Quantcast
Channel: SwasthikTv
Viewing all 15459 articles
Browse latest View live

அஷ்டலட்சுமிகளும் வணங்கும் தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு!

$
0
0

இன்று *தேய்பிறைஅஷ்டமி(17.06.17)சனிகிழமை!

அஷ்டலட்சுமிகளும் வணங்கும் தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு!

பைரவர் ஒரு கண்ணோட்டம்.

  சிவபெருமானின் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. பைரவர், எட்டு மற்றும் அறுபத்து நான்கு என்ற வகையில் அருள் புரிகிறார். ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு. இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது.

  ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. சிவபெருமான் வீரச்செயல்களைச் செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுருவங்களை பைரவர் திருக்கோலம் என்று புராணம் சொல்லும்.

பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன.

தலையில் மேஷ ராசியும்,

வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும்,

கைகளில் மிதுனமும்,

மார்பில் கடகமும்,

வயிற்றுப் பகுதியில் சிம்மமும்,

இடையில் கன்னியும்,

புட்டத்தில் துலாமும்,

லிங்கத்தில் விருச்சிகமும்,

தொடையில் தனுசும்,

முழந்தாளில் மகரமும்,

காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும்,

அடித்தளங்களில் மீன ராசியும்,

அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.

தேய்பிறை அஷ்டமி வழிபாடு.

  இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். தற்போதைய கால கட்டத்தில் நமக்கு செல்வவளங்களை வழங்குவதற்கும் நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழவைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.

 ஆகவே தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்குவது மிகச் சாலச் சிறந்தது. ஏனெனில் காலபைரவரை அன்று அஷ்டலட்சுமிகளும் வணங்குவதால் வணங்குபவருக்கு அனைத்து நலன்களும் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

 நாமும் அதே தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட,அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும். நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு ஆகும். ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி நாளன்று நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளும் பூமியில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு வந்து அவரை வழிபடுகின்றனர். அப்படி வழிபடக் காரணம் என்னப பூமியில் வாழும் 700 கோடி மனிதர்களுக்கும் அஷ்ட லட்சுமிகள் செல்வச் செழிப்பை தினமும் அள்ளித் தருவதால்,அவர்களில் “செல்வ வள சக்தி” குறைகிறது;

 அந்த செல்வ வள சக்தியை அதிகமாகப் பெறுவதற்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வருகின்றனர்.அதே தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்.

ராகு கால நேரத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரது மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும்.அவ்வாறு ஜபித்தால்,பின்வரும் நன்மைகளில் ஏதாவது ஒன்று நமக்குக் கிட்டும் என்பது அனுபவ உண்மை ஆகும்.

  1. வர வேண்டிய பணம் வந்துவிடும்.

  2. தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும்;எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.

  3. வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும், வலியும், வேதனையும் பெருமளவு குறையும்.

  4. சனியின் தாக்கம்(ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரும்.

  5. வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும்; தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும்.

  6. அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகும்.

  7. பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.

  8. நமது கடுமையான கர்மவினைகள் தீரத்துவங்கும்.

The post அஷ்டலட்சுமிகளும் வணங்கும் தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Sahasra Chandi Yagna at Sri Danvantri Arogya Peedam

$
0
0

Sahasra Chandi Yagna at Sri Danvantri Peedam

 We are planning to conduct a grand Sahasra Chandi Yagna in Sri Danvantri Arogya Peedam,  Walajapet, Vellore Dt. from July 26th to July 30th 2017 with the blessings of our Guru and God, Sri Danvantri. This is being performed to celebrate the Adi Friday and Adi Pooram with Ragu Kethu Peyarchi 2017-2019. Founder Sri Muralidhara Swamigal  Organizing and conducting several type of Homams all over the world and the Peedam dedicates this Sahasra Chandi Yagna to his lotus feet.

 The Sahasra Chandi Yagna entails a cumulative chanting of 1000 times of Sri Devi Mahatmyam and the performance of 100 Chandi Homams. We will be performing 100 Chandi Homams from July 26rd to 30th at Sri Danvantri Peedam. We will be truly honoured if you can join us for the Chandi Parayanam online/in person and participate in the Homams.

 It is said that even to witness a Chandi homam, one needs to have done great deeds in the present and past births. Tantras say “Kalau Chandi Vinayakau,” meaning that Goddess Chandi (Maa Durga) in Kaliyuga provides immediate benefit to mankind.  Devi herself explains in the 4th and 12th chapters of Devi Mahatmyam all the benefits obtained by performing the  Chandi parayanam and homam. Sri Muralidhara Swamigal always used to say that when Devi Mahatmyam is chanted with devotion and proper pronunciation or listened with bhakthi, Goddess Durga bestows all Her blessings to us to gain both material comforts and spiritual progress.

Sri Muralidhara Swamigal has performed more than 400 Chandi Homams and five Sahasra Chandi Homams. Along with him will be his Veda Pandits  who are both considered as great authorities on Sri Vidya and Tantra Shastra.

 We seek your participation in this event by your presence as a devotee, as a volunteer and/or as a Ritwik participating in the Parayanam and the Chandi Homam.

 With pranams at the lotus feet of our Guru,

Sri Muralidhara Swamigal.

For Further Details:
Sri Danvantri Arogya Peedam,
8124516666,
9443330203 

The post Sahasra Chandi Yagna at Sri Danvantri Arogya Peedam appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

ஏழு ஜென்ம பாவம் விலக –சிவமூலிகைகளின் சிகரம்

$
0
0

ஏழு ஜென்ம பாவம் விலக – சிவமூலிகைகளின் சிகரம்

வில்வம் -ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும்

சிவனாருக்கு ( சிவபெருமானுக்கு) அர்ச்சனைக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம்.வில்வத்தில் பல வகைகள் உள்ளன அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன. குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்து கிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன. பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு ( சூரியன் உதிப்பதற்கு முன்னதாக) முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம்.

 வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம். தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது சிறப்பு. மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்

வில்வ வழிபாடும் பயன்களும்

 சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமமாகும். வில்வத்தில் லட்சுமி வசம் செய்கிறாள். வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷ்ட வில்வம். கந்தபலம் எனப் பல பெயர்களால் சுட்டப்படுகிறது மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் ( உயிர்களின்) பாவங்களைப் போக்குவன ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம். எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும் இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் ,நன்மைகளும் அடைவார்கள்

 வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் ,புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக விளக்கமாகக் கூறுகின்றன. வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன. ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் ( திருகருகாவூர்) திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார்

 அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெயர் பெற்றது. சிவன் திருவாதிரை நட்சத்திரம். அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால் சிவனின் சூட்டினைத்( வெப்பத்தை) தணிக்க எம் முன்னோர்கள் குளிர்மை பொருந்திய வில்வத்தை சாத்தி வழிபட்டுள்ளனர். அத்துடக் சிவன் இமயமலையில் இருப்பவன். இமயத்தில் பனி அதிகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையாகத் தனக்குச் செய்யப்படும் பூசைகளுக்கும், அர்ச்சனைக்கும் வில்வத்தை ஏற்றுக் கொண்டான். ஏனெனில் வில்வம் பனியாலும் சளியாலும் வரும் துன்பங்களைப் போக்க வல்ல சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும்.

 வில்வமரத்தை வீட்டிலும், திருக்கோவில்களிலும் வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும் ,துன்பங்களும் சூரியனைக் கண்ட பனி போல் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும். வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது. சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது மேலும் இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும். வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.

 நாம் வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை மேலும் அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும். மேலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் ( திருவமுது) செய்த புண்ணியம் உண்டாகும். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.

 இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும். சிவனிற்கு பிரியமான வில்வார்ச்சினை மூலம் சிவனின் திருவருட் (சிவபெருமானின் திருவருளை) கடாட்சத்தைப் பெறமுடியும். வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். வீட்டில் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை மேலும் எமபயம் ஒரு போதும் வாராது.

 ஒரு வில்வ இதழைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ணபுஸ்வங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமமானதாகும். வில்வம் பழத்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவை யாக்கி அதில் விபூதியை வைத்துப் பயன்படுத்துவது மேலான செயலாகக் கொள்ளப்படுகிறது.

வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?

 சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும். மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் ( மானசீகமாக நினைத்து) எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.

நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே

ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே

ஸம்ஸ—ர விஷவைத்யஸ்ய ஸ–ம்பஸ்ய கருணாநிதே:

அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே

பொருள் விளக்கம்

போகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன். ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலுமுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். -இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும்.

வில்வ இதழின் மருத்துவக் குணங்கள்

இவற்றைவிட வில்வம் மருத்துவரீதியில் பயன்மிக்கதாகும். இதனை “சிவமூலிகைகளின் சிகரம்” எனவும் அழைப்பர். வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும். மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். பல்வலி, பல்சொத்தை, பல்கூச்சம் போன்றவற்றால் அவதியுறுபவர்களுக்கு அருமருந்தாகும்.

The post ஏழு ஜென்ம பாவம் விலக – சிவமூலிகைகளின் சிகரம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

Daily Raasi Palan 18-06-2017 by Astrologer Munaivar – Panchanathan

$
0
0

Daily Raasi Palan 18-06-2017 by  Panchanathan

What are the names of the twelve zodiac?

  • Capricorn
  • Aquarius
  • Pisces
  • Aries
  • Taurus
  • Gemini
  • Cancer
  • Leo
  • Virgo
  • Libra
  • Scorpio
  • Ophiuchus
  • Sagittarius

What is the name of the governor of the zodiac?

Aries – Mars Taurus – Venus Gemini – Wednesday Cancer – the Moon LEO – The Sun Virgin – Wednesday Libra – Venus Scorpio – Mars Sagittarius – Guru Capricorn – Saturn Aquarius – Saturn Pisces – Guru

What lakkinam?

  By the time a child is born, the baby, the baby’s birth in the sky that no raciyaip facing janittirukkirato lakkinam example. Month on month (That is on April 14th) from 6 am to 8 pm mashup lakkinamavani month (August 17th or 18th) morning at the rising of Leo lakkinam. Subsequent to the order that changes every two hours subsequent lakkinam.

What is the method of keeping lakkinattai ovvoruvittaiyum think?

Friend of the first home of the zodiac. In addition to round the clock

Each zodiac 2,3,4,5,6,7,8,9,10,11 comes, comes the order to 12.

What is the moon? It is based on what?

Zodiac horoscope will be a moon, the moon is based on enappatumatu jatakan newborn stars.

What used lakkinam? What is the moon?

Natal horoscope (Birth Chart) vehicle

Koccaram (the essence of the planet – Transit of planets) What?

Another sign of the zodiac every planet spinning in space amaruvate kolcaram called displacement.

Dasa / What is mind? What is its purpose?

What planet and its star is born jatakan tacatan jatakan early Dasa ruler, it will be changing in the wake of each Dasa Dasa Period 120

Years. Tacavaiyum portions to each other planets. Hopefully it that name (Sub period). Dasa ovvorukirakamum in its own good or bad results, give or puttiyiltan

Dasa understandings begin with what?

Star of the birth of the prince of a jatakar tacaitan boot muscle.

Dasa understandings of the duration, and in what order?

Solar muscle – 6 years Lunar Muscle – 10 years Tuesday muscle – 7 years Rahu Muscle – 18 years Guru Muscle – 16 years Saturday muscle – 19 years Muscle Wednesday – 17 years Ketu muscle – 7 years Venus Muscle – 20 years

 

The post Daily Raasi Palan 18-06-2017 by Astrologer Munaivar – Panchanathan appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

​ஏகம் ஏவஅத்விதீயம் ப்ரம்மம் கடவுள் ஒன்றைத் தவிர!

$
0
0

 ஏகம் ஏவஅத்விதீயம் ப்ரம்மம் கடவுள் ஒன்றைத் தவிர!

கோயில்களில் உள்ள துவார பாலகர்கள் யார்?

 முக்தியின் வாசலில் நான்கு துவார பாலகர்கள் உண்டு என்கிறார் வசிஷ்டர். அவை:

  1. சமம்: புலன்களை தீமையில்லாத நல்ல வழிகளில் திருப்பி கட்டுப்படுத்துதல்.

  1. விசாரம்: எதையும் ஆழமாய் சிந்தித்து தெளிந்து அதன்படி வாழ்தல். கொள்ளத்தக்கன எவை, தள்ளத்தக்கன எவை என்பதில் தெளிவாயிருத்தல்.

  1. சந்தோஷம்: வேட்கைகளை ஏற்படுத்திக் கொண்டு அதன் பின் ஓடி சஞ்சலப்பட்டு துயரம் கொள்ளாமல் தான் செய்ய வேண்டிய கர்மங்களைச் செய்து நிறைவாக, சந்தோஷமாய் வாழ்தல்.

  1. சத்சங்கம்: உண்மையான சாதுக்கள் மற்றும் அறநெறியில் உயர்ந்தோரை அணுகி இருத்தல்.

 இந்த நான்கு வழிகளில் ஒன்றையேனும் முழுமையாகப் பின்பற்றினால் மீதி மூன்றும் தானாகவே அமையும் என்கிறார் வசிஷ்டர். துக்க வடிவான சம்சாரத்திலிருந்து விடுதலையைப் பெற ஒரே வழி மனதை வசப்படுத்துதலே என்கிறார் வசிஷ்டர்.

 கோவிலில் நுழையும் போது `துவார பாலர்கள்’ என்று இரு வாயிற்காப்போரைக் காணலாம். ஒரு துவார பாலகர், தன் ஆள்காட்டி விரலை மட்டும் உயர்த்தி காட்டி நிற்பது ஏன் தெரியுமா? கடவுள் ஒருவர் தான் என்று நமக்கு நினைவுபடுத்துவதற்காக. மற்றொரு துவார பாலகர், கையை விரித்து காட்டுவது- கடவுள் ஒன்றைத் தவிர, வேறொன்றில்லை என்பதை உணர்த்துவதற்காக.

 இதையே வேதம் ஏகம் ஏவஅத்விதீயம் ப்ரம்மம்’ என கூறுகிறது. `நிந்தா ஸ்துதி’ என்று ஒன்று உண்டு. ஈசனை, கள்ளன், பிச்சைக்காரன், கிறுக்கன் என்றெல்லாம் வசைபாடியே அவனை துதிப்பதுதான் அது. அன்பு இருக்கும் இடத்தில் தானே கோபமும் இருக்கும்! அடியார்களுக்காக எதையும் மகிழ்ச்சியுடன் ஏற்பான் ஈசன்

பெருமாள் கோயில் துவார பாலகர்கள்:

 விஷ்ணு ஆலயங்களில் உள்ள துவாரபாலகர்கள் ஜயனும், விஜயனும் ஆவர். இவர்கள் வைகுண்டத்தில் எம்பெருமானுக்கு துவாரபாலகர்களாக இருந்தவர்கள் சனத்குமாரர்களின் சாபத்தினால் மூன்று பிறவிகளில் அசுரர்களாக இருந்து, பின்னர் திருமாலின் சேவைக்கே அவர்கள் வந்து சேர்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்த துவாரபாலகர்கள் கரங்களிலே சங்கும் சக்கரமும் கதாயுதமும் ஏந்திக் காட்சி தருகின்றனர்.

சிவன் கோயில் துவார பாலகர்கள்:

 சிவாலயங்களில் துவார பாலகர்களுக்கு சண்டன், பிரசண்டன் என்ற பெயர்கள் வழங்குகின்றன. இவர்கள் வீராதி வீரர்கள். தமிழில் வழங்கப்படும் ஒரு பழமொழி தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்ட, பிரசண்டன் இதன்மூலம் இந்த துவாரபாலகர்கள் பற்றிய விவரத்தை முற்காலத் தமிழர்கள் அறிந்து வைத்திருந்தனர் என்பதை உணரலாம்.

அம்மன் சன்னதியைப் பாதுகாக்கும் துவாரபாலகி

 (பெண்)களை ஹரபத்ரா, சுபத்ரா என்று அழைக்கிறார்கள். மூலஸ்தானத்தின் வாயிலில் மட்டுமன்றி தேர்களிலும், தெப்பங்களிலும், ராஜகோபுரங்களிலும்கூட இந்தத் துவார பாலகர்களைக் காணலாம். தஞ்சை பெரிய கோயில் ராஜகோபுர துவாரபாலகர்கள் காண்போரைக் கவரும் விதத்தில் உள்ளனர். கோயிலுக்குள் தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் துவார பாலகர்களின் எதிரில் நமஸ்கரித்து, உட்செல்ல அனுமதி பெற்று, பிறகே மூல ஸ்தானத்தை வழிபடச் செல்லவேண்டும் என்பது ஆலய தரிசன விதி.

The post ​ஏகம் ஏவஅத்விதீயம் ப்ரம்மம் கடவுள் ஒன்றைத் தவிர! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

வேண்டுவன எல்லாம் தரும் ஸ்ரீ ஸ்வர்ணகௌரி மந்திரம்!

$
0
0

வேண்டுவன எல்லாம் தரும் ஸ்ரீ ஸ்வர்ணகௌரி மந்திரம்

ச்யாம வர்ணாம் த்ரிநேத்ராம் சவராபயகராம் புஜாம்

ஸ பத்மாம் ஸாக்ஷமாலாம் ச ஸர்வாபரண பூஷிதாம்

ஸர்வலக்ஷண ஸம்பன்னாம் சுஸ்மிதாம் சுமனோகராம்

காமகோடீம் அஹம் வந்தே காமிதார்த்தப்ரதாயினீம்

 திருவிளையாடற்புராணத்தில் கௌரி என்ற சிவபக்தைக்கு சிவபெருமான் அருளிய வரலாறு கூறப்படுகிறது. கௌரி என்ற பெண் சிவனடி யார் குடும்பத்தில் பிறந்தவள். ஆனால் அவள் ஒரு வைணவ பிரம்மாச்சாரியை மணக்க நேரி டுகிறது. எனவே புகுந்த வீட்டாரால் இவளது சிவவழிபாட்டிற்குத் தடை உண்டாகிறது. சிவனடியார்க்கு அமுது செய்வித்தலில் கௌரி மிகவும் விருப்பம் மிக்கவள். மகேசனுக்கு இது மிகவும் இன்பம் பயக்குமாதலின் இது ‘மஹேச்வர பூஜை’ எனப்படும் இதனையும் கௌரி சரிவர செய்ய முடியாமல் தவித்தாள்.

 கௌரியின் பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான் இவள் மட்டும் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் வயதான சிவனடியாராக வந்து உணவு வேண்டினார். கௌரியும் தலைவாழை இலை விரித்து உணவு பரிமாறி அடிகளாரை உணவு அருந்த அழைத்தாள். சிவனடியார் இவ்விதம் உணவருந்திக் கொண்டிருக்கையில் கௌரியின் கணவன், அவனது தாய் தந்தையர் வருவது தூரத்தில் தெரிந்தது. உடனே கிழவரான சிவனடியார் கட்டிளம் குமரனாக மாறினார். கௌரி மேலும் பயந்தாள்.

 உற்றார் அனைவரும் வீட்டினுள் நுழைந்தவுடன் கட்டிளம் குமரனாயிருந்த சிவனடியார் மிகவும் சிறிய குழந்தையாக மாறினார். உணவு உண்ட இலை, மற்றைய உணவுகள், பாத்திரங்கள் யாவுமே மாயமாய் மறைந்தன. கௌரியின் புகுந்த வீட்டினர் குழந்தையைக் கண்டு ஐயுற்று கௌரியை ஏசினர். உண்மையை உணர்த்த வேண்டி சிவபெருமானும், உமையம்மையுடன் ரிஷபாரூடராய் காட்சி அளித்து, கௌரியையும் ஒளி வடிவாய் ஏற்று முக்தி வழங்கினார். இது திருவிளையாடற்புராணம் கூறும் கதை.

 கௌரி என்றாலே தங்கநிறமுள்ளவள் என்று பொருள். பக்தர்களுக்கு எல்லையற்ற செல்வத்தையும், பொன்னையும் அளிப்பவளாதலின் ஸ்வர்ணகௌரி என்றும், ஸம்பத்கௌரி என்றும் அழைக்கப்படுகிறாள். ஆடி மாதம் சுக்லபட்ச திருதியை ஸம்பத்கௌரி அல்லது ஸ்வர்ணகௌரி விரதநாள் ஆகும்.

 இதேபோல ஆவணி சுக்லபட்ச சஷ்டீ தினம் மங்கள கௌரி விரததினமாகவும், புரட்டாசி கிருஷ்ணபட்ச ஸப்தமியும், சுக்ல பட்ச பஞ்சமியும் கஜகௌரி விரத தினமாகவும், புரட்டாசி அமாவாசை விருத்தி கௌரிக்கு உரியதாகவும், புரட்டாசி சுக்லபட்ச தசமி என்றும் விஜயதசமி தசரத லலிதா கௌரி விரதமாகவும், புரட்டாசி சுக்லபட்ச ஏகாதசியன்று துளசி கௌரி விரதமாகவும், ஐப்பசி அமாவாசையன்று கேதார ஈச்வரரை மகிழ்விக்கும் கேதார கௌரி விரதமாகவும், கார்த்திகை சுக்லபட்ச சதுர்த்தி பதரீகௌரி விரதமாகவும், பங்குனி சுக்ல பட்ச திருதியை ஸௌபாக்ய கௌரியை வழிபடுவதாகவும், சித்திரை சுக்லபட்ச சதுர்த்தி வரதாகவுரி விரதமாகவும், சித்திரை வளர்பிறை பஞ்சமி லாவண்ய கௌரிக்குரியதாயும், வைகாசிசுக்ல பட்ச பிரதமை புன்னாக கௌரி விரமாகவும், ஆனி சுக்லபட்ச திருதியை ரம்பா கௌரியை அனுஷ்டிக்கும் தினமாகவும் ஆவணி சுக்லபட்ச பஞ்சமி சமீப கௌரி விரதமாகவும் கொண் டாடப்படுதல் வேண்டும்.

 ஸம்பத் கௌரி செல்வத்தை அளிப்பாள். மங்கள கௌரி திருமணத்தையும் மாங்கல்யமும் அருள்வாள். கஜகவுரி வலிமையையும், விருத்தி கவுரி மக்கட்பேற்றையும், துளசி கௌரி விஷ்ணுவின் அருளையும், கேதார கௌரி ப்ரமேச்வரனின் அருளையும், லாவண்யகௌரி அழகையும், ஸௌபாக்ய கௌரி எல்லா நன்மையும், புன்னாக கௌரி ஸர்ப்ப தோஷங் களை நீக்குதலையும், சமீப கௌரியம்மை தன் ஸாமீப்யமான மோட்சத்தையும் அருளுவார்கள்.

 வரதம் என்னும் அம்பாள் காட்டும் முத்திரை எல்லா அபீஷ்டமும் (வேண்டுவன எல்லாம்) தரும் அபயமுத்திரை தன்னை அண்டியவர்கட்கு சரணாகதி அளித்து பயம் ஆபத்து இவற்றிலிருந்து காப்பாற்ற நான் இருக்கிறேன். நீ அஞ்ச வேண்டாம் என்று அம்பாள் அருளுவது ஆகும்.

 வரதா கௌரி பக்தர்கட்கு கேட்ட வரங்களை அளித்து அபயம் அளிப்பாள். ரம்பையினால் துதிக்கப் பெற்றவள் ரம்பாகவுரி. ‘ரம்பாதி வந்திதா’ என்று லலிதா சகஸ்ரம் கூறும், ரம்பா ஸேவித பாதுகா என்று பிரத்யங்கிரா ஸஹஸ்ர மும் இதை வலியுறுத்தும்.

  ஸ்ரீ ஸ்வர்ண கௌரியின் மூலமந்திரத்திற்கு உரிய ரிஷி ஆனந்த பைரவர். அனுஷ்டுப் சந்தஸ், ஸம்பத் கௌரி தேவதை, ஹ்ராம்-பீஜம், ஹ்ரீம்-சக்தி, ஹ்ரூம்-கீலகம் (ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம், ஹ்ரைம், ஹ்ரௌம், ஹ்ர-அங்கன்யாச கரநியாசங்கள்) மூல மந்திரம் பின் வருமாறு.

ஓம் ஸ்ரீம் க்லீம் ஐம்ஹ்ரீம் நமோ பகவதி

ஸர்வார்த்த ஸாதகி, ஸர்வலோகவசங்கரி,

தேவி ஸௌபாக்ய ஜனனி, ஸ்ரீம் ஹ்ரீம்

ஸம்பத் கௌரி தேவி, மம ஸர்வ ஸம்பத்ப்ரதம்

தேஹி குருகுரு ஸ்வாஹா

 மேற்படி மூலமந்திரத்தை வில்வதளங்களால் முக்கோண வடிவ ஹோமகுண்டத்தில் ஹோமம் செய்யின் எல்லையற்ற செல்வமும், மஞ்சள் தூயப்பட்டால் செய்தால் தங்கம், நகைகள் சேர்க்கையும், ரோஜா மலரால் ஹோமம் செய்தால் கல்வியில் தேர்ச்சியும், சிவந்த புஷ்பங்களால் செய்தால் மக்கள் கவர்ச்சியும், வேம்பு எண்ணையால் செய்யின் சத்ருநாசமும், தேனில் எள் கலந்து ஹோமம் செய்தால் பித்ருதோஷம் நீங்குதலும், சந்தனக்கட்டையால் செய்ய வியாபார அபிவிருத்தியும் ஏற்படும்.

The post வேண்டுவன எல்லாம் தரும் ஸ்ரீ ஸ்வர்ணகௌரி மந்திரம்! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

கர்மவினைகளால் அனுபவிக்கும் துன்பம் விலக வேண்டுமா?

$
0
0

கர்மவினைகளால்  அனுபவிக்கும் துன்பம் விளக்க வேண்டுமா?

 விதியை வெல்லும் சூட்சமம்

மனிதன் தன் வாழ்நாளில் மூன்று வகையான கர்ம வினைகளை பெற்று அனுபவிக்கிறான்.

அவை

 1)சஞ்சித கர்மம்

 2)பிராப்த கர்மம்

 3)ஆகாமிய கர்மம்

 

சஞ்சித கர்மம் என்பது நம் கரு உருவாகும் போதே உடன் உருவாவது, அதாவது முன்ஜென்மங்களில் நாம் செய்த பாவ புண்ணியத்தின் வித்தாக இந்த பிறவியில் நம்மை பற்றிக்கொள்ளும் கர்ம வினையாகும்.

 பிராப்த கர்மா என்பது நாம் இந்த பிறவியில் உடலெடுத்து வாழும் காலத்தில் நம் ஜீவனத்துக்காக நாம் செய்யும் தொழிலின் வாயிலாகா நாம் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் உண்டாகும் கர்ம வினை, இந்த கர்மாவால் வரும் பலனையும் நாம் இந்த பிறவிலேயே அனுபவிக்கவேண்டும்,

ஆகாமிய கர்மா என்பது இந்த பிறவியில் நாம் வாழும் காலத்தில் நம் ஆசைகளால் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் வருவது, இவ்விதமாக மூன்று வகையான கர்மாக்கள் நம்மை சூழ்ந்துள்ளன.

 இந்த கர்மவினைகளில் இருந்து யாரும் தப்பிவிட இயலாது நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், விரயங்கள், கடன்கள், பிரிவினைகள், முடக்கங்கள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் நான் மேலே குறிப்பிட்ட கர்ம வினைகளின் சாராம்சம் ஆகும்.

பிரம்மா-

எல்லா படைப்பு இயக்கங்களையும் செய்பவர். அவரின் படைப்புக்கு தேவையான ஞானத்தினை தருகிற சரஸ்வதி அவரின் மனைவி.

விஷ்ணு –

காக்கும் கடவுள், எல்லா உயிர்களையும் இரட்சித்து காப்பவர். இவர் உலகினை காக்க செல்வம் வேண்டுமல்லவா? அதை அவருக்கு நல்க செல்வத்திற்கு அதிபதியான மஹா லக்ஷ்மி அவரின் மனைவி.

சிவம் –

அழிக்கும் கடவுள். மனிதனின் அஞ்ஞான இருளை, கர்மவினைகளை, தீமைகளை அளித்து நன்மை தருபவர். இவருக்கு தீமைகளை அழிக்கின்ற சக்தியினை தருவதற்கு சக்தி தேவியே இவருக்கு துணைவியாக.

 மனித உடல் இறைவனால் பஞ்சபூதத்தினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. நிலம், நீர், நெருப்பு, கற்று, ஆகாயம் என்பவைபஞ்ச பூதங்களாகும். சிவனே பஞ்சபூத பெருமையை சிறப்பிக்கும் விதமாக பஞ்சபூத தலங்களில் நாயகனாக நின்று அருள்பாலிக்கிறார்.

அவையாவன

காஞ்சிபுரம் – நிலம் – ஏகம்பநாதர்
திருவனைகாவல் – நீர் – ஜலகண்டீஸ்வரர்
திருவண்ணாமலை – நெருப்பு – அண்ணாமலைநாதர்
காளஹஸ்தி – வாயு – காளத்திநாதர்
சிதம்பரம் – ஆகாயம் – நடராஜர்

அகவே பஞ்சபூத ஆற்றலில் உண்டாக்கப்பட்டு இயங்கும் மனிதன், தாம் வாழும் காலத்தில் பஞ்ச இந்திரியங்களால் ( ஐந்து புலன்களால் – மெய், வாய், கண், காது, மூக்கு) ஆகியவற்றின் மூலியமாக தூண்டப்பட்டு தன் புலன்களால் இச்சைக்கு அடிமையாகி செய்யும் செயல்களால் பிறருக்கு தீங்கு நேரும் பொது பாவங்கள் – கர்மவினைகள் உண்டாகிறது.

 பஞ்ச பூதங்களால் – பஞ்ச இந்திரியங்களால் தோன்றிய பாவத்தை – பஞ்ச லிங்கங்கள் அல்லவா தீர்க்க முடியும். இறைவனுக்கு ஐந்து விதமான சேவைகள் மூலம் நம் பாவங்களை நாம் போக்கிக்கொள்ள முடியும். அவையாவன

யாதனம் – கோயில் கட்டுதல், நந்தவனம் அமைத்தல், கோயில் திருப்பணிகள் செய்தல்.

சிரவணம் – இறைவனின் பெருமைகளை ஆன்மீகம் அறிந்தவர்களின் மூலமாக கேட்டல்.

கீர்த்தனம் – இறைவனை இசை கருவிகள் கொண்டு பாடி ஆடி மகிழ்வித்தல்.

 பூஜார்தனம் – அபிஷேகம் செய்தல், அலங்காரம் செய்தல், அர்ச்சனை செய்தல்,

நைவேத்தியம் படைத்து பூஜை செய்தல்.

 ஸ்துதி – இறைவனை புகழ்ந்து தோத்திர இசைப் பாடல்களை பாடுதல்.

இந்த ஐந்த விதமான சேவைகளை நாம் செய்து வர நம் கர்ம வினைகளால் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் மாறி இன்பங்கள் நல்கும்.

The post கர்மவினைகளால் அனுபவிக்கும் துன்பம் விலக வேண்டுமா? appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

பஞ்சமாபாதகங்களில் இருந்தும் விடுபட!!!

$
0
0

  ஸ்ரீ ருத்ரம் பரமேஸ்வரனை துதிக்கும் மிகமிக உயர்ந்த மந்திரமாகும். ஸ்ரீ ருத்ரம் நமது துன்பத்தை போக்குவதோடு முக்தியையும் அளிக்கவல்லது என்பதை பெரியபுராணம் காட்டுகின்றது. பல பாழடைந்த சிவாலயங்களில் சுவாமிக்கு குளிர குளிர ருத்ராபிஷேகம் செய்தபின், திருப்பணிகள் கும்பாபிஷேகம் நடந்துள்ளன.மேலும் தடைப்பட்ட திருப்பணிகள் பூர்த்திஅடையவும் ருத்திர ஹோமம் செய்வது பலன் அளிக்கவல்லது.

  ஸ்ரீருத்ர மந்திரம் சாந்தி மந்திரமாகவும், ஸகல பாவங்களையும் போக்கும் பிராயச்சித்த மந்திரமாகவும் விளங்குகின்றது. வேதபுருஷனுக்கு ஸ்ரீருத்ரம் கண்ணாகவும், அதனுள் இருக்கும் பஞ்சாட்சரம் கண்மணியாகவும் விளங்குவதாக ஹரதத்தாச்சாரியார் போற்றுகின்றார். 63 நாயன்மார்களில் ருத்திர பசுபதி நாயனார்  ஸ்ரீ  ருத்ரம் ஜபித்து சிவமுக்தி பெற்றவர். பெரியபுராணத்தில் சேக்கிழார், “ஆய அந்தணர் அருமறை உருத்திரங் கொண்டு, மால் அயன் அறியாவினா  மாமலர்ச் சேவடி வழுத்தும் “-என்று போற்றுகின்றார்.

 ஒரு மரத்தின் வேரில் நீரூற்றினால் கிளைகள் எல்லாம் செழிப்பதுபோல், ஸ்ரீ ருத்திர ஜபத்தால் எல்லா தேவதைகளும் த்ருப்தியடைகின்றார்கள் என்பதை சூத சம்ஹிதை,  “விருக்ஷஸஸ்ய மூலவாகேன சாகபுஷ்யத்திவையதா, சிவருத்ர ஜபாது ப்ரிதே ஏவாஸ்ய தேவதா அதோ, ருத்ர ஜபாதேவ புக்திமுக்தி ப்ரஸித்தித :-என்று கூறுகின்றது.

  ஸ்ரீ ருத்ர ஜபம், ஹோமம், அபிஷேகம் செய்பவன் பஞ்சமாபாதகங்களில் இருந்தும் விடுபடுகின்றான்.அஞ்ஞானம் ஒழிந்து ஆத்மஞானம் பெறுகின்றான். ஈடுஇணை வேதத்திலும் சரி, ஸ்மிருதியிலும் சரி கிடையாது என்று மேலும் சூத சம்ஹிதை கூறுகின்றது. இத்தகைய அதிஉன்னதமான ஸ்ரீ ருத்ரம் ஜபித்து ருத்ரஹோமமும், ருத்ராபிஷேகமும் செய்வது அதி உன்னத பலனை தரவல்லது.

 பரம உன்னதமான ஸ்ரீ ருத்ரம் முறைப்படி ஜபிக்கும்பொழுது, ஏற்படும் ஸப்த ஒலி அலை அதிர்வுகளும், ருத்ர யாக தீயிலிருந்து வரும் ஒளிக்கதிர்களும், புகை மண்டலமும் பிரபஞ்சமாகிய உலகை தூய்மை படுத்துவதுடன், உலக வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள், துன்பங்களை அகற்றி சர்வ இஷ்ட சித்திகளை அளிக்கின்றது.

ஸ்ரீருத்ரம் சொல்லும் முறை

11 முறை ருத்ரம் சொல்வது, ‘ஏகாதச ருத்ரம்’ எனப்படும். இதை 11 நபர்கள் ஒரு முறை சொல்வர். 121 முறை (11 நபர்கள் 11 முறை) சொல்வது, ‘லகு ருத்ரம்’. லகு ருத்ரத்தை 11 முறை கூறினால், மஹா ருத்ரம். இந்த மஹாருத்ரத்தை 11 முறை பாராயணம் செய்வது, ‘அதிருத்ரம்’.

பொதுவாக கோயில்களில் 121 முறை ருத்ர பாராயணம் (லகுருத்ர பாராயணம்) செய்து, ‘ருத்ராபிஷேகம்’ செய்வது வழக்கம். இது எல்லாக் கோயில்களிலும் நடக்கும். மஹாருத்ரம், அதிருத்ரம் போன்ற நிகழ்வுகள், எப்போதாவது ஏதேனும் பெரிய சிவஸ்தலங்களில் நடைபெறும். இவற்றை ஒரு நாளில் செய்ய முடியாது. நாள்கணக்கில் செய்ய வேண்டும். அபூர்வமாகத்தான் காண முடியும். ஆனால் இப்போது சிதம்பரத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ‘லட்ச ருத்ரம்’ என்பது, காணக் கிடைக்காத மிக மிக அரிய நிகழ்வு. முதல் முறையாக ஒரு லட்சம் முறை ஓதப்படுகிறது. உலக சமாதானம் மற்றும் உலக மக்களின் நன்மைக்காகவே இது நடத்தப்படுகிறது. அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று வாழ்வதுதான் இந்த லட்ச ருத்ர ஜபத்தின் நோக்கம்.

The post பஞ்சமாபாதகங்களில் இருந்தும் விடுபட!!! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


தன்வந்திரி பீடத்தில் கோடி நன்மை தரும் கோடிதீபத்துடன் கோடி அர்ச்சனை

$
0
0

கோடி நன்மை தரும் கோடிதீபத்துடன் கோடி அர்ச்சனை

ஜூலை 09 குருபூர்ணிமா முதல் தன்வந்திரி பீடத்தில் கோடான கோடி நன்மை தரும் கோடிதீபத்துடன் கோடி அர்ச்சனை ஆரம்பம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக அமைதி வேண்டியும், உலக நலனுக்காகவும், மழை வேண்டியும், இயற்கை வளம் பெறவும், சகல விதமான ஜீவராசிகளும் உஜ்விக்கவும், விவசாய பெருமக்களின் நலனுக்காகவும், பொருளாதாரம் உயரவும் வருகிற 09.07.2017 ஞாயிற்றுக் கிழமை முதல் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளின் பரிபூரண அருள் பெற்று ஆரோக்யதுடன் வாழவும் குரு மஹாங்களின் ஆசிகளுடன் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறவும் ஸ்ரீ ஆரோக்ய லக்‌ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு கோடி அர்ச்சனையுடன் கோடி தீபம் ஏற்றும் வைபவம் குரு பூர்ணிமா நாள் முதல் தன்வந்திரி பீடத்தில் நடைபெறவுள்ளது. மேற்கண்ட வைபவம் கீழ்கண்ட காரணங்களுக்காக நடைபெறுகிறது.

துன்பங்கள் நீங்கி வசீகரம் உண்டாகவும்,கிரக தோஷம், கல்வி மற்றும் சுப காரியங்களில் ஏற்படும்தடைகள் விலகவும், திரண்ட செல்வம் ஏற்படவும், அப சகுனம், பெரும் பாவம் விலகவும், குடும்ப ஒற்றுமை, புத்திர சுகம்,கல்வி கேள்விகளில் விருத்தி சர்வ பீடைநிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம்ஆகியவைகளில் மேன்மையடையவும், மூன்று ஜென்ம பாவங்கள்,குல தெய்வகுற்றமும் சாபம், தாம்பத்ய தகராறு, கடன் தொல்லை, சனியின்தாக்கம் திருமணத்தடை விலகவும் ,ஆரோக்கியமும் நிறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி கல்விகேள்வி களில் குழந்தைகள் விருத்திகாணவும். இல்லத்தில் சகல பொருட்களும்நிறைந்து தான்யம்பெருமளவில் கிடைத்து, மனநிம்மதி, புத்திரபாக்கியம் ஏற்படவும்,பசுக்கள்விருத்தியாகவும், பசிப்பிணிகள் நம்மைவிட்டு அகலுவும், ஐஸ்வரியம்,நிலைத்த புகழ், இன்பங்கள் வந்து சேர்ந்து, தர்ம புண்ணியசிந்தனைகள் அதிகரிக்கவும்.

தாம்பத்யம் சிறக்கவும், . சர்வ மங்களம் உண்டாகவும் இந்த கோடி தீப கோடி அர்ச்சனை நடைபெறவுள்ளது.

மேலும் விபரங்களுக்கு…

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுரா,

வாலாஜாபேட்டை – 632513.

வேலூர் மாவட்டம்.

Ph : 04172-230033 / 230274

Cell : 9443330203, 8124516666

Web: www.danvantritemple.org

eMail : danvantripeedam@gmail.com

The post தன்வந்திரி பீடத்தில் கோடி நன்மை தரும் கோடிதீபத்துடன் கோடி அர்ச்சனை appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

RAHU KETHU PEYARCHI PALANGAL 2017 BY SRINIVASA RAMANUJAR

$
0
0

RAHU KETHU PEYARCHI PALANGAL 2017 BY SRINIVASA RAMANUJAR

 

 

 

Rahu transits karka on 21st August 2017, stays there till 6th March 2019.Ketu transits Makara on 21st August 2017, stays there till 6th March 2019.The first major transit of the year 2017 is that of Rahu and Ketu.

சூரியனுடன், ராகு கேது எந்த ஒரு வீட்டிலும் சேர்ந்து இருந்தாலும் அந்தவீடு எந்த அமைப்பை பெறுகிறதோ, அதன் பலன் விருத்தி அடைவதில்லை , குறிப்பாக லக்கினமாக இருந்தால், ஜாதகர் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் தடைகள், தாமதம் தோல்வி நிலை ஏற்ப்படுகிறது. மேலும் தமது கடின உழைப்பு வெற்றி பெறுவதில்லை,  அதிர்ஷ்டமில்ல நிலை ஏற்படுகிறது.
பெரிய மனிதர்கள் உதவி கிடைப்பதில்லை, அரசு ஆதரவு  இல்ல நிலை, குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து ஆதரவற்ற நிலை, அரசியலில் பொதுமக்களிடம் வரவேற்ப்பு அற்ற நிலை போன்ற தீமையான பலன்களை மட்டுமே அனுபவிக்கின்றனர்.
இந்நிலை மாற சூரியகிரகண தோஷ நிவர்த்தி செய்வதினால் அணைத்து நன்மையான பலன்களையும் ஜாதகர் அனுபவிக்கலாம் என சாஸ்திரம்  வழி காட்டுகிறது .
இதே அமைப்பில் சந்திரனுடன் ராகு கேது சேர்க்கை ஜாதகருக்கு பொருள் ஆதார அமைப்பில் தடைகளை ஏற்ப்படுத்துகிறது, தொழில் தடை வண்டி வாகனம் சரியாக அமையாதது.
அனைத்தும் இருந்தும் சொகுசான வாழ்வினை அனுபவிக்க முடியாத நிலை , மனப்போராட்டம் மனோவியாதி, டென்சனான வாழ்க்கைமுறை, மனதினை ஒரு நிலை படுத்த முடியாத அமைப்பு போன்று தீமையான பலன்களே ஜாதகருக்கு நடக்கின்றது.
இந்நிலை மாற பௌர்ணமி வழிபாடு, சந்திர கிரகண தோஷ நிவர்த்தி செய்து நலம் பெறலாம்.  

The post RAHU KETHU PEYARCHI PALANGAL 2017 BY SRINIVASA RAMANUJAR appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

திருமயிலை ஸ்ரீ ஆஞ்சநேயர் தேவஸ்தானம் அன்னக்கூட திருப்பாவாடை மஹோத்ஸவம்

$
0
0

திருமயிலை ஸ்ரீ ஆஞ்சநேயர் தேவஸ்தானம்

அன்னக்கூட திருப்பாவாடை மஹோத்ஸவப் பத்திரிகை

திருமயிலை ஸ்ரீ ஆஞ்சநேயர் தேவஸ்தானம் அன்னக்கூட திருப்பாவாடை மஹோத்ஸவப் பத்திரிகை

அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும்
தயிர் வாவியும் நெய்யலாறும் அடங்கப்
பொட்டத்துற்றி மாரிப் பகை புணர்த்த
பொருமா கடல்வண்ணன் பொறுத்த மலை
வட்டத் தடங்கண் மடமான் கன்றினை
வல்வாய்த் பற்றிக் கொண்டு குற மகளிர்
கொட்டைத் தலைப்பால் கொடுத்து வளர்க்கும்
கோவர்த்தமென்னும் கொற்றக் குடையே

  –  பெரியாழ்வார்  திருமொழி

சென்னை திருமயிலை குயப்பேட்டை சாலிவாகன வம்சத்தினர் அழுகையிலிருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சீதா லக்ஷ்மண, பரத சத்ருகன ஹனுமந் சமேத ஸ்ரீ கோதண்டராம சுவாமி, ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமிக்கு நாளது ஹேவிளம்பி வருஷம் ஆனி மாதம் 11 ம் நாள் 25-06-2017 ஞாயிற்றுக்கிழமை புனர்வசு நட்ஷத்திரம்  கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.30 மணி அளவில் விசேஷ திருமஞ்சனமும் அதனை தொடர்ந்து  அன்னக்கூட திருப்பாவாடை உற்சவமும் நடைபெறும். சாலிவாகன வம்சத்தினர்களும் பக்தர்களும் வருகை தந்து எம்பெருமானை சேவித்து தீர்த்த பிரசாதங்களை பெற்றுக்கொண்டு, ஸ்ரீ கோதண்டராமர், ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி அனுக்ரகத்திற்கு பத்திரர்களாகும்படி கோருகிறோம்.

மேலும் தொடர்புக்கு:

திருமயிலை ஸ்ரீ ஆஞ்சநேயர் தேவஸ்தானம்
கோதண்டம்
B . பாலாஜி
044 -24980132/24660380
செல்: 7010528851

The post திருமயிலை ஸ்ரீ ஆஞ்சநேயர் தேவஸ்தானம் அன்னக்கூட திருப்பாவாடை மஹோத்ஸவம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

ஆன்மாக்களின் பயத்தையும், தோஷத்தையும் போக்க!

$
0
0

எம்பெருமான் பரமேஸ்வரன் ஆன்மாக்களுக்கு அருள்புரிய நடன மூர்த்தியாக ஆடிய திருநடனங்கள் பலவாகும். அவற்றுள் சில திருநடனங்கள் திருமுறைகளிலும், புராணங்களிலும் புகழ்ந்து போற்றப்படுகின்றது.அவைகள்,

1)பாண்டரங்க நடனம் :

           சிவபெருமான் திரிபுரசம்ஹாரம் செய்ய எழுந்தருளும் பொழுது, பரமேஸ்வரனின் தேர்சாரதியாய் இருந்ந ப்ரம்மதேவன் தமது தேவியான சரஸ்வதியின் பிரிவால் வருந்த, அவ்வருத்தத்தை யொழிக்கும்பொருட்டு எம்பெருமான் தமது திருமேனி முழுவதும் திருவெண்ணீரு அணிந்து, பிரம்மனின் முன்பு ஆடிய நடனம்.

      இந்நடனம் ஆன்மாக்களின்  கவலையை, துக்கத்தை போக்கவல்லது.

2)கொடுகொட்டி  நடனம் :

                  எம்பெருமான் சிவபரம்பொருள் திரிபுரசம்ஹாரமஃ தகனஞ்  செய்தவிடத்திலே நின்று, அருட்சக்தியான பார்வதிதேவி தாளம் போடத், எம்பெருமான் தமதிருக்கரங் கொட்டி ஆடிய நடனமாகும்.

    இந்நடனம் ஆன்மாக்களின்   ஆணவத்தை நீக்கவல்லது.

3)சந்தியா நடனம் :

   பிரதோஷகாலத்தில் எம்பெருமான் உமையம்மை பார்க்க, முப்பத்துமுக்கோடி தேவர்களும், பிரம்ம விஷ்ணுக்கள் தரிசனம் செய்ய, பெருமான் தம் கரத்திலே டமருகங் கொண்டு, சூலாயுதத்தை சுழற்றி ஓர் சாமகால அளவு கையிலையில் புரிந்த திருநடனமாகும்.

      இந்நடனம் ஆன்மாக்களின்  பயத்தையும், தோஷத்தையும் போக்கவல்லது.

4)சண்ட தாண்டவம் :

 எம்பெருமான் திருவாலங்காட்டிலே சுநந்தர், கார்க்கோடகர் என்ற ரிஷிகள் தரிசனம் செய்ய, வைரவ வடிவங்கொண்டு, அபிநயம் நவரசம் விளங்க, துத்தம் கைக்கிளை போன்ற வாத்யங்கள் கோஷிக்க, காளியுடன் ஆடி அவள் அஹங்காரத்தை அடிக்கிய திருநடனமாகும்.

      இந்நடனம் ஆன்மாக்களின் அஹங்காரத்தை போக்கவல்லது.

5)கௌரி தாண்டவம் :

 எம்பெருமான் மோகினி வடிவங் கொண்ட விஷ்ணு மூர்த்தியோடு தாருகாவனத்தில் திருநடனஞ் செய்தமைகாரணமாக, உமையம்மை ஊடல் கொள்ள, அம்பிகையின் ஊடல் நீங்க கைலைமலையில்,அம்பிகை மகிழ்வுற  அத்தாருகா நடனத்தை ஆடி காட்டிய நடனமாகும்.

      இந்நடனம் ஆன்மாக்களுக்கு இன்ப போகத்தை தந்து  மகிழ்விக்கவல்லது.

6)ஆனந்த தாண்டவம்.:

         எம்பெருமான் தில்லையிலே பதஞ்சலி, வியாக்ரபாதர் தரிசனம் செய்ய, கணங்கள் தாளம் முழங்கவும், தேவர்கள் குடமுழாக் கொட்டவும், பிரமன் தாளம் போடவும், திருமாள் மத்தளம் அடிக்கவும், திருக்கரத்தில் உள்ள டமருகம் ஒலிக்க, பாம்புகள் இரைக்க, மான் கதற, கொண்றை மாலையில் வண்டினம் முளர, பாலச்சந்திரன் அசைய, கங்கை குலுங்க, வேதச்சிலம்பொலிக்க, முயலகன் நெளிய அன்னை சிவகாமிதேவி கண்டு அகம் மகிழ ஆடும் திருநடனமாகும்.

    இந்நடனம் ஆன்மாக்களுக்கு ஆனந்தத்தையும், ஞானச் செல்வத்தை அளிக்கவல்லது.

7)மஹா சம்ஹார நடனம் :

            இவ்வுலகமானது  மஹாப்பிரளய காலத்தில் எல்லாம் எம்பெருமானிடம்  ஒடுக்கம் கொள்ளும்பொழுது, எம்பெருமான் ஒருவன் மட்டும் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் வடிவமாக எழுந்தருளி ஆடும் திருநடனமாகும்.

இந்நடனம் ஆன்மாக்களுக்கு முக்தியை அளிக்கவல்லது.சிவார்ப்பணம்.

The post ஆன்மாக்களின் பயத்தையும், தோஷத்தையும் போக்க! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

Sivalinga Formless Supreme Being Nirguna Brahman

$
0
0

 Sivalinga Formless Supreme Being Nirguna Brahman

  Shiva Linga is the holy symbol of Lord Shiva that is considered sacred by the devotees of Lord Shiva. The word, ‘Lingum’ in Sanskrit means, ‘symbol’. Shiva Lingum, therefore means symbol of Lord Shiva and is therefore considered most sacred by Shaivaites. Worship of Shiva Linga is regarded sacred and superior Shiva Mahapurana.

Structure of Shiva Linga

 Most prevalent icon of Shiva and virtually found in all Shiva temples, Shiva Linga is a rounded, elliptical, an-iconic image that is usually set on a circular base or peetham. According to some scholars the Peetham represents Parashakti, the manifesting power of God.

 Shiva Lingas are usually made of stone that may either be carved or naturally existing – svayambhu, such as shaped by a swift-flowing river. Shiva Lingas may also be made of metal, precious gems, crystal, wood, earth or transitory materials such as ice. Some scholars say that transitory Shiva Linga may be made of 12 different materials such as sand, rice, cooked food, river clay, cow dung, butter, rudraksha seeds, ashes, sandalwood, darbha grass, a flower garland or molasses.

Various Interpretation of Shiva Linga

 Besides regarding Shiva Linga as the symbol and form of Lord Shiva, religious scholars have given various interpretations of Shiva Linga. Here is the brief description of some of the popular theories and interpretations related to Shiva Linga and its origin:

 Worship of the Phallus According to some scholars, worship of Shiva Linga in effect means worship of the reproduction function. For, they say that the other meaning of the Sanskrit word ‘Linga’ is gender in general and phallus (the male reproductive organ) in particular. They believe that the base of the Lingam corresponds to the Yoni which mean vagina or the female reproductive organ. Correspondence of Linga and Yoni in a Shiva Linga is therefore interpreted as the representation of the process of copulation. Scholars further opine that the Kalash (container of water) that is suspended over the Shiva Linga from which water drips over the Linga also correspond to the idea of intercourse.

 Connecting the origin of Shiva Linga to the early Indus Valley civilization, scholars opine that tribes of the Indus Valley took to the togetherness of Lingam and Yoni in a Shiva Linga as the point of energy, creation and enlightenment.

Interpretation in Tantra

  According to Tantra, Lingam is a symbol of Shiva′s phallus in spiritual form. They say, the lingam contains the soul-seed within which lies the essence of the entire cosmos. The lingam arises out of the base (Yoni) which represents Parvati according to some or Vishnu, Brahma in female and neuter form according to others.

Interpretation in Puranas

 Puranas, especially the Vamana Purana, Shiva Purana, Linga Purana, Skanda Purana, Matsya Purana and Visva-Sara-Prakasha attribute the origin of Shiva Linga to the curse of sages leading to the separation of and installation of the phallus of Lord Shiva on earth. Some also refer to the endlessness of the lingam to be linked to the egos of Lord Vishnu and Lord Brahma.

 Interpretation of Shiva Linga as an Abstract Symbol of God Some scholars of the Hindu scriptures say that Linga is merely an abstract symbol of the God. They point towards several legends in Hinduism where a sundry rock or even a pile of sand has been used by as a Lingam or the symbol of Shiva. Citing a particular instance they say, Arjuna once fashioned a linga of clay when worshipping Shiva. Scholars of Puranas, thus argue that too much should not be made of the usual shape of the Lingam. Scholars say that the interpretation of Shiva Linga as an abstract form of God is also consonant with philosophies that hold that God may be conceptualized and worshipped in any convenient form. The form itself is irrelevant, as the divine power that it represents is all that matters. Scholars thus say that Sivalinga represent the formless Nirguna Brahman or the formless Supreme Being.

The post Sivalinga Formless Supreme Being Nirguna Brahman appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

Daily Raasi Palan 20-06-2017 by Astrologer Munaivar – Panchanathan

$
0
0

Daily Raasi Palan 20-06-2017 by  Panchanathan

What are the names of the twelve zodiac?

  • Capricorn
  • Aquarius
  • Pisces
  • Aries
  • Taurus
  • Gemini
  • Cancer
  • Leo
  • Virgo
  • Libra
  • Scorpio
  • Ophiuchus
  • Sagittarius

What is the name of the governor of the zodiac?

Aries – Mars Taurus – Venus Gemini – Wednesday Cancer – the Moon LEO – The Sun Virgin – Wednesday Libra – Venus Scorpio – Mars Sagittarius – Guru Capricorn – Saturn Aquarius – Saturn Pisces – Guru

What lakkinam?

  By the time a child is born, the baby, the baby’s birth in the sky that no raciyaip facing janittirukkirato lakkinam example. Month on month (That is on April 14th) from 6 am to 8 pm mashup lakkinamavani month (August 17th or 18th) morning at the rising of Leo lakkinam. Subsequent to the order that changes every two hours subsequent lakkinam.

What is the method of keeping lakkinattai ovvoruvittaiyum think?

Friend of the first home of the zodiac. In addition to round the clock

Each zodiac 2,3,4,5,6,7,8,9,10,11 comes, comes the order to 12.

What is the moon? It is based on what?

Zodiac horoscope will be a moon, the moon is based on enappatumatu jatakan newborn stars.

What used lakkinam? What is the moon?

Natal horoscope (Birth Chart) vehicle

Koccaram (the essence of the planet – Transit of planets) What?

Another sign of the zodiac every planet spinning in space amaruvate kolcaram called displacement.

Dasa / What is mind? What is its purpose?

What planet and its star is born jatakan tacatan jatakan early Dasa ruler, it will be changing in the wake of each Dasa Dasa Period 120

Years. Tacavaiyum portions to each other planets. Hopefully it that name (Sub period). Dasa ovvorukirakamum in its own good or bad results, give or puttiyiltan

Dasa understandings begin with what?

Star of the birth of the prince of a jatakar tacaitan boot muscle.

Dasa understandings of the duration, and in what order?

Solar muscle – 6 years Lunar Muscle – 10 years Tuesday muscle – 7 years Rahu Muscle – 18 years Guru Muscle – 16 years Saturday muscle – 19 years Muscle Wednesday – 17 years Ketu muscle – 7 years Venus Muscle – 20 years

 

The post Daily Raasi Palan 20-06-2017 by Astrologer Munaivar – Panchanathan appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

தாமரை மாலை சாத்தினால் ஆயுள் கூடும் சப்தகுரு தலம்

$
0
0

தாமரை மாலை சாத்தினால் ஆயுள் கூடும் சப்தகுரு தலம்

  படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனக்கென தனியே கோயில் இல்லையே என மனக்குறை இருந்தது. எனவே, மகாவிஷ்ணு அவரை பூலோகத்தில் பிறக்கும்படி செய்தார். பிரம்மா இத்தலத்தில் பெருமாளை வணங்கி தவம் செய்து வந்தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக மகாவிஷ்ணு, கதம்ப மரத்தின் வடிவில் நின்று கொண்டார். இதையறிந்த பிரம்மா கதம்ப மரத்திற்கு பூஜைகள் செய்து, சுவாமியை வணங்கினார்.

  அவரது பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு காட்சி தந்து, நீ எப்போதும் இங்கேயே இருந்து என்னை வழிபட்டு வா. நீ பெற்ற சாபத்தால் உனக்கு கோயில்கள் இல்லாவிட்டாலும் இங்கு தனியே வழிபாடு இருக்கும் என்றார். பிரம்மாவும் இங்கேயே தங்கினார். பிற்காலத்தில் இவருக்கும் சன்னதி கட்டப்பட்டது.

 பிரம்மாவுக்கு இடப்புறத்தில் ஞான சரஸ்வதி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் கைகளில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடி, ஜெபமாலையுடன் காட்சி தருவது சிறப்பு. பிரம்மாவிற்கு தயிர்சாதம், ஆத்தி இலை படைத்தும், சரஸ்வதிக்கு வெள்ளை வஸ்திரம், தாமரை மலர் மாலை சாத்தியும் வழிபட்டால் ஆயுள் கூடும், கல்வி சிறக்கும். குருப்பெயர்ச்சியின்போது பிரம்மாவிற்கு விசேஹ பூஜைகள் நடக்கிறது.

 விஷ்ணு கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் உத்யோக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். பூரணவல்லி தாயார் தனிச்சன்னதியில் அருளுகிறாள். இவள் என்றும் உணவிற்கு பஞ்சமில்லா நிலையைத் தரக்கூடியவள். அருகில் மகாலட்சுமிக்கும் தனிச்சன்னதி இருக்கிறது. இவ்விரண்டு தாயார்களது தரிசனம் விசேஹ பலன்களைத் தரக்கூடியது. பெருமாளுக்கு நேர் பின்புறத்தில் சிவன் மேற்கு பார்த்தபடி லிங்க வடிவில் இருக்கிறார். இவர் பிட்சாடனாராக கோஷ்டத்திலும், உற்சவராகவும் இருக்கிறார்.

   சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தனித்தனி சன்னதிகளில் அம்பாள்களுடன் காட்சி தருகின்றனர். ஒரே தலத்தில் மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்வது அபூர்வம். கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மூவருக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு ஒன்றாக உலா வருகின்றனர்.

  தைப்பூசத் திருவிழாவில் சிவனுக்கும், மாசி மகத்தில் பெருமாளுக்கும் கொள்ளிடத்தில் தீர்த்தவாரி விழா நடக்கிறது. சிவகுரு தெட்சிணாமூர்த்தி, விஹ்ணு குரு வரதராஜர், குரு பிரம்மா, சக்திகுரு சவுந்தர்ய பார்வதி, ஞானகுரு சுப்பிரமணியர், தேவகுரு வியாழன், அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆகிய ஏழு குரு சுவாமிகளும் குருவிற்குரிய இடங்களில் இருந்து அருளுகின்றனர். குருப்பெயர்ச்சியின்போது ஏழு குருக்களுக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடக்கிறது. எனவே இத்தலம் சப்தகுரு தலம் எனப்படுகிறது.

The post தாமரை மாலை சாத்தினால் ஆயுள் கூடும் சப்தகுரு தலம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


மாணவர்கள் கல்வியில் சிறக்க வேண்டுமா?

$
0
0

மாணவர்கள் கல்வியில் சிறக்க வேண்டுமா?

  ஆப்த நண்பனாக, சிறந்த பக்தியாளனாக. ஸ்ரீ ராமர், சீதை, லக்ஷ்மணரை என்றும் பணிந்து தன் இதயத்திலே தாங்கி உலாவரும் ஆஞ்சநேயருக்கு பல ஆலயங்கள் உண்டு. பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்கள் இப்போதுதான் சில உருவாகி வருகின்றன. அதில் விசேஷமான இந்த பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்ற கோவில்களை போல இல்லாமல் எல்ல முகமும் ஆஞ்சநேயர், வராஹர், நரசிம்மர், ஹயக்ரீவர், கருடர் எல்லாம் நேரே பார்த்தபடியே உள்ளது விசேஷம்.

நம் எல்லோருக்கும் தெரியும் ராம அவதாரம் முடிவுற்ற நிலையில் வைகுண்டத்திற்கு தன்னுடன் வருமாறு ஆஞ்சநேயரை ராமர் பணித்தார். ஆனால் அவரோ ஸ்ரீ ராம் ஸ்ரீ ராம் என்று ராம நாமம் பூலோகத்தில் தான் அதிகம் கேட்கிறது அதனால் இதுதான் தனக்கு வைகுண்டம் என்று கூறி பூலோகத்திலேயே தங்குவதற்கு அனுமதி கேட்க ஸ்ரீ ராமரும் அதற்கு அனுமதி கொடுத்து பூலோகத்தில் உள்ளவர்களின் பாவங்களை கலியுகம் முடியும் வரை களைந்துவிட்டு வர சொல்கிறார்.

ஐந்து முகங்களை கொண்ட பஞ்சமுகரின் பொறுப்புகள்

 

ஆஞ்சநேயர் : எங்கும் வ்யாபித்துக்கொண்டு ராமரின் அருள் கொண்டு வளம் வரும் இவர் நம்மை விபத்துக்களில் இருந்து காப்பாற்றுவார்.

வேதங்களை கடத்தி சென்ற  அரக்கனை கொன்று ப்ரம்மாவிடம் அந்த வேதங்களை திருப்பி கொடுத்து அருள் ஞானத்தை காப்பாற்றிய ஹயக்ரீவர்  ஞானத்தையும், புத்தியையும் கொடுப்பவர்.

ஹிரன்யகசுப்புவை வதம் செய்த நரசிம்மர் எதிரிகளையும், பேய் பிசாசு பயத்தையும் நீக்குபவர்

ஸ்ரீ வராஹர் ஹிரண்யாக்ஷனை வதம் செய்து பூமியையம் பூமாதேவியையும்  காப்பாற்றியவர் நமக்கு அணைத்து செல்வங்களும், அதிர்ஷ்டத்தையும் அளிப்பவர்

விஷ்ணு பகவானின் வாகனமாகிய ஸ்ரீ கருடர் நாம் தேவைகளை பூர்த்தி செய்து என்றும் அருள் ஆசி வழங்குபவர்

சென்னை தாம்பரம் செல்லும் வழியில் உள்ள கௌரிவாக்கம் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயம். பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயம் மேடவாக்கத்தில் இருந்து கிழக்கு தாம்பரம் செல்லும் வழியில் கௌரிவாக்கம் எனும் இடத்தில உள்ளது.

The post மாணவர்கள் கல்வியில் சிறக்க வேண்டுமா? appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

பாவங்களை போக்கி வளத்தை அளிக்கும் அபார ஏகாதசி

$
0
0

“இன்று அளவில்லா செல்வத்தை அளிக்கும் “அபரா ஏகாதசி” (20.06.2017)

பாவங்களை போக்கி வளத்தை அளிக்கும் அபார ஏகாதசி

 ஆனி (ஜேஷ்ட) மாதம் – கிருஷ்ண பட்சத்தில் (தேய்பிறையில்) வரும் ஏகாதசி திதியை அபரா ஏகாதசியாக ‌கொண்டாடுவர். அபரா ஏகாதசி விரத மகிமையை நாம் இப்போது காண்போம்.

 அர்ஜூனன் கிருஷ்ணரிடம் “பகவான்! ஆனி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் பெயர், அதன் மஹாத்மியம், அன்று ஆராதிக்க வேண்டிய தெய்வம் மற்றும் விரதம் அனுஷ்டிக்கும் விதிமுறை இவற்றை அறிய ஆவலாக இருக்கிறது. தாங்கள் கருணை கூர்ந்து இவற்றைப் பற்றி விவரமாக கூற வேண்டும்.” என்றான்.

 ஸ்ரீ கிருஷ்ணர் “பார்த்தா!. ஆனி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை அபரா ஏகாதசி என்று அழைப்பர். ஏனெனில் இவ்ஏகாதசி விரதம் அனைத்து பாவங்களையும் அழிப்பதுடன், அளவில்லா (அபரா) செல்வத்தையும் வழங்க வல்லதால், இதை அபரா ஏகாதசி என்று அழைப்பர். எவர் ஒருவர் இவ்ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்கிறாரோ, அவர் மக்களிடத்தில் பேரும், புகழும் பெறுவர். அபரா ஏகாதசி விரதத்தின் பிரபாவத்தால் பிரம்ம ஹத்தி தோஷம், பைசாசப் பிறவி, பிறரை நிந்திப்பது ஆகியவற்றால் விளையும் பாபங்கள் நீங்குகிறது. ஸ்திரீ கமனம், பொய் சாட்சி, பொய் பேசுதல், போலி சாஸ்திரங்களை உருவாக்குதல், ஜோதிட சாஸ்திரம் மூலம் பிறரை ஏமாற்றுதல், போலி வைத்தியனாக தொழில் செய்து மக்களை ஏமாற்றுதல் போன்ற பாப கர்மங்களினால் விளையும் பாபங்களும் இவ் அபரா ஏகாதசி விரதத்தின் மஹிமையால் நீங்கப் பெறுகிறது.

 க்ஷத்திரிய தர்மத்திற்கு விரோதமாக, போர் புரியாமல் யுத்த களத்திலிருந்து தப்பி ஓடும் க்ஷத்ரியர் நரகத்திற்கு செல்வர் என்பது நம்பிக்கை. அபரா ஏகாதசி விரதத்தின் புண்ணிய பிரபாவம், அத்தகைய க்ஷத்திரியர்களுக்கு நரகத்திலிருந்து விடுதலையும், ஸ்வர்க்கப் பிராப்தியையும் அளிக்கும் சக்தி பெற்றது.

 குருவிடமிருந்து கல்வி கற்றபின், குருவை நிந்தப்பவர் நிச்சயம் நரகத்தை அடைவார் என்பது நம்பிக்கை. அபரா ஏகாதசி விரதம், அத்தகைய குரு நிந்தனை செய்த பாபம் நீக்குவதுடன், ஸ்வர்க்கப் பிராப்தியையும் அளிக்கும் சக்தி பெற்றது. மூன்று புஷ்கரங்களிலும் நீராடுதல், கார்த்திகை மாதத்தில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல், கங்கை நதி தீரத்தில் பித்ருக்களுக்கு பிண்டதானம் செய்தல் இவற்றால் கிடைக்கப் பெறும் புண்ணியத்தை, அபரா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக அனுஷ்டிப்பதன் மூலம் ஒருவர் பெறலாம்.

 குரு பகவான் கோட்சாரத்தில் சிம்ம ராசியில் இருக்கும் காலத்தில் கோமதி நதியில் நீராடுதல், கும்ப ராசியில் இருக்கும் காலத்தில் ஸ்ரீ கேதார்நாத் பகவானை தரிசித்தல் மற்றும் பத்ரிகா ஆஸ்ரமத்தில் தங்குதல், மற்றும் சூரிய, சந்திர கிரகண காலத்தில் குருக்ஷேத்திரத்தில் புண்ணிய நீராடுதல் இவற்றால் கிட்டப் பெறும் புண்ணிய பலனுக்கு நிகரான புண்ணியத்தை அபரா ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதன் மூலம் ஒருவர் பெறுவர்.

 கஜ(யானை) தானம், அஸ்வம்(குதிரை) தானம், யக்ஞத்தில் ஸ்வர்ண தானம் இவற்றால் கிட்டும் புண்ணியபலனுக்கு இணையான புண்ணிய பலனை அபரா ஏகாதசி விரதத்தின் மூலம் ஒருவர் பெறுவர். கோ(பசு), பூமி, ஸ்வர்ண இவைகளின் தானத்தால் கிடைக்கப்பெறும் புண்ணிய பலனானது, அபரா ஏகாதசி விரத புண்ணிய பலனுக்கு இணையானதாகும். இவ்விரதமானது பாப விருட்சத்தை அழிக்கும் கோடரி போன்றதாகும். பாபவினைகள் சூழந்து இருண்டிருக்கும் உலகத்திற்கு இருட்டை விலக்கி ஒளியை வழங்கும் சூரியனைப் போன்றதாகும்.

 அபரா ஏகாதசி விரதம் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்களில் அவசியமான ஒன்றாகும். இவ்விரதம் மற்ற விரதங்களை விட சிரேஷ்டமானதும், உத்தமமானதும் ஆகும். அபரா ஏகாதசி நாளன்று, பக்தி பூர்வத்துடன் பகவான் மஹாவிஷ்ணுவை ஆராதிக்க வேண்டும். அதனால் இறுதியில் விஷ்ணுலோகப் பிராப்தியை மக்கள் பெறுவர்.

 “ஹே ராஜன்!, அபரா ஏகாதசி விரத மஹாத்மிய கதையை இவ்வுலக நன்மைக்காக அருளியுள்ளேன். இதை படிப்பதாலும், கேட்பதாலும் அனைத்து பாபங்களும் நீங்கி புது வாழ்வு பெறுவர்.”

 கதாசாரம்: அபரா என்றால் அபாரமான அதாவது அபரிமிதம் என்று அர்த்தம். எவர் ஒருவர் அபரா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக அனுஷ்டிக்கிறாரோ, அவர் பகவான் மஹாவிஷ்ணுவின் அபரிமித கருணைக்கு பாத்திரமாவர். பக்தி மற்றும் சிரத்தையில் வளர்ச்சியையும் காண்பர். பிரம்மாண்ட புராணத்தில் பகவான் கிருஷ்ணர் தருமருக்கு இத்தனை பலன்களையும் எடுத்துரைத்தார். அத்தகைய மகிமை வாய்ந்த அபரா ஏகாதசியை நாம் அனுசரித்து விஷ்ணுவின் திருவடி சேர்வதே நம் வாழ்வின் பலன்

 ” ஓம் நமோ பகவதே வாசுதேவாய”

“ஸ்ரீ கோவிந்தன் திருவடிகளே சரணம்”

The post பாவங்களை போக்கி வளத்தை அளிக்கும் அபார ஏகாதசி appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

தன்வந்திரி பீடத்தில் சங்கடம் அறுக்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் யாகம்

$
0
0

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்

சங்கடம் அறுக்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் யாகம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற ஜீலை மாதம் 2 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நவமி அன்று காலை 10.00 மணியளவில் ஸ்ரீசுதர்சனர் ஜெயந்தியை முன்னிட்டு மாபெரும் சுதர்சன ஹோமம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

சுதர்ஸன ஹோமம் எதற்கெல்லாம் பண்ணலாம்?

 ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம் பொதுவாக எல்லாவித நிவாரணங்களுக்கும் பண்ணலாம். ஒவ்வொரு தேவதைக்கும் ஒவ்வொரு ஆயுதம் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் சக்ராயுதமான ஸ்ரீமஹா சுதர்ஸனர் ஸ்ரீசக்ரத்தாழ்வார் என்றும் அழைக்கப்படுவார் அதாவது ஒருவிதமான பிரச்சினையை மட்டும் தீர்க்கும் சக்தி என்றால் ஸ்ரீ சுதர்ஸனருக்கு 16 ஆயுதங்கள் உண்டு. இந்த 16 ஆயுதங்களால் நாம் வாழ்வில் பெறவேண்டிய 16 விதமான செல்வங்களையும் பெருவதற்குத் தடையாக உள்ள அத்தனை தீய சக்திகளையும் அழித்து நம்மை பதினாரும் பெற்றுப் பெருவாழ்வு வாழவைக்கிறார் மேற்படி ஸ்ரீசக்ரமே பக்தர்களைக் காப்பாற்ற எப்போதும் துணை நிற்கிறது என்பது புராணம்.

 இப்படிப்பட்ட ஸ்ரீமஹா சுதர்ஸன ஹோமத்தின் பலனை முழுமையாகப் பெறலாம், ஸ்ரீசுதர்ஸன ஹோமத்திற்கு நாள் தேர்ந்தெடுக்க ஜன்ம நக்ஷத்திர தினம், அல்லது எந்த மாதத்திலும் சித்திரை, ஸ்வாதி அல்லது திருவோண நக்ஷத்திரம் உள்ள நாள், அல்லது பொதுவான முஹுர்த்த நாள் அல்லது குடும்ப உறுப்பினர் யாருடையதாயினும் பிறந்த நாள் அல்லது திருமண நாள் அல்லது ஏதாவது ஒரு சனிக்கிழமை என்று எந்த தினத்தில் வேண்டுமானாலும் ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமத்தை அநுஷ்டிக்கலாம். சுத்தமாகவும் பக்தி ச்ரத்தையுடனும் பரம விஸ்வாசத்துடனும் நம்பிக்கையுடனும் செய்யப்படும் ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமத்தினால் மட்டுமே நல்ல பலன்களை எதிர்பார்க்கமுடியும்

 ஸ்ரீசுதர்சன ஹோமம் பல நற்பலன்களைக் கொடுக்க வல்லது. தீர்க்கஆயுசு பெறவும் பூரண ஆயுள் கிடைக்கவும், நினைத்தது நிறைவேறவும் அஷ்ட ஐஸ்வர்யம் பெறவும், புத்தியில் தெளிவு கிடைக்கவும், ஆபத்துக்கள் வராமல் தடுக்கவும், பசுவிருத்தி ஏற்படவும் வீட்டில் உள்ள பசு அதிகம் பால்சுரக்கவும், பசுவை எந்த நோயும் அண்டாது இருக்கவும், சுகப்பிரசவம் ஆகவும், சுபிட்சங்கள்பெறவும், பசுவிருத்தியாகவும், எதிரிகள்தொல்லை நீங்கவும், மன நலம் குணமாகவும், புத்தி பேதலித்தவர்கள் நலம் பெறவும், விரைவில் மனோபலம் பெறவும், தீராத நோய்கள் தீரவும், கேன்சர், சர்க்கரை வியாதி போன்ற கண்ணுக்குத் தெரியாத நோய்கள் நீங்கவும் கோபம் தனியவும், குருவை அவமதித்த பாவம், சாதுக்களைத் திட்டிய சாபம், பெரியவர்களை மதிக்காமல் போன பாவம் நீங்குவதற்கும் இந்த ஹோமத்தின் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ளலாம் மேலும் காம, க்ரோத, வக்ர சிந்தனைகள் தமக்கும் ஏற்படாமல் காத்து, பிறருக்கும் ஏற்பட்டுவிடக்கூடிய சூழ்நிலையைத் தவிர்த்து காக்கவேண்டும்.என்றும் பிரார்த்தனை செய்யலாம் சொற்களால் விவரிக்க முடியாத சில நல்ல அநுபவங்கள் சுதர்சன ஹோமம் பண்ணுவதால் உண்டாகிறது.

 இந்த யாகத்தில் வெண்கடுகு, எள், கடுகு, தாமரைப்பூ, வில்வ இலை, பால் பாயசம், அருகம்புல், சர்க்கரை பொங்கல், தயிர், நாயுருவி, ஆலமரசமித்து, நெய், பஞ்சகவியம், கருநொச்சி, இருமுள், நீல ஊமத்தபூ, வெள்ளை புலாச்சு, குக்கிலு, சம்மதபூ, வெண்பட்டு போன்ற பொருட்கள் சேர்க்கப்பட உள்ளது. மேலும் சுதர்சன பெருமாளுக்க 16 விதமான அபிஷேக திரவியங்களை கொண்டு மகா அபிஷேகமும் விஷேச அர்ச்சனையும் தன்வந்திரி பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு,

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்,

கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,

வாலாஜாபேட்டை.632513

PH: 04172-230033/230274

09443330203, 8124516666

The post தன்வந்திரி பீடத்தில் சங்கடம் அறுக்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் யாகம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

1008 சங்கு அபிஷேக மற்றும் கலச அபிஷேக திருவிழா

$
0
0

கால பைரவமே சுவாசம்
மாபெரும் 1008 சங்கு அபிஷேக மற்றும் கலச அபிஷேக திருவிழா

பைரவ ஸ்வாசங்களே!

நமது ஆலயத்தில் வருகின்ற ஜூன் மாதம் 24 ஆம் தேதி 2017 ஆம் வருடம் ஹெவிளம்பி ஆண்டு ஆணி மாதம் 10 ஆம் நாள் சனிக்கிழமை திருவாதிரை நட்ஷத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக தினத்தில் சிவா ஸ்ரீ பைரவ சித்தாந்தம் ஸ்வாமிகள் நல்லாசியுடன் ஸ்ரீ மகா க்ஷேத்ர பால பைரவருக்கு அலங்காரம் மற்றும் ஹோமத்துடன் கூடிய 1008 சங்காபிஷேகமானது. வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது. பக்தர்கள் அனைவரும் சங்காபிஷேக விழாவில் கலந்து கொண்டு பைரவரின் பேரருளை பெற்றுய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்ச்சி நிரல்

24 .06 .2017 சனிக்கிழமை (ஆணி 10)

காலை 06.30  மணிக்கு

நித்தய அபிஷேகம்

காலை 09.00  மணிக்கு

ஜடாமுடி தோற்றம் கூடிய சிவ அலங்காரத்துடன், பைரவருக்கு மகா தீபாராதனை.

மதியம் 12.00  மணிக்கு

உற்ச்சவருக்கு உச்சி கால அபிஷேகம்.

மதியம் 01.00  மணிக்கு

அன்னதானம்

மாலை 03.00  மணிக்கு

மகா சங்கல்பம்

மாலை 04.00  மணிக்கு

கலச பூஜை  சங்கு பூஜை  மற்றும் அபிஷேகம்

மாலை 06.00  மணிக்கு

ஸ்ரீ மகா க்ஷேத்ர பால பைரவருக்கு 1008 சங்காபிஷேகம்

மாலை 07.00  மணிக்கு

அலங்காரத்துடன் கூடிய மகா தீபாராதனை

மாலை 07.30  மணிக்கு

பிரசாதம்  வழங்குதல்

 

தொடர்புக்கு:

ஸ்ரீ மகா பைரவர் வீடு
(ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம்)
ஸ்ரீ பைரவர் நகர்,

திருவடிசூலம்சலை ,

ஈச்சங்கருணை,

செங்கல்பட்டு

The post 1008 சங்கு அபிஷேக மற்றும் கலச அபிஷேக திருவிழா appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

ஓசை கொடுத்த நாயகி த்வனிப்ரதாம்பாள் !!!

$
0
0

ஓசை கொடுத்த நாயகி த்வனிப்ரதாம்பாள் !!!

“தோடுடைய செவியன்.. என் உள்ளம் கவர் கள்வன்’ என்று ஞானசம்பந்தர் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய திருத்தலம் சீர்காழி! இத்தலத்திற்கு மேற்கே 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது “திருக்கோலக்கா’ என்னும் அற்புத திருத்தலம். திருத்தாளமுடையார் கோயில், தாளபுரீசுவர சுவாமி திருக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. அம்பாள் திருநாமம் “த்வனிப்ரதாம்பாள்’ என்பதாகும்.

தலவரலாறு:

 இறைவன்- இறைவி அருளால் ஞானப்பால் உண்ட ஞானசம்பந்தர் பெருமான் திருத்தல யாத்திரையை துவங்கினார். கொன்றை வனமாகிய திருக்கோலக்காவை அடைந்து தாளபுரீசுவரையும் த்வனிப்ரதாம்பாள் என்ற ஓசை கொடுத்த நாயகியையும் போற்றி, “”மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கை கோலக்காவுளான்” எனத்துவங்கும் திருப்பதிகத்தைப் பாடி அருளினார்.

 “கைகளால் தாளமிட்டு’ பாடி அருளியதால் ஞானக்குழந்தையின் தளிர்கரங்கள் சிவந்தன. இறைவன் மனமிரங்கி திருஞானசம்பந்தருக்கு பொன்னால் ஆகிய தாளங்களை அளித்தார். ஆனால் அதிலிருந்து ஓசை வரவில்லை. உடனே, அம்மை தனது அளவற்ற கருணையால் பாடலுக்கு ஏற்றவாறு தாளங்களிலிருந்து இசை ஒலி வருவதற்கு ஓசை கொடுத்தருளினார். இதனால் அம்பாள், “ஓசை கொடுத்த நாயகி’ எனச் சிறப்பாகப் போற்றப்படுகிறார்.

 இத்தலத்து இறைவன் இறைவியைப் போற்றி “ஸ்ரீ தாளபுரீஸ்வரர் பஞ்சரத்னம்’, “ஸ்ரீ த்வனிப்ரதாம்பாள் பஞ்ச ரத்னம்’ என்ற போற்றி பாடல்கள் இயற்றப்பட்டு கல்வெட்டுகளாக பதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புராண வரலாறு:

  திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது சிவபெருமான் சரபமூர்த்தியாக அவதாரம் எடுத்து அவரை அடக்கியதாக புராண வரலாறு கூறுகிறது. மகாலட்சுமி தனது கணவனான திருமாலை அடைய கொன்றை வனமாகிய இத்தலத்தில் தவமிருந்தார். சிவபெருமான் மகிழ்ந்து அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்தருளினார் எனவும் எனவே, இத்தலம் “திருக்கோலக்கா’ என அழைக்கப்படுவதாக புராணவரலாறு தெரிவிக்கிறது. இத்திருத்தலத்தில் சூரியபகவான் தவமிருந்து நவக்கிரகங்களுக்கு தலைமை பொறுப்பினை ஏற்றதாகவும் தலவரலாறு கூறுகிறது. கோயிலுக்கு எதிரில் உள்ள தீர்த்தம் “சூரிய தீர்த்தம்’ எனப்படுகிறது.

திருக்கோயில் அமைப்பு:

 காவிரி வடகரைத் தலங்களில் 17 ஆவது திருத்தலம். கிழக்கு நோக்கிய திருக்கோயில்; ஒரு திருச்சுற்று! திருச்சுற்றில் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்ரமணியர், மகாலட்சுமி, சனிபகவான், பைரவர், சண்டிகேசுவரர், சூரியன் சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறை தேவக்கோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை திருமேனிகளை கண்டு வழிபடலாம். திருக்கோயில் கட்டடக்கலை அமைப்பில் நகரத்தார் திருப்பணியைக் கண்டு மகிழலாம்.

  கருவறையில் இறைவன் லிங்கத்திருமேனியாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இறைவன் சந்நிதியை அடுத்து தனியே கிழக்கு நோக்கி அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. அம்பாள் கருணைபொங்கும் முக அழகுடன் அபய கரம் தாங்கி காதுகளில் அழகிய ஸ்ரீ சக்ர தாடகங்களுடன் காட்சி தருவதைக் காணலாம். திருஞானசம்பந்தர் தம் திருப்பதிகத்தில் இத்தலத்தை வழிபடுபவர்களுக்கு ஏற்றமிகு வாழ்வு, பாவம் விடுபடுதல், வாழ்வில் துயரமில்லா நிலை மற்றும் வினைகளும் நீங்கும் என்று தலவரலாறு கூறுகிறது.

தலச்சிறப்பு:

 பேசும் குறையுள்ளவர்களும் செவி கேட்கும் திறன் இல்லாதவர்களும் கல்வி தேர்ச்சி பெறவும் இத்திருக்கோயிலுக்கு வந்து இறைவன் இறைவியை வழிபட்டு வாழ்வில் சிறப்படைகின்றனர்.

திருப்பணி:

 சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாலயத் திருப்பணிகளில் பக்தர்கள் பங்கு கொண்டு நலம் பெறலாம்.

The post ஓசை கொடுத்த நாயகி த்வனிப்ரதாம்பாள் !!! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

Viewing all 15459 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>