ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்
9962081424
The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 23/06/2016 appeared first on SWASTHIKTV.COM.
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்
9962081424
The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 23/06/2016 appeared first on SWASTHIKTV.COM.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலகமக்களின் நலன் கருதி பல்வேறு விதமான சமூதாய பணிகளை கடந்த15 ஆண்டுகளாக ஸ்ரீ மாருதியின் உதவிக்கரங்கள் ,ஸ்ரீ தன்வந்திரிஆரோக்கிய பீடம் என்கிற அறக்கட்டளைகள் சார்பாக ஸ்தாபகர் டாக்டர்கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் செய்துவருகிறார்.
இன்று 23.06.2016 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு சுமார் 20 லட்சம் ரூபாய் அளவில் புதியதாகவடிவமைக்கப்பட்டு ஸ்ரீ .வி. எஸ். தேசிகாச்சாரி கலை பண்பாட்டு அரங்கத்தை சென்னையை சேர்ந்த ரெப்கோ ஹோம் நிதிநிறுவன நிர்வாக இயக்குனர் திரு.ஆர்.வரதராஜன் அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்தார்.திருமதி எம். வீரஷண்முகமணி ஆணையாளர் இந்துசமய அறநிலை ஆட்சித்துறை சென்னை குத்துவிகேற்றி சிறப்பித்து திருமதி.நிர்மலா முரளிதரன் அனைவரையும் வரவேற்றார்.ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்அருளாசி வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஏழை எளியவருக்கு துணிமணிகள் மற்றும் புடவை வேட்டி வழங்கி அன்னதானமும் அளிக்கப்பட்டது.
ஸ்வாமிகள் பேட்டி:
வருங்கால சந்த்தியினர்கள் இளைஞசர்கள் சமூக ஆர்வலர்கள் பயன்படும் விதயத்தில் அமைந்துள்ள இந்த அரங்கத்தில் வருகிற 07.07.2016, மஹா ப்ரத்தியங்கிரா தேவி யாகமும்08.07.2016 மஹா சண்டியாகமும்,09.07.2016 கருட யாகமும் 10.07.2016 முதல்12.07.2016 வரை சுதர்சன ஜெயந்தியை முன்னிட்டு ஒரு லட்ச சுதர்சன ஜபத்துடன் மஹா சுதர்சன ஹோம்மும் மூலவர் சுதர்சன பெருமாளுக்குமஹா அபிஷேகமும் நடைபெற உள்ளது .இந்த யாகத்தை ஸ்ரீ வைஷ்ணவதிலகம் ஸ்ரீமான் ஜானகிராம ஐயங்கார் மேற்பார்வையில் 20க்கு மேற்பட்டஸ்ரீ வைஷ்ணவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்..
The post ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கலை மற்றும் பண்பாட்டு அரங்கம் துவக்க விழா appeared first on SWASTHIKTV.COM.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்களம் அருகே உள்ள சின்னபாபா சமுத்திரத்தில் பாபா படேசாகிப் ஜீவ சமாதி உள்ளது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மத ஒருமைப்பாட்டைக் காக்கும் சித்த புருஷரே ஸ்ரீ படேசாகிப் ஆவார். நோயாளிகளுக்கு விபூதி கொடுத்தே நோய்களைப் பறந்தோடச் செய்தார்.இமயமலையின் அடிவாரத்தில் சுமார் 2000 அடி கீழே புதைத்திருந்த நிஷ்டதார்யம் எனப்படும் உளிபடாத கல்லை இறையருள் வழிகாட்டுதலால் இவர் தொட்டு அழகிய அருணாசலேஸ்வர் லிங்கமாக உருப்பெற செய்துள்ளார். இது இவரின் சமாதி அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவர் கையால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
புதுவை என்ற சிறு நிலப்பகுதியில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்குள் 32 ஆத்ம ஞானிகள் சமாதி எழுந்தருளியுள்ளார்கள். அவ்வகையில், சத்தியத்தின் ஒளிக்கதிர்கள் வீசுமிடமாக விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் 20 கி.மீ. தொலைவில் கண்டமங்கலம் ரயில்வே கேட் அருகே உள்ளது சின்னபாபு சமுத்திரம் கிராமம்.பல ஆண்டுகளுக்கு முன் மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், மற்றும் பல நாடுகளிலும் ஸ்ரீ வைத்தியநாதனாக மக்களின் பலதரப்பட்ட நோய்களைத் தீர்த்து இப்பகுதிக்கு வந்து சேர்ந்தார். மகான் ஓம் ஸ்ரீ படேசாகிப் சித்தர் அமைதியுடையவர், ஆத்மஞானி, ஆத்மஞானியிடம் அமைதி சரணடைகிறது. அமைதியும் ஆனந்தமும் கலந்த சச்சிதானந்தத்தில் வாழ்வதே ஆத்மஞானியின் முடிவு. இறைவன் படைத்தவைகளில் கவனத்தைச் செலுத்தாது இறைவனிடம் கவனம் செலுத்துதலே சிறந்தது.
இப்புனித பெரியார் முஸ்லீம் மதத்தைச் சார்ந்தவர். இறைவனின் பேராற்றலை உணர்ந்த பிறகு சாதி, மதம், இனம் அறவே மறைந்துவிடும். படே என்றால் பெரிய என்று பொருள். உயர்ந்த இத்தகைய நிலையில் இருந்த உத்தமராக விளங்கியதால் இவரை பாபா படே சாயபு என்று அழைத்தனர்.ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மத ஒருமைப்பாட்டைக் காக்கும் சித்த புருஷரே ஸ்ரீ படேசாகிப் ஆவார். நோயாளிகளுக்கு விபூதி கொடுத்தே நோய்களைப் பறந்தோடச் செய்தார்.
இமயமலையின் அடிவாரத்தில் சுமார் 2000 அடி கீழே புதைத்திருந்த நிஷ்டதார்யம் எனப்படும் உளிபடாத கல்லை இறையருள் வழிகாட்டுதலால் இவர் தொட்டு அழகிய அருணாசலேஸ்வர் லிங்கமாக உருப்பெற செய்துள்ளார். இது இவரின் சமாதி அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவர் கையால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அற்புத விநாயகர் சிலை அளவில்லா அருளை வாரி வழங்கி வருகிறார். அவ்வூரில் மகான் படேசாகிப் ஆத்ம சாதனை செய்து இறைவனோடு கலந்துள்ளார். இவ்வூரில் மகானின் சமாதி மிக அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது.
பாம்புக்கு மோட்சம் அளித்த மகான் சிவஸ்ரீ பாபா படேசாகிப்:
ஒருநாள் வனத்தாம் பாளையம் சென்று பண்ணகுப்பத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வரப்பில் படுத்துக் கொண்டிருந்த ஒரு கருநாகம் மகானின் பாதத்தை தீண்டிச் சென்றது. அதைக் கண்டு அறுவடை செய்து கொண்டிருந்த மக்கள் நடுநடுங்கினார்கள். என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்று புலம்பினார்கள். ஆனால் மகான் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் போய்க் கொண்டே இருந்தார். மக்கள் அவர் கூடவே ஓடி, விஷ முறிவு மருந்து சாப்பிட வற்புறுத்தினார்கள். இதைக் கேட்ட மகான் புன்முறுவல் பூத்தார். மக்கள் ஆச்சரியத்துடன் அவர் கூடவே பண்ணகுப்பம் போய்ச் சேர்ந்தார்கள்.
இரவு முழுவதும் மகானை கவனித்துக் கொண்டு உண்ணாமல் உறங்காமல் கவலையோடு இருந்தனர். இரவு முழுவதும் மகானும் உறங்கவில்லை. மறுநாள் காலை அங்கு உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்றார். ஆனை முகத்தானை வணங்கினார். அவர் உடல் முழுவதும் நீலம் பரவி இருந்தது. பகவானிடத்தில், சர்வேஸ்வரனின் புதல்வனிடத்தில், ஞான சொரூபமான பெரிய பிள்ளையினிடத்தில் உள்ளாழ்ந்த வலுவான எண்ணத்தைச் செலுத்தினார். இமைகள் மூடிக்கொண்டன. நிஷ்டை நிலைக்கின்றது. ஒன்றும் ஒன்றும் ஒன்றில் ஒன்றாகிவிட்டது. ஒரே ஏகாந்த நிலை கூடுகின்றது. குணங்களற்ற நிலை, காலங்களற்ற நிலை வந்தெய்துகிறது.
அப்போது அவரைத் தீண்டிய அதே கருநாகம் ஆனந்தமாக கோயிலுக்குள் நுழைந்தது. பக்கத்திலுள்ளவர்கள் அலறியடித்து எழுந்தார்கள். மகான் ஆனந்த அனுபூதியில் நிலைத்திருந்தார். அந்த கருநாகம் யாரையும் எதுவும் செய்யவில்லை. மகான் அருகில் வந்தது, அவரை மூன்று முறை வலம் வந்தது. அது தீண்டிய இடத்தில் வாயை வைத்து விஷத்தை உறிஞ்சியது. உடனே விநாயக பெருமானை வலம் வந்தது. சுற்றி இருந்தவரகளை திரும்பி திரும்பி நோக்கியது. மகானின் சிரசின்மேல் ஏறி படம் எடுத்தது. மறுபடியும் இறங்கி மூன்று முறை தன் தலையால் அவரின் பாதத்தில் வணங்கியது. அவரது முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தது. ஒருமணிநேரம் கழித்து மகானின் கண்கள் மெல்லத் திறன்தன. நிஷ்டை கலைந்தது. தன்னை பார்த்துக் கொண்டிருக்கும் கருநாகத்தைப் பார்த்தார். அது உடனே அவர் கண்களை நோக்கி தன் உடம்பை சுருட்டி தலையைக் குனிந்து வணங்கியது. பின்னர் அவர் பாதத்தில் அப்படியே குனிந்தபடியே தன் உயிரை விட்டது.
அந்த நாகத்திற்கு மகான் தனது இரண்டு கைகளாலும் ஆசீர்வாதம் செய்து மோட்ச பதவியளித்தார். அதன் பூவுடலுக்கு தன் கைகளாலேயே இறுதிச்சடங்குகளும் செய்து முடித்தார். மக்கள் பிரமிப்புடன் இந்த நிகழ்ச்சியை கண்டனர். மரணத்தை வெல்லக்கூடிய சக்தி மகான் அவர் கையிலேயே வைத்திருந்தார் என்பதை புரிந்து கொண்டனர். கொடிய விஷத்தை கொடுத்த கருநாகத்திற்குகூட அவரால் மோட்சம் அளிக்க முடிந்தது.மேலும் அந்த ஊர் மக்களுக்கு விஷம் தீண்டாதபடியும், தீண்டினாலும் அது அவர்கள் உடலில் ஏறாதபடியும் விஷ ஜந்துக்களுக்கு ஆணையிட்டு ஆசீர்வதித்தார். மக்களின் மனதில் அந்த ஆத்மஞானி தெய்வம் என்ற நிலையில் வைத்து போற்றப்பட்டார். இன்றளவும் போற்றப்படுகிறார்.
ஒவ்வொரு வாரமும் வருகிற செவ்வாய்கிழமையும், ஒவ்வொரு மாதம் வருகிற ஆயில்ய நட்சத்திரமும் சித்தர் பீடத்தின் முக்கிய விசேஷ நாட்கள் ஆகும். ஒவ்வொரு மாதமும் வருகிற ஆயில்ய நட்சத்திரத்தில் சித்தர் பீடத்தை மகான் தேரில் பவனி வருகிறார். ஒவ்வொரு வாரம் வருகிற வியாழன், ஞாயிறு விசேஷ நாட்கள் ஆகும். கொடிய தொற்று நோய்கள், தீராத வியாதிகள் போன்றவற்றால் அவதியுறுவோர் செவ்வாய், வியாழன், ஞாயிறு கிழமைகளில் தரிசனம் செய்து இயன்ற அளவு அன்னதானம் நீர்மோர், பிஸ்கட், பழவகைகள் தானம் செய்தால் உத்தமமான பலன் கிடைக்கும். வேண்டுதலுடன் வருவோர் 5 செவ்வாய் கிழமை சித்தர் பீடத்தில் இரவு தங்கி சென்றால் உத்தமமான பலன் கிடைக்கும்.
அமைவீடம் : விழுப்புரம் இருந்து கண்டமங்களத்திற்கு பஸ் வசதி உள்ளது புதுவை மாநிலத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் உள்ளது
தொடர்புக்கு:
பூசாமி முருகேசன்
செல் : 9443460460.
டாக்டர் ராம்மணி ரத்தினம்
செல் : 9442779895.
செய்தி:பரசுராமன்.
படம்: வசந்த்.
The post கல்லை தொட்டு லிங்கமாக மாற்றிய மகான் பாபா படேசாகிப்!! appeared first on SWASTHIKTV.COM.
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்
9962081424
The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 24/06/2016 appeared first on SWASTHIKTV.COM.
விழுப்புரம் அடுத்துள்ள பனையபுரத்தில் புறவம்மையுடன் பனங்காட்டீஸ்வரர் அருள்பாலிக்கிறார் இவருக்கு வடமொழியில் நேத்ரோதாரக சுவாமி எனவும் தமிழில் கண்ணமர்ந்த நாயனார் எனவும் அழைக்கப்படுகின்றார். கண்களைக் காத்து அருளியவர் என்று இதற்குப் பொருள். எனினும் பழுதுபட்ட பார்வையர், முற்றிலும் பார்வை இழந்தவர், மூலவரின் தாமரைத் தாள்களில் கதியற்றுச் சரண் புகுந்தால் கண்ணொளி வழங்கி காத்து அருள்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை தேவாரம் பாடிய மூவருள் ஓருவரான திருஞானசம்பந்தர் இவ்வூரைப் புறவார் பனங்காட்டூர் என அழைக்கின்றார். இவ்வாலயத்தேடு பிணைந்து நிற்கும் மரபுவழிக் கதையினின்றும் இப்பெயர் தோன்றியுள்ள காரணத்தால் திருப்புறவார் பனங்காட்டூர் என்பதே இதன் முதற்பெயராக இருந்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது.
இக்கோயிலின் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களில் இப்புனிதத் திருவிடம் பல பெயர்களால் குறிப்பிடப்படப்பட்டுள்ளது. கோயில் மூலதனத்தில் தென்புறச்சுவரில் இரண்டாம் இராசேந்திரனின் (கி.பி.1052-64) ஆறாவது ஆட்சி ஆண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஓன்று இவ்வூரைப் பரவைபுரம் எனக் கூறுகின்றது. முதலாம் இராசேந்திர சோழனின் அருமை நாயகி பரவைநங்கையின் பெயரால் இவ்வூருக்குப் பரவைபுரம் என பெயர் அளிக்கப்பட்டிருக்கலாம். பரவைநங்கையின் பிறந்த நாளை நினைவூறும் வண்ணம் சித்திரைத் திங்களில் சோதித்திருநாள் என்ற விழா இக்கோயிலில் கொண்டாடப்படுகிறது.சோழப்பேரரசிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் புலப்படுகின்றதோ நடுநாட்டின் நாடுகளின் ஓன்றான பனையூர் நாட்டின் தலைமைப் பணியிட மையமாகப் பனையபுரம் இருந்திருக்கலாம் என்றும் அந்நகரின் ஓரு பகுதியாய் அமைந்துள்ள கோயில் வளாகமும் அதைச் சுற்றியுள்ள இடமும் பரவைபுரம் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதுகின்றனர், விக்ரமதேவன் என்ற புனைப்பெயர் கொண்ட பாண்டிய மன்னன் மாறவர்மனின் கல்வெட்டில் இவ்வூர் அதன் மூலப்பெயரான புறவார்பனங்காட்டூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. சூரியன் ஓளியை சிவபெருமானின் மீது பொழிந்து வழிபட்டு முக்தியடைந்த தலம்
இக்கோயிலுடன் தொடர்புடைய மரபுவழிக் கதைதான் இதன் பழமையை புலப்படுத்துகிறது. இத்திருத்திலத்தில்தான் பகலவன் தன் ஓளிக்கதிர்களைச் சிவபெருமானின்மீது பொழிந்து வழிபட்டு முக்தியடைந்தான் என நம்பப்படுகிறது. சித்திரை திங்களின் முதல் ஏழு நாட்களில ஏழு ஞாயிறு தன் ஓளிமிக்க கதிர்களை இக்கோயிலின் இறைவர்மீதும் பின்னர் இறைவியின் மீதும் பொழிவது இம்மரபினை உறுதி செய்கிறது. இத்திருத்தலத்திற்குப் புனிதம் ஊட்டுகிறது. இக்கோயிலின் கட்டட அமைப்பே இச்சிறப்பியல்பிற்கு காரணம். இதனைக் கருத்தில் கொண்டே இக்கோயிலின் கருவறை கட்டப்பட்டுள்ளது. மூலவர் மீது சித்திரை முதல் ஏழு நாள்களில் கதிரவனின் ஓளிக்கற்றை விழும் வகையில் மரப்பலகையினால் ஆன சாளரங்கள் அர்த்த மண்டபத்தின் முகப்பில் பொறுத்தப்பட்டுள்ளன.
ஏன் இவ்வூர் பனங்காட்டூர்
காடு என்னும் பெயரோடு தமிழகத்தில் பல ஊர்கள் விளங்குகின்றன. திருமறைக்காடு, மாங்காடு,சாயக்காடு, திருவாலாங்காடு போன்றவற்றைக் கூறலாம். காடு சார்ந்த எர்களாக அவைகள் இருந்திருக்கலாம். அதேபோல் பனங்காட்டூர் என்பது பனை மரங்கள் அடர்ந்த காட்டினிடையே அமைந்த ஊர் என பொருள்படும். புறவார் என்ற தொடருக்கு காடு நிறைந்த என்ற பொருளும் உண்டு. பனங்காட்டூர் எனும் பெயர் பனை என்ற சொல்லடிப்படையில் தோன்றியிருக்க வேண்டும் என நம்பக் காரணம் உண்டு. இன்றும் இக்கோயிலின் தலவிருட்சமாகப் பனைமரம் திகழ்கின்றது. புறவார் என்னும் அடைமொழியைப் புறவு+ஆர் எனப் பிரித்தால், புறா நிறைவுற்ற ன்ற பொருளைத் தரும். இப்புனித மண்ணில்தான் பண்டைக்கால மாமன்னன் சிபி, வேடனால் விரட்டப்பட்டுத் தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவிற்கு தன் உடலில் உள்ள தசை அனைத்தையும் தந்து தன் இன்னுயிரையும் இழக்கத் துணிந்தான். அவனுடைய கருணை உள்ளத்தைத் பாராட்டி இத்திருக்கோயிலின் இறைவர் முக்தி அளித்தார் என புராணம் புகல்கின்றது. இத்தொன்மை நகரின் பெயரோடு இணைந்துள்ள புறவார் எனும் சொல் சிபி மாமன்னனின் மரபுவழிக் கதைக்கு வரலாற்றுப் பொருளை வாரி வழங்குகிறது.
தலைமை தெய்வம்:-
இக்கோயிலின் மூலவர் வடமொழியில் நேத்ரோதாரக சுவாமி எனவும் தமிழில் கண்ணமர்ந்த நாயனார் எனவும் அழைக்கப்படுகின்றார். கண்களைக் காத்து அருளியவர் என்று இதற்குப் பொருள். எனினும் பழுதுபட்ட பார்வையர், முற்றிலும் பார்வை இழந்தவர், மூலவரின் தாமரைத் தாள்களில் கதியற்றுச் சரண் புகுந்தால் கண்ணொளி வழங்கி காத்து அருள்வார் என்பதே இதன் விளக்கவுரை பக்தனின் பார்வையை மிகப்பெரும் ஆன்மீக உயர்வு நிலைக்கு எடுத்து செல்கின்ற இறைவர் என்பது இதன் ஆழ்ந்த உட்கருத்து.
“பண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்
பெண்ண மர்ந்தொரு பாக மாகிய
பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடைக்
கண்ணமர்ந் தவனே கலந்தார்க் கருளாயே”
என்ற திருஞானசம்மந்தர் தேவாரப்பாடலினால் நெற்றிக் கண்ணுடைய சிவன் கண்ணமர்ந்த நாயனார் எனவும் பொருள் கொள்ளலாம்.
இக்கோயிலின் இறைவி தமிழில் மெய்யம்மை என்றும் வடமொழியில் சத்தியாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார். இவரை இவ்வூரின் காவல்தெய்வம் என மக்கள் கருதுகின்றனர். யாரேனும் இவ்வருள் தெய்வத்தின் முன் பொய் பேச முற்படுவாராயின் உறுதியாக விரைவில் அவர் மரணம் ஏய்துவார் என இப்பகுதி மக்கள் இன்றளவும் நம்புகின்றனர்.
சோதித் திருநாள்:-
முதலாம் இராசேந்திரனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு பின்னர் அரசி எனும் உயர்நிலை பெற்ற பரவை நங்கையின் பிறந்த நாளை நினைவு கூறும் சோதித் திருநாள் விழா சித்திரை மாதத்தில் நடைபெறும். இவ்விழா இப்போது கைவிடப்பட்டதன் காரணம் புலப்படவில்லை.
சூரிய பூசை:-
சித்திரைத் திங்கள் முதல் நாள் அதாவது தமிழ்ப்புத்தாண்டின் தொடக்க நாளில் இக்கோயில் விழாக்கோலம் பூண்டு நிற்கிறது. அந்நாளில் முன்னர்க் குறிப்பிட்டது போல் ஏழு ஞாயிறு இவ்வாலயத்தின் இறைவர்மீதும், இறைவியின் மீதும் தன் ஓளியை வீசுகிறான். சித்திரைத் திங்கள் முதல் வாரம் நிகழும், இவ்விழாவே புகழ்மிக்க சூரிய பூசையாகும். இது ஆண்டுதோறும் எண்ணிறந்த பக்தர்களை கவர்கிறது.
பிட்டுத்திருவிழா:-
இவ்வூர் மக்களின் கண்ணிற்கு விருந்தாக அமையும் விழாக்களில் ஓன்றே பிட்டுத் திருவிழா, சிவபெருமானின் திருவிளையாடல்களில் ஓன்றினை சித்தரிக்கவே ஆவணி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
அமைவிடம்:-
விழுப்புரம் அருகே 10வது கி.மீட்டரில் உள்ளது. சென்னை தஞ்சாவூர் சாலையும் விழுப்புரம் வழுதாவூர் சாலையும் சந்திக்கும் இடத்தில் பனையபுரம் உள்ளது.
தொடர்புக்கு :-
கணேசன் – 9047126552
செய்தி:பரசுராமன்.
படம்: வசந்த்.
The post பார்வை தரும் பனங்காட்டீஸ்வரர் appeared first on SWASTHIKTV.COM.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ளது திருமங்கலக்குடி. இங்கு சிவபெருமான் பிராணநாதர் என்ற பெயருடனும், அம்பாள் மங்களநாயகி என்ற திருநாமத்துடனும் எழுந்தருளியிருக்கிறார்கள். இத்தல இறைவனும், இறைவியும் நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தையும் போக்கி அருள்பாலிக்கிறார்கள். திருமணத்தடை, கல்விக் குறைபாடு, வேலை வாய்ப்பின்மை, குழந்தை பேறு இல்லாமை, கணவன்– மனைவி ஒற்றுமையின்மை, தொழிலில் சரிவு போன்ற கிரகங்களின் சஞ்சாரத்தில் ஏற்படும் துன்பங்கள் அனைத்தையும் களைந்து புதிய வாழ்க்கை அளிப் பதில் இத்தல இறைவன் தன்னிகரற்று விளங்குகிறார்.
The post தோஷங்கள் நீக்கும் திருமங்கலக்குடி பிராணநாதர் appeared first on SWASTHIKTV.COM.
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்
9962081424
The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 25/06/2016 appeared first on SWASTHIKTV.COM.
பதஞ்சலி முனிவர் ;
ஒருநாள் திருமால் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருந்தபோது தமது அறிதுயில் (யோக நித்திரை) நீங்கி, அரகர ‘சிவசிவ’ என்னும் திருப்பெயர்களைச் சொல்லி, கைகளை தலைக்குமேல் குவித்து வணங்கி கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக பத்மாசனம் என்னும் நிலையில் எழுந்தருளினார். அங்கு அவர் மனமகிழ்ச்சியுடன் எழுந்தருளியிருக்கும் நிலைக்கு காரணம் யார்? என திருமாலும், ஆதிசேஷனுடன் பிரம்ம தேவனும் வினவினர். அதற்கு திருமால், சிவபெருமான் வன முனிவர்களின் செருக்கை அடக்கி திருத்துவதற்காக பிச்சை தேவர் (பிட்சானர்) வடிவங்களை கொண்டு சென்றதனையும், வன முனிவர்கள் தம் செருக்கடங்கிப் பணிந்தபோது சிவபெருமான் பயங்கர நிருத்தம், சுத்த நிருத்தம், அநுக்கிரக நிறுத்தம் என்று திருநடனங்களை செய்தருளியதை கூறி, அவைகள் எல்லாம் இப்போது என் நினைவில் எழுந்தன என்று விவாதித்தார். இந்நிலையில் சிவனின் திருநடனங்களை பற்றி திருமால் சொன்னதை கேட்டு வியந்த ஆதிசேஷனின் பக்தி உணர்வை கண்டு மகிழ்ந்த திருமால் ‘சிறந்த பக்தனாகிய நீ சிவனின் திருநடனத்தை கண்டுகளிக்க அவரை நோக்கி தவம் செய்து அருள் பெறுக’ என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். அதன்படி ‘புத்திர பாக்கியம்’ விரும்பி தவங்கிடந்த அத்திரி மனைவி அநசூயை என்பவளின் கைகளில், ஐந்து தலைகள் கொண்ட ஒரு சிறு பாம்பாக கைகளில் விழுந்ததை கண்டு அஞ்சி கையை உதறினார். அப்போது சிறு பாம்பாகிய ஆதிசேஷன் அவளது கால்களின் மேல் விழுந்ததினால், ஆதிசேஷன் பதஞ்சலி (பதம் – கால்; சலித்தல் – விழுந்தல்) என்ற பெயர் பெற்று, அத்திரி முனிவருக்கும் அநசூயா தேவிக்கும் மகனாக வளர்ந்து வந்தார். பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதரைப்போல் தில்லை கூத்து பெருமான் நடனத்தை காண பெரும் தவம் புரிந்து வந்தார். உணர்ச்சி ஒற்றுமையின் காரணமாக, வியாக்கிரபாதரும் பதஞ்சலி முனிவரும் இணையற்ற இனிய நண்பர்களானார்கள். இருவரும் பல தலங்களில் வழிபட்டு வந்தனர். கோடம்பாக்கம் புலியூரில் எழுந்தருளியுள்ள வேங்கீஸ்வரனை பன்னெடுங்காலம் வழிபட்டு வந்தனர்.கல்வியின் பயனும் கடவுளை வழிபடுதலும்
ஒரு காலத்தில் மத்தியந்தர் எனும் மாமுனிவர் இருந்தார். அவருக்கு மழ முனிவர் (இளம் குழந்தை) என்பது அவர் தந்தையிடம் நான்கு வேதம், ஆறு அங்கம், பீமாம்சை, புராணம், தருக்கம், தரும சாஸ்திரம் என்று பல கலைகளை கற்றுத் தேர்ந்தார். கல்வியின் பயன் கடவுளை வழிபடுதலும், கடவுளின் அருளை பெறுதலும் என உணர்ந்தார். இதனால் மண்ணுலகில் உள்ள புண்ணிய தலங்களை எல்லாம் தரிசித்து வணங்கவும், இறைவனை பூஜித்து வழிபடவும் விரும்பினார். பூக்களை பொழுது விடிந்து எடுத்தால் வண்டுகள் தீண்டும். இரவில் எடுக்க சென்றால் வழி தெரியாது. கோங்கு முதலான மரங்களில் மலர் பறிக்கலாமெனில் அவற்றின் அடி மரம் உயர்ந்து வளர்ந்திருப்பதால் மரத்தில் ஏறினால் கையும், காலும் பணியால் வழுக்கும். என்ன செய்யலாம் என எண்ணினார். முடிவில் இறைவனை துதித்து போற்றி ‘அடியேன் உமக்கு ஏற்ற இனிய மலர்களை பறித்து பூஜை செய்வதற்கு பயன்படும் வகையில் எனக்கு கையும், காலும் புலியை போல வலிமையான நகங்களை பெறவும், அவைகளை காணும் திறன் மிக்க கண்கள் அமைய வேண்டும் என்று வேண்டினார். அதற்கு இசைந்து இறைவன் அவ்வாறே அருளினான். மலர்களை பறித்து பழிபட்டு வந்தார். இவருக்கு புலிக்கால் முனிவர் (வியாக்கிரபாதர், வியாக்கிரம் – புலி; பாதம் – கால்) என்று பெயர் வந்தது.
சாந்தநாயகி சமேத வேங்கீஸ்வரர்:
சென்னை கோடம்பாக்கத்தில் புலியூர் என்னும் இடத்தில் வேங்கீஸ்வரர் கோவில், மிக பழமை வாய்ந்தது. பெரிய புராணம் பாடிய சேக்கிழார் காலத்திற்கு முன்பே, சோழப் பேரரசர்கள் காலத்திலேயே, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே புலியூரும், வேங்கீஸ்வரர் கோயிலும் புகழ் பெற்று விளங்கியுள்ளது. புலிக்கால் முனிவர் பல புண்ணிய தலங்களை தரிசித்து கொண்டு வந்து, தில்லை நடராஜனை வழிபட்டு அருள்பெறுவதற்கு முன் இங்கு நெடுநாள் தங்கி தன் பெயரால் ஒரு சிவலிங்கத் திருமேனியை உருவாக்கி, வழிபட்டு வாழ்ந்து வந்தார். புலிக்கால் முனிவர் தங்கி வழிபாடு செய்த இடம் என்பதால் இதற்கு புலியூர் என்றும், இங்குள்ள சிவபெருமானுக்கு புலியூருடையார் என்று பெயர் பெற்றது. புலியூர் என்பது வியாக்கிரபுரி எனவும் இறைவனின் பெயர் வியாக்கிரபுரீஸ்வரர் எனவும், புலியூருக்கு வேங்கைபுரம் எனவும், அங்குள்ள இறைவனுக்கு வேங்கீஸ்வரர் என பெயர்கள் அமைந்தது. எனவே புலியூருடையார், வியாக்கிரபுரீஸ்வரர், வேங்கீஸ்வரர் என்ற பெயர்கள் சிவபெருமானக்குரிய திருப்பெயர்களாகும். இப்போதும் கோடம்பாக்கத்தில் புலியூர் என்னும் இடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கோடம்பாக்கம் பெயர் வந்தது எப்படி?
சென்னையில் இன்று பரபரப்பாக இருக்கும் பகுதி கோடம்பாக்கம் என்பது யாவரும் அறிந்ததே. கோடம்பாக்கத்தின் பெயர் காரணம் பற்றி தல புராண முறையில் பல வகையான விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன.சிவபெருமான், திரிபுர அசுரர்களை அழிப்பதற்காக மலையை வில்லாக்கி வளைத்த இடம் கோடம்பாக்கம் (கோடு+அம்பு+ஆக்கம்=கோடம்பாக்கம்) கோடு-மலை என்று கூறுவர் சிலர். ஆதிசேஷனின் வழியில் வந்த கார்கோடன் என்னும் நாக அரசன் (திருமாலை வழிபட்ட இடம் (கோடகன் +பாக்கம் = கோடம்பாக்கம்) என்று கூறுவர். இதற்கு அடையாளமாக ஆதிமூலப்பெருமாள் என்னும் பெயரில், இங்கு திருமால் கோயில் கொண்டு எழுந்தருளியிருத்தலை, இவர்கள் தம் கருத்துக்கு சான்றாக கருதுகின்றனர்.
இலக்கியங்களில் இது ‘கோடலாம் பாகை’ எனவும், ‘கோடல்’ எனவும் குறிப்பிடப்பெற்றுள்ளது. ‘பாகை’ என்பது ‘பாக்கம்’ என மாறி ‘கோடலாம் பாக்கம்’ என்பது இன்று கோடம்பாக்கம் என்று அழைக்கப்படுகிறது.புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து வேங்கீஸ்வரரை வேண்டினால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். மேலும் சுமங்கலிகள் தொடர்ந்து வேண்டி வழிபட்டு நீண்ட ஆயுள் பெற்று வருவதாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிவன் மீது நம்பிக்கை வைத்து இங்கு வந்து செல்கின்றனர்.
தொடர்புக்கு ; 044-6587284
செய்தி:பரசுராமன்.
படம்: வசந்த்.
The post ஆதிசேஷனிடம் சிவனின் திருநடனத்தை காண தவம் செய் என்று கூறிய திருமால் appeared first on SWASTHIKTV.COM.
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்
9962081424
The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 28/06/2016 appeared first on SWASTHIKTV.COM.
கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் கிராமத்தில் பெரி ஏரிக்கரையோரத்தில் ஆல மரத்தடியில் அருள் பாளிக்கும் அருள் மிகு ஸ்ரீ அழகு முத்தையனாரப்பன் ஆலயம் உள்ளது. சித்தர் கடைசியாக மக்களிடத்தில் நான் உங்களின் நலனுக்காக நான் ஆண்டவரிடம் வேண்டி கொள்ள போகிறேன் என்று கூறி விட்டு பெருமான் இவ்வாலயத்தில் உள்ள கிணற்றில் இறங்கிவிட்டார் சித்தர் பெருமான் வெகுநேரம் ஆகியும் காணவில்லை என்று அங்கிருந்த பக்தர்களும், ஊர் மக்களும் பதறிக் கொண்டு கிணற்றில் இறங்கி தேட ஆரம்பித்தனர் சித்தர் பெருமான் கிடைக்கவில்லை.பிறகு தான் தெரிந்தது சித்தர் பெருமான் பஞ்ச பூதங்களில் ஒன்றான (வருணம்) நீரில் தன் உடலை மறைத்து அருட்பெரும் ஜோதியாகிவிட்டார் என்ற உண்மை. 300 ஆண்டுகளுக்கு முன்பு அடார்ந்த வன பகுதியாக இருந்தது அந்த காலத்தில் தான் ஸ்ரீ அழகர் சித்தர் பெருமான் இந்த ஆலயத்தில் வந்து தங்கினார் வெகுகாலம் தொண்டு செய்து வந்தார் கோயிலுக்கு வரும் பக்தர்களின் குறைகளை கேட்டு அவற்றை நீக்கியும், பேய், பிசாசு ஓட்டுவதும், பாம்புகடி போன்ற விஷக்கடிகளை அகற்றியும் நோய்களை தீர்க்கும் ஒரு மருத்துவராகவும் திகழ்ந்தார்
சித்தர் பெருமான் ஒவ்வொரு திங்கட்கிழமையும் விரதம் மேற்கொள்வது வழக்கமாக வைத்திருந்தார் மற்ற தினங்களில் காலை நேரத்தில் ஊருக்குள்ளே சென்று யாசகம் செய்து அதில் வரும் அரிசியை பொங்கி அருள் மிகு ஸ்ரீ அழகு முத்தையனாருக்கு நெய் வேத்தியம் செய்து பின் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொடுத்தப்பின் மீதம் மீந்த உணவை சாப்பிடுவது வழக்கமாக வைத்திருந்தார் சித்தர் பெருமான் சித்து விளையாட்டில் வல்லவராக திகழ்ந்தார் சித்தர் பெருமான் அவதரித்த தினம்மான சித்தரை மாதம் முதல் திங்கட்கிழமையாகும். அதே நன்னாளில் ஊர் பொது மக்கள் அனைவரையும் அழைத்து உபதேசம் செய்து விட்டு. சித்தரர்பெருமான் இரண்டும் கலந்து ஒளியாய் மாநில விஷயம் அறிந்து அருகில் உள்ள கிராம மக்கள் வர ஆரபித்துவிட்டனர் பின் திங்கட்கிழமை அன்று சித்தர் ஜீவ சாமாதி அடைந்த அந்த கிணற்றை கண்டு தாரிசனம், செய்வதும் அந்த கிணற்றிற்கு பால், பன்னீர் போன்ற திரவியங்கள் அபிஷேகம் செய்வதும் வழக்காமாயிற்று. பிற்காலத்தில் அந்த கிணற்றுக்கு அபிஷேகம் செய்யும் திரவியம் போகும் அளவிற்கு மூன்று துவாரம் வெளிவிட்டு கற்களால் மேடை அமைக்கப்பட்டது. அன்று மூடப்பட்ட அந்த கிணறே மூலஸ்தானமாக இன்றும் திகழ்கிறது.
ஸ்ரீ அழகர் பெருமான் கிணற்றில் இறங்கி இறைவனுக்கு இரண்டுர கலந்து ஜோதியான தினமான சித்தரை மாதம் முதல் திங்கள்கிழமை திருவிழா தினமாகவும், குரு பூஜை தினமாகவும் கொண்டாடப்படுகிறது. திருமணமாகத 5 கன்னி பெண்களின் கையால் ஸ்ரீ பூரணி, பொற்கலைக்கு மாங்கல்யம் கட்டப்படும், அடுத்த ஆண்டுக்குள் இந்த ஐந்து கன்னி பெண்களுக்கும் திருமணம் நடக்கும் என்பது ஐதிகம். இவ்வாலயத்தில் ஆலமரமே ஸ்தல விருட்சமாக திகழ்கிறது. இந்த ஆலயத்தில் சித்தர் பெருமானே முலவராக இருந்து அருள் பாலிக்கிறார் இங்கு நவகிரக பாரிகார ஸ்தலமும், அருள் மிகு ஸ்ரீ அழகு மீனாட்சி உடணுறை சுந்தரேஸ்வரா ஆலயமும் உள்ளது. இந்த சிவாயலயத்தில் பிரதோஷ சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. இவ்வாலயத்தில் உள்ள அழகுமுத்தையனாரின் நோர்; எதிரில் (கிழக்கு) திசையில் தென்மை தொப்பில் சுயம்புவாக துர்க்கை தோன்றி அருள்பாளிக்கிறார்
சிலை கோவில்:
கோயிலில் அருள் பாலிக்கும் ஸ்ரீ அழகுமுத்தையனர் பில்லி, சூனியம் நீக்கியும், குழந்தை வரம் அருளும் கடவுளாக காட்சி அளிக்கிறார் குழந்தை இல்லை என்று வரும் தம்பதியா இங்கு வந்து வேண்டி கொண்டு சித்தர் ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் தொட்டில் கட்டி வேண்டி கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை போன்று சிலை அமைத்து நோர்த்தி கடன் செலுத்துவது வழக்கம். எனவே இந்த கோவிலுக்கு சிலை கோவில் என்றும் ஒரு சிறப்பு பெயரும் உண்டு.பக்தர்கள் தங்கள் குறைகளை ஒரு காகிதத்தில் எழுதி ஸ்ரீ அழகு முத்தையனார் கத்தியில் கட்டினால் குறைகள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். இங்கு பக்தர்கள், மருத்துவர்காளகவும், காவல் துறை உயார் அதிகாரியாகவும், கம்யூபிட்டர் இன்ஜினியர்களாகவும் வேலை கிடைக்க வேண்டிக் கொண்டு பிராத்தனை நிறைவேறியுடன் மருத்துவர் போன்றும் காவல் துறை அதிகாரி போன்றும் சிலை வைத்து நோர்த்தி கடன் செலுத்துகின்றனர்.
இக்கோயிலின் மூலஸ்தானமாக ஸ்ரீ அழகர் சித்தர் ஜீவ சாமதி அடைந்த அந்த கிணற்றில் மேல் உள்ள மேடைக்கு தினசரி காலையில் அபிஷேகம் ஆராதணை நடைபெறுவது வழக்கம். அபிஷேகம் நடந்தவுடன் அலங்காரம் செய்யும் பொழுது அந்த மேடையில் மேல் விபூதியாலான மூன்று பூசை போடப்படும். அவ்வாறு போடப்படும் பூசை மறு நாள் அபிஷேகம் செய்யும் வரை ஈரபதத்துடன் காணப்படுவது சிறப்பு. இவ்வாலயத்தின் மேல் கூரை இன்றளவும் யாராலும் போட முடியவில்லை மேல் கூரையின் துவாரத்தில் வழியாக சூரியன் ஒளி இந்த ஜீவ சாமதி அடைந்த கிணற்றின் மேல் படுவது சிறப்பு. அழகர் சித்தர் பெருமான் ஜீவ சாமதி அடைந்த காரணத்தால் இவ்வாலயத்தில் உள்ள ஸ்ரீ அழகு முத்தையனாருக்கு உயிர் பலி இடும் வழக்கம் இல்லை.
பல்லி வடிவில் வந்து உத்தரவு :
தைத் திங்கள் இரண்டாம் நாள் மாட்டு பொங்கள் அன்று பண்டிகை முடித்துவிட்டு மாலை ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி மேளதாளத்துடன் மங்கள இசை முழங்க ஆலயத்திற்கு வந்து அருள்தரும் ஸ்ரீ அழகு முத்தையனாருக்கு மாலை அணிவித்து படையிலிட்டு பதிகம் பாடப்படும். இந்நிகழ்ச்சியில் ஊர் ஷேமத்திற்காக உத்தரவு கேட்கப்படும். கலியுக கடவுளான ஸ்ரீ அழகு முத்தையனார் பல்லி வடிவில் வந்து உத்தரவு கொடுப்பது சிறப்பிலிலும் சிறப்பு.
அமைவிடம்:
இத்திருத்தலம் கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து கன்னியகோவில், பாகூர் வழியாக தூக்கணாம்பாக்கம் வழியாகவும் வந்து செல்லலாம்
புதுச்சோயிலிருந்து தவளக்குப்பம் வழியாக ஏம்பலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 1 கீலோ மீட்டா தொலைவில் உள்ளது.
தொடர்புக்கு;
எம்:இரமேஷ் – 9787616787
எஸ்.குமார் பூசாரி-9585746271 செய்தி : ப.பரசுராமன்
படம் : ப.வசந்த்
The post கிணற்றில் இருந்து அருள் தரும் அழகர் சித்தர் appeared first on SWASTHIKTV.COM.
முற்காலத்தில் பாண்டவர்கள் வனவாசம் வந்த போது இந்த பகுதியில் எங்கும் வறட்சி ஏற்பட்டு குடிக்க நீர் இன்றி தவித்த போது கல்கி பகவதி அம்மன் தன் இரு குமாரர்களுடன் குறத்தி வடிவில் வந்து இங்குள்ள தீர்த்தத்தை பாண்டவர்களுக்கு அருளி மறைந்ததாகவும் பாண்டவர்கள் அம்மன் தீர்த்தம் பருகி தாகம் தீர்த்ததாகவும் ஓரு வரலாறு கூறுகிறது.வேலூர் நகரம் பல வரலாற்றுச் சிறப்புகளை கொண்டுள்ளது. குறிப்பாக வேலூர் கோட்டை கட்டட கலைகளுக்கும், இந்திய சுதந்திர வரலாற்றுக்கும் பெயர் பெற்ற ஊராகும். இவற்றுக்கு அடுத்ததாக வரலாற்று சிறப்புமிக்க ஒம் கல்கி பகவதி அம்மன் ஆலயம், வேலூர் மலைக்கோவிலில் அமைந்துள்ளது. இந்த கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்பதை இங்குள்ள கல்வெட்டு செய்தி நமக்கு தெரிய வருகிறது.
தலவரலாறு:-
இக்கல்வெட்டு இராட்டிரகூட மன்னன் (மூன்றாம் கிருஷ்ணன்) கன்னரதேவன் இவனது 26-வது ஆட்சியாண்டில் (கி.பி.965) பொறிக்கப்பட்டதாகும். படுவூர்க் கோட்டத்தை சேர்ந்த பங்கள நாட்டில் வட பகுதியில் உள்ள வேலூர் பாடி எனும் இந்த ஊரை, இந்த மலை மீதுள்ள ஈஸ்வரன் கோயிலுக்கு தானமாக சந்திரன், சூரியன் உள்ளவரை கொடுத்தான் நுளம்பன் திரிபுவன வீரனாகியவன். அந்நாளில் வேலூர்பாடி என்பதே மருவி வேலப்பாடி என்றானது. இந்த மலைக்கு கீழ் உள்ள பகுதி வேலப்பாடி ஆகும். விஜயநகர அரசர்கள் காலத்தில் வேலூர்பாடி என்பதை சுருக்கி வேலூர் என்றும் அழைக்கலாயினர். பின்னாளில் ராயர்கள் என்ற பரம்பரை என்ற பரம்பரை ஆட்சி செய்ததால் ராயவேலூர் என்றும் அழைத்து வந்தனர்.வேலூர் நகரின் பழமைக்கு இந்த கல்வெட்டு சான்றே முதன்மையாக உள்ளது. இந்த மலையை காலந்தொட்டே பகவதி மலை என்று அழைத்து வருகின்றனர். இந்த பழமையான கோயிலில் 2001-ம் ஆண்டு முதல் ஆம் கல்கி பகவதி அம்மன் பிரதிஷ்டை செய்து வருகின்றார்.
இங்கு ஒம் கல்கி பகவதி அம்மன் லிங்க உருவத்தின் மத்தியில் அமர்ந்து காட்சி தருகிறாள். வலப்புறம் ஸ்ரீவிநாயகரும், இடப்புறம் ஸ்ரீமுருகரும் நின்ற நிலையில் காட்சி தருகின்றனர். இவர்களுக்கு முன்பாக ஸ்ரீமுகலிங்கம் அமைப்பில் முகம் உள்ள சிவனாக காட்சி தருகிறார் ஈஸ்வரர். இந்த அமைப்பு தென்னிந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வடிவம் ஆகும். பகவதி அம்மனின் கடைசி அவதாரமாக ஒம் கல்கி பகவதி அம்மன் என குறிப்பிடப்படுகிறது. இந்த மலையில் அழகிய பாறைக்குள் இயற்கையில் உருவாகி உள்ளன. மலைமீது மக்கள் தாகம் தீர்க்கும் அம்மன் தீர்த்தம் வற்றாத சுனை உள்ளது.மன்னர்கள் வணங்கி வழிபட்ட, அம்மன் பாதம், பாறை விநாயகர், ராஜநந்தி இவற்றை மக்கள் வணங்கி அருள்பெறுகின்றனர். இயற்கையில் மலையே அழகாக அமைந்துள்ளது. அங்கிருந்து பார்த்தால் வேலூர் அழகாக தெரியும். மலையேறி செல்ல பழங்கால படிக்கட்டுகள் உள்ளன. ஞாயிற்றுகிழமை தோறும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
முன்னொரு காலத்தில் பாண்டவர்கள் வனவாசம் வந்த போது இந்த பகுதியில் எங்கும் வரட்சி ஏற்பட்டு குடிக்க நீர் இன்றி தவித்த போது பகவதி அம்மன் தன் இரு குமாரர்களுடன் குறத்தி வடிவில் வந்து இங்குள்ள தீர்த்தத்தை பாண்டவர்களுக்கு அருளி மறைந்ததாகவும் பாண்டவர்கள் அம்மன் தீர்த்தம் பருகி தாகம் தீர்த்ததாகவும் செய்தியாக தெரிவிக்கின்றனர். இன்றும் இந்த தீர்த்தமே வரும் பக்தர்களின் தாகத்தை தீர்க்கிறது. இங்கு கோயிலில் குடும்பத்துடன் இறைவன் காட்சி அளிப்பதால் இங்குவரும் பக்தர்களும் குடும்பத்துடன் வணங்கி அம்மன் அருள் பெறுகின்றனர்.இங்கு தலமரம் கிடையாது. அதற்கு பதிலாக பச்சை கொடி எனப்படும் (ஓணான் கொடி) மக்கள் தன் உடலில் சுற்றிவந்து வணங்குகின்றனர்.
நகை வைத்து படைத்தால் நகைகள் அதிகரிக்கும்:-
இந்த அம்மனை வணங்கினால் தீராத நோய்கள் தீரும். குடும்பம் செழிக்கும். செல்வம் பெறுகும். இங்குள்ள நந்தி அதிக நகைகளை அணிந்துள்ளதால் இந்த கோயிலில் நகைகளை வைத்து வணங்கி எடுத்துச் சென்றால் அதிக நகைகள் சேரும் என்பது ஐதீகம். திருமணத்திற்கு வாங்கும் புதிய தாலியும் நகைகளும் ஆடைகளும் இங்கு வைத்து பூஜை செய்து பிறகு வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். அண்ணன் திருமாலின் கடைசி அவதாரமான கல்கி அவதார சக்தியும், கணவர் ஈசனின் சக்தியும் சேர்ந்து மக்களுக்கு அருள்புரிவதாக ஒம் கல்கி பகவதி அம்மனை வணங்கி மக்கள் வழிபடுகின்றனர்.வேலூர் நகரம் இந்த மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
அமைவிடம்: வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் இத்தலம் உள்ளது. எங்கிருந்தும் பஸ்வசதி உண்டு.
தொடர்புக்கு:- புகழேந்தி செல் : 9443628022
செய்தி : ப.பரசுராமன்
படங்கள் :ப.வசந்த்
The post பாண்டவர்களின் தாகம் தீர்த்த கல்கி பகவதி அம்மன்! appeared first on SWASTHIKTV.COM.
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்
9962081424
The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 29/06/2016 appeared first on SWASTHIKTV.COM.
திருவண்ணாமலை அடுத்து படைவீட்டில் சிவபெருமான் உமை அம்மைவுடன் கைலாசநாதர் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவரை பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்தால் மற்றும் பிரதோஷ நாட்களில் வணங்கினால் கடன் பிரச்சனை உட்பட சகலமும் தீரும் என்று பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
சம்புவராய அரசர்கள் காலத்தில் படைவீட்டினை தலைநகரமாக கொண்டு ஆட்சிப் புரிந்துள்ளனர். இவர்களது காலத்திலிருந்து அருள்மிகு. கைலாசநாதர்! திருக்கோயிலும் இயற்கை சீற்றத்தால் அழிந்தது. இப்பொழுது இந்து அறநிலையத்துறையும் மற்றும் சென்னை ஸ்ரீவேணுகோபால சுவாமி கைங்கார்யம் அறக்கட்டளையும் (டி.வி.ஏஸ்) இப்பொழுது மலைமேல் உள்ள கைலாசநாதர்! திருக்கோயில் 4 கோடி ரூபாயில் ராஜகோபும் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் விரைவில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கீழ்காணும் கோயில்களும் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அருள்மிகு. யோக ராமச்சந்திர சாமி, வரதராஜ பெருமாள், லட்சுமி நரசிம்மசாமி, கோட்டைமலை வேணுகோபால சுவாமி ஆகிய திருக்கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டும், சிறிய கோட்டை, பெரிய கோட்டை என இரு கோட்டைகளும் அகழிகளும் கட்டப்பட்டுள்ளன. பிற்காலத்தில் கோட்டைகளும் அகழிகளும் சில கோயில்களும் அழிந்துவிட்டன. கலைகள் மற்றும் மதத்தின் பேரில் சம்புவராய மன்னர்கள் கொண்டிருந்த பற்றினை படைவீட்டில் உள்ள தொல்பொருளியல் சிதைவுகள் பறைசாற்றுகின்றன. பலப்பல தெய்வங்களின் உறைவிடமாக இருப்பது பெரும் வியப்பைத் தருகிறது.
சீரும் சிறப்பும் பொருந்திய தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் பலவற்றுள் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், அம்மன் கோயில் படைவீட்டில் அமைந்துள்ள அருள்மிகு.உமையம்மை ஈஸ்வரன் திருக்கோயிலும் இத்தலங்களில் ஓன்றாகும். இத்திருக்கோயில் அமைந்துள்ள படை வீடு எனும் இக்கிராமம் கிழக்கு தொடர்ச்சிமலைகளின் (ஜவ்வாது மலைத் தொடர்) அடிவாரத்தில் சுற்றிலும் மலைகளும் பசுமையான வனங்களும் அரனாக அமைந்து மலைகளின் நடுவில் அமைந்து அழகு சேர்க்கின்றன.படை+வீடு = படைவீடு படைகள் தங்கி இருந்த இடம். அன்னை ரேணுகாதேவி இத்தலத்தில் படையுடன் வந்து மன்னனுக்கு அருள்பாலித்ததால் படைவீடு எனவும், இராச கம்பீர சம்புவராயர் எனும் அரசன் தனது படைகளுடன் இத்தலத்தில் தங்கி போரிட்டதால் படைவீடு எனவும் பெயர் பெற்று நாளடைவில் படவேடு என பெயர் மருவி வந்துள்ளது.
மலைமேல் உள்ள ஈசனை வணங்கினால் தலைமேல் உள்ள பாரம் குறையும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.
அமைவிடம் :
வேலூர் – திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் வேலூரிலிருந்து 32வது கி.மீட்டரில் சந்தவாசல் எனும் ஊரில் 7வது கி.மீட்டரில் உள்ளது.
தொடர்புக்கு :போன் : 04181 – 248224, 248424
செய்தி : ப.பரசுராமன்
படங்கள் :ப.வசந்த்
The post கடன் பிரச்சனை தீர பௌர்ணமி கிரிவலம் appeared first on SWASTHIKTV.COM.
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்
9962081424
The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 30/06/2016 appeared first on SWASTHIKTV.COM.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கோடியக்கரை அடுத்துள்ள கோடியக்காடு என்ற இடத்தில் ராமன் இலங்கைக்கு செல்லும் முன் வழிப்பட்ட அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சிவபெருமானுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்புப் பூசைகள் பக்தார்கள் செய்து பலன் பெருகின்றனர்.
மூலவர்: அமிர்தகடேஸ்வரர் குழகேஸ்வரர் அம்மன் அஞ்சனாஷி, மைத்தடங்கண்ணி, தல விருட்சம், குராமரம், தீர்த்தம் அக்னி தீர்த்தம் (கடல்), அமுதகிணறு: 1000 வருடங்களுக்கு முன் புராணப் பெயர் திருக்கோடி, திருக்கோடிக்குழகர், குழகர் கோயில்.மிகவும் பழமையானது இந்தக்கோயில், இராமபிரான் இலங்கைக்குச் செல்லும் முன்பு இங்கு வந்தார். இவ்வூரிலிருந்து கடல் வழியே மிகக் குறுகிய தூரத்தில் இலங்கை இருக்கிறது. எனவே, இங்கிருந்து பாலம் அமைத்து இலங்கைக்கு செல்ல ஏற்பாடு செய்தான் சுக்ரிவன். ஆனால், இராமன் இங்கு பாலம் அமைக்க மறுத்துவிட்டார். இலங்கையின் பின்பக்கமாககோடியக்காடு அமைந்துவிட்டதால், இராமபிரான்பின்பக்கமாக சென்று இராவணனைத் தாக்குவது தனக்கு பெருமை தராது எனக்கருதி. இலங்கையின் முன்பக்கமுள்ள தனுஷ்கோடிக்கு சென்றுவிட்டார். அவர் இங்கு வருகை தந்ததை நினைவுபடுத்தும் வகையில் இராமர் பாதம்அமைக்கப்பட்டுள்ளது. இராமன் இலங்கை செல்லும்போது இங்குள்ள சிவபெருமானை வணங்கினார். இவருக்கு ‘அமிர்தகடேஸ்வரர்” என்ற பெயரும் உண்டு.
திருப்பாற்கடலில் அமுதம் கடையும் போது அசுரர்கள் சூறாவளியை ஏற்படுத்தினர். அமுதப்பாத்திரத்தை ஏந்திச் சென்ற வாயுபகவான் அந்தசூறாவளியை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அமுதம் சிறிதளவு சிந்தியது. அதை முருகப்பெருமான் ஒரு கலசத்தில் ஏந்திக்கொண்டார். அந்தக் கலசத்துடன் அவர் காட்சி தருகிறார்.இவரை வணங்குவோருக்கு ஆயுள்விருத்தி ஏற்படும். இங்கே சுவாமியை விட முருகனுக்கே முக்கியத்துவம். அருணகிரிநாதர்; திருப்புகழில் இவ்வூர் சுப்பிரமணிய சுவாமியைப் புகழ்ந்து பாடியுள்ளார். சுந்தரரால் பாடல்பெற்ற தலம் இது. மிகவும் பழமையான இந்தக் கோயிலில் அம்பாள் மையார்தடங்கண்ணி அழகு பொங்க காட்சி தருகிறாள்.உயர்ந்தோங்கிய இராஜ கோபுரம். கொடிமரமில்லை. பிரகாரத்தில் அமுத வினாயகர், முருகன் சன்னிதிகள் தனித்தனி கோயிலாக உள்ளன.இங்குள்ள முருகப்பெருமான் சிறப்பான மூர்த்தம். ஒருமுகம், ஆறு கரங்கள், ஒருகரத்தில் அமுதகலசம், மற்ற கரங்களில் நீலோற்பலம், பத்மம், அபயம், வச்சிரம், வேல் முதலியவை ஏந்திய அழகிய திருக்கோலம். மயில் வடக்கு நோக்குகிறது.
இத்தலம் கோளிலித்தலம் ஆகையால் நவக்கிரகங்கள் ஒரே திசையில் உள்ளன. முன்மண்டபத்தில் வலப்பால் காடுகிழாள் கோயிலும் அடுத்து தெற்கு நோக்கிய அம்பாள் சன்னதியும் உள்ளன. மகாமண்டபத்தில் குழக முனிவர்; உருவமுள்ளது. மூலவர்; அழகிய திருமேனி. சதுர பீடம். இங்கிருந்து 1.5 கீ.மீ.யில் ஆதிசேது எனப்படும் கோடிக்கரை உள்ளது.கோடியக்காடு காட்டுப்பகுதி என்பதால், மக்களின் பாதுகாப்பிற்காக “காடு கிழாள்” என்ற வனதேவதையும் இந்தக் கோயிலில் அருள்பாலிக்கிறாள். நவக்கிரகங்கள் நேர்கோட்டில் நின்று அருள்பாலிக்கின்றனர். கோஷ்டத்தில் பிரம்மா, தூர்க்கா, இலிங்கோத்பவா; உள்ளனர்.
கடிதாய்க் கடற்காற்று வந்து ஏற்றக்கரைமேல்
குடிதான் அயலே இருந்தால் குற்றமாமோ
கொடியேன் கண்கள் கண்டன கோடிக் குழகீர்
அடிகேள் உமக்கு ஆர்துணையாக இருந்தீரே
இவ்வுர் அமிர்தகட சுப்பிரமணியருக்கு வைகாசி விசாகத்தில் பத்துநாள் விழா, சஷ்டியில் ஆறு நாள் விழா நடக்கிறது. திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்புப் சைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அமைவீடம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 25 கீ.மீட்டரில் தூரத்தில் கோடியக்காடு உள்ளது
செய்தி : ப.பரசுராமன்
படம் : வசந்த்
The post அமிர்தகடேஸ்வரரில் பாலம் கட்ட மறுத்த இராமபிரான் appeared first on SWASTHIKTV.COM.
ஜோதிட பிதாமஹர் ஸ்ரீ சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர்
9324087044 , 9769347044
The post ஜூலை மாத ராசி பலன்கள் வழங்குபவர் ஜோதிட பிதாமஹர் ஸ்ரீ சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர் appeared first on SWASTHIKTV.COM.
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்
9962081424
The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 02/07/2016 appeared first on SWASTHIKTV.COM.
சிவனின் ஆறு தலங்களில் மூலதாரத் தலம் திருவாரூர். திருவாரூரில் பிறந்தாலோ, பெயரைச் சொன்னாலோ முக்தி கிடைக்கும் என்பார்கள். அதாவது அனைத்து வித தோஷங்களும் நீங்கிவிடும் என்பது அர்த்தம். பூமிக்குரிய சிவ தலமாக திகழும் திருவாரூர் திருத்தலம்.
பூங்கோயில்:-
சைவ சமய மரபில் பெரிய கோயில் என்றும் பூங்கோயில் என்றும் வழங்கப்படுகிறது. தேவாசிரியம் என்னும் திருக்காவணத்தில் (ஆயிரங்காலம் மண்டபம்) சைவ சமயச் சான்றோர்கள் கூடி எடுக்கும் முடிவு உலகெங்குமுள்ள சைவ சமயத்தினரையும் கட்டுப்படுத்தும் என்பதால் இது சைவ சமயத்தின் தலைமைப் பீடமாகவும் திகழ்கின்றது. இங்குள்ள மூலவர் வன்மீகநாதர் என வடமொழியிலும், புற்றிடங்கொண்ட பெருமான் எனத் தமிழ் மொழியிலும் அழைக்கப்படுகிறார். இத்திருத்தலம் சைவத்திருத்தலங்களில் முதன்மையானதாகவும், சப்தவிடங்கத் தலங்களில் பிரிதிவி (பூமி)த் தலமாகவும் விளங்குகின்றது.
9, 10 ஆம் நூற்றாண்டில் கருங்கற்களால் கட்டப்பட்டது:-
இத்திருக்கோயிலின் மூலவர் எப்பொழுது தோன்றினார் என்பது காலக்கணக்கிற்குள் அகப்படாதது என திருநாவுக்கரசரே வியந்து பாடியுள்ளார். கி.பி.ஆறாம் நூற்றாண்டிலேயே சிறந்த கோயில்களாக திகழ்ந்த பூங்கோயில் என்ற ஆருர் மூலட்டானமும்,அறநெறியும் செங்கற்களிகளாகத் தான் திகழ்ந்திருக்க வேண்டும். அதன் பின்னர் கி.பி.9, 10 நூற்றாண்டுகளில் தான் கருங்கற்தளிகளாக இத்திருக்கோயில்கள் மாற்றம் பெற்றுள்ளன. பூங்கோயில் என்ற புற்றிடங்கொண்ட ஈசனது கோயில் முதலாம் ஆதித்த சோழனால் மாற்றம் பெற்றகற்றளியாகும். பீடம், உபீடம், கோஷ்டம் மற்றும் பொதிகை விமான அமைப்பு ஆகியவைகள் அனைத்தும் முதலாம் ஆதித்த சோழனின் கலை நயத்தோடு திகழ்கின்றது. கருவறை, அர்த்தமண்டபத்துடன் மட்டும் திகழ்ந்த ஆதித்தனின் பணிக்குப் பின்னால் வந்த சோழப் பெருமன்னர்கள் முகமண்டபத்தையும், மகாமண்டபங்களையும் எடுத்து விரிவுபடுத்தி செய்தனர். அரநெறியாம் கோயில் செங்கற்தளியாக இருந்ததை சோழப்பேரரசி செம்பியன் மாதேவியார் கற்றளியாக மாற்றியமைத்ததை முதலாம் ராசராசனின் கல்வெட்டு கூறுகின்றது. இதனால் கருவறை அர்த்தமண்டபம் பின்னாளில் தான் எடுக்கப்பட்டது என்கிறார்கள்.
வானுயர்ந்த கோபுரங்கள்:-
இக்கோயிலின் கருவறையின் கட்டடப்பாங்கு செம்பியன் மாதேவியார் பாணி என கலை இயல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இதுவே தொன்மையான கட்டடம் என்பது தெளிவாகும். வான் கிழிக்கும் வண்ணக் கோபுரங்களாக வெளிமதிலில் நான்கு பெரிய கோபுரங்களும் ஓரு சிறிய கோபுரமும் (கீழ்த்திசையில்) அணி செய்கின்றது. இரண்டாம் மதிலை இரண்டு திருக்கோபுரங்களும் மூன்றாம் மதிலை அணுக்கன் திருக்கோபுரமும் அலங்கரிக்கின்றது. இவைகள் ஓவ்வொன்றும் வரலாற்றில் பல்வேறு காலங்களின் கட்டடக்கலை பாணியின் எடுத்துக்காட்டுகளாக திகழ்வதோடு தனித்த வரலாற்று முத்திரைகளையும் சுமந்து நிற்பது சுவையான ஓன்றே என்று சொல்லலாம். மகாமதுரம் என்ற வாஸ்து நூல்கள் குறிப்பிடும் கிழக்கு ராஜகோபுரம் ஆரூர் கோயிலின் முக்கிய திருவாயிலாக விளங்குகிறது. மகா துவாரமான கிழக்கு வாயிலின் மேல்தளம் (முதல் தளம்) வரை முழுவதும் கருங்கற் கட்டுமானமாகவும், இதற்குமேல் 6 பிரஸ்தளங்களும் ஏழு துவாரங்களும் உள்ளது. இவை அனைத்தும் சிகரம் உட்பட செங்கற் திருப்பணியாகும். உப பீடத்திலிருந்து முதல் தளம் வரை உள்ள கருங்கற் கட்டுமானம் 12, 13 ஆம் நூற்றாண்டின் சோழர்காலச் சிற்ப கட்டடக்கலையின் உயரிய எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. கட்டடக் கலைப்பாங்கு கோஷ்டத்தில் தெய்வ திருவுருவங்கள் நிர்மானம் போன்ற கலை அம்சங்களில் இந்த கோபுரம் திருபுவனம், தில்லை, திரு ஆனைக்கா போன்ற திருக்கோபுரங்களை ஓத்து திகழ்கின்றது. சிவபெருமானின் பல்வேறு கோலங்கள், எண் திசைக்குரிய தெய்வங்கள்,வாயிற்போர், ஆதித்தன், திருமால் போன்ற தெய்வத் திருவுருவங்களும் நாட்டியச் சிற்பங்களும்,யாளி வரிசையின் எழிற்கோலமும் இத்திருக் கோபுரத்திற்குரிய சிறப்பு அம்சங்கள், கலைநயத்தால் இமயமெனத் திகழும் இந்த ராஜகோபுரமானது சிறந்ததொரு வரலாற்றுப் பின்னணியையும் கொண்டு திகழ்வது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றுச் சிறப்புடைய இத்திருக்கோபுரத்தில் அமைந்துள்ள இரண்டு மாடங்களில் மாமன்னவன் குலோத்துங்கள்,அவனது ராஜகுரு ஈஸ்வர சிவர் என்னும் சோமேஸ்வரர் ஆகிய இருவருடைய உருவச்சிலைகளும் கல்வெட்டுப் பொறிப்புகளோடு இன்னும் இருக்கின்றது. கலை நயத்தால் மட்டுமில்லாமல் வரலாற்று பெருமையாலும் இத்திருக்கோபுரம் தன்னகரில்லாப் பெருமையோடு திகழ்கின்றது. கிழக்கு கோபுரத்தை ஓத்த மேற்கு கோபுரம் கி.பி. 15ம் நூற்றாண்டு கலைப்பாங்குடன் அமைந்துள்ளது. கோபுர வாயின் இரு பக்கங்களிலும் நாட்டிய மங்கையர் மற்றும் புராணச்சிற்பங்கள் இடம்பெற்றுள்ளது. ஆனால் கோஷ்ட தேவதைகள் இடம்பெறவில்லை. எந்த மன்னனின் பணிகள் என்பதைக் காட்டும் தெளிந்த சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. வடக்கு கோபுரம் தஞ்சை நாயக்க மன்னன் செவ்வப்பன் காலத்தில் எடுக்கப்பட்டதாம். முதல் தளம் வரை கருங்கற் பணியாக அமைந்துள்ளதால் சிற்பங்கள் இடம்பெறவில்லை. இக்கோபுர வாயிலின் கீழ்புறத்தில் இரண்டு மாடங்களில் செவ்வப்ப நாயக்கனின் கருங்கற் சிலையும், அவனது காலத்தில் இத்திருக்கோயில் நிர்வாகத்தில் சிறப்பிடம் வகித்த பண்டாரத்தின் உருவச்சிலையும் இடம்பெற்றுள்ளது. வடகிழக்கு திசைகளில் அமைந்துள்ள கோபுரங்கள் கொஞ்சம் சிறியதாகவே பிற்கால பணிகளாக திகழ்கின்றது. இரண்டாம் மதிலின் கிழக்கு கோபுரம் சோழர் காலத்துப் பழமையான கோபுரமாகும். உயரம் குறைந்த கோபுர கோபுரமாக இருந்தாலும் குறிப்பிடத்தக்க சிற்ப சிறப்புகள் இடம்பெறவில்லை.
இத்திருக்கோயில் மூன்றாவது பிரகாரத்தில் வடமேற்கு திசையில் ஈசான்யத்தை நோக்கி அமைந்துள்ளது. அருள்மிகு கமலாம்பிகை கோயில், இங்கு எழுந்துள்ள அம்பிகை சிரசில் சர்வேஸ்வரனைப் போன்று கங்கையையும், பிறையையும் சூடிக்கொண்டு யோக வடிவில் அமர்ந்திருக்கின்றன. இவள் மூன்று தேவியரின் சங்கமம் க கலைமகள் ம மலைமகள், ல அலைமகள் என்று திகழ்கிறாள். அன்னை புனித பாரத தேசத்தில் புகழ்பெற்ற 64 சக்திபீடங்களில் முதன்மையானதாகவும் காசி விசாலாட்சி காஞ்சி காமாட்சி, மதுரை, மீனாட்சி ஆரூர் கமலாயதாட்சி, நாகை நீலாயதாட்சி) ஆகிய ஐந்து தலங்களில் சக்தி பீடமாகவும் சிவசக்தி சொரூபிணியாகவும் கமலாம்பாள் திகழ்கிறாள். மூன்று தேவியரும் ஓன்றாய் நிற்கும் அன்னை துர்வாச முனிவர் வழிபட்டுள்ளார். அன்னை வலது கரத்தில் மலரினை ஏந்தியும், இடது கரத்தை இடையில் இருத்தியும், கால்களை யோகாசன நிலையில் அமைத்து மகாராணியைப் போலவும் காட்சியளிக்கிறாள்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர்:-
ஆசியாவிலலேயே மிகப்பெரிய தேராக விளங்கும் ஆழித்தேர், ரூ.2 கோடியே 18 இலட்சம் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்டு பழைய பாகங்கள் பிரித்தெடுக்கப்பட்டு ஆழித்தேரை புதிதாக வடிவமைக்கப்படும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆழித்தேரின் வெள்ளோட்டம் விடப்பட்டது. தொல்புகழ் கொண்ட திருவாரூரின் பெருமை மகுடத்தில் ராஜமாணிக்கமாக ஆழித்தேர் மாடவீதிகளில் தேரோட்டம் நடைபெறுவதை காண்பது கண்கொள்ளக்காட்சியாகும். ஆழித்தேரின் மொத்த எடை 300 டன். 30 அடி உயரம் 31 அடி அகலமும் கொண்டது. ஆழித்தேரில் 600 சிற்பங்கள் பொருத்தப்பட்டுள்ளது. தேர் அலங்கரிக்கப்பட்ட பிறகு இன்னும் உயரம் அதிகரிக்கும். பூதப்பார், உபபீடம், சிறிய உறுதலம், பெரிய உறுதலம், நடனகாசனம் பத்மாசனம்,தேவாசனம்,சிம்மாசனம் ஆகிய 8 பாகங்களைக் கொண்டிருக்கிறது. ஆழித்தேரின் ஓவ்வொரு சக்கரமும் 9 அடி உயரத்திற்கு இருக்கும். சிவனின் வரலாற்றைக் கூறும் சிற்பங்கள் ஆழித்தேரில் அதிகமாக பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் அதனுடன் பூதங்கள், சிம்மம்,ரிஷபம்,குதிரை,யாழி, உட்பட பல்வேறு சிற்பங்களும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆழித்தேரை சுற்றி 150 மணிகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆழித்தேர் நான்கு வீதிகளிலும் அசைந்தாடி வரும் காட்சி மெய்சிலிர்க்கவைக்கும் காட்சியாகும்.
அமைவிடம் :-
திருவாரூரிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது.
தொடர்புக்கு :-
ஆலயம் – 04366 -242343
செய்தி : ப.பரசுராமன்
படம் : ப.வசந்த்
The post திரூவாரூரில் தியாகராஜரின் பிரம்மாண்டமான ஆழித்தேர்! appeared first on SWASTHIKTV.COM.
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்
9962081424
The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 04/07/2016 appeared first on SWASTHIKTV.COM.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மண்டகொளத்தூரில் பார்வதி தேவிவழிப்பட்ட முதல் கைலாய சேஷத்திரமும் பண்டவார்கள் வழிப்பட்ட தர்மநாதோஸ்வரர் ஆலயம் உள்ளது. ஜெயங்கொண்ட சோழமண்டலத்து பல் குன்றக் கோட்டத்து மேல் குன்ற நாட்டு மண்ட குளத்துப் பிரிவைச் சோர்ந்த ஊர் என்று பத்தாம் நூற்றாண்டுக்கல் வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆறு:
சேயாறு அல்லது செய்யாறு என்று வழங்கப்படும் ஆற்றின் தென் கரையில் உள்ளது. முருகப் பெருமானால் உருவாக்கப்பட்டதால் சேயாறு என வழங்கப்படுகிறது. சேயோன் ஸ்ரீ முருகன் ஒரு சமயம் கைகளை இழந்த பிராமணன் இவ்வாற்றில் மூழ்கி வழிபட்டு கைகளைத் திரும்பப் பெற்ற தால் பாஹீ நதி (பாஹீ = கை) என அழைக்கப்பட்டது. கை என்பதற்கு தெலுங்கில் ‘செய்” என்று சொல்வதால் ‘செய்யாறு” என வழங்கப் படுகிறது.
இறைவன் மாமரத்தின் அடியில் தோன்றினார்:
கயிலயங் கிரியிலே இறைவி விளையாட்டாக சிவபெருமானின் இரு கண்களை மூட உலகமே சூரிய சந்திரர்கள் மறைந்ததால் (சிவபெருமான் கண்கள் சூரியன் சந்திரன்) துயர் உற்றது. இதனால் கோபம் அடைந்த சிவ பெருமான் இறைவியைப் பூலோகம் செல்லுமாறு சபித்தர். இறைவி சாபவிமோசனம் கேட்க, பூலோகத்திலே மிக உயர்ந்த சேஷத்ரமான காஞ்சியம்பதிக்குச் சென்று இருநாழி நெல் கொண்டு 32 அறங்களையும் செய்து வருமாறும், தாம் வந்து ஆட்கொள்வதாகவும் வரம் அருளினார். அவ்வாறே இறைவி காமாட்சி என்ற திருநாமம் கொண்டு காஞ்சிபுரத்தில் இருந்தபோது இறைவன் மாமரத்தின் அடியில் தோன்றினர். பின்பு இறைவி அருணாச்லேசத்திற்குச் சென்று தவம் செய்யுமாறும் தாம் அவளுக்கு இடப்பாகத்தை அங்கு வழங்குவதாகவும் கூறி அருளினார். அவ்வாறே இறைவி காஞ்சிபுரத்திலிருந்து தன்னுடைய பரிவாரங்களுடன்கிளம்பி திருஅண்ணாமலைக்குப் பயணப்படும் போது அனுஷ்டான நேரம் வர, வாழைமரத்தில் பந்தல்கள் இட்டு தன்னுடைய மகனான குமரவேலை நோக்கிஅனுஷ்டானம் செய்வதற்குத் தீர்த்தம் கொண்டு வருமாறு கேட்டாள். முருகப் பெருமான் தம்முடைய வேலாயுதத்தை மேற்கு நோக்கி வீச அவ்வேல் பர்வதமலையில் உள்ள ஏழு சிகரங்களைத் தாக்கி ஒரு ஆறு தோன்றியது. அந்த சிகரங்களை உடைக்கும் போது தவம் செய்து கொண்டிருந்த அனந்தமாபுரத்தைச் சேர்ந்த ஏழு பிராமணர்களையும் மோட்சத்திற்கு அனுப்பியது. அப்பிராமணர்கள் பூர்வத்தில் பஞ்சமா பாவங்களைச் செய்தவர்கள். பிரமணுடைய அருளால் முருகப் பெருமானின் வேலால் முக்தி கிடைக்கும் என அருளப்பட்டு அவ்வாறே முக்தி அடைந்தார்கள். காமாட்சியின் அனுஷ்டானத்திற்காக ஆற்று நீர் வந்து உதவியது. ஆதனால் அது சேயாறு என வழங்கப்பட்டது.
இருப்பினும் பிரமணர்களைக் கொன்ற பாவத்தால் வந்த ‘பிரம்மஹத்தி” தோஷம் நீங்க ஏழு சிவாலயங்களை முருகப் பெருமான் எழுப்பித்தார்.அவை 1.காஞ்சி 2. கடலாடி 3.மாம்பாக்கம் 4. தென்மகாதேவமங்கலம் 5. எலத்தூர் 6. பூண்டி 7. குருவிமலை. இவற்றிற்கு சப்த கரை கண் டேஸ்வரஸ்வரஸ்தலங்கள் என்று பெயர்.இவை சோயற்றின் மேற்கு அல்லது வடக்கு கரையில் உள்ளன. இதேபோல் சேயாற்றின் கிழக்கு அல்லது தெற்குக் கரையில் பார்வதி தேவியால் உருவாக்கப்பட்ட ஸ்பத் கைலாச சேஷத்ரங்கள் தோன்றின. அவை முறையே 1. வாசுதேவம் பட்டு 2. தாமரைப் பாக்கம் 3. நார்த்தாம் பூண்டி 4. தென் பள்ளிப்பட்டு 5. பழங்கோயில் 6. கரைப்பூண்டி 7.மண்ட கொளத்தூர் முதலயின.
மண்டகொளத்தூர்:
ஒரு காலத்தில் ஐந்து சிவாலயங்களைத் தன்னகத்தே கொண்ட ஊராக விளங்கியது. ஊரின் நடுவில் ஒரு சிவாலயமும் இருந்திருக்கின்றன. கிழக்கு, வடக்கு, மேற்கு முதலிய திசைகளில் கோயில்கள் இருந்த இடத்தில் இப்போது சிவலிங்கங்கள்தான் உள்ளன. ஊர் நடுவே இருந்த கோவிலின் சிவலிங்கம் கூட கிடைக்கவில்லை. ஊரின் தென்புறத்தில் உள்ள சிவாலயம்தான் இப்போது திருப்பணி செய்யப்பட்டு ‘குடமுழுக்கு” நடத்தப்பட உள்ளது. நடுவில் இருந்த சிவாலயத்திற்கு ‘குந்தீஸ’வரன்” என்ற பெயரும் இப்போது குடமுழுக்கு நடைபெற்ற ஆலயத்திற்கு ‘தாமேஸ்வரர்” (அ) ‘தர்மநாதேஸ்வரர்” என்ற பெயரும் வழங்கப்படுவதால் மீதி மூன்று சிவலிங்கங்களும் பாண்டவர்களின் மற்ற சகோதரர் களானபீமன், அர்ஜீனன், நகுல, சகாதேவர்களின் பெயர்களில் வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது திண்ணம். பஞ்ச பாணடவர்கள் வனவாசத்தின்போது இங்கு பூஜை செய்ததாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.
ஸ்ரீ தர்மநாதேஸ்வரர்“ தர்மஸ்வர்த்தினி” என்ற திருநாமம் கொண்ட இறைவியோடு அருள் பாலித்துக் கொண்டு இருக்கிறர். செய்யாற்றின் கரையில் கிழக்கிலிருந்து வரும்போது ஸ்பத கைலாச சேஷத்ரங்களில் முதல் தலமாகப் பெருமை பெறுமை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
அமைவீடம் :
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இருந்து 6 கிலேமீட்டர் தூரத்தில் உள்ளது.
தொடர்புக்கு :
பரத்வாஜ் ரவி – 9600014199
படம்: வசந்த்.
செய்தி: ப.பரசுராமன்.
The post பார்வதிதேவியால் தோன்றிய சப்த கைலாயம் appeared first on SWASTHIKTV.COM.