Quantcast
Channel: SwasthikTv
Viewing all 15459 articles
Browse latest View live

வேண்டிய வரமளிக்கும் ஸ்ரீசமயபுரம் மாரியம்மன்

$
0
0

ஸ்ரீசமயபுரம் மாரியம்மன்:-

சமயபுரம் மாரியம்மன் கோயிலின் முகப்பு வாயில் தமிழ் நாட்டில் உள்ள மாரியம்மன் திருத்தலங்களில் தலையாயது சமயபுரம் மாரியம்மன் கோயில். இது, தமிழ் நாட்டின் முக்கிய நகரமும், முற்கால சோழ வளநாட்டின் தலைநகரமும் ஆன, திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சமயபுரத்து மாரியம்மன், இங்கு, மக்களின் குறைகளை போக்கி வேண்டியவருக்கு வேண்டிய வரமளிக்கும், மகாசக்தியாக, ஆயி மகமாயி, அன்னை பராசக்தியாக கோயில் கொண்டிருக்கிறாள்.

சமயபுரம் வரலாறு

சமயபுரம் மாரியம்மன் கோயிலின் முகப்புத் தோற்றம்தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர். இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகும். பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அந்த கோட்டையும் நகரமும் அழிந்து வேம்புக்காடாக மாறியது.

சமயபுரம் மாரியம்மனின் வரலாறு

        சமயபுரம் மாரியம்மன் (சித்திரம்)

மேலே குறிப்பிட்ட கால கட்டத்தில் வைணவி என்ற மாரியம்மன் விக்கிரகம் ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், ஸ்ரீரங்கத்தில் இருந்த ஐயர் சுவாமிகள், வைணவியை ஸ்ரீரங்கத்தில் இருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். அவரின் ஆணையின்படி, வைணவியின் விக்கிரகத்தை ஆட்கள் அப்புறப்படுத்துவதற்காக வடக்கு நோக்கி சென்று சற்று தூரத்தில் இளைப்பாறினார்கள். (அது தற்போதுள்ள இனாம் சமயபுரம்).

பிறகு அம்பாளின் விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். (தற்போதுள்ள மாரியம்மன் கோவில் இருப்பிடம்).

அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அம்பாளின் விக்கிரகத்தை பார்த்து அதிசயப்பட்டார்கள். பின், அக்கம் பக்கத்தில் இருந்த கிராமத்து மக்களைக் கூட்டிவந்து அம்பாளை வழிபட்டு அம்பாளுக்கு ‘கண்ணனூர் மாரியம்மன்’ என்று பெயரிட்டு வழிபட்டனர்.

விஜயநகர மன்னர்கள்

இக்காலத்தில் விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வரும்போது கண்ணனூரில் முகாமிட்டார்கள். அப்போது அரண்மனை மேட்டிலிருந்த கண்ணனூர் மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோவில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்கள். அதன்படியே அவர்கள் வெற்றியும் கண்டார்கள். அம்மனுக்கு கோவிலையும் கட்டினார்கள்.

விஜயரெங்க சொக்கநாதர் காலத்தில் கி.பி. 1706-ல் அம்மனுக்கு தனிக்கோவில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோவில் இன்று, ‘சமயபுரம் மாரியம்மன்’ கோவிலாக மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

அம்மனின் அழகும் அருளும்

மக்களை இரட்சித்து, வேண்டிய வரங்களைக் கொடுத்து, காத்துவரும் அம்மனின் அழகு தெய்வீகமானது. அம்மன் எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக் கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அழகைக் காண கண் கோடி வேண்டும். அந்த அழகைக் கண்டால் மனம் உருகும், மனம் ஒருமைப்படும், மனத்திலுள்ள மாசும் அகலும். தாயைத்தேடி அலைந்தவர்க்கு, கருணையே வடிவாக அமர்ந்திருக்கும் தாய், ஆயி மகாமாயி காட்சி தருவாள்.

ஆடி வெள்ளி

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளித் திருவிழா நடைபெருகிறது. இதில் இலட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். ஆடி மாதத்தில் எல்ல வெள்ளிக் கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். திருச்சியில் உள்ள அத்தனை பெண்களும் அன்னையை தரிசிக்க கட்டாயமாகச் செல்வர். அதுவும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை மிகச்சிறப்பாக கொண்டாடுவர்.

பூச்சொரிதல் விழா

அன்னையை காண தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் வந்து கொண்டே இருக்கிறது. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும்.

விழாக்காலங்களில் சொல்ல முடியாத அளவு கூட்டம் வரும். சித்திரைத் தேர்த்திருவிழாவன்று கூட்டம் அலைமோதும். இலட்ச கணக்கில் மக்கள் வருவர். எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமே.

ஆயிரம் கண்ணுடையாளை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து அவளை மனம் குளிர தரிசித்து அவளின் ஆசீர்வாதத்துடன் செல்கின்றனர்.

மாரியம்மனுக்கு நாடெங்கும் பக்தர்கள் உண்டு. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.

சமயபுரத்தின் மற்ற பெயர்கள்

சமயபரம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ள பகுதிக்கு கீழ் காணும் பெயர்களும் உண்டு.

கண்ணனூர்

கண்ணபுரம்

விக்ரமபுரம்

மாகாளிபுரம்

சமயபுரத்தில் உள்ள மற்ற கோவில்கள்

வடக்கே — செல்லாயி அம்மன் கோவில், போஜீஸ்வரன் கோவில்

கிழக்கே — உஜ்ஜயினி மாகாளி கோவில், முத்தீஸ்வரன் கோவில்

தீர்த்தம் — பெருவளை வாய்க்கால்

தீர்த்தம் — மேற்கே உள்ள மாரி தீர்த்தம் ( தெப்பக்குளம் )

ஸ்தல விருட்சம் — வேப்ப மரம்

The post வேண்டிய வரமளிக்கும் ஸ்ரீசமயபுரம் மாரியம்மன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


சித்தரால் வழங்கும் பிரசாதம்! கிடைப்பது மிக புண்ணியம்!

$
0
0

சித்தரால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற பிரசாதம்! கிடைப்பது மிக புண்ணியம்!

பழநி மலை முருகரின் அதிசய தகவல்கள்…

  1. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.
  1. ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்து விடும்.
  1. அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.
  1. இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது.
  1. விக்ரகத்தின் புருவங்களுக்கு இடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.
  1. தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.
  1. தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம்.
  1. அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.
  1. இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக் கொண்ட நாட்கள் – ஒன்பது வருடம்.
  1. அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார். இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக இன்னொரு துணுக்குத் தகவல் உண்டு.
  1. அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று ஒரு புராண தகவல் உண்டு.
  1. போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.
  1. கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை தான் என்பது பலரின் எண்ணம்.
  1. தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது.
  1. பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு துணுக்குத் தகவல் உண்டு.

The post சித்தரால் வழங்கும் பிரசாதம்! கிடைப்பது மிக புண்ணியம்! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் புதுவாழ்வுதரும் புனர்விவாஹ ஹோமம்

$
0
0

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் புதுவாழ்வுதரும் புனர்விவாஹ ஹோமம்

(ஆண், பெண், சுபமான மறு திருமணத்திற்கு ஒரு சிறப்பு ஹோமம்)

நாள்: 26.06.2017 திங்கட் கிழமை காலை 10.00 மணியளவில்

கலியுகத்தில் இன்றைக்குப் பல குடும்பங்களில் இருக்கிற பிரச்சனையே ஒற்றுமையான தாம்பத்தியம் இல்லாததும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாததும் தான். திருமணமான ஒரு சில மாதங்களிலேயே விவாகரத்து விவகாரம், கோர்ட்,வரை போய் விடுகிறது. ஒரு சிலருக்கு வழக்குகளை சந்திப்பதற்குள் வயதாகிவிடுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது, ஏன் ஏற்படுகிறது, எதனால் இந்த கஷ்டம் பெற்றோர்கள் சொல்லும் ஒரு வார்த்தை என் மகன், என் மகள் ஜாதகத்தில் எந்த தோஷமும் இல்லை என்று இரண்டு மூன்று ஜோதிடர்களிடம் ஆலோசனைப் பெற்றதில் நல்ல அருமையான பொருத்தம் என்றுதானே சொன்னார்கள். குலதெய்வம், இஷ்ட தெய்வம் பெரியோர்களின் ஆசியுடன் தான் எங்கள் குழந்தைக்கு திருமணம் செய்து வைத்தோம். 4,5,7,8, என்ற தேதிகளில் திருமணம் செய்யக்கூடாது என்று ஒருசிலர் கூறியதின் பேரில் அந்த தேதிகள் இல்லாமல் தான் திருமணம் செய்து வைத்தோம். ஒரு சிலர் பையன் நல்ல பையன் மாதிரி தெரிகிறான். ஒரு சிலர் பெண் மகாலட்சுமி போல் உள்ளாள். இருவருக்கும் நல்ல பொருத்தம் என்றெல்லாம் கூறி ஆசீர்வதித்து சென்றார்களே, ஆனால் அவை அனைத்தும் கேள்விக் குறியாகி விட்டதே. இது ஏன் என்று என்னிடம் நேரில் வந்து அவர்கள் சொல்லும் பொழுது மிகவும் வேதனை அடைந்தேன்.

சென்ற தலைமுறையில் கணவனுக்கும் மனைவிக்கும் ஒரு கருத்து வேறுபாடு சிறிய மனஸ்தாபம் என்றால் அது திருமணமாகி இருபது முப்பது வருடங்களுக்குப் பின் லேசாக எட்டிப் பார்க்கும். ஆனால் இன்றைய தலைமுறையில் கேட்கவே வேண்டாம், பிரசவத்திற்காக டாக்டர் மனைவியை அவர் வீட்டில் கொண்டு விட்டார். ஒரு இன்ஜினியர் மாப்பிள்ளை ஆனால் குழந்தை பிறந்த பின் மனைவியை அழைத்துப் போக வரவே இல்லை, காரணம் என்ன என்று இன்றுவரை மனைவி குடும்பத்துக்குப் புரியவில்லை. தன் தாய் வீட்டிற்கு சென்ற மனைவி தன்வீட்டிற்கு வரவில்லை, ஏன் என்ற காரணம் புரியவில்லை, என்று கூறும் கணவரும் இருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் என்ன என்று பார்க்கும் பொழுது தாம்பத்தியத்தில் திருப்தி இல்லாமை, முளைவிடும் சந்தேக புத்தி, கற்பில் நேர்மையின்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமை, தேவையற்ற காம இச்சைகள், தீய நண்பர்கள், தீய பழக்கவழக்கங்கள், பெற்றோர்களின் பேச்சிற்கு மதிப்பு கொடுக்காமை, ஒருசில பெற்றோர்களின் சுயநலம், இப்படி பல அம்சங்கள், விவாகரத்துக்கு காரணம் ஆகின்றன. சில நேரங்களில் மறுவிவாகம் என்று ஆகி அதுவும் விவாகரத்து ஆகி விடுவது உச்சகட்ட சோகம், இப்படி இரண்டாவது திருமணமும் விவாகரத்தாகி மூன்றாவது திருமணத்திற்க்கு வரன் தேடும் குழப்பங்களைப் பார்த்தால் பாவமாகத் தான் இருக்கிறது.

போதிய பக்குவமும் சரியான வழிகாட்டுதல், உணவு பழக்க வழக்கமும் ஆன்மீக பலமும் இல்லாமல் தவிப்பவர்களின் மறுமணம் கேள்விக்குறி ஆகிறது. மறுமணம் என்பது பெண்களின் பாதுகாப்பு கருதியும் குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிட்டும் சிலரைப் பொறுத்தவரை காலத்தின் கட்டாயம் ஆகிறது. என்றாலும் அதாவது நல்லவிதமாக நடந்து அந்தத் திருமண வாழ்க்கை ருசிக்கிற வகையில் அமைய வேண்டும்.

எனவே வில்லங்கம் இல்லாத, சிக்கல், இல்லாத, மனநிம்மதி தருகின்ற மறுமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண், பெண்களுக்கு பெற்றோர்களின் பூரண ஒத்துழைப்புடன் ஸ்ரீ தன்வந்திரி மற்றும் ஆரோக்ய லஷ்மியினுடைய பரிபூரண அருளுடன் உடல் நோய் மனநோய் நீங்கி ஆரோக்யமான மண வாழ்க்கை அமைய ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 26.06.2017 திங்கட் கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை அரசு விடுமுறை தினத்தை முன்னிட்டு வாலாஜா தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சிறப்பு ஹோமம் நடைபெற இருக்கிறது.

வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாமல் மறுமணம் தேவைப்படும் ஆண்களும், பெண்களும், இந்த ஹோமத்தில் பக்தி உணர்வுடன் கலந்து கொண்டு பலன் பெற்று வாழ்க்கையில் பிறரைப் போல் தலை நிமிர்ந்து வாழ பிரார்த்தனை செய்யும் விதத்தில் மனித நேயத்துடன் நடைபெறும் இந்த மஹா ஹோமத்தில் 23.06.2017க்குள் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வரும் காலங்களில் நடைபெறவிருக்கும் சிறப்பு யாகங்கள்!!!

02.09.2017, சனிக்கிழமை 3.09.2017, ஞாயிற்றுக்கிழமை இரு தினங்கள் சிறப்பு இலட்சார்ச்சனையுடன் குருவருள் சேர்க்கும் குருப் பெயர்ச்சி மகா யாகம் !

19.12.2017-அன்று காலை சனிப்பெயர்ச்சி மஹா யாகம்!

27.07.2017 வியாழன் அன்று மதியம் 12.30 மணியளவில் ராகு – கேது பெயர்ச்சி யாகம்!

மேலும் விபரங்களுக்கு,

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுரா,

வாலாஜாபேட்டை – 632513.

வேலூர் மாவட்டம்.

Ph : 04172-230033 / 230274

Cell : 9443330203

Web: www.danvantritemple.org

eMail : danvantripeedam@gmail.com

The post ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் புதுவாழ்வுதரும் புனர்விவாஹ ஹோமம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

Experiences with Maha Periyava: Beyond boundaries…

$
0
0

Experiences with Maha Periyava: Beyond boundaries

Many years back about (12 to 13), a Muslim gentleman walked into clinic. Seeing Sri Maha Periyava’s photo, he bowed in reverence and mentioned that Sri Maha Periyava is a great sage. I was surprised and asked him how he knew about Sri Maha Periyava. The Muslim gentleman shared his experience which I shall present in the first person account as narrated to me.

“Sir, I was a linesman in electricity board about 30 years back… We, in a group of 5 or 6, went to the Kanchi Matham to attend to a fault. Sri Maha Periyava who was seated there, gestured me to come and queried whether I prayed 5 times a day. I was shocked as to how Sri Maha Periyava could make out my religion. Sir that was only the beginning of my surprise. Then Sri Maha Periyava quoted from the Holy Quran extensively. We are Tamils who read the Quran. So the Arabic that we read will have a Tamil tint.

However, Sri Maha Periyava recited the Quran just as an Arab would speak his native tongue. His purity of diction was truly amazing, Sir If I had thought that this was great, then more was to come, he said.

Sri Maha Periyava then quoted a particular point and asked me how many times had the Quran mandated daily prayer?

I replied 5 times as any devout Muslim would. Sri Maha Periyava then asked me to get it clarified by the local Kazi. I did so and reported back to Maha Periyava, the same news. Maha Periyava then told me to get in touch with the Chief Kazi at Madras and get back to Him. The Chief Kazi not only said the same thing but chided me of asking useless questions. I reported the same to Sri Maha Periyava.

It was then that a great feat happened. Sri Maha Periyava asked for the Quran book to be brought and effortlessly showed and quoted from the Arabic that, actually mandated daily prayer was 6 times. However since the 6th time falls at 11.30 pm many people skip it. He told me that if I prayed for the 6th time also I would really benefit. Sir, true to His word, I retired as an executive engineer of EB.

Then when I had gone to Kamakshi temple for official work few times, Sri Maha Periyava would recognize me, bless me and Enquire the Number of Times I Pray!!! Just look at the Encyclopediac Knowledge of Sri Maha Periyava the Omnipotent, Omnipresent God Who Walked. I was really blessed to have listened first hand to such a great experience.

Sri Maha Periyava has blessed countless souls irrespective of their religion.

Compiled by Jagadguru Sri Maha Periyava – Kanchi Paramacharya

Hara Hara Shankara

Jaya Jaya Shankara

The post Experiences with Maha Periyava: Beyond boundaries… appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

Daily Raasi Palan 14-06-2017 by Astrologer Munaivar – Panchanathan

$
0
0

Daily Raasi Palan 14-06-2017 by  Panchanathan

What are the names of the twelve zodiac?

  • Capricorn
  • Aquarius
  • Pisces
  • Aries
  • Taurus
  • Gemini
  • Cancer
  • Leo
  • Virgo
  • Libra
  • Scorpio
  • Ophiuchus
  • Sagittarius

What is the name of the governor of the zodiac?

Aries – Mars Taurus – Venus Gemini – Wednesday Cancer – the Moon LEO – The Sun Virgin – Wednesday Libra – Venus Scorpio – Mars Sagittarius – Guru Capricorn – Saturn Aquarius – Saturn Pisces – Guru

What lakkinam?

  By the time a child is born, the baby, the baby’s birth in the sky that no raciyaip facing janittirukkirato lakkinam example. Month on month (That is on April 14th) from 6 am to 8 pm mashup lakkinamavani month (August 17th or 18th) morning at the rising of Leo lakkinam. Subsequent to the order that changes every two hours subsequent lakkinam.

What is the method of keeping lakkinattai ovvoruvittaiyum think?

Friend of the first home of the zodiac. In addition to round the clock

Each zodiac 2,3,4,5,6,7,8,9,10,11 comes, comes the order to 12.

What is the moon? It is based on what?

Zodiac horoscope will be a moon, the moon is based on enappatumatu jatakan newborn stars.

What used lakkinam? What is the moon?

Natal horoscope (Birth Chart) vehicle

Koccaram (the essence of the planet – Transit of planets) What?

Another sign of the zodiac every planet spinning in space amaruvate kolcaram called displacement.

Dasa / What is mind? What is its purpose?

What planet and its star is born jatakan tacatan jatakan early Dasa ruler, it will be changing in the wake of each Dasa Dasa Period 120

Years. Tacavaiyum portions to each other planets. Hopefully it that name (Sub period). Dasa ovvorukirakamum in its own good or bad results, give or puttiyiltan

Dasa understandings begin with what?

Star of the birth of the prince of a jatakar tacaitan boot muscle.

Dasa understandings of the duration, and in what order?

Solar muscle – 6 years Lunar Muscle – 10 years Tuesday muscle – 7 years Rahu Muscle – 18 years Guru Muscle – 16 years Saturday muscle – 19 years Muscle Wednesday – 17 years Ketu muscle – 7 years Venus Muscle – 20 years

 

The post Daily Raasi Palan 14-06-2017 by Astrologer Munaivar – Panchanathan appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்கள் குணம் அறியவேண்டுமா?

$
0
0

பிறந்த நட்சத்திரத்தின்அடிப்படையில் உங்களது பொது குணம்

1.அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான்,கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர்.

2.பரணி: நன்றிமிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர்.

3.கார்த்திகை: பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதிஅதிகம், பழகுவதில் பண்பாளர்.

4.ரோகிணி: கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர்.

5.மிருகசீரிடம்: தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம்.

6.திருவாதிரை: எளிமை, சாமர்த்தியசாலி,திட்டமிட்டுப்பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர்.

7.புனர்பூசம்: கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம்.

8.பூசம்: பிறரை மதிப்பவர், பக்தியில் நாட்டம், வைராக்கியம் மிக்கவர், நண்பர்களை நேசிப்பவர், புகழ்மிக்கவர், மென்மையானவர்.

9.ஆயில்யம்: செல்வந்தர், தர்மவான், செலவாளி, ஆடம்பரப்பிரியர், சத்தியவான், நேர்மை மிக்கவர்.

10.மகம்: ஆராய்ச்சி மனப்பான்மை, கல்வியில் ஆர்வம், தர்மவான், பழக இனிமையானவர், நேர்மையாக நடக்க விரும்புபவர்.

11.பூரம்: ஒழுக்கமானவர், புத்திசாலி, விவசாயம், வியாபாரத்தில் ஆர்வம், உண்மையானவர், செல்வாக்கு, பேச்சுத்திறன் மிக்கவர்.

12.உத்திரம்: நாணயமானவர், பக்திமான், நட்புடன் பழகுபவர், நன்றி மறவாதவர், சுகபோகி, உறவினர்களை நேசிப்பவர்

13.அஸ்தம்: ஆடை, ஆபரண பிரியர், கல்வியில் ஆர்வம், கலாரசிகர், நகைச்சுவையாகப் பேசுபவர், தாய்மீது பாசம் கொண்டவர், பழக இனியவர்.

14.சித்திரை: ஊர் சுற்றுவதில் ஆர்வம், கல்விமான், தைரியசாலி, எதிரிமீதும் இரக்கம், சாதிப்பதில் வல்லவர், பரந்த உள்ளம் கொண்டவர்.

15.சுவாதி: புத்திகூர்மையானவர், யோசித்து செயல்படுபவர், சுகபோகி, பழக இனியவர், நம்பகமானவர், யோகம் மிக்கவர்.

16.விசாகம்: வியாபார ஆர்வம், சாமர்த்தியசாலி,கலா ரசிகர், தர்மவான், சுறுசுறுப்பானவர், தற்பெருமை கொண்டவர்.

17.அனுஷம்: நேர்மையானவர், அந்தஸ்து மிக்கவர், அமைதியானவர், ஊர் சுற்றுவதில் ஆர்வம், அரசால் பாராட்டு பெறுபவர்.

18.கேட்டை: கல்வியில் ஆர்வம், துணிச்சலானவர், குறும்பு செய்வதில் வல்லவர், முன்கோபி, சாமர்த்தியசாலி,புகழ் மிக்கவர்

19.மூலம்: சுறுசுறுப்பானவர், கல்வியாளர், உடல்பலம்மிக்கவர், நீதிமான், புகழ்விரும்பி, அடக்கமிக்கவர்.

20.பூராடம்: சுகபோகி, செல்வாக்குமிக்கவர், பிடிவாதக்காரர்,வாக்குவாதத்தில்வல்லவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்

21.உத்திராடம்: தைரியசாலி, கலையில் ஆர்வம், பொறுமைசாலி, நினைத்ததை சாதிப்பவர், சாதுர்யமாகப் பேசுபவர்.

22.திருவோணம்: பக்திமான், சமூகசேவகர், சொத்துசுகம் கொண்டவர், பிறரை மதிப்பவர், உதவுவதில் வல்லவர்.

23.அவிட்டம்: கம்பீரமானவர், செல்வாக்கு மிக்கவர், தைரியசாலி, முன்கோபி, மனைவியை நேசிப்பவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

24.சதயம்: வசீகரமானவர், செல்வந்தர், பொறுமைசாலி, முன்யோசனை கொண்டவர், திறமையாக செயல்படுபவர், ஒழுக்கமானவர்.

25.பூரட்டாதி: மன திடமானவர், பலசாலி, சுகபோகி, பழக இனியவர், தொழிலில் ஆர்வம் மிக்கவர், குடும்பத்தை நேசிப்பவர்.

26.உத்திரட்டாதி: கல்வியாளர், சாதுர்யமாகப் பேசுபவர், ஆபரணபிரியர், பக்திமான், கடமையில் ஆர்வம் மிக்கவர்.

27.ரேவதி: தைரியசாலி, நேர்மையானவர், எதிரியை வெல்பவர், சுகபோகத்தில் நாட்டம், தற்புகழ்ச்சி விரும்புபவர், பழக இனியவர்.

The post பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்கள் குணம் அறியவேண்டுமா? appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

ஏடு தொடங்கும் நிகழ்ச்சி –அக்சரா அபியாசம்

$
0
0

ஏடு தொடங்கும் நிகழ்ச்சி அக்சரா அபியாசம்

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அவ்வாறு மிக முக்கியமான படிப்பை குழந்தைகள் கற்கும் சமயத்தில் இதனை சடங்காக பின்பற்றுவது வழக்கம். அதன் முக்கியத்துவத்தை பார்க்கலாம். பள்ளிகளில் புதிதாக சேர்க்கப்பட இருக்கும் குழந்தைகளுக்கு பல கோவில்களில் மற்றும் பள்ளிகளில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி அக்சரா அபியாசம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

எழுத பயிற்சி

 இதற்காக ஏராளமான பெற்றோர் காலையிலேயே தங்களுடைய குழந்தைகளுடன் கோவிலுக்கு திரண்டு வந்தனர். குழந்தைகளுடன் கோவில்களில் முதலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். பின்னர், சாமி முன்னிலையில் பெற்றோர் குழந்தைகளை மடியில் வைத்து அமர்ந்தனர்.

  ஒரு தாம்பாளத்தட்டில் பரப்பி வைக்கப்பட்டிருந்த அரிசியில் கோவில் நம்பூதிரிகள் குழந்தைகளின் கையை பிடித்து ‘ஓம்’, ‘அம்மா’, ‘அப்பா’ என்று எழுத கற்றுக்கொடுத்தனர். குழந்தைகளின் நாக்கில் தங்க மோதிரத்தால் ‘ஓம்’ என்றும் எழுதி ஏடு தொடங்கிவைத்தனர். அதன்பின்னர், பெற்றோர் குழந்தைகளின் கையை பிடித்து அரிசியில் ‘அ’ எழுத பயிற்சி அளித்தனர்.

 இந்தியாவில் ஞானத்தின் தேடல் என்பது பழைய காலத்திலிருந்தே குரு மற்றும் சரஸ்வதியின் ஆசியுடன் தொடங்கப்படுகிறது. இதை சடங்காகவே நமது இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. பள்ளியில் சேரும் முதல் நாள் நெல் அல்லது அரிசியில் குழந்தையை எழுத்துக்களை எழுதச் சொல்லி பள்ளி வாழ்க்கையை ஆரம்பித்து வைப்பார்கள்.

 இந்த சடங்கு பல மாநிலங்களில் குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் மிகவும் பிரபலமாக உள்ளது. வங்கத்தில், இந்த சடங்கு கூட ஹாடே கோரி என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல குடும்பங்களில், இந்த சடங்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. இந்த எழுத்தறிவித்தல் சடங்கு எதற்காக முறைப்படி பின்பற்றப்படுகிறது என்பதன் முக்கியத்துவதை அறிந்துகொள்ளுங்கள் பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கல்வி தீட்சை:

 கல்வி என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம். கல்வி கற்பதன் மூலம் ஒருவர் இந்த பரந்த உலகில் அறிவு மற்றும் ஞானத்தை தேடத்தொடங்குகின்றார். எனவே, நாம் நம்முடைய ஞானத்தேடலுக்கான முதல் அடியை அன்னை சரஸ்வதியை பூஜை செய்து கொண்டாடி தொடங்குகின்றோம்.

வெற்றியின் அடையாளம்:

 பல மாநிலங்களில் இந்த அக்ஷரப்யாஷம் வெற்றியின் அடையாளமான விஜய தசமி அன்று நிகழ்த்தப்படுகிறது. அது கல்வியறிவின்மை மற்றும் அறிவின்மை என்னும் இருளை நாம் வெற்றி கொள்ளப்போவதை மறைமுகமாக உணர்த்துகின்றது. இந்த நாளில் மூன்று விதமான சக்திகளான இச்சா, கிரியா மற்றும் ஞான சக்திகள் ஒன்றிணைகின்றன. இந்த மூன்று விதமான சக்திகள் இருளை எதிர்த்துப் போராட நாம் அனைவருக்கும் உதவுகின்றன.

எழுதக் கற்றுக் கொள்வது:

 குழந்தைகள் இந்த நாளில் தான் முதன் முதலில் எழுதத் தொடங்குகின்றனர். அவர்கள் தங்களுடைய பெயர் மற்றும் எழுத்துக்களை எவ்வாறு எழுதுவது என்பதை கற்றுக்கொள்கின்றனர். அவர்கள் மெதுவாக ஒரு வாக்கியத்தை எவ்வாறு உருவாக்குவது எனக் கற்று இறுதியாக தங்களுடைய எண்ணங்களை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதையும் கண்டுபிடிக்கின்றனர். எனவே இந்த நாள் உங்கள் குழந்தைகளின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஒரு நீண்ட நெடிய பயணத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.

ஓங்காரத்தின் முக்கியத்துவம்:

 ஓங்காரம் ஒரு செயல் மற்றும் எண்ணத்தின் தொடக்கம் மற்றும் இறுதியாக விளங்குகின்றது. மேழும் இது நித்தியத்தை குறிக்கின்றது. எனவே, ஒரு குழந்தை ஓம் என்கிற வார்த்தையை எழுதி தன்னுடைய ஞான வேட்கையை தொடங்குகின்றது. இது சம்ஸ்கிருதத்தில் பீசாட்ஞ்சரமாக கருதப்படுகின்றது. இதுவே அனைத்தினுடைய தொடக்கம். இதை முதன் முதலில் எழுதுவது ஒரு சிறந்த தொடக்கமாக கருதப்படுகின்றது.

குழந்தைகள் மணல் / அரிசி எழுதுகிறார்கள்:

 ஆரம்பத்தில், குழந்தைகள் தங்களுடைய குருக்குலத்தில் ஓம் என்கிற சொல்லை மணலில் எழுதி தங்களுடைய எழுத்தறிவித்தலை தொடங்கினார்கள். இப்போதெல்லாம், குழந்தைகள் அரிசியை ஒரு தட்டில் பரப்பி ஓம் என்கிற சொல்லை எழுதுகின்றார்கள். வங்கத்தில், குழந்தைகள் ஒரு சுண்ணாம்பு கட்டி கொண்டு ஒரு ஸ்லேட்டில் எழுத ஆரம்பிக்கின்றார்கள்.

The post ஏடு தொடங்கும் நிகழ்ச்சி – அக்சரா அபியாசம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

அற்புத ரகசியங்கள் நிறைந்த பார்த்தசாரதி கோவில்

$
0
0

அற்புத ரகசியங்கள் நிறைந்த அருள்மிகு பார்த்தசாரதி கோயில், திருவல்லிக்கேணி

 தருமத்தை நிலைநாட்ட வேண்டி நிகழ்ந்த மகாபாரதப்போரில் பீஷ்மர் எய்த அம்புகளை பார்த்தனுக்குத் தேரோட்டியாக நின்று தாமே தாங்கியதால் ஏற்பட்ட வடுக்களை உற்சவர் திருமுகத்தில் இன்றும் தரிசிக்கலாம். இந்த ஐதீகத்தின் அடிப்படையில் பெருமாள் ஸ்ரீ பார்த்தசாரதி என்றழைக்கப்படுகிறார்.ஆலயமும் அப்பெயரில் அழைக்கப்படுகிறது. காயங்களுடன் இருப்பதால் இவருக்கான நைவேத்யத்தில், நெய் அதிகம் சேர்க்கப்படுகிறது. மிளகாய் போன்ற காரமான பொருட்கள் சேர்ப்பதில்லை. அழகாக பிறக்கவில்லையே என வருந்துபவர்கள், திருமாலின் இந்த கோலத்தை தரிசித்தால் அழகு அழியும் தன்மையுடையது என்ற தத்துவத்தை உணர்வர்.

தீர்த்த தாயார் :

 முன்னொரு காலத்தில், திருமாலை தனது மருமகனாக அடைய வேண்டி பிருகு மகரிஷி, இத்தலத்தில் தவமிருந்தார். அப்போது இங்கிருந்த புஷ்கரணியில் மலர்ந்த அல்லி மலரில், தாயார் தோன்றினார். பிருகு அவருக்கு வேதவல்லி என பெயரிட்டு வளர்த்தார். அவளுக்கு திருமணப்பருவம் வந்தபோது திருமால், ரங்கநாதராக இத்தலம் வந்து அவளைத் திருமணம் செய்து கொண்டார். இந்த திருக்கல்யாண வைபவம் இக்கோயிலில் மாசி மாதம், வளர்பிறை துவாதசியன்று நடக்கிறது. வேதவல்லி தாயார் தனி சன்னதியில் அமர்ந்த கோலத்தில் இருக்கிறாள். இவள் கோயிலைவிட்டு வெளியேறுவதில்லை. வெள்ளிக்கிழமை மற்றும் உத்திர நட்சத்திரத்தில் கோயில் வளாகத்திற்குள் புறப்பாடாகி, ஊஞ்சலில் காட்சியளிக்கிறாள்.

குடும்பத்துடன் கிருஷ்ணர்:

 மனிதர்கள் குடும்பத்தினருடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும்விதமாக இக்கோயிலில் பெருமாள் அருள்கிறார். மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர் அருகில் ருக்மணி தாயார், மார்பில் மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர். இந்தப் பெருமாள், அர்ஜுனனுக்கு உதவியாக வந்த கிருஷ்ணாவதாரம் என்பதால், அருகில் ருக்மிணி தாயார் இருக்கிறாள். வலப்புறத்தில் அண்ணன் பலராமர், இடதுபுறத்தில் தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோரும் இருக்கின்றனர். தனி சன்னதியில் இருக்கும் ராமபிரானுடன் சீதை, லட்சுணர், பரதன், சத்ருக்கனன், ஆஞ்சநேயர் ஆகியோர் உள்ளனர்.

சக்கரம் இல்லாத சுவாமி :

 பெருமாளின் பஞ்சாயுதங்களில் சங்கும், சக்கரமும் பிரதானமானவை. ஆனால், இக்கோயிலில் சுவாமியிடம் சக்கரம் இல்லை. மகாபாரத போரின்போது பாண்டவர்களுக்கு உதவிய கிருஷ்ண பரமாத்மா, போர் முடியும் வரையில் ஆயுதம் எடுப்பதில்லை என உறுதி எடுத்திருந்தார். எனவே, இவர் இத்தலத்தில் ஆயுதம் இல்லாமல் காட்சி தருகிறார். போரை அறிவிக்கும் சங்கு மட்டும் வைத்திருக்கிறார். பெருமாளை இத்தகைய கோலத்தில் தரிசிப்பது அபூர்வம். பொதுவாக நான்கு கரங்களுடன் காட்சி தரும் பெருமாள், இங்கே கிருஷ்ணனாகிய மானிட வடிவில் இருப்பதால் இரண்டு கரங்களே உள்ளன.

மீசையில்லாத தரிசனம்:

 தேரோட்டிக்கு அழகு கம்பீரத்தை உணர்த்தும் மீசை. இதனை உணர்த்தும் விதமாக, இக்கோயிலில் வேங்கடகிருஷ்ணர் மீசையுடன் காட்சிதருகிறார். இதனால் இவருக்கு, மீசை பெருமாள் என்றும் பெயருண்டு. வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது, பகல்பத்து ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரையில் 5 நாட்கள் மட்டும் இவரை மீசையில்லாமல் தரிசிக்கலாம். உற்சவர் பார்த்தசாரதிக்கு வெள்ளிக் கிழமைகளில் விசேஷ அபிஷேகம் நடக்கும் போது மட்டும், மீசையுடன் அலங்காரம் செய்கின்றனர்.

ஐந்து மூலவர் ஸ்தலம்:

 கோயில்களில் பெரும்பாலும் ஒரு மூர்த்தி மட்டுமே பிரதான மூலவராக இருப்பார். ஆனால், இக்கோயிலில் ஐந்து மூர்த்திகள் மூலவர் அந்தஸ்தில் வணங்கப்படுகின்றனர். பிரதான மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர், முன்மண்டபத்தில் ரங்கநாதர் மற்றும் ராமபிரான், பிரகாரத்தில் கஜேந்திரவரதர் மற்றும் யோகநரசிம்மர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர். எனவே இத்தலம், பஞ்சமூர்த்தி தலம் என்றழைக்கப்படுகிறது.ரங்க நாதர் சன்னதியில், சுவாமியின் தலைக்கு அருகில் வராகரும், கால் அருகில் நரசிம்மரும் இருக்கின்றனர். ரங்கநாதர், இங்கு தாயாரை திருமணம் செய்துகொள்ள வந்தபோது நரசிம்மரும், வராகமூர்த்தியும் உடன் வந்தனர் என்ற அடிப்படையில் இந்த அமைப்பு உள்ளது. இவ்வாறு ஒரே சன்னதிக்குள் பெருமாளின் மூன்று கோலங்களையும் இங்கு தரிசிக்க முடியும். திருமணத்திற்கு வந்த ரங்கநாதரை, தாயார் என்னவரே! என்ற பொருளில், ஸ்ரீமன்நாதா! என்றழைத்தார். எனவே இவருக்கு ஸ்ரீமன்நாதர் என்ற பெயரும் உண்டு.கிழக்கு நோக்கிய மூலவர் வேங்கட கிருஷ்ணன், மேற்கு நோக்கிய யோக நரசிம்மர் என இருவருக்கும் இரு திசைகளிலும் இரண்டு கொடி மரங்களும், வாசல்களும் உள்ளன.

ஒலி எழுப்பாத மணி:

 யோக நரசிம்மர், யோக பீடத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரே இத்தலத்தின் முதல் மூர்த்தியாவார். காலையில் இவருக்கே முதல் பூஜை நடக்கிறது. அத்ரி மகரிஷிக்கு காட்சி தந்த நரசிம்மர் இவர். இவரது சன்னதியில் உள்ள மணிகளில் மட்டும் சப்தம் எழுப்பும் நாக்குகள் இல்லை. நரசிம்மர் யோக நிலையில் இருப்பதால் மணி ஒலிக்கும் சப்தமும், பேச்சு சப்தமும் கேட்கக்கூடாது என்கின்றனர். எனவே, இவரது சன்னதியில் அலங்காரத்திற்காக கதவில் இருக்கும் மணிகள்கூட, நடுவில் சப்தம் எழுப்பும் நாக்கு இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது. பக்தர்கள் இவரிடம் வேண்டிக் கொண்டு உப்பு, மிளகை இவரது சன்னதிக்கு பின்புறத்தில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். இதற்காக சிறிய மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.

சிறப்பம்சங்கள் :

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று 9 அடி உயர மூலவர், சாரதிக்குரிய மீசையோடு இருத்தல் இத்தலத்தில் மட்டுமே என்பது மிக முக்கிய சிறப்பாக கருதப்படுகிறது. குடும்ப சமேதராக பெருமாள் காட்சியளிக்கிறார்.

The post அற்புத ரகசியங்கள் நிறைந்த பார்த்தசாரதி கோவில் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


First idol installation for Shirdi Sai Baba

$
0
0

First idol installation for Shirdi Sai Baba was done by Sri Sathya Sai Baba

My excitement when I got to know that the FIRST-EVER IDOL INSTALLATION for Shirdi Sai Baba was done by Sri Sathya Sai Baba in 1949 at Guindy, Chennai (erstwhile Madras)! The unforgettable and now-famous marble idol of Shirdi Baba in the Shirdi temple itself came into being much later, in 1954, 36 years after the Mahasamadhi of Baba in 1918.

 The story of how the idol came about is beautiful and divine no doubt, but it is equally divine to learn the story of how the first-ever Shirdi Baba idol came to be made at Guindy. Even before we delve into that story, we should get a background of the happenings at Guindy. I gathered these from the books Lokanatha Sai by Smt.Leela and Sai Baba: The Man of Miracles written by Howard Murphet.

Lokanatha Mudaliar’s father owned a fertile piece of land in Guindy at the turn of the 19th century. In 1904 a wandering siddhipurusha (holy man with some miraculous powers) asked permission of him to build a tomb for himself there. The latter gave permission and the holy man prophesied that to the right of his tomb there would be a temple to a Mahatma (great soul), and to the left an industrial estate. The holy man lived a hundred and twenty-five years of age and then he entered the tomb, went into mahasamadhi on the Guindy land. However, before his prophecy could be fulfilled, a black magician from Gujarat began to reside on that very land in the 1940s. Everyone feared him but not Lokanatha Mudaliar (of the book Lokanatha Sai fame written by his daughter Smt. Leela) who was now the owner. Under the supervision of a bailiff, he proceeded to demolish the black magician’s hut illegally built on his site.

The enraged magician, before leaving, cursed Lokanatha to become a raging lunatic. Though Lokanatha himself did not bother much about it, in that fateful September of 1943, he began to rant and rave in fury and everyone in home was certain that he had turned lunatic. Even as he was being examined by Dr.Dhairyam from the mental hospital, he slipped into deep sleep. In that state he had a vision of a young Swami, in a red robe and with a curly mop of hair who blessed him thrice with sacred water before disappearing. The very next day, which happened to be a Sunday, Baba was at his home in Madras! Baba said,

 “How are you? I came for you last night…”

It was love at first sight and the bonding of a lifetime for Lokanatha who had found his Lokanatha (literally translates as Lord of the World). Waving His hand and creating a talisman, Swami put it around Lokanatha’s neck and also materialized a lime fruit to be kept under his pillow as he slept at night. Later on, Swami also guided the family members to dig at a particular location on the land where they found the remains of a dead goat and chicken. Once all the traces of witchcraft were removed, Swami blessed Lokanatha Mudaliar and told him to come to Puttaparthi.

We often think that blessed indeed are those that are ‘invited by Swami’ to come to Puttaparthi. But, we should realize that each and every one of us have been invited, else we would never have made it to Parthi! At least that is what the story of a disciple of Swami Sivananda teaches us. Once Lokanatha Mudaliar made that blessed trip, his whole life changed. He was convinced that he had come face to face with God on earth and wanted to build a home for Swami on the land. But Swami had other plans.

Swami’s ‘other’ plan

It was Shirdi Baba who came in Lokanatha Mudaliar’s dream and told him to construct a temple for Him instead of one for Swami. Now, Shirdi Baba was a totally unknown figure for Lokanatha Mudaliar who woke up next morning wondering what to do since he was sure that a divine personage had come in his dream. As he was between the two horns of dilemma, the postman brought a letter to his doorstep. It was from his Swami with exactly the same instructions of Shirdi Baba!

Meanwhile, a sculptor in Madras was having recurrent dreams in which he was told to proceed to Guindy where the work of his life awaited him. The dreams were so insistent that the sculptor finally took the train and alighted on the platform at Guindy. There he was accosted by a man who knew his name and who escorted him to Lokanatha Mudaliar. He introduced the sculptor as the designer for the Shirdi Baba idol and simply departed never to be seen again! And then, Swami travelled all the way from Puttaparthi to lay the foundation stone for the temple on the 10th of July, 1946.

The post First idol installation for Shirdi Sai Baba appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சகஸ்ர சண்டி மகாயாகம்

$
0
0

வாலாஜா பேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்

சப்தஸதி பாராயணத்துடன் சகஸ்ரசண்டி மகாயாகம்.

 இராகுகேது பெயர்ச்சி, ஆடிவெள்ளி மற்றும் ஆடிப்பூரம் முன்னிட்டு 26.07.2017 முதல் 30.07.2017 வரை ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.

 

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் சகஸ்ர சண்டி மகாயாகம்

   உலக மக்கள்  அனைவரும்  ஆனந்தமாக வாழ வேண்டியும், இயற்கை சீற்றங்கள்  ஏற்படாமல் இருக்கவும்  நல்ல மழை பெய்து  விவசாயம் செழிக்க வேண்டியும்  என்ற வகையில் ஆயிரம் சண்டி மகா யாகம்  என அழைக்கப்படும்  சகஸ்ர சண்டி ஹோமத்துடன் ஸப்த சதி சண்டி பாராயணமும்நடைபெறுகிறது.

 26.07-2017 தேதி ஆடி மாதம் 10ம் தேதி புதன் கிழமை, ஆடி பூரம், திருவோண நட்சத்திரம் சதுர்த்தி கூடிய சுபதினத்தில்  மாலை  4.30  மணிமுதல்  கோ பூஜை  விக்னேஸ்வர பூஜை, சண்டி தேவி கலச பூஜையுடன்  தீப சண்டி பாராயணத்துடன்  துவங்க உள்ளது.

27.07.2017 தேதி  ஆடி மாதம் 11ம் தேதி வியாழன் காலை  6.30 மணிமுதல் எல்லா காரியங்களும் தங்கு தடையின்றி வெற்றிபெறவும் நோய் நொடிகளின்றி நீண்ட ஆயுளை பெறவும் இராகு கேது பெயர்ச்சி யாகம்,  நவக்கிரக ஹோமம், மகா தன்வந்திரிஹோமம்,மஹா சுதர்சனம், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி, மிருத்ஞ்ஜய ஹோமம் தொடங்குகிறது. இரவு 7 மணிக்குசண்டி ஆவரண பூஜை, அர்ச்சனை தீபாராதனை நடைபெறுகிறது.

28.07.2017 தேதி ஆடி மாதம் 12ம்   வெள்ளிக் கிழமை காலை 7.30 மணி முதல் இரவு 8 மணி வரை நினைத்த காரியங்கள்நடைபெறவும், 26 வகையான செல்வங்கள் கிடைக்கவும், குழந்தை இல்லாத தம்பதியர்கள் மட்டும் கலந்து கொள்ளும்புத்திரகாமேஷ்டி ஹோமம், தங்கு தடையின்றி பெண்களுக்கு  திரு மணம் நடைபெற வேண்டி ஸ்வயம்வரா பார்வதி ஹோமம், ஆண்களுக்கு கந்தர்வ ராஜ ஹோமம், ஸ்ரீ மஹா லட்சுமி யாகம், காலபைரவர் ஹோமம் அதை தொடர்ந்து சதுர் சஷ்டி பைரவ பலி  பூஜை  நடைபெறுகிறது.

29.07.2017 தேதி ஆடி மாதம் 13ம் தேதி சனிக் கிழமை காலை  7.30  மணி முதல்  இரவு 8 மணி வரை  ஹோரம்ப  கணபதிஹோமம்,  அதை தொடர்ந்து ஆயிரம் சண்டி மகா ஹோமம்  தொடங்குகிறது. இரவு 7 மணிக்கு அம்பாளின்  சிறப்பு நிகழ்ச்சிநடைபெறுகிறது. 30.07.2017-ந்தேதி ஆடி மாதம் 14 ந் தேதி ஞாயிற்று கிழமைகாலை 7 மணி முதல்

இரவு 8 மணி வரை  சகல சௌபாக்கியங்கள் வேண்டி வாஞ்ஜா கல்பலதா கணபதி ஹோமம், தசமஹா வித்யா ஹோமம் . ஸ்ரீசாக்தஉபாசகர்களைக் கொண்டுநடைபெறுகிறது.

 தன்வந்திரி பீடம்  ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி தன்வந்திரி  பக்தர்கள், தன்வந்திரிகுடும்பத்தினர் மற்றும் நிர்வாகிகள் இந்த யாகத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். யாகம் நடைபெறும் 5 நாட்களிலும்பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் நடைபெறுகிறது.

இதுபற்றி ஸ்தாபகர் டாக்டர்  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்  கூறுகையில், ஆயிரம் சண்டி யாகம் என அழைக்கப்படும் சகஸ்ர சண்டியாகம் மன்னர்களும், அரசர்களும், நாட்டின் நன்மைக்காக செய்து வந்தனர். இதன் பெருமை மக்களுக்கு தெரியப்படுத்த மவுரியபேரரசு காலத்திலும் அதன்பின் மைசூர் அரசன் காலத்தில் காஞ்சிபுரம், மதுரை, புதுக்கோட்டை ஆகிய நகரங்களிலும் 1963-ம்ஆண்டு நடந்துள்ளது. அதை தொடர்ந்து அன்புடன் உலக மக்கள் ஆரோக்யத்துடன்  சகலஐஸ்வரியம்  பெற்று  இறையருளுடன்ஆனந்தமாய் வாழ வேண்டி வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் 5 நாட்கள் ஸ்ரீ சகஸ்ர சண்டி ஹோமமும் ஸப்த சதி சண்டிபாராயணமும்  நடைபெறுகிறது  என்றார்.

The post ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சகஸ்ர சண்டி மகாயாகம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

கடன் பிரச்சனை எதிர் காலத்திலும் வராமலிருக்க!

$
0
0

கடன் பிரச்சனை எதிர் காலத்திலும் வராமலிருக்க!

  சக்தி வாய்ந்த லட்சுமி நரசிம்ம பெருமாளை பவுர்ணமி பிரதோஷ காலத்திலும், சுவாதி நட்சத்திர காலத்திலும் பால், இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனப் பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபடலாம்.

லட்சுமி நரசிம்மரின் காயத்திரி மந்திரம்:

 “ஓம் வ்ஜர நாகாய வித்மஹே

தீஷ்ண தம்ஷ்ட்ரீய தீமஹி

தந்நோ நரசிம்ம ஹ ப்ரசோதயாத்”

என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லி வந்தால் பதவி உயர்வும், சகல நலன்களும் உண்டாகும்..

  அதன் விளைவாக மனதில் அமைதியும், அமைதியின் விளைவாக தெளிவான சிந்தனையும், அதன் விளைவாக காரியத் தெளிவும், சங்கடங்களின் நிவர்த்தியும் உண்டாகி வளமான வாழ்வினை படிப்படியாக அடைந்து விடலாம்.

  • தினமும் காலையில் யோக நரசிம்மர் அல்லது லட்சுமி நரசிம்மர் படத்தின் முன் அகலில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, ருண விமோசன நரசிம்ம ஸ்தோத்திரம் 6,8 மடங்காக, ( 6,8,12,16,18,32,36,64,108 ) முறை தினமும் பாராயணம் செய்ய கடன் அடைபடும்.

  • கடனை செவ்வாய்க்கிழமை அன்று திருப்பிச் செலுத்துவது உகந்தது. முக்கியமாக செவ்வாய், சனிக்கிழமைகளில் கடன் வாங்கக் கூடாது.

  • எனக்கு கடன் பிரச்சினை இல்லை. எதிர் காலத்தில் இந்த பிரச்சினை வரக்கூடாது என்று நினைபவர்களும் தினமும் ஒரு முறை படித்து வரலாம். நம்பிக்கையோடு படித்தால் நிச்சயம் பலன் உண்டு.

The post கடன் பிரச்சனை எதிர் காலத்திலும் வராமலிருக்க! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

எந்த ஒரு நல்ல காரியம் செய்ய -இந்த ஹோரைகளில் துவங்கலாம்

$
0
0

  ஹோரை அறிந்து நடப்பவனை யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. அப்படிப் பட்ட ஒரு மகத்தான விஷயம்.

  ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஹோரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஹோரை கிடையாது.

  பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஹோரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஹோரைகளை கணக்கிட்டுள்ளனர்.

  சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஹோரைகளை உருவாக்கினர். இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஹோரையை சூரியனுக்கு அளித்தனர்.அதற்கு அடுத்து சுக்கிரன் , அதற்கு அடுத்து புதன் ஓரை , 4வது இடம் சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது இடம் குருவுக்கும், 7வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினர்.

  இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம்.  இவற்றில் சுக்கிரன் ஹோரை, புதன் ஹோரை, குரு ஹோரை ஆகிய மூன்றும் நல்ல ஹோரைகள் எனப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றாலும் – இந்த ஹோரைகளில் துவங்கலாம்.

  ஹோரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஹோரையாக கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஹோரை. இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஹோரை, 8-9 மணி வரை புதன் ஹோரை, 9-10 வரை சந்திரன் ஹோரை, 10-11 வரை சனி ஹோரை, 11-12 மணி வரை குரு ஹோரை, 12-1 மணி வரை செவ்வாய் ஹோரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஹோரை துவங்கும்.

  இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஹோரை, புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஹோரை, அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஹோரை கணக்கிடப்படும். பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஹோரைகள் கணக்கிடப்படுகின்றன.6 – 1- 8 – 3.  இந்த வரிசையை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். காலை 6 மணிக்கு வரும் ஹோரை , திரும்பவும் மதியம் 1 மணிக்கும், இரவு 8 மணிக்கும் , பின்பு அதிகாலை 3 மணிக்கும் வரும்.

சூரிய ஹோரை:

  சூரியன் ஹோரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளை சந்தித்தல், போன்ற பெருந்தலைகளை சந்திக்கும் காரியம் செய்யலாம். இந்த நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல, சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஹோரை ஏற்றதல்ல. இந்த ஹோரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.இந்த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம்.

சுக்கிர ஹோரை:

  சகல சுப காரியங்களுக்கு வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது. குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும் நன்மை ஏற்படும். விவசாய்த்திற்கும், பயணங்கள் செய்யும் நல்லது. இந்த ஹோரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.

புதன் ஹோரை:

  கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம்.இந்த ஹோரையில் காணாமல் போகும் பொருள் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும்.

சந்திர ஹோரை:

  வளர்பிறை காலத்தில் சந்திரன் ஹோரையும் நல்ல ஹோரையாகவே கருதப்படுகிறது. இந்த ஹோரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றைச் செய்யலாம். இந்த ஹோரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம்.குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களையும் மிகவும் ஏற்றது. வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது.பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம். இந்த ஹோரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.

சனி ஹோரை:

  இதில் சனி ஓரை ஒரு சில காரியங்களுக்கு நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது. உதாரணமாக சனி ஹோரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, பாத யாத்திரை , நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது.

குரு ஹோரை:

  எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது. எதுவும் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியமாக இருக்கக்கூடாது. கப்பற்பயணம் செய்வதற்கு இந்த ஹோரை சிலாக்கிய்மானது அல்ல. இந்த நேரத்தில் காணாமல் போனபொருள்களைப் பற்றி வெளியில் சொன்னாலே போதும் . உடனே கிடைத்து விடும்.

செவ்வாய் ஹோரை:

  செவ்வாய் ஹோரை நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஹோரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும். செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் . அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய். எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷய்ங்களையோ, சண்டை சச்சரவுக்கான் விஷயங்களையோ பற்றிய் பேசலாம். இருப்பினும் இந்த ஓரையை தவிர்ப்பது நல்லது. இந்த ஓரை நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால் உடனே முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும்.தாமதித்தால் கிடைக்காது.

  நவ கிரகங்களில் – ஒன்றுக்கொன்று கடும் பகை கிரகங்களும் உண்டு. அல்லவா ?

அதையும் நீங்கள் மனதில் கொண்டு , ஹோரை தேர்ந்தெடுங்கள். என்னதான் குரு ஹோரை சுப ஹோரை என்றாலும், வெள்ளிக் கிழமை – குரு ஹோரை தேர்ந்தெடுக்க வேண்டாம். சரி, நிஜமாகவே இந்த ஹோரையின் செயல்பாடு அறிய – நீங்களே ஒரு சில விஷயங்களில் , துவங்கிப் பாருங்கள். வியந்து போவீர்கள். மனித வாழ்வில் ஹோரைகளின் பங்களிப்பு முக்கியமானது. நம்மை அறியாமலேயே ஹோரைகளின் கதிர்வீச்சை உணர முடியும். அதை உணர்ந்து நடந்தால் நலம் பெறுவீர்கள்.

குறிப்பாக கணவன் , மனைவி ஏதாவது வாக்குவாதம் செய்யத் துவங்கினால் , செவ்வாய் அல்லது சனி ஹோரை வந்தால், அடக்கி வாசியுங்கள். அது மிகப் பெரிய சண்டையாகிவிடும். கணவன் . மனைவி என்றில்லை. மற்றவருக்கும் பொருந்தும். 

The post எந்த ஒரு நல்ல காரியம் செய்ய -இந்த ஹோரைகளில் துவங்கலாம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

நடமாடும் தெய்வமாய் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் !!!

$
0
0

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்

       கி,பி,1870-ம் வருடம் ஜனவரி மாதம் 22-ம் தேதி சனிக்கிழமை சுவாமிகள் காஞ்சிபுரத்தில் பிறந்தார்,தந்தை ஸ்ரீவாதிராஜ ஜோசியர், தாய் திருமதி.மரகதம்.

       சுவாமிகள் குழந்தையாக இருக்கும் காலத்தில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி விசாகம் தொடங்கியது. ஒரு நாள் தாயார் மரகதம் நான்கு வயதுக் குழந்தை சேஷாத்திரியுடன் கோயிலுக்குச் சென்றார். வழியில் ஒரு பொம்மை வியாபாரி சிறிய நவநீதகிருஷ்ண விக்ரகங்களை ஒரு சாக்குப் பையில் கொண்டு வந்து வியாபாரம் செய்தான். சிறுவன் சேஷாத்திரி தன் தாயிடம் பூஜை செய்ய ஒரு விக்ரகம் வேண்டுமெனக் கூறி விக்ரகத்தைத் தொட்டான். வியாபாரியோ இப்போது தான் வியாபாரத்தை ஆரம்பிப்பதாகவும் குழந்தை இனாமாகவே எடுத்துக் கொள்ளட்டும் எனக் கூறி காசு வாங்க மறுத்து விட்டான்.

    மறுநாளும் மரகதம் அம்மாள் சேஷாத்திரியுடன் கோயிலுக்கு செல்லும் போது வியாபாரி தாயின் கால்களில் வீழ்ந்து வணங்கி தங்கக் கை என்று சிறுவனின் கரங்களைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக் கொண்டான். பெரிய பெரிய திருவிழாக்களில் கூட 100 பொம்மைகள் விற்றாலே அதிகம் நேற்று ஒரே நாளில் 1000 பொம்மைகள் விற்றன. குழந்தையின் கை தங்கக் கைதான் எனப் போற்றினார். மக்களும் சிறுவனை,தங்கக்கை சேஷாத்திரி என்றழைத்தனர்.

  நாளாடைவில் சுவாமிகள் மூன்று வேளையும் குளிப்பார். இடையிடையே ஏதோ அசுத்தம் ஏற்பட்டதென்று சொல்லி அடிக்கடி நீராடுவார். ஊரார் இவரை நீர்க்காக்கை என்றழைத்தனர். எப்போழுதும் தீர்த்தப் பாத்திரத்துடன் இருப்பார். சாக்கரத்தாழ்வார் சன்னதியில் உட்கார்ந்து ஜபம் செய்வார். காமாட்சி அம்மன் சன்னதியிலும் சுவாமிகளைக் காணலாம். சுவாமிகள் எண்ணெய் தேய்த்துக் கொள்வதில்லை. சுவாமிகளின் உபாசனை முறைகளைக் கண்டு சுற்றத்தார் அன்புத் தொல்லை தருவதால் சுவாமிகள் கோயிலில் ஜபம் செய்வதை நிறுத்தி விட்டு இரவில் மாயனத்திற்குப் போய் உபாசனைச் செய்து வந்தார்,

       சுவாமிகளை வெளியே அனுப்பாமல் வீட்டுக்குள் கட்டி வைத்துப் பூட்டியும் பார்த்தார்கள். சுவாமிகளோ கதவை உட்பக்கம் தாளிட்டுக் கொண்டு மூன்று நான்கு நாள்கள் வரை திறக்க மாட்டார்கள். கட்டுப்பாடு அதிகரிக்க சுவாமிகளின் மாயன ஜபமும் அதிகரித்தது,மாயன ஜபம் கூடாது என்று ஆட்சேபித்ததால் பரசுராம சேஷாத்திரியோடு சுவாமிகள் மூன்று மணி நேரம் வடமொழியில் தர்க்கம் செய்தார்கள். சுவாமிகள் நான் நைஷ்டிக பிரம்மச்சாரி உபாசகன், உபாசகனுக்கு கால தேச வார்த்தமானங்கள் கிடையாது  என்று ஆதாரங்களைக் காட்டி பெரியவரைப் பதிலுரைக்க முடியாமல் செய்தார். பெரியவரோ மாயனத்திற்கு போய்விட்டு வீட்டிற்குள் நுழையக் கூடாது என்றார். சுவாமிகளும் அப்படியே என்று சொல்லி வீட்டை விட்டு வெளியேறி கோயில் குளம் என்று சுற்றிக் கொண்டிருந்தார்,

       அன்று சுவாமிகளின் தந்தைக்கு சிரார்த்த நாள் வெகுபாடுபட்டு சுவாமிகளை அவரது சித்தப்பா வீட்டிற்கு அழைத்து வந்தார். சுவாமிகளோ நான் சன்னியாசி சன்னியாசிகளுக்கு கர்மம் கிடையாது,தொல்லை தாரதீர்கள். என்று தடுத்தும் சித்தப்பா கேட்கவில்லை. சுவாமிகளை ஓர் அறையில் தள்ளிப் பூட்டினார். சிராத்தம் முடிந்து பித்ருக்களிடம் ஆசி பெற வேண்டிய நேரத்தில் சித்தப்பா கதவைத் திறந்தார்,உள்ளே சுவாமிகள் இல்லை. மாயமாய் மறைந்து விட்டிருந்தார். ஊரேங்கும் செய்தி பரவியது,பெரிய மகானாக அல்லவா இருக்கிறார்,அவரது அருமை தெரியாமல் இருந்து விட்டோமே என்று வருந்தினர்.

       வீட்டை விட்டு மாயமாய் மறைந்த சுவாமிகள் சில காலம்  மாமண்டூர் கிராமத்தில் உள்ள பஞ்ச பாண்டவர் குகையில் தவம் செய்தார். பின்னர் வேலூர், வாணியம்படி, ஆவத்தம்பாடி, துரிஞ்சிக்குப்பம் வழியாக திருவண்ணாமலை வந்தடைந்தார்கள். சுவாமிகளுக்கு அப்போது பத்தொன்பது வயது 1889ல் காஞ்சிபுரத்தை விட்டுப் புறப்பட்ட சுவாமிகள் முக்தியடைந்த 1929-ம் ஆண்டு வரை 40 ஆண்டுகள் திருவண்ணாமலையை விட்டு நகரவே இல்லை.

       சுவாமிகள் தன் தேகத்தை மறந்தனர். அழுக்கு மலிந்த ஆடைகள், நிலையாக ஒரிடத்தில் இருக்க மட்டார், தேரடி, சடைச்சி மடம், கோபுர வாயில், சிவ கங்கைப் படிக்கட்டு, சாது சத்திரம் முதலிய பல இடங்களிலும் இருப்பார். எந்தக் கடைகளிலும் சுவாமிகள் நுழைவார். கல்லாவிலிருந்து காசுகளை அள்ளி விளையாடுவார். அன்று அந்தக் கடைக்காரர்களுக்கு யோக திசைதான்,சுவாமிகளை ஒரு பெரிய ஞானியாகவே ஊர் மக்கள் மதித்தனார். பாவிகள் தம்மை வணங்குவதற்கு இடங்கொடுக்க மாட்டார். நல்வர்களைக் கண்டால் மனம் மகிழ்ந்து அன்பு காட்டுவார். ரமண மகரிஷி, வள்ளிமலை, திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள் போன்ற மகான்கள் சேஷாத்திரி சுவாமிகளின் ஆசி பெற்றவர்களே.!

  இவ்வாறு 40 ஆண்டுகள் திருவண்ணாமலையில் நடமாடும் தெய்வமாய் விளங்கிய சுவாமிகள் 4-1-1929-ல் சிவனடியாராகிய சின்னக் குருக்கள் வீட்டுத் திண்ணையில் மகா சமாதியடைந்தார்.

ஜீவசமாதி அமைந்துள்ள இடம்

 திருவண்ணாமலையில் மலைக்குத் தென்புறம் செல்லும் கிரிவலப் பாதைக்கு செங்கம் சாலை என்று பெயர். அச்சாலையின் கிழக்குப் பாகத்தில் சாலைக்கு வடப்புறம் ஸ்ரீ சேஷாத்திரி ஆஸ்ரமம் அமைந்துள்ளது. அவ்வாஸ்ரமத்துள் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளின் சமாதிக் கோயில் அமைந்துள்ளது.

The post நடமாடும் தெய்வமாய் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் !!! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

நம் பிரார்த்தனைகள் லக்ஷ்மிகடாக்ஷமாக நிறை வேற!

$
0
0

நம் பிரார்த்தனைகள் லக்ஷ்மிகடாக்ஷமாக நிறை வேற!

 அனுமனை வணங்காத பக்தர்களே இல்லையெனலாம். அந்தளவுக்கு அனுமனை வணங்கும் பக்தர்கள் உலகெங்கும் உள்ளனர். ஸ்ரீ ராமபிரானின் பக்தனாய் விளங்கி அந்த ஸ்ரீ ராமனுக்கும் சீதைக்குமே பாலமாய் இருந்து அவர்களுக்கு உதவ தூது போனார். சிரஞ்சீவி மலையையே தன் பலத்தால் தூக்கிக்கொண்டு பறக்கும் அளவுக்கு சக்தி படைத்தவர். அதே போல் பக்தர்களிடையேயும் நினைத்த காரியத்தை மாருதியாகிய அனுமன் தீர்த்து வைப்பார்.

என்ன மாலை அணிவிக்கப் போகிறீர்கள்:

ராமதூதர் அனுமனுக்கு துளசிமாலை சாத்துவதால் ராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் பெறலாம். அசோக வனத்தில் அனுமன் சீதையைக் கண்டு இராமரைப் பற்றிய விவரங்களை கூறி இராமரின் கணையாழியைக் கொடுத்து சூடாமணியைப் பெற்றார். சந்தோஷமடைந்த சீதை அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த வெற்றிலையைக் கிள்ளி தலையில் தூவி ஆசிர்வதித்தாள். எலுமிச்சம்பழம் ராஜாக்களுக்கு மரியாதை நிமித்தமாகவும், சம்ஹார தொழில் செய்யும் காவல் தெய்வங்களுக்கும் மிகவும் பிடித்தமானது. நரசிம்மன், வராகம், கருடன் ஆகிய சக்திகள் அனுமனிடத்தில் ஒருங்கே அமைந்துள்ளதாலும், ஈஸ்வரனின் அம்சம் ஆனதாலும் இவருக்கு எலுமிச்சம் பழ மாலை சாத்துவர். வாழ்வில் எதிரிகளின் தொல்லை நீங்கப் பெறுவர். வடை மாலை அணிவித்து தானம் செய்தால் செல்வவளம் பெருகும், கிரக தோஷம் நீங்கும்.

  “இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும்” என்றார்.

வெற்றிலையை காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் பக்தர்கள் தங்கள் செயல்பாடுகள் வெற்றி பெற வெற்றிலை மாலை சாத்துகின்றனர். திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது, மணமக்களுக்கும், அவர்களை ஆசிர்வதிக்க வந்தவர்களுக்கும் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதற்காகத் தான்.

ஆஞ்சநேயரை வணக்கும் அடியவர்கள் ‘ஸ்ரீ ராம ஜெயம்‘ கூறுவதன் மூலம் ஆஞ்சநேயரின் பேரருளை மிக எளிதாக பெற்றுக்கொள்ளலாம். ஒரு முறை ‘ராம’ என்று சொன்னால் அது ஒரு சகஸ்திர நாமம் (1008 ) தடவைகள் சொன்னதற்கு சமம் என்று சிவபெருமான் உத்தர பாகத்தில் கூறியிருக்கின்றார். அப்படி பட்ட ஆஞ்சநேயர் இன்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருகின்றார். தன்னுடைய உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஸ்ரீ ராமனிடத்தில் ஒப்படைத்து. தனக்காக வாழாமல் ஸ்ரீ ராமனுக்காகவே வாழுகின்றார்.

பலன்கள் :

  • வெற்றிலை மாலை அணிவித்தால் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் ஸ்வரூபமான சீதையின் ஆசீர்வாதங்களால் நாம் பிரார்த்திப்பவைகள் எல்லாம் லக்ஷ்மிகரமாக நிறைவேறும் என்பது ஐதீகம்.

  • வெற்றிலை மாலை அணிவித்து ஆஞ்சநேயரை வணங்கினால் நமக்கு சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

  • வெற்றிலை மாலை சாற்றுவதால் சுபநிகழ்வுகளின் தடை நீங்கும். தொழிலில்  வெற்றி கிடைக்கும்.

The post நம் பிரார்த்தனைகள் லக்ஷ்மிகடாக்ஷமாக நிறை வேற! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

பிரம்ம பழம்! விஷ்ணு பழம் ! சிவ பழம்! –ஸ்ரீபுர உபாஸனை

$
0
0

பிரம்ம பழம்! விஷ்ணு பழம் ! சிவ பழம்!

வேதங்கள் –மாத்ரு தேவோ பவ—என்றே முதலில் தாயைப் போற்றுகின்றன. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் அன்னைக்கே முதலிடம்.  முப்பெரும் தேவர்கள் – பிரம்மா, விஷ்ணு, சிவன்.இவர்கள் மூவருக்கும் ஒரு சமயத்தில் அன்னையின் அரவணைப்புத் தேவையாக இருந்திருக்கின்றது.

பிரம்மா –  இவர் விஷ்ணுவின் தொப்புள் தாமரையில் தோன்றியவர். இவருக்கு அன்னையில்லை.

விஷ்ணு – அனாதியானவர். ஆதி என்று ஒன்று இல்லாதவர். பத்து அவதாரங்கள் எடுத்த போதிலும் அன்னையின் பரிபூரண அரவணைப்பைப் பெறாதவர். ராமாவதாரத்தின் போது ராமர் ராஜகுமாரனாக வளர்ந்ததனால், அன்னையிடம் இருந்ததை விட, மற்றவர்களிடம் இருந்ததே அதிகம். பெற்ற கோசலையை விட, கைகேயியையே தாயாக மதித்தவர். கிருஷ்ணராக அவதாரம் செய்த போது, பெற்ற தாயான தேவகியை விட, வளர்த்த யசோதையிடம் அதிக அன்பு பெற்றவர். சிறு வயதில் கிருஷ்ணருக்கு விஷமங்கள் செய்வதற்கே நேரமிருந்தது. யசோதைக்கும் கிருஷ்ணரைக் கண்டிக்கவே நேரம் போதவில்லை.

சிவன் – இவருக்கும் பிறப்பு என்று ஒன்றே இல்லை. சிவன் சிலை வடிக்கும் போது, தொப்புள் இல்லாமலே சிவனை வடிப்பார்கள். ஏனெனில், இவர் எவருக்கும் பிறக்கவில்லை என்பதுதான்.

விஷ்ணு எடுப்பது அவதாரம் (பிறப்பு முதல் இறப்பு வரை உண்டு) எனில் சிவன் எடுப்பது அவஸரம் (பக்தர்களுக்கு காட்சி தந்து விட்டு மறைந்துவிடுதல்). சிவன் தாமே முன் வந்து “அம்மே” என்று அழைத்தது காரைக்கால் அம்மையாரை. இந்த மூவருக்கும் ஒரு சமயத்தில், நாம் யாருக்காவது குழந்தையாக மாட்டோமா என்ற நினைப்பு இருந்தது. தாயின் பரிபூரண அரவணைப்பில் அணைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடன், மூவரும் தமக்கு ஒருவர் தாயாக, பக்தி சிரத்தையில் சிறந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க முனைந்தனர். அவர்கள் கண்களில் ஒரு ரிஷி பத்தினி தெரிந்தாள்.

அனசூயை

 மஹா தபஸ்வினி அத்ரி மஹரிஷியின் தர்ம பத்னி. அத்ரி மஹரிஷியின் தவத்தில் பெரும் உதவிகள் செய்து, தாமும் சதா சர்வ காலமும் பக்தி சிரத்தையுடன் இருந்தாள். அத்ரியும் அனசூயையும் தங்களுக்கு முப்பெருந்தேவர்களின் அம்சங்களாக ஒரு குழந்தை வேண்டும் என்றும் வரம் பெற்றிருந்தார்கள். அந்த வரத்தை மெய்ப்பிக்க பிரம்ம, விஷ்ணு, சிவன் அவர்களிடம் குழந்தையாக வளர சித்தம் கொண்டார்கள்.

 அதன்படி, பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒரு நாள் அத்ரியின் ஆசிரமம் சென்று, அநசூயையைத் தாயாகப் பெற வேண்டி நின்றார்கள். அநசூயையும் பெரும் மகிழ்வு கொண்டு, தன் கணவரின் கமண்டலத்திலிருந்த தீர்த்தத்தைக் கொண்டு மூவரையும் சிறு குழந்தையாக்கினாள்.

 அநசூயை தாயாக, முப்பெருந்தேவர்களும் மூன்று குழந்தைகளாக அத்ரி ஆசிரமத்தில் மிக மகிழ்வாக இருந்து வந்தனர். அநசூயையின் அளவற்ற, எல்லைகள் இல்லாத, களங்கம் எதுவும் இல்லாத நிர்மலமான, நிர்வாணமான அப்பழுக்கற்ற பாசத்தினை – குழந்தைகளான பிரம்ம விஷ்ணு சிவன் அனுபவித்து வந்தனர்.

 நெடுநாட்களாக – பிரம்மன் இல்லாமல் பிரம்ம லோகம் இருண்டது. விஷ்ணுவின் வைகுந்தம் வெறிச்சோடியது. ஈஸ்வரனின் கைலாயம் இயல்பாக இல்லை. பிரம்மாவின் தேவியாகிய சரஸ்வதியும், விஷ்ணுவின் தேவியாகிய லக்ஷ்மியும், சிவனின் தேவியாகிய பார்வதியும் – தமது கணவர்களைத் தேடியலைந்தனர். வெகுநாட்கள் தேடிய பின்னர் மூவரும் அத்ரியின் ஆசிரமத்தில் இருப்பதைக் கண்டறிந்தனர். முப்பெருந்தேவியர்களும் தமது கணவர்களை அழைத்துச் செல்ல அத்ரியின் ஆசிரமத்தை அடைந்தனர்.

 இவர்களின் வருகை குழந்தைகளாக இருந்த மூவருக்கும் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) அதிர்ச்சியளித்தது. அன்னையைப் பிரிய மனம் இல்லாதவர்கள் ஆனார்கள். அவர்கள் மூவரும், தங்களைத் தாயிடம் இருந்து பிர்த்துவிடுவார்களோ என்ற எண்ணத்தில், மூவரும் அத்ரியின் ஆசிரமத்திற்குப் பின்னிருந்த வாழைத தோட்டத்தில் மறைந்து கொண்டனர்.

  ஒவ்வொருவரும் ஒரு வாழை மரத்தின் பின் ஒளிந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒளிந்துகொண்ட வாழை மரம் அவர்களின் அம்சம் பெறலாயிற்று.

பிரம்மா மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் பூவன் பழம். பூவன் – பூவில் அமர்பவன். பிரம்மா பூவில் அமைந்திருக்கக் கூடியவர். பூவன் பழமே பிரம்ம பழம்

விஷ்ணு மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் முகுந்தன் பழம் அல்லது மொந்தன்பழம். விஷ்ணுவுக்கு முகுந்தன் என்ற பெயரும் உண்டு.  மொந்தம்பழமே விஷ்ணு பழம்.

சிவன் மறைந்து கொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் பேயன்பழம். சிவபெருமான் ருத்ரபூமியாகிய பேய்கள் உலாத்தக் கூடிய சுடுகாட்டில் உறைபவர். அவருக்கு பேயாண்டி என்ற பெயரும் உண்டு.  பேயன்பழமே சிவப் பழம்.

 அத்ரியின் ஆசிரமத்தில் இருந்த குழந்தையாக இருந்த தம் கணவர்களை முப்பெருந்தேவியரும் அநசூயையிடம், தங்கள் கணவர்களை திரும்ப அனுப்புமாறு மன்றாடினர். அன்னைக்கு குழந்தைகளைப் பிரிய மனமில்லை. குழந்தைகளுக்கும் அன்னையைப் பிரிய மனமில்லை. பாசக் கயிறு குழந்தைகளையும், அன்னையையும் பிணைத்திருந்தது. அநசூயை நெஞ்சம் கனக்க – பிரம்ம, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் சுய ரூபம் அடைய அனசூயை பிரார்த்தனை செய்தாள். அதன்படியே மூவரும் தங்கள் தனித்த உருவம் அடைந்தனர்.

  மஹாவிஷ்ணு, அநசூயை பெற்ற வரத்தின் படி, பிரம்ம அம்சம், தன்னுடைய அம்சம், சிவாம்சம் இணைந்ததான குழந்தையை உருவாக்கி, அத்ரியிடம் தத்தம் (வழங்குவது) அளித்தனர். அவரே தத்தாத்ரேயர். அத்ரி மஹரிஷியின் மகனாக வாய்த்ததனால் அவர் ஆத்ரேயர். தத்தம் கொடுத்ததால் தத்தாத்ரேயர். மூவரின் அம்சமும் கொண்ட தத்தாத்ரேயர் அத்ரி – அநசூயை தம்பதிகளிடம் வளர்ந்தார். அன்னையின் பாசம் முழுக்கப் பெற்றார். தந்தையின் ஞானம் அனைத்தையும் பெற்றார். உலகில் உள்ள அனைத்துக் கலைகளையும் கற்று, பெரும் ஞானவான் ஆனார்.

 ஸ்ரீ வித்யா உபாஸகர்களுக்கு, சாக்த உபாஸகர்களுக்கு தத்தாத்ரேயர் தான் பரமார்த்த குரு. ஏனெனில், தாயைப் போற்றும், தெய்வத்தைத் தாய் நிலையில் கொண்டு போற்றும், உலகமனைத்தையும் ஈன்றெடுத்த அன்னையைப் போற்றும் வகையில் அமைந்த ஸ்ரீ வித்யா உபாஸனையை உலகுக்குக் கொண்டுவந்தவர் தத்தாத்ரேயர் தான். தத்தாத்ரேயருக்கு பரம ஞான சக்தியாக விளங்குவது ஸாக்ஷ¡த் ஸ்ரீ மஹா திரிபுரசுந்தரியே தான்.

 தத்தாத்ரேயர் ஸ்ரீ புர உபாஸனை அல்லது ஸ்ரீ நகர பூஜை அல்லது ஸ்ரீ வித்யா தந்திரத்தை 18000 ஸ்லோகங்களில் மிக விரிவாக வடித்தார். அதுவே தத்த ஸம்ஹிதை எனப் போற்றப்பட்டது. தத்தாத்ரேயரின் பிரதான சிஷ்யராக விளங்கியவர் பரசுராமர். இந்த பரசுராமர் தத்த ஸம்ஹிதையை 6000 ஸாத்திரங்களாக தொகுத்தார். அதுவே பரசுராம கல்பம் எனப்பட்டது. தற்காலத்தில் அம்பிகைக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும் பரசுராம கல்பத்தை ஒட்டியே செய்யப்படுகின்றது.

  வடமொழியில் அமைந்த நக்ஷத்ர மாலிகா ஸ்லோகங்கள் தத்தாத்ரேயரைப் பற்றி பல சிறப்பம்சங்களைக் கூறுகின்றன. தத்தாத்ரேயர் யோகியர்களுக்கும், ஞானிகளுக்கு ஒரு தூய வழிகாட்டியாக அமைந்துள்ளார். அவர் போதித்தது அனைத்தும் ஞானாம்சம் பெற வழிகோலுவது.

The post பிரம்ம பழம்! விஷ்ணு பழம் ! சிவ பழம்! – ஸ்ரீபுர உபாஸனை appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பயன் தரும் ஹோமங்கள்

$
0
0

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பயன் தரும் ஹோமங்கள்

 வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் அட்சயதிருதியை முன்னிட்டு வருகிற 17ம் தேதி முதல் 26ம் தேதி வரைபக்தர்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாக வேண்டி ஏகோபித்த பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பயன் தரும் ஹோமங்கள் மேற்கண்ட தேதிகளில் காலை 10.00 மணி  ஹோமங்களை நடத்த உள்ளார்.

 பக்தர்கள் அனைவரும் குலதெய்வங்களின் அருள்பெறவும், குரு மகான்களின் ஆசி பெறவும், வாழ்வில் ஏற்படும் பலவிதமான தடைகளும் நீங்க கீழ்கண்ட  யாகங்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

 யாகம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள் : ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைந்த ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள் எனப்படும் சாந்திகள். இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் எதைக் கேட்டாலும் (நியாயமான கோரிக்கைகள்) அவற்றை நமக்குத் தந்தருளத் தயங்க மாட்டார். மேலும் தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல், வியாபார அபிவிருத்தி என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படுவதைப் பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.

 யோகம் தரும் யாகங்கள்…

 யாகங்களின் பெயர்கள் – பலன்கள் : 1.மகா கணபதி ஹோமம் – காரியத்தடை நீங்க. 2.ஆயுஷ்ய ஹோமம் – ஆயுள் பலம்பெற. 3.சரஸ்வதி 4.லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் – கல்வி கேள்வி ஞானம்பெற்று அதிக மதிப்பெண்கள் பெற. 5.சுயம்வரகலாபார்வதி யாகம் – பெண்களின் திருமணத்தடை நீங்க. 6.கந்தர்வராஜ ஹோமம் – ஆண்களின் திருமணத்தடை நீங்க. 7.சொர்ண ஆகர்ஷ்ண பைரவர் யாகம் – தொழில், உத்தியோகம் பெற. 8.தன்வந்திரி ஹோமம் – நோய்கள் நீங்கி ஆரோக்யம் பெற.9.குபேர லட்சுமி யாகம் – ஐஸ்வர்யம் பெற்று குடும்பம் ஷேமம் பெறவும். 10.நவக்கிரஹ சாந்தி ஹோமம் – நவக்கிரஹங்களால் ஏற்படும் தோஷங்கள் அகல. 11.சனிசாந்தி ஹோமம் – சனிக்கிரஹத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறைய. 12.கார்த்த வீர்யார்ஜூனர் ஹோமம் – இழந்ததை மீண்டும் பெற. 13.வாஸ்து சாந்தி ஹோமம் – வாஸ்து தோஷங்கள் நீங்கி வளமான வாழ்வு பெற. 14.நட்சத்திர சாந்தி ஹோமம் – நட்சத்திர தோஷங்கள் நீங்கி நன்மைகள் பல பெற. 15.சந்தான கோபால யாகம் – குழந்தைபாக்யம் பெற. 16.மஹா காலபைரவர் ஹோமம் – அனைத்து கவலைகளும், தடைகளும் நீங்க., முக்தி பெறவும் மேற்கண்ட 16 வகையான ஹோமங்கள் சிறந்த வேத விற்பன்னர்களைக் கொண்டு ஆகம முறைப்படி முறையாக செய்யப்பட உள்ளது. இந்த வாய்ப்பினை பால ஜோதிட வாசகர்கள், ஜோதிடர்கள் மற்றும் பலரும் பயன்படுத்தி பலன்பெற ப்ரார்த்திக்கின்றோம்.

 1. 17.06.2017 – Santhana Gopala/ Navagraha/ Ashtami Yagam

2. 18.06.2017 – Navagraha/ Gandarvaraja Homam

3.25.06.2017 – Swayamwarakala Homam

4.26.06.2017 – Punarvivaha Homam

 

மேலும் விபரங்களுக்கு…

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுரா,

வாலாஜாபேட்டை – 632513.

வேலூர் மாவட்டம்.

Ph : 04172-230033 / 230274

Cell : 9443330203

Web: www.danvantritemple.org

email : danvantripeedam@gmail.com

The post வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பயன் தரும் ஹோமங்கள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

ARULMIGU AADHI VYADHI HARA BHAKTHA ANJANEYAR TEMPLE

$
0
0

 ARULMIGU AADHI VYADHI HARA BHAKTHA ANJANEYAR TEMPLE

The main shrine houses Anjaneya inside a Temple Tower 90 feet tall. Anjaneya is facing West and the main entrance is on the West. There is an auxiliary entrance on the southern side used during temple festivals. The main Temple building has path-ways all around the sanctum sanctorum and also a large covered space (Mandapam) for devotees to assemble in front of the Lord for offering worship. Sri Anjaneyar in 1989 and consummated the Kumbabishekam in 1995. The distinguished factor of the 32 feet idol is that it was molded out of a single rock.

The Bhaktha Anjaneya temple at Nanganallur in Chennai is known for bestowing better health to the devotees. The idol of the central image is 32 feet in height making it one of its own kind. Sri Rama, Sri Lakshmana and Seetha with Sri Anjaneyar, Sri Vinayagar, Sri Ragavendra and Sri Krishna with his consorts Bhama and Rukmini are also indoctrinated here. The idol is believed to have special power and is considered a heale

Nanganallur – the satellite town to the city of Chennai, formerly Madras, located about 10 Km from the city and 5 Km from the Airport, is now known as the town housing the 32 feet Viswaroopa Adhivyadhihara Sri Bhaktha Anjaneya Swamy. The Temple has indeed become a landmark and no tourist bus in that route skips the Temple. The Temple is accessible by road and by suburban trains stopping at Pazhavanthangal Railway station.

On the North-West corner, a full-fledged Sannidhi for Sri Rama has been built and here He has taken abode with Seetha and Lakshmana with Anjaneya in attendance. The Gods are facing East. Rama’s role as the protector and ruler is signified here as Rama is seen carrying his bow, hence the name “Kothanda Rama” for the Lord here.

On the South-West, a Sannidhi for Lord Krishna with Rukmani and Satya Bhama, all facing East has been built and a “thulam” (weighing balance) has been erected for offering “thulabaram” (offering made in different materials equalent to the weight of the devotee).Eventhough a Sannidhi for Lord Rama is normally built in Anjaneya temple, rarely a Sannidhi for Lord Krishna is built. Here in our Temple, Krishna Sannidhi is built to remind the devotees that among the Gods it was only Anjaneya who was present in both the indian epics. In Ramayana, as a direct disciple of Rama and in Mahabaratha, in the flag of Arjuna’s Chariot as ordained by Lord Krishna to save it from destruction by the opponents. In the North-East part of the Temple, on a small platform, “Vinayaka” is housed facing East and to his left on a yet another platform ‘Naga’ has been installed.

The post ARULMIGU AADHI VYADHI HARA BHAKTHA ANJANEYAR TEMPLE appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

Daily Raasi Palan 16-06-2017 by Astrologer Munaivar – Panchanathan

$
0
0

Daily Raasi Palan 16-06-2017 by  Panchanathan

What are the names of the twelve zodiac?

  • Capricorn
  • Aquarius
  • Pisces
  • Aries
  • Taurus
  • Gemini
  • Cancer
  • Leo
  • Virgo
  • Libra
  • Scorpio
  • Ophiuchus
  • Sagittarius

What is the name of the governor of the zodiac?

Aries – Mars Taurus – Venus Gemini – Wednesday Cancer – the Moon LEO – The Sun Virgin – Wednesday Libra – Venus Scorpio – Mars Sagittarius – Guru Capricorn – Saturn Aquarius – Saturn Pisces – Guru

What lakkinam?

  By the time a child is born, the baby, the baby’s birth in the sky that no raciyaip facing janittirukkirato lakkinam example. Month on month (That is on April 14th) from 6 am to 8 pm mashup lakkinamavani month (August 17th or 18th) morning at the rising of Leo lakkinam. Subsequent to the order that changes every two hours subsequent lakkinam.

What is the method of keeping lakkinattai ovvoruvittaiyum think?

Friend of the first home of the zodiac. In addition to round the clock

Each zodiac 2,3,4,5,6,7,8,9,10,11 comes, comes the order to 12.

What is the moon? It is based on what?

Zodiac horoscope will be a moon, the moon is based on enappatumatu jatakan newborn stars.

What used lakkinam? What is the moon?

Natal horoscope (Birth Chart) vehicle

Koccaram (the essence of the planet – Transit of planets) What?

Another sign of the zodiac every planet spinning in space amaruvate kolcaram called displacement.

Dasa / What is mind? What is its purpose?

What planet and its star is born jatakan tacatan jatakan early Dasa ruler, it will be changing in the wake of each Dasa Dasa Period 120

Years. Tacavaiyum portions to each other planets. Hopefully it that name (Sub period). Dasa ovvorukirakamum in its own good or bad results, give or puttiyiltan

Dasa understandings begin with what?

Star of the birth of the prince of a jatakar tacaitan boot muscle.

Dasa understandings of the duration, and in what order?

Solar muscle – 6 years Lunar Muscle – 10 years Tuesday muscle – 7 years Rahu Muscle – 18 years Guru Muscle – 16 years Saturday muscle – 19 years Muscle Wednesday – 17 years Ketu muscle – 7 years Venus Muscle – 20 years

 

The post Daily Raasi Palan 16-06-2017 by Astrologer Munaivar – Panchanathan appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

திருமணமாகாத பெண்கள் திருமணமாக -வால் வழிபாடு!

$
0
0

அனுமன் வாலில் குங்குமம் வைத்து வழிபடுவது ஏன் தெரியுமா?

 சிவனின் அம்சமாக தோன்றியவர் அனுமன். இவர் ராமனுக்கு ஒரு தூதராக விளங்கியவர். அனுமன் கோவிலுக்கு சென்று அனுமனைத் தரிசிக்கும் போது, அனுமனின் வாலில் குங்குமம் வைத்து வணங்க வேண்டுமென்பார்கள்.

 அப்படி அனுமன் வாலில் என்ன பெருமை இருந்து விட போகிறது என்று நினைப்பவர்கள் பலர். அனுமன் வாலில் உள்ள பெருமைகளையும், அதை வழிபடும் முறைகளைப் பற்றியும் காண்போம்.

அனுமனின் வாலுக்கு குங்குமம் வைத்து வழிபடுவது ஏன்?

 சூரியனிடம் பாடம் கற்று, அனுமன் சூரியனை வலம் வந்த போது மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரியனுடன் அனுமனையும் சேர்த்து வலம் வந்தன. இதனால் அனுமனின் வாலிற்குப் பின்புதான் நவக்கிரகங்கள் இருக்க வேண்டியதாகி விட்டது. இதன் மூலம் அனுமனை வழிபடுபவர்கள் அனைவருக்கும் நவக்கிரகங்களின் பாதிப்புகள் எதுவும் இருக்காது.

 இராவணன் அனுமனின் வாலுக்கு தீ வைத்த போது, சீதை வேண்டியதால் வெம்மையும் குளிர்ச்சியாகவே இருந்தது. நெருப்பினால் ஏற்படும் காயங்களிலிருந்து குணம் அடைய அனுமனை வழிபடலாம். இராவணனின் சபையில் அனுமன் தன் வாலால் ஏற்படுத்திய சிம்மாசனத்தில் அமர்ந்து பேசி, இராவணின் கர்வத்தை அடக்கினார். இதன் மூலம் அனுமனின் வாலுக்குத் தனிப்பெருமை கிடைத்தது.

 அனுமனின் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாகக் கருதப்படுவதால், ஆஞ்சநேயரின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் இட்டு 48 நாட்கள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் நவகிரகங்கள் அனைத்தையும் முழுமையாக வழிபட்டதற்குச் சமமாகும். இந்த வழிபாடு நவக்கிரக வழிபாட்டை விட மேலானதாகக் கருதப்படுகிறது.

 பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன்தான் அனுமனுக்கு முதன் முதலாக வால் வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது. பீமன் அலட்சியத்தோடு அனுமனின் வாலை அகற்ற முயற்சித்தான். ஆனால், அவனால் அந்த வாலைச் சிறிதுகூட அசைக்க முடியவில்லை. அவன் பலமுறை கடுமையாக முயற்சித்தும் வாலை நகர்த்த முடியாமல், தவித்து நின்றான்.

நான் வாயுகுமாரனின் புதல்வனான அனுமன்

 அப்போது அனுமனே, தன்னுடைய வாலை நகர்த்திக் கொண்டு, ‘நான் சாதாரணக் குரங்கல்ல, நான் வாயுகுமாரனின் புதல்வனான அனுமன்” என்று கூறினார். அதனைக் கேட்ட பீமன், தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். பின்னர் அவன் அனுமனின் வலிமையை வியந்து பாராட்டினான்.

அனுமனையும் அனுமனின் வாலையும் வணங்கிய அவன், எனக்கு அனைத்து சக்திகளையும் அளித்து வாழ்த்தியது போல், தங்கள் வாலைத் தொட்டு வணங்கி வழிபடுபவர்களுக்கு அனைத்து நலன்களையும் தந்தருள வேண்டும் என்று வரம் வேண்டினான். அனுமனும் அவன் கேட்ட வரத்தைக் கொடுத்தார். அதன் பிறகு, அனுமனின் வாலை வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.

 அனுமன் வாலைத் தொட்டு வழிபடுபவர்களுக்கு, அவர்கள் நினைத்தவை அனைத்தும் நிறைவேறும். திருமணமாகாத பெண்கள் ஆஞ்சநேயருக்கான வால் வழிபாடு செய்தால், இறைவி பார்வதி தேவியின் அருளால், விரைவில் திருமணம் நடக்கப் பெறுவர்.

The post திருமணமாகாத பெண்கள் திருமணமாக -வால் வழிபாடு! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

பாவங்களைப் போக்கும் மலை வேங்கட மலை!

$
0
0

பாவங்களைப் போக்கும் வேங்கட மலை!

திருப்பதி மலையில் வாழும் வெங்கடாசலபதி

  ஸ்ரீனிவாச பெருமாளை அனைவரும் Lord venkateshwara ஏழுமலையான்  என்று அழைக்கிறார்கள். ஸ்ரீனிவாசன், கோவிந்தன், வெங்கடாசலபதி என்று பல பெயர்கள் கொண்ட திருமலை நாதனுக்கு ஏழுமலையான் என்று பெயர் வர காரணம். ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ஏழு மலைகள் உள்ளது. ஒவ்வொரு மலையின் பெயரிலும் ஒரு அர்த்தம் உள்ளது. ஏழு மலைகளை கொண்டுள்ளதால் ஏழுமலையான் என்று அனைவரும் அன்புடன் அழைக்கின்றனர். அந்த ஏழு மலைகளைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்.

ஒன்றாம் மலை :

  ‘வேம்” என்றால் பாவம், ‘கட” என்றால் ‘நாசமடைதல்”. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இந்த மலைக்கு ‘வேங்கட மலை” என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

இரண்டாம் மலை :

  பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். அவதாரத்திற்காக வந்த ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை” என்று அழைக்கப்படுகிறது.

மூன்றாம் மலை :

 வேதங்கள் அனைத்தும் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பு+ஜித்தன. எனவே இது ‘வேத மலை” என்று அழைக்கப்படுகிறது.

நான்காம் மலை :

 சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இந்த மலை ‘கருட மலை” எனப் பெயர் பெற்றது.

ஐந்தாம் மலை :

விருஷபன் என்ற அசுரன், சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றதால் இம்மலைக்கு ‘விருஷப மலை” எனப் பெயர் வந்தது.

ஆறாம் மலை :

 ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை” எனப்படுகிறது.

ஏழாம் மலை :

 ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்குமிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும், ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இந்த மலைக்கு ‘ஆனந்த மலை” என்று பெயர் வந்தது. இந்த ஏழுமலைகளின் காரணமாக திருப்பதி வெங்கடாசலபதிக்கு ஏழுமலையான் என்று பெயர் வந்தது. அன்புடன் திருமலை

The post பாவங்களைப் போக்கும் மலை வேங்கட மலை! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

Viewing all 15459 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>