு, இடது மேல் கரத்தில் தண்டம் (வில்) பிடிக்க, மற்ற கைகள் சங்கம், கேடயம் ஏந்தியும், நான்காவது கை தண்டத்தை அணைத்தவாறு அன்னையின் இடது தொடைமீது படிந்துள்ளது. சிம்மத்தின் மீது தன் இடதுகாலைத் தூக்கி வைத்தும், வலது காலைத் தரையில் ஊன்றியும், வெற்றிக்களிப்புடன் காட்சியளிக்கிறாள். அம்மனின் வலது மேற்கைகள் சக்கரம், பெருவாள் பிடித்தும், ஒரு கை கடக முத்திரையோடும், மற்றொரு கையைத் தன் இடைமீது கடிகஸ்தமாகவும் வைத்திருக்கிறாள். காதுகளில் தடித்த குழைகளும், கழுத்தில் மங்கல அணியும், மேற்கையில் தோள்வளையும், மார்பில் மேலிருந்து கீழாக நூலாடையும், முன்கையில் கைவளையும், இடையில் கச்சையும், இடையின் முன் இடைவாரும், பக்கங்களில் ஆடையும், காலில் பாதசரமும் கொண்டிருக்கிறாள். அம்மனைத் தாங்கும் சிம்மம், முன்பக்க இடது காலைத் தரையில் ஊன்றி, முன் வலது காலை மேலே தூக்கிச் சற்றே சாய்ந்த நிலையில், கம்பீரமாகச் சிலிர்த்தெழுவதுபோலக் காட்சியளிக்கின்றது.

கோயில் அமைப்பு:

 கோயிலின் தெற்கு மண்டபம் கம்பீரமாக வரவேற்கின்றது. உண்ணாழி (கர்ப்பக்கிரகம்), அர்த்த மண்டபம், முன்மண்டபம், மகாமண்டபம், திருச்சுற்று மண்டபம், சிற்றாலயங்கள் என்று இக்கோயில் அமைந்திருக்கிறது. தூண்கள் கீழ்ப்புறம் செவ்வக வடிவிலும், மேற்பகுதி சதுர வடிவிலும் இடைப்பகுதி சதுரம், பட்டைகள் கொண்டு நிற்கின்றன.ராஜ சிம்ம பல்லவன் கட்டிய அருள்மிகு குன்றுடை(றை) நாதர் சிவன் கோயில் கிழக்கு, வடக்குப் பகுதிகளில் உள்ளன. வடக்கே 18 தூண்களும் கிழக்கே 10 தூண்களும் மண்டபத்தைத் தாங்குகின்றன. பிற்காலச் சோழர்கள் உருவாக்கிய மண்டபங்கள் இவை. தூண்களில் விநாயகர், ரிஷபாருடர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சுற்று மண்டபத்தின் ஈசான்ய மூலையில் தெற்கு நோக்கிப் பைரவர் சிலையும், மேற்கு நோக்கிச் சூரியன் சிலையும், நடுவில் நவகிரகங்கள் அமைந்த மேடையும் காணப்படுகின்றன. கிழக்குச் சுற்று மண்டபத்தில் இறைவனைப் பார்த்த நிலையில் பலிபீடம், நந்தி உள்ளன. கொடி மரத்திற்குரிய துவாரம் மேல்தளத்தில் காணப்படுகின்றது. ராஜ சிம்ம பல்லவன் கட்டிய அருள்மிகு குன்றுடை(றை) நாதர் சிவன் கோயில், முன் மண்டபத்திலிருந்து தனித்துக் காணப்படுகிறது. இறைவனைக் காண அர்த்தமண்டபம் நுழைவதற்கு ஏதுவாக, முன் மண்டபத்திலிருந்து இணைப்பாக நான்கு கருங்கல் பலகைகள் பாவப்பட்டிருக்கின்றன.

அஸ்த தாளாம்பிகை:

 இறைவனார் கோயில் தனித்தும் அதனைச் சுற்றி நீராழி மண்டப அமைப்பும் தென்படுகின்றன. நீராழி, முன்மண்டபத்தைப் பிரித்துக் காட்டுகிறது. அர்த்த மண்டபத்தின் உள்ளே நுழைந்ததும், நேராக கர்ப்பக்கிரகத்தில் மிகப் பெரிய, பதினாறு பட்டை வடிவச் சிவலிங்கத்தையும், ஆவுடையாரையும் தரிசிக்கலாம். மிக அழகிய, பளபளப்பான கரியநிறக் கருங்கல்லில், செதுக்கப்பட்டு ஒளிவீசிக் கொண்டிருக்கிறது சிவலிங்கம். அர்த்த மண்டப பக்கச் சுவர்களில், வலது பக்கம் திருமால்-மகாலட்சுமி, இடது பக்கம் நான்முகன்-கலைமகளும் இரு தம்பதியரும் அமர்ந்த கோலத்தில் இறைவனின் பார்வையில் படுமாறு மிக நேர்த்தியாக சுவரில் செதுக்கப்பட்டு பொலிகின்றனர். இம்மலை ‘பணைமலை’ என்றானது எவ்வாறு? பணை என்றால், மிக உயரமான, ஓங்கிய என்ற பொருளில் பாமர மக்களிடையே புழங்கும் சொல்.பனைமலையை வடமொழியில் தாளகிரி என்கின்றனர். ஆகவே, இறைவன், தாளகிரீஸ்வரர்! பணைமலைக் கோயிலின் வடகிழக்குத் திசையில் தென்திசை நோக்கியவாறு அம்மன் சந்நதி அமைந்துள்ளது. அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் அம்மன் திருவுரு காட்சியளிக்கின்றது. அம்மனை ‘அஸ்த தாளாம்பிகை’ என்று போற்றுகிறார்கள். அம்மனின் மேற்கைகள் அங்குசத்தையும், பாசத்தையும் தாங்கியுள்ளன; கீழ் வலக்கை அபய முத்திரை, கீழ் இடதுகை வரத முத்திரை காட்டுகின்றன.

அமைவிடம்:

 கோயிலை அடைய செஞ்சியிலிருந்து அனந்தபுரம் வழியாகவும் விழுப்புரத்திலிருந்து கணடாச்சிபுரம் சூரப்பட்டு, அன்னியூர் வழியாகவும் பேருந்து வசதிகள் உள்ளன.

தொடர்பு கொள்ள :

வீரப்பன் – 9443048613   நம்பி – 9566623942

காசி – 8056863301

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #Viluppuram #hindudevotionalwebtv #hinduspiritualwebtv

  Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post சிவன் காலையில் பச்சை நிறத்துடன் மாலை பொன் நிறத்துடன் மாறும் அதிசயம் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

விநாயகரின் அபூர்வ தகவல்கள்

$
0
0

   சிங்கப்பூரில் உள்ள செண்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சிங்கப்பூரின் கிழக்கு கடற்கரை பகுதியான கடோங்கில் பிரசித்தி பெற்ற செண்பக விநாயகர் கோவில் உள்ளது. செண்பக மரத்தடியில் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலையை வைத்து இந்த கோவில் கட்டப்பட்டதால் செண்பக விநாயகர் கோவில் என்று பெயர் வைக்கப்பட்டது.  ஐந்து  தலை நாகருடன், செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் வரகுண கணபதி என்ற திருநாமம் பூண்டு, பக்தர்களுக்கு அருள்கிறார், ‘இறை  முதல்வன்’.

 கர்நாடக மாநிலத்தில் செர்செப்பா நீர்வீழ்ச்சியின் அருகே ஒரு விநாயகர் அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் மேற்பகுதியில் காணப்படும் ஒரு துவாரம் வழியாக   அருவி நீர் நேரடியாக விநாயகர் மீது விழுகிறது. இப்படி அருவியே ஆனைமுகனை வணங்குவதால், இவர், ‘நீர்வீழ்ச்சி விநாயகர்’’ என்று அழைக்கப்படுகிறார். ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயமுத்தூரில் புலியகுளம் பகுதியில் இருக்கிறார். முந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார். 190 டன் எடையுள்ள இவர் ஒரே கல்லால் உருவானவர். விநாயகரின் உயரம் 20 அடி, அகலம் 10 அடி. ஏணிப்படியில் ஏறிச்சென்றுதான் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

 திருச்சி பாலக்கரையில் அருள்புரிகிறார் இரட்டைப் பிள்ளையார்கள். திருவோண நட்சத்திரத்தில் இந்த இரட்டை பிள்ளையார்களுக்கு மாம்பழம் அல்லது மாம்பழச்சாறு நைவேத்யம் செய்து ஏழை தம்பதிகளுக்கு அளித்தால் கணவன்-மனைவி உறவு பலப்படும் என்றும், இரட்டையர்களுக்கு சந்தனக்காப்பு செய்து வணங்கினால் கடன் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் பெறலாம் என்றும், அறுகம்புல் மாலை சூட்டி வணங்கினால் கேது தோஷம் நீங்கும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். பொதுவாக எந்த ஊரிலும் விநாயகர் திருக்கோவிலில் பள்ளியறை கிடையாது. விதிவிலக்காக புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் பள்ளி அறை உண்டு.

 எல்லா திருக்கோவில்களிலும் ஐந்து கரங்களுடன் காட்சி தருவார் விநாயகப்பெருமான். ஆனால் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரும், கர்நாடகா கோகர்ணம் திருத்தலத்தில் உள்ள விநாயகரும் இரண்டு திருக்கரங்களுடன் காட்சி தருகின்றனர். எல்லா திருத்தலங்களிலும் இராஜ கோபுரத்தின் முன் வலப்புரம் விநாயகரும் இடப்புரம் முருகனும் இருப்பார்கள். ஆனால் உத்தர கோசமங்கை தலத்தில் வலப்புரம் முருகனும் இடப்புரம் விநாயகரும் கோவில் கொண்டுள்ளார்கள்.

   திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் கோபுர வாசலுக்கு மேல் இடது பக்கமாக வலம்புரி விநாயகர் எழுந்தருளியுள்ளார். இப்பிள்ளையாருக்கு  வெண்ணெய் சாத்தி வழிபாடு நடத்தப்படுகிறது. ஜப்பான் நாட்டின் காங்கி-டெக் என்ற புத்தமத கடவுளுடன் விநாயகர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இவரை விநாயக்‌ஷா, கவான்வின்ஷேர் என்ற பெயர்களில் அழைக்கின்றனர். யோகநிலையிலும் விநாயகர் சிலைகள் உள்ளன. இங்குள்ள கோயில்களில் திசைக்கு ஒன்றாக நான்கு விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு அவரை திசைகளின் காவலராக கருதி வழிபடுகின்றனர். கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் இங்கு விநாயகரை வழிபடும் வழக்கம் துவங்கியது.

 மதுரை கீழஆவணிமூல வீதியில் உள்ளது பைரவர் கோயில். மதுரை மீனாட்சி அம்மனுக்குக் காவல் தெய்வமான இவருக்கு முன்புறம் சோமசூரிய கணபதி உள்ளார். தும்பிக்கையில் சூரியன் மற்றும் பிறைச்சந்திரனுடன் இவர் காட்சி தருவதால், இவர் ‘சோமசூரிய கணபதி’எனப்படுகிறார். சந்திராஷ்டமம் காலத்தில் இவரை வணங்கினால், சோதனைகள் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிற கிரக தோஷங்கள் மற்றும் நாகதோஷம் உள்ளவர்கள் இவரை வணங்குவர். எதிரி பயம், பிணி, பீடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சூரியனும், சந்திரனும் சந்திக்கும் அமாவாசை நாளில் இவருக்கு அபிஷேகங்கள் செய்து வணங்கிட அரிய பல பேறுகளையும் பெறலாம் என்கிறார்கள்.

 நாகை மாவட்டம் ‘பூம்புகார்’என்றழைக்கப்படும் காவிரிப்பூம்பட்டினத்தில்தான் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு கடலோடு சங்கமம் ஆகிறது. காவிரி கடலோடு கலக்கும் இடத்தை ‘சங்கமத்துறை’என்றும், இந்த இடத்தில் நீராடிவிட்டு மூதாதையருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் பித்ருதோஷங்கள் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். காவிரி சங்கமத்துறையில் கோயில் கொண்டுள்ள விநாயகர்‘சங்குமுக விநாயகர்’என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில் இது. இந்த விநாயகரை வணங்கி ஒரு காரியம் தொடங்குமுன் தேங்காய் உடைத்து வேண்டிக் கொண்டால் அச்செயல் எத்தடையுமின்றி எளிதாக ஈடேறும்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #Viluppuram #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #baalaganapathi #ganapathi

  Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post விநாயகரின் அபூர்வ தகவல்கள் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

அவ்வையார் அருளிய விநாயகர் அகவல்

$
0
0

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்05

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 10

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! 15

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து 20

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் 25

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து 30

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் 35

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 40

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 45

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் 50

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து 55

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் 60

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் 65

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் 70

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #Viluppuram #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #baalaganapathi #ganapathi

  Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post அவ்வையார் அருளிய விநாயகர் அகவல் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

வாழ்வில் வலம் தரும் மயிலாப்பூர் வாலிஸ்வரர்

$
0
0

 சென்னை மயிலாப்பூரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்நத சிவன் கோவில் உள்ளது இங்கு அம்பாள் பெரிய நாயகிவுடன் சிவபெருமான் வாலிஸ்வரர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இவரை வணங்கி வழிப்பட்டால் வாழ்வில் வலம் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

வெற்றிலையை மாலையாகக் கோர்த்து:

 சனிக்கிழமை தோறும் காம்பு நீக்கிய வெற்றிலையை மாலையாகக் கோர்த்து, அந்த மாலையை வாலீஸ்வரருக்கும் சாத்தி வழிபட்டு வந்தால் பக்தர்கள் வேண்டிய பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பஞ்சலிங்க சன்னிதியில் மாதுளம் பழ முத்துக்களால் அர்ச்சனை செய்தால், தீர்க்க முடியாத பிரச்சினைகளில் இருந்தும் விடுதலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மதுவுக்கு அடிமையானவர்கள் இந்த சன்னிதியில் சாம்பிராணி தூபம் ஏற்றினால் நிவர்த்தி உண்டாகும் என்கிறார்கள் பக்தர்கள்.

அவன் தன் தாயையே குருவாக:

 வாலியின் தாயார் சிறந்த சிவ பக்தையாக இருந்தவர். அவள் ஒரு முறை இந்திரனை வேண்டி தவம் இருந்தாள். அவள் முன் தோன்றிய இந்திரனிடம், ‘எனக்கு பிறக்கப்போகும் மகன் சிறந்த சிவ பக்தனாகவும், சிவபூஜையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்துபவனாகவும், மகா பராக்கிரமசாலியாகவும், அவதார புருஷனால் மட்டுமே அவனது ஆயுள் முடிவடைய வேண்டும் எனவும் பல்வேறு வரங்களைக் கேட்டுப் பெற்றாள். வாலி குழந்தைப் பருவத்தில் இருந்தே சிவ பக்தியில் சிறந்தவனாக இருந்தான். அவன் தன் தாயையே குருவாக  எண்ணிக்கொண்டு, தினமும் சிவபூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். மேலும் சகல சாஸ்திரங்களையும் கற்றதோடு, மிகுந்த பலம் நிறைந்தவனாகவும் திகழ்ந்தான். சிவ பூஜையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால், சுற்றம் சூழல் எல்லாவற்றையும் மறந்து, ஈசன் நினைவிலேயே மூழ்கிவிடும் அளவுக்கு அவனது பக்தி இருந்தது. அவனைக் கண்டு அவனது தாய் மிகுந்த மகிழ்ச்சியடைந்தாள்.

திருவண்ணாமலை:

 ஒரு முறை வாலியை அழைத்த அவனது தாய், பல சிவாலயங்களுக்கும் சென்று வழிபட்டு வரும்படி பணித்தார். அன்னையின் கோரிக்கைப்படி, திருவண்ணாமலை உட்பட பல சிவாலயங்களுக்குச் சென்ற வாலி, அங்கு மனமுருக சிவபெருமானை வழிபட்டான். ஆங்காங்கே தான் சந்தித்த முனிவர்களிடம் இருந்தும், சிவ பூஜை முறைகளை நன்கு கற்றுக்கொண்டான். பல இடங்களைக் கடந்து, பின் மயூரபுரி (தற்போது மயிலாப்பூர்) வந்து, பவதாரண்யேஸ்வரரை வணங்கினார். அவரை மலர்களாலும், வில்வ இலைகளாலும் மற்றும் பழங்களாலும் பூஜித்து மகிழ்ந்தான். வாலியின் பக்தியில் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான், அவன் முன்பாகத் தோன்றினார். பின்னர் அவன் கேட்ட வரங்களை வழங்கி ஆசி கூறினார். வாலி தன்னுடைய வேண்டுதலுக்காக வழிபட்ட சிவலிங்கம் என்பதால், இங்குள்ள இறைவன் வாலீஸ்வரர் என்று திருநாமத்திலேயே அழைக்கப்படுகிறார். ஆலயமும் வாலீஸ்வரர் திருக்கோவில் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

 இந்த ஆலயம் திகழ்கிறது. ஆலயத்தின் வாசலைக் கடந்து உள்ளே சென்றால , ஐந்து சன்னிதிகள் கோபுரத்துடன் அமைந்துள்ளன. கணபதி மற்றும் சுவாமி சன்னிதி கிழக்கு முகமாகவும், அம்பாள் சன்னிதி தெற்கு நோக்கியும், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னிதி கிழக்கு முகமாகவும், சுப்பிரமணியர் சன்னிதிக்கு எதிரே அமைந்துள்ள அருணகிரிநாதர் சன்னிதி மேற்கு முகமாகவும், சாஸ்தா சன்னிதி கிழக்கு முகமாகவும், பைரவர் சன்னிதி தெற்கு முகமாகவும், பஞ்சலிங்க சன்னிதி கிழக்கு முகமாகவும் அமைந்துள்ளன. பஞ்சலிங்க சன்னிதி கோபுரத்தின் அமைப்பானது, காசி விஸ்வநாதர் ஆலயத்தின் கோபுர அமைப்பில் உள்ளது. பதினெட்டு சித்தர் களின் உருவங்கள்

 சனீஸ்வரர் சன்னிதி மேற்கு நோக்கியபடியும், ஆஞ்சநேயர் சன்னிதி கிழக்கு முகமாகவும் அமைந்திருக்கின்றன. மூலவர் சன்னிதியின் வெளிப்புற சுவர்களில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். சூரிய, சந்திர சன்னிதிகள் மேற்கு நோக்கியும், சந்தானக் குரவர்கள் சன்னிதி வடக்கு நோக்கியும் உள்ளன. மெய்கண்ட சிவம், அருநந்தி சிவம், மறைஞான சம்பந்த சிவம், உமாபதி சிவம் ஆகியோர் சந்தானக் குரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். வாலியின் திருவுருவம் சுவாமி சன்னிதியின் உட்புறத்தில் இறைவனை வணங்கியபடி அமைக்கப்பட்டுள்ளது. பிரகார சுற்றுச் சுவரில் பல்லியின் உருவம் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த பல்லியை பக்தர்கள் நம்பிக்கையுடன் வணங்கிச் செல்கின்றனர். பிரகாரத்தில் உள்ள மண்டபத்தின் மேலுள்ள கோபுரத்தில் பதினெட்டு சித்தர் களின் உருவங்கள், சுதை வடிவத்தில் நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. ஆலய தல விருட்சம், வன்னி மரம் ஆகும்.

 கிழக்கு முகமாக அமைந்துள்ள விநாயகர் சன்னிதியில், விநாயகர் ஆவுடையாரில் அமர்ந்திருப்பது விசேஷமான அமைப்பாக கருதப்படுகிறது. இங்குள்ள பஞ்சலிங்க சன்னிதி, மிகுந்த சக்தி வாய்ந்ததாக திகழ்கிறது. இங்கு வந்து தியானம் செய்தவர்கள் தங்களுக்கொரு புது அனுபவம் ஏற்படுவதாகக் கூறுகிறார்கள். காசிக்கு இணையாக இந்த பஞ்சலிங்கத்தை கூறுகின்றனர்.

நடைத்திறப்பு:

 தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கோவில் நடை திறந்திருக்கும்.

அமைவீடம்:

  சென்னையின் முக்கியப் பகுதியான மயிலாப்பூரில், பழமை வாய்ந்த அருள்மிகு பெரிய நாயகி சமேத வாலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #Viluppuram #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #baalaganapathi #sivan

  Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post வாழ்வில் வலம் தரும் மயிலாப்பூர் வாலிஸ்வரர் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

வேண்டிய வரம் தரும் ஸ்ரீ ஓம்காரேஸ்வரர்

$
0
0

 கர்நடாக மாநிலம் மடிக்கரே மாவட்டத்தில் கூர்க் என்ற இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு சிவபெருமான் ஓம் காரேஷ்வரர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இவரை வணங்கினால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.
omkareshwara-templeதங்களது வேண்டுதல் நிறைவேறியதும் பக்தர்கள் சிவபெருமானுக்கு நெய் விளக்கேற்றியும், புதுவஸ்திரம். சாற்றியும் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். திசை காட்டும் கருவி கோவில் மத்தியில் வசீகரமான குவி மாடமும், அதன் நான்கு முனைகளில் ஸ்தூபிகளும் அதைச்சுற்றி ரிஷபங்களும் உள்ளன, குவி மாடத்திற்கு மேல் முலாம் பூசிய உருண்டையும் திசை காட்டும் கருவியும் உள்ளது. கோவில் வாசலில் குளம். சுற்றிலும் மதிற்சுவர்கள் உள்ளன. படிகளில் ஏறியதும் வளைந்த வாசல் உள்ளது. அதன் கீழே இரு மணிகள் முழங்கப்படுகிறது. ஏறியவுடன் மூலவர் சன்னதி உள்ளது.
கருவறை கதவின் சாளரங்கள் (ஜன்னல்) பஞ்சலேகத்தால் ஆனது பிரகாரசுவரில் புராண இதிகாச சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. மன்னன் லிங்க ராஜேந்திரன் கட்டினான் இந்த கோவிலை 1820-ல் ஆண்ட மன்னன் லிங்க ராஜேந்திரன் கட்டினான். கொடுங்ளோலான அவன், தன் அரசியல் அபிலாஷைளுக்கா, நேர்மை மிக்க ஒரு அந்தணரைக் கொன்றான். அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது கனவிலும், நனைவிலும் வந்து மன்னனை வருத்து எடுத்தார் அந்தனர். சித்திரவாதை தாங்காத அவன் ஆன்மிக பெரியோர்களின் யோசனைப்படி, சிவனுக்கு கோவில் கட்டினான், அங்கு காசியில் இருந்து லிங்கத்தை கொண்டு வந்த லிங்கத்தை இங்கு பிரதிஷ்டை செய்தான்.

திருவிழாக்கள் :

   பிரதோஷம், சிவராத்திரி,அம்மாவசை

அமைவீடம்:
கர்நாடக மாநிலம் மடிக்கரே மாவட்டத்தில் கூர்க் என்ற இடத்தில் கோவில் உள்ளது. இங்கு செல்ல பஸ் வசதி உண்டு

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #Viluppuram #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #karnataka #sivan

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post வேண்டிய வரம் தரும் ஸ்ரீ ஓம்காரேஸ்வரர் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.


வா நந்தி போ நந்தி …. குருவருளை விளக்கும் கதை

$
0
0

“குருவருள் மற்றும் குருவின் உபதேசம் எவ்வளவு முக்கியமானது என்று நம்மக்கு உணர்த்தும் ஒரு கதை”

முன்பு ஒரு காலத்தில் ஒரு குரு இருந்தார் அவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட சீடர்கள் இருந்தார்கள். அவர் எப்பொழுதுமே சீடர்களுக்கு தனது பாடத்தை காலையிலும் மாலையிலும் சொல்லிக்கொடுப்பது வழக்கம். யோக கலை  மற்றும்  தியானம் போன்றவை இவற்றில் உள்ளடங்கும். அவரிடம் ரிஷபன் என்ற ஒரு சீடன் இருந்தான், அவனுக்கு எவ்வளவு பாடம் சொல்லிக்கொடுத்தும் அவனுக்கு குரு சொல்லிக்கொடுப்பது புரியவில்லை மாறாக அவன் குருவிடம் கேட்கும்  சந்தேகங்கள்  எல்லாமே கேலி கூத்தாகி மற்ற சீடர்கள் எல்லாம்  அவனை பரிகாசம் செய்ய தொடங்கினர்.  குருவிற்கு இது மிகுந்த மனஉளைச்சலை கொடுத்தது, குருவும் தன்னால் முயன்ற வரை போராடினார் ஆனால் இந்த சீடனோ மர மண்டை என்று சொல்லுவார்களே அதுபோன்று ஒன்றும் புரிந்து கொள்ளமுடியாமல் இருந்தான், இவனை இப்படி கேலி கூத்தவதற்கு பதிலாக இவனை தனது குருகுலத்திலிருந்து அனுப்பிவிட முடிவு செய்தார்.

ஒரு நாள் இவனின் பரிதாபமான நிலையை பார்த்து குரு அவனை அழைத்தார், அவனிடம் நீ இந்த பாட முறைக்கு தகுதி இல்லாதவன் ஆகையால் இந்த குருகுலத்தை விட்டு தாம் அவனை அனுப்ப போவதாக கூறினார்.  அதற்கு அவன் தான் குருவின் விருப்பப்படியே செய்வதாகவும் போகும் பொழுது தனக்கு ஒரு மந்திரத்தை சொல்லிக் கொடுக்கும் படியும் கேட்டான், குருவோ இவனுக்கு என்ன மந்திரத்தை சொல்லிக்கொடுப்பது என்று குழப்பம். ஏனெனில் இவனால் எதையும் புரிந்துகொள்ள முடியாது என்பதினால் தான் இவனை குருகுலத்தை விட்டு விலகச்சொன்னார். குருவிற்கு ஒரே சங்கடம் இருந்தாலும் இந்த சீடனோ ஆசையோடும் பக்தியோடும் அவரை கேட்கின்றான் அவரோ சரி என்று அவனை அழைத்து அவனது காதில் ” வா நந்தி போ நந்தி “ என்று உபதேசித்து இதை ஒரு மண்டலம் கடும் தாவதோடு ஜபம் செய்து வந்தால் நினைத்த காரியம் கைகூடும் என்றார்.

ரிஷபனோ தனக்கு ஒரு மந்திரம் கிடைத்துவிட்டது என்று எண்ணி சந்தோஷமாய் குரு சொல்லிக்கொடுத்த மந்திரத்தை சொல்லி தவம் செய்ய தொடங்கினான். நாட்கள் நகர்ந்தன, ஒரு மண்டலமும் முடிந்தது.  ரிஷபன் குருவை பார்க்க ஓடோடி வந்தான். குரு ஆழ்ந்த தியானத்தில் இருந்ததால் அவர் கண் விழிக்கும்வரை அங்கேயே அமர்ந்திருந்தான்.  குருவும் தியானத்தை முடித்து கண்விழித்து பார்த்தார், உடனே ரிஷபன் குருவிடம் குருவே தாங்கள் மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் என்றும் தான் நந்தி தேவரின் காட்சி காண பெற்றதாகவும் கூறினான், இதை கேட்டவுடன் குருவுக்கு ஒன்றுமே புரியவில்லை, பெரும் குழப்பம் அவரால் நம்ப முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை, ஏனென்றால் ரிஷபன் வெகுளி ஆனால் பொய் சொல்லமாட்டான் என்பது அவர் நன்கு அறிவார்.

ஆனால் அவருக்கு குழப்பம் என்னவென்றால் எவ்வளவோ கடும் தவம் புரிந்து மந்திர தந்திரங்களை கற்ற தமக்கே இன்னும் கடவுள் காட்சி தரவில்லை , ஆனால் “வா நந்தி போ நந்தி” என்று தாம் கூறிய சிறு வார்த்தை அதுவும்  சீடனை வெளியேற்றுவதற்காக கூறிய ஒரு சாதாரண சொல் அதனால் எப்படி இவன் நந்தி தேவரின் அருளை பெறமுடியும். இப்படி பல குழப்பங்கள் அவரின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது இருந்தாலும் அவரின் குழப்பத்தை சீடனிடம் காட்டிக்கொள்ளாமல்,   அவனிடம் நீ ஏதோ கனவு கண்டிருக்கிறாய் உனக்கு இவ்வளவு குறுகிய காலத்தில் கடவுளில் காட்சி சாத்தியமே இல்லை என்று கூறினார். ஆனால் சீடனோ தாம் கடும் தவம் இருந்ததாகவும் தவத்தின் போது நந்திதேவன் காட்சி அளித்ததாகவும் வேண்டியவரத்தை கொடுத்ததாகவும் கூறினான். குருவுக்கு பைத்தியமே பிடிக்கும் போல் ஆகிவிட்டது, அவரால் நம்பவும்  முடியவில்லை  நம்பாமலிருக்கவும் முடியவில்லை , என்னடா இது  இவ்வளவு ஆச்சாரம் , பூஜைமுறைகள் , கடுந்தவம் என்று இருந்த தமக்கே இதுவரை தெய்வம் காட்சி தரவில்லை. ஆனால் இந்த சீடனுக்கு அதுவும் தாம் இவன் எதற்கும் உதவமாட்டான் என்று நினைத்து ஒரு வார்த்தை சொல்லிக்கொடுத்தால் இவன் நம்மிடம் கடவுளை பார்த்தேன்! வரம் பெற்றேன்! என்று கூறுகிறான் என்ன  நடந்திருக்கும், எப்படி இது சாத்தியம் என்றெல்லாம் யோசித்தார்.

அவருக்கு ஒரு யோசனை , இவன் ஒருவேளை நந்திதேவரை பார்த்திருந்தால், அதனை பரீட்சை செய்து பார்க்கவேண்டும் என்றும் எண்ணினார்.  அதன்படி தனது சீடனை அழைத்து  ரிஷபா நீ சொல்வதெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை நீ சொல்வது உண்மையானால் அதை என்னிடம் நிரூபித்துக்காட்டு என்று சொன்னார். அதற்கு ரிஷபன் அப்படியே ஆகட்டும் குருவே என்று சொல்லி குரு சொல்லிக்கொடுத்த வா நந்தி  மந்திரத்தை சொன்னான். என்ன ஆச்சரியம் உடனே அந்த இடத்தில் நந்தி தேவன் வந்து காட்சியளித்தார். அது மட்டுமின்றி தன்னை அழைத்ததின் நோக்கம் என்ன என்று கேட்டார் உடனே இந்த சீடன் என்குருவுக்கு நீங்கள் காட்சி அளிக்கவேண்டும் என்பதற்காகவே தாம் அழைத்ததாக கூறினான்.  குருவுக்கு ஒன்றும் புரியவில்லை இரு கை கூப்பி நந்தியை வணங்கினார் பின்பு நந்தியிடம் தாம் எவ்வளோவோ தவங்கள் செய்துள்ளதாகவும் தமக்கு ஏன் இறைவன் காட்சி கொடுக்கவில்லை என்றும் கேட்டார்.

  அதற்கு நந்தி ……நீங்கள் இந்த சீடனிடம் சொல்லிக்கொடுத்த மந்திரம் ஒன்றுமில்லை அது வெறும் ஒரு சொல் வா நந்தி போ நந்தி அவ்வளவுதான் ஆனால் அந்த வார்த்தையை மந்திரமாக நினைத்து முழு மனதுடன் இந்த சீடன் தவமிருந்தார். முதலில் நானும் இதை விரும்பவில்லை ஏற்கவுமில்லை. ஆனால் இவன் தொடர்ந்து இதே வார்த்தையை சொல்லி தவம் செய்ததினால் சிவபெருமான் என்னை அழைத்து இவனுக்கு காட்சி அளித்து  வேண்டியதை அருளுமாறு என்னிடம் கூறினார். அதற்கு நானோ இவன் வெறும் வார்த்தையை உச்சரிக்கிறான் அதனால் நான் ஏன் காட்சியளிக்கவேண்டும் வரத்தை கொடுக்க வேண்டும் என்றுகேட்டேன், அதற்கு சிவபெருமான் கூறியதாவது

       “இவன் சொல்லும் வார்த்தை எப்பொழுது குருவின் உபதேசத்தால் வந்ததோ அப்பொழுதே இது மந்திரமாகிவிட்டது”

மேலும் இவனின் குருபக்தி,  குருமேல் வைத்திருக்கும் நம்பிக்கை இந்த சொல்லுக்கு பரிபூரண மந்திரசக்தியை கொடுத்துவிட்டது , எதை குரு சொல்லிக்கொடுத்தாரோ அதையே அப்படியே அவன் ஜபம் செய்து தவம் செய்தான் ஆகையால் நீ அவனுக்கு காட்சியளிக்கும் கட்டாயத்தில் இருக்கின்றாய்.  ஒருவேளை நீ அவனுக்கு காட்சிதர மறுத்தால் அவன் சாகும் நிலைக்கு தள்ளப்படுவான் அந்த பாவம் உன்னையே சேரும் என்று அறிவுரை வழங்கினார். தானும் சிவபெருமானின் அருளுரைப்படியே இவனுக்கு காட்சியளித்ததாக கூறினார். மேலும் எந்த ஒரு காரியமும் கைகூட ஒரு குருவின் அருள் மிகவும் முக்கியம் என்பதையும் இதனால் அனைவரும் தெரிந்து கொள்ளவர்கள் என்று கூறி விடைபெற்று கொண்டார்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #Viluppuram #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #nandi #sivan

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post வா நந்தி போ நந்தி …. குருவருளை விளக்கும் கதை appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

மோட்சம் கொடுக்கும் பள்ளிக்கொண்ட பெருமாள்

$
0
0

 வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கொண்டாவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. இங்கு தாயார் ரங்கநாயகிவுடன் பள்ளிக்கொண்டா பெருமாள் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இவர் சாளகிராமத்தால் ஆனவர். இவரை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் சிறப்பாக நடக்கவும் பிரிந்த தம்பதிகள் சேரவும் இங்கு திருமணம் செய்தால் மணம் ஒத்து வாழ்வார்கள் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. பிராத்தனை நிறைவேறியதும் சுவாமிக்கும் அம்மபாளும் திருமஞ்சனம் செய்து துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

சோட்டா ரங்கநாதர்:

 அந்நியர் படை எடுக்கும் போது இங்குள்ள ரங்கநாதர் மறைக்கப்பட்டு சிறிய ரங்கநாதர் சிலை செய்து கோயிலில் பாதுகாக்கப்பட்டது. இன்றும் கூட சிறிய ரங்கநாதருக்கு பூஜைகள் செய்யப்படுகிறது இவர் சோட்டா ரங்கநாதர் எனப்படுகிறார். இரவு தங்கி பெருமாளை வழிப்பட்டால் மோட்சம் கிடைக்கும்
பெருமாளுக்கு உதவியாக இருந்து வந்த ஆதிஷேசன் இத்தலத்தில் தான் முதல் முறையாக அவரை தன்னீல் சயனிக்க வைத்தார் என்கிறது தல புராணம். பின்னர் பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டதால். இத்தலத்து ஆறுக்கு பாலாறு என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் ஒரு நாள் இரவு தங்கி பெருமாளை வழிப்பட்டால் மோட்சம் கிடைக்கும் என பிரமாண்ட புராணம் கூறுகிறது.

பூலோகத்தில் விரும்பி வந்து பள்ளி கொண்ட இடம்:

 மகாலட்சுமிக்கும், சரஸ்வதிக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு தீர்ப்பு கூறும்படி இருவரும் பிரம்மனிடம் சென்றனர். மகாலட்சுமி தான் பெரியவர் என பிரம்மா தீர்ப்பு கூறினார். இதனால் சரஸ்வதிக்கு கோபம் ஏற்பட்டு, பூலோகத்திலுள்ள சாசிய மலையில் தனது நிலை உயர வேண்டி தவம் செய்யத் தொடங்கினாள்.இந்நிலையில் பிரம்மா பெருமாளுக்கு சிறப்பு செய்வதற்காக ஒரு யாகம் தொடங்கினார். நியதிப்படி யாகத்தை தம்பதி சமேதராக நடத்த வேண்டும். ஆனால், சரஸ்வதி யாகத்திற்கு வர மறுத்தாள். எனவே பிரம்மா, சரஸ்வதியின் அம்சமாக ஒரு பெண்ணைப் படைத்து, அவளுக்கு சாவித்திரி என பெயர் சூட்டி, அவளையே மணந்து யாகத்தை தொடங்கினார். இதனால் மேலும் கோபமடைந்த சரஸ்வதி, பிரம்மன் ஆரம்பித்த இந்த யாகத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ‘க்ஷீரநதி’ என்ற பெயரில் நதியாக மாறி, வெள்ளப்பெருக்கெடுத்து யாக குண்டத்தை உடைக்கும் நோக்கத்தில் ஓடிவந்தாள்.இதனால் பிரம்மா, பெருமாளின் உதவியை நாடினார். பெருமாள், சரஸ்வதியை சமாதானம் செய்தார். முன்னதாக, அவர் நதியின் ஓட்டத்தை தடுக்க, ஆதிசேஷனை நதியின் குறுக்கே படுக்க வைத்து, அதில் சயனித்தார். பின்னர், பிரம்மா யாகத்தை சிறப்பாக முடித்தார். சரஸ்வதியும் சாவித்திரியும் ஒன்றே என்பதை விளக்கிய பெருமாள், அவளை பிரம்மனுடன் மீண்டும் இணைத்து வைத்தார். பெருமாள் பூலோகத்தில் விரும்பி வந்து பள்ளி கொண்ட இடம் என்பதால், இவ்வூர் ‘பள்ளி கொண்டான்’ எனப்பட்டது. பெருமாள் ‘உத்தர ரங்கநாதர்’ எனப்படுகிறார்.

  இத்தலத்தில் நிறைய திருமணங்கள் நடக்கின்றன. இங்கு திருமணம் செய்து கொண்டால், தம்பதியர் மனமொத்து வாழ்வர் என்பது நம்பிக்கை. அந்நியர் படையெடுப்பின் போது, இங்குள்ள ரங்கநாதர் மறைக்கப்பட்டு, சிறிய ரங்கநாதர் சிலை செய்து, கோயில் பாதுகாக்கப்பட்டது. இன்றும் கூட சிறிய ரங்கநாதருக்கும் பூஜைகள் செய்யப்படுகிறது. இவர் ‘சோட்டா ரங்கநாதர்’ எனப்படுகிறார். தனி சன்னதியில் தாயார் ரங்கநாயகி இருக்கிறார். உள்பிரகாரத்தில் உடையவர், ராமர், நவநீதகண்ணன், ஆண்டாள், அனுமன், மணவாள மாமுனிகள், கருடாழ்வார், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார் சன்னதிகள் உள்ளன. இக்கோயிலுக்கு தெற்கே 2 கி.மீ. தூரத்தில் பீஜாசலம் என்ற மலைக்குன்று உள்ளது.

திருவிழா:

 சித்திரையில் பிரமோற்ஸவம், வைகாசி விசாகத்தில் கருடசேவை, ஆனியில் ஜேஷ்டா திருமஞ்சனம். ஆடி வெள்ளிக்கிழமைகளில் திருவாடிப்பூரம். கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி. திருக்கார்த்திகை. வைகுண்ட ஏகாதசி. தை மாதம் கிரிபிரதட்சணம். மாசி தெப்பம். பங்குனி உத்திரம்.

நடைதிறப்பு:

  காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அமைவீடம் :

  வேலூரில் இருந்து பள்ளிக்கொண்டா 30 கி.மி தொலைவில் உள்ளது இங்கு செல்ல பேருந்து வசதி உள்ளது .

தொடர்புக்கு :  9443989668-9443686869.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #Viluppuram #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #pallikkonda #perumal

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post மோட்சம் கொடுக்கும் பள்ளிக்கொண்ட பெருமாள் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

விநாயகரை வணங்கும் வழிமுறைகள்

$
0
0

விநாயகரை வணங்குவது எப்படி : 

 இருகைகளையும் முட்டியாகப் பிடித்து வலது கையால் வலது நெற்றி ஓரத்திலும், இடது கையால் இடது நெற்றி ஓரத்திலும் (இரு கைகளாலும் ஒரே தடவையாக) 3 முறை குட்டி அதன் பின் இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்து மூன்று முறை தோப்பிக் கரணம் செய்தல் வேண்டும். (இவ்வாறு கூறூவாருமுளர் – வலது கையால் இடது நெற்றியிலும், இடது கையால் வலது நெற்றியிலும் குட்டுதல் வேண்டும்) குறுக்காக கைகள் வைத்து காதுகளைப் பிடிக்கும் போது வலது-கை வெளிப்பக்கமாக அமைதல் வேண்டும். இடது கை நெஞ்சோடு இருத்தல் வேண்டும். கைகளால் நெற்றியில் குட்டும் போதும் தோப்பிகரணம் செய்யும் போதும் “ஒம் கணேசாய நம” என்ற மந்திரத்தை உச்சரித்தல் வேண்டும்.

தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்: 

 அகத்தியர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை காகம் வடிவில் வந்த விநாயகர் கவிழ்த்தார். பின்னர் அந்தணச் சிறுவன் வடிவில் அகத்தியர் முன்பு வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மை கருதி காவிரியை உருவாக்க அப்படி செய்ததாகக் கூறினார். அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். அன்று முதல் விநாயகருக்குத் தலையில் குட்டி வழிபடும் வழக்கம் வந்தது.

தேங்காயை சிதறு காயாக உடைப்பது ஏன்:

 மகோற்கடர் என்கிற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார். ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான். விநாயகர் யாகத்திற்காகக் கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை அவன் மீது வீசி அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார். எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கமுண்டு. தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்ததன் மூலம் தகர்த்தார். அதன் மூலம் விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது.

அருகம்புல் மாலை ஏன்:

 அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றித் தகித்து விடுவான். இவனை பிரம்மாவாலும் தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை. அவர்கள் சிவ, பார்வதியைச் சந்தித்து முறையிட்டனர். சிவனும் விநாயகருக்கு அந்த அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார். விநாயகரும் பூத கணங்களுடன் போருக்குச் சென்றார். அங்கு சென்றதும் அனலாசுரன் பூதகணங்களை எரித்துச் சாம்பலாக்கினான். விநாயகர் அனலாசுரனுடன் மோதினார். ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை. கோபத்தில் அவனை அப்படியே விழுங்கி விட்டார். வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான். விநாயகருக்கு அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. அவருக்கு குடம் குடமாகக் கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார். அவரது எரிச்சல் அடங்கியது. அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான். அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார்.

பெருச்சாளி (மூஷிஹம்) எப்படி விநாயகரின் வாகனமானது: 

 மாகத முனிவருக்கும் வீபூதி என்ற அசுரப்பெண்ணிற்கும் பிறந்த அசுரன் கஜமுகன். இவன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து எந்த ஆயுதங்களாலும் அழியாத வரம் பெற்றான். வரம் பெற்ற மமதையில் இந்திடன் முதலான தேவர்களுக்கு இடர் விளைவிக்க, அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவ-சக்தியின் வேண்டுதலினால் விநாயகர் தன் பூதப்படைகள் சூழ கஜமுகனின் மதங்கபுரத்தை முற்றுகையிட்டார். போர் மூண்டது. அவன் விட்ட பாணங்களை எல்லாம் விநாயகர் தன் கையில் உள்ள உலக்கையினால் தடுத்து, அதனைக்கொண்டே அவனை அடித்தார். கஜமுகன் மயங்கி விழுந்தான். ஆனால் இறக்கவில்லை. அவன் பெற்றவரம் நினைவுக்கு வரவே, விநாயகர் தன் கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவன் மீது ஏவினார். அவன் பெருச்சாளியாக (மூஷிஹம்) உருமாறி விநாயகரைத் தாக்க வந்தான். விநாயகர் அதனை அடக்கி தன் வாகனமாக்கிக் கொண்டார்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #Viluppuram #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #pallikkonda #vinayagar

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post விநாயகரை வணங்கும் வழிமுறைகள் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

நோய்களில் இருந்து காக்கும் வரதீஸ்வரர்

$
0
0

 திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவாசி என்ற திருப்பாச்சிலாச்சிராமம் என்ற இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது இங்கு சிவபெருமான் அம்மாள் பாலாம்பிகையுடன் மாற்றுரை வரதீஸ்வரர் (பிரம்மபுரிஸ்வரர், சமீவனேஸ்வரர்) என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் வலிப்பு, தீராத வயிற்று வலி, ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வன்னி இலையால் அர்ச்சனை செய்து வழிப்பட்டால் தீராத நோய் தீர்ந்து சுக வாழ்வு தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கருவறையில் ருத்திராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்கமாக உள்ளார்.

 ராஜ கோபுரத்தின் கீழே அதிகார நந்தி மனைவியுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். இங்கு நவகிரகத்தில் சூரியன் தன் மனைவி உஷா, பிரத்யூஷாவுடன் இருக்க மற்ற கிரகங்கள் அனைத்தும் அவரை பார்த்தப்படி இருக்கிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 62-வது தேவாரத்தலம் ஆகும். சுந்தரருக்கு காட்சி தந்த சிவன் தங்கத்தை உரைத்து காட்டியது தான் எனவும், உடன் வந்தது மகாவிஷ்னு என்று உனர்த்தினார். மாற்றுரை வரதர் என்ற பெயரும் பெற்றார்.

இறைவன் ஒருவனே சரணம் :

 திருஞான சம்பந்தர், சுந்தரர் ஆகியோரது தேவாரப் பதிகம் பாடப்பெற்ற காவிரி வடகரைத் தலம் இதுவாகும். ஒரு காலத்தில் இந்தப் பகுதியை கொல்லி மழவன் என்ற சிற்றரசன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவனது மகளுக்கு தீராத வலிப்பு, வாதம், வயிற்று வலி இருந்தது. இதனால் அவள் நாளும் அவதிப்பட்டு வந்தாள். மன்னன் தன்னுடைய மகளுக்கு எவ்வளவோ மருத்துவம் பார்த்தும், அவளது நோய் தீர்ந்த பாடில்லை. இறுதியில் இறைவன் ஒருவனே சரணம் என்ற முடிவுக்கு மன்னன் வந்தான். படுத்த படுக்கையாக இருந்த தன்னுடைய மகளை இந்த ஆலயத்திற்கு கொண்டு வந்து போட்டு விட்டு சென்று விட்டான். இந்த நிலையில் திருஞான சம்பந்தர், தல யாத்திரையாக இந்த ஆலயத்திற்கு வந்து சேர்ந்தார். அப்போது மன்னனின் மகளுக்கு ஏற்பட்ட நோய் குறித்து அறிந்த அவர் வருத்தம் கொண்டார். பின்னர் ‘மங்கையை வாடவிடாதே, தையலை வாடவிடாதே, பைந்தொடியை வாடவிடாதே’ என்ற ரீதியில் உள்ளத்தை உருக்கும் விதமாக பதிகங்களைப் பாடினார் திருஞான சம்பந்தர். இதையடுத்து அந்தப் பெண்ணின் நோய் தீர்க்க சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார்.

பூரண குணம்பெற்று எழுந்து நடந்தாள்:

 மன்னன் மகளைச் சித்திரவதை செய்து கொண்டிருந்த நோயை, முயலகன் வடிவமாகத் திரட்டி அழித்து, பாம்பின் மீது நடனமாடினார் சிவ பெருமான். இதையடுத்து வாதம், வலிப்பு, வயிற்று வலி ஆகிய நோய்கள் நீங்கிய மன்னனின் மகள், பூரண குணம்பெற்று எழுந்து நடந்தாள். இந்தக் கோவிலில் சிவன் சன்னிதிக்கு முன்பாக உள்ள மண்டபத்தில் தெற்கு நோக்கிய சன்னிதியில் நர்த்தனமாடும் நடராஜ பெருமான் வீற்றிருக்கிறார். இவரது திருவடியில் வழக்கமாக காணப்படும் முயலகன் இல்லை. விரிசடை இல்லாது, ஒன்றிணைந்த தலைமுடியுடன் நாகத்தை காலடியில் போட்டு, ‘சர்ப்ப நடராஜராக’ நடனமாடும் காட்சி இன்றும் வழிபாட்டுக்குரியதாக இருக்கிறது.

திரு ஞானசம்பந்தரின் பதிகம் பாடினால்:

  வலிப்பு, வாதம், வயிற்றுவலி போன்றவை மருத்துவத்தால் குணமடையாத நிலையில் இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். சிவனே தஞ்சம் என்று இங்கு வந்து ஒரு மண்டலம் நடராஜருக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தித்து, திரு ஞானசம்பந்தரின் பதிகம் பாடினால் நோயின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. சிவன் சன்னிதிக்கு வலது புறத்தில் மேற்கு நோக்கிய சன்னிதியில் அம்பிகை வீற்றிருக்கிறார். ‘பாலாம்பிகை’ என்பது அன்னையின் திருநாமம் ஆகும். அன்னை சன்னிதிக்கு எதிரே ‘அன்னமாம் பொய்கை’ என்ற தீர்த்தமும், தல விருட்சமான வன்னி மரமும் இருக்கின்றன.

இலுப்பை எண்ணெயில் தீபங்கள் ஏற்றி:

 அருள் வழங்குவதில் சுவாமிக்கு சளைத்தவள் அல்ல.. இந்த பாலாம்பிகை. பால தோஷம் உள்ள குழந்தைகளின் நோய் நீங்க மூன்று ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ந்து வந்து, பாலாம்பிகைக்கு அர்ச்சனை செய்து வேண்டிக் கொண்டால், குழந்தைகள் நலம் பெறுவார்கள் என்பது பக்தர் களின் நம்பிக்கை. அன்னைக்கு பாலாபிஷேகமும் செய்து பலன் பெறலாம். திருமணம் ஆகாத கன்னியரும், காளையரும் 5 வெள்ளிக்கிழமை தொடர்ந்து வந்து, இங்குள்ள திருக் குளத்தில் நீராடி அம்பிகையை வழிபட்டால் விரைவில் திருமணம் நடந் தேறும். ஏனென்றால் அம்பிகையும் ஒரு வணிகன் மகளாகப் பிறந்து, இத்தல வன்னி மரத்தடியில் தவமிருந்து, சிவபெருமானை திருமணம் செய்து கொண்டதாகத் தலபுராணம் சொல்கிறது. இலுப்பை எண்ணெயில் தீபங்கள் ஏற்றி, மாற்றுரைவரதீஸ்வரரை வழிபட்டால், வாழ்வில் சுகம் கிடைக்கும்.

அமைவிடம் :

  திருச்சியில் இருந்து 12 கி.மி தூரத்தில் உள்ளது.

தொடர்புக்கு:   91-431-6574972- 9443692138

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #shiva #sivaperuman

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post நோய்களில் இருந்து காக்கும் வரதீஸ்வரர் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

யாகம் நடந்த தீவின் பெயர் என்னவென்று ஜாடையாக கேட்ட பெரியவா

$
0
0

 மகாபெரியவாள் சிவாஸ்தானத்தில் தங்கியிருந்தார்கள். அங்கிருந்த ஸ்ரீ பிரம்மபுரீஸ்வர்ர் ஆலயத்துக்கு அப்போதுதான் பெருமை வந்த்து. பிரும்ம ஸ்வரூபியான் பெரியவாளைத் தரிசிக்க வந்த அடியார்கள் எல்லாரும் பிரும்மபுரீஸ்வர்ரையும் நிச்சயமாகத் தரிசனம் செய்தார்கள். நாங்கள் பெரியவாளைத் தரிசனம் செய்யச் சென்றிருந்தோம். அன்றைக்குப் பெரியவா, மௌனம் ! ஆனால். அவர்களுடைய அருட்பாரிவையே பக்தர்களுக்குப் போதுமானதாக இருந்த்து. அந்த்ச் சமயம் பார்த்து, இந்தோனேஷியாவிலிருந்து ஒரு சரித்திர ஆராய்ச்சியாளர் தரிசனத்துக்கும், சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கவும் வந்தார்.

 நல்லகாலமாக, அன்றைக்குக் காஷ்ட மௌனம் இல்லை; கைகளால் ஜாடைகள் காட்டினார். அதை விவரித்துச் சொன்னார், அணுக்கத் தொண்டர். அவருக்குச் சரித்திர ஞானம் அதுவும், இந்தோனேஷிய சரித்திரம் ! – இல்லவேயில்லை. நான் மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியராதலால், தொண்டர் கூறியதை மேலும் தெளிவாக ஆங்கிலத்தில் கூறி வந்தேன். இந்தோனேஷியா என்பது அநேகம் தீவுகளின் தொகுதி. அவற்றில், ஒரு தீவில், ஒரு இந்து மன்னர் நட்த்திய யாகத்தைப் பற்றி மிகவும் ஆர்வத்துடன் கூறினார், அந்த ஆராய்ச்சியாளர்

 ஆராய்ச்சியாளருக்குத் தெரியவில்லை, நூற்றுக்கணக்கான தீவுகளின் பெயரை நினைவில் வைத்துக் கொள்வது சாத்தியமில்லை என்றாலும், சில முக்கியமான் தீவுகளின் பெயர்களைக் கூறத் தொடங்கினார். அவர் ஒன்றொன்றாகத் தீவின் பெர்யரைச் சொன்னதும், ‘அது இல்லை’ என்ற பாவனையில் பெரியவா தலையை அசைத்துக் கொண்டிருந்தார்கள்.  ஆராய்ச்சியாளருக்கே அலுப்பு வந்துவிட்ட்து. “நூற்றுக்கணக்கான தீவுகள் இருக்கும்போது, அவைகளின் பெயர்கள் பெரியவாளுக்கு மட்டும் தெரிந்திருக்கப் போகிறதா என்ன? என்ற எண்ணமும் தோன்றியிருக்க்க் கூடும்.பெரியவா, பக்தர்களின் கூட்ட்த்தில் பார்வையைச் செலுத்தினார். பின், தன் செவியின் கீழே, கைவிரல்களை வட்டமாக வைத்து, ‘என்ன பெயர்?’ என்று கேட்பது போல ஜாடை காட்டினார்கள். ஒருவர், “குண்டலம்” என்று மெல்லிய குரலில் கூறினார்.

பெரியவா, ‘அதுதான்! .. அவனிடம் சொல்லு …’ என்று ஜாடை காட்டினார்கள்.

அங்கு நடப்பதையெல்லாம் விந்தையுடன் பார்த்துக் கொண்டிருந்த இந்தோனேஷிய ஆராய்ச்சியாளரிடம், ‘குண்டலம்..” என்ற சொல் இரைந்து கூறப்பட்ட்து.

ஒரு துள்ளு துள்ளினார், அவர்.

ஆமாம்! அந்த யாகம் நடந்த தீவின் முதற்சொல் குண்டலம் தான்!” என்று பக்தர்களிடம் கூறிவிட்டு, பெரியவாளிடம் முழுப் பெயரையும் தெரிவித்தார். பெரியவா புன்னகைத்தார். ஆராய்ச்சியாளருக்கு மகா ஆச்சரியம் ! தன்னுடன் வந்திருந்தவர்களிடம், அவர்கள் மொழியில் தன் வியப்பை வெளிப்படுத்திப் பேசி, பெரியவாளின் பூகோள ஞானத்தைப் பெரிதும் போற்றினார். ஆனால் பக்தர்களுக்கெல்லாம் உண்மை தெரியும். பெரியவா, ஞானக் களஞ்சியம்; ஞான ஊற்று; அனைத்து ஞான்ங்களையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ரத்தினப் பெட்டகம்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #shiva #periyava #mahaan

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

 

The post யாகம் நடந்த தீவின் பெயர் என்னவென்று ஜாடையாக கேட்ட பெரியவா appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

Viewing all 15459 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>